சார்… வார்த்தையை குப்பையில் போடு…
Sir send the word to bin..
தமிழ் உலகில் சார் போடுவது ஒரு பேஷனாகிவிட்டது.. உண்மையில் அய்யா என்பது காவல் அதிகாரிகளையும், நீதிபதிகளையும் தவிர வேவொருவரை விளித்தால் அது அவரை கிண்டல் செய்வது போல் ஆகிவிட்டது. சார் … சார் என்று எங்கு பார்த்தாலும் இதே வார்த்தையே நமக்கு பரிச்சையமாகிவிட்டது. ஆனால், இந்த வார்த்தையினால் எந்த விதமான ஒட்டுதலும் இரு நபர்களுக்கு இடையே ஏற்படுவது இல்லை.
சார் வார்த்தையை நமக்கு அறிமுகப்படுத்திய ஆங்கிலேயேர்கள் வசிக்கும் இங்கிலாந்துலேயே இந்த சார் வார்த்தை புழக்கத்தில் இல்லை. அங்கேயெல்லாம், மிஸ்டர் மிஸ் போன்றவைகளே அதிகம் புழக்கத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களை அழைக்க நம்மாளுங்க துரை… துரைசானியம்மா என்று விளித்தலும் காலப்போக்கில் காணமல் போய்விட்டது.
ஒரு சில மாவட்டங்களில், பொதுவாக மற்றவரை அழைக்கும் பொழுது அண்ணா என்றும், அக்கா என்றும் வயதில் இளையவராக இருக்கும்பொழுது கன்னு என்று அன்பொழுக கூப்பிடுவதில் வல்லவராக இருக்கிறார்கள். சென்னையை பொறுத்தவரை சார் என்பதை விடுத்து சாவு கிராக்கி என திட்டாமல் இருப்பது உத்தமம்.
ஒரு கல்லுரியில் பரிட்சார்த்தாமாக, அனைத்து ஆசிரியர்களையும், அக்கா என்றும் அண்ணா என்றும் அழைத்து வருவதாகவும், இதன் மூலம் இருவர்களுக்கு இடைய பரஸ்பரம் அன்பு/ஒற்றுமை ஓங்குவதாகவும் தெரியவருகிறது. ஆகவே, தமிழ் கூறும் நல்லுகமே, சார் என்ற வார்த்தையை குப்பையில் போட்டு விட்டு அண்ணா, அக்கா என விளித்து சமூக ஒற்றுமையை வளர்ப்போமா….
நன்றி.. ஆவியில் எஸ்.ராமகிருஷ்ணனின் உரை
Tamil Revolution (by Sivaparkavi) .. 1
பார்க்க .. https://sivaparkavi.wordpress.com/2012/01/10/tamil1/
Tamil Revolution (by Sivaparkavi) .. 2
பார்க்க .. https://sivaparkavi.wordpress.com/2012/01/13/tamil2/