3++ .. திரைவிமர்சனம்

3++ .. திரைவிமர்சனம்
3 Tamil Film Review

கொலைவெறி கூட்டம் இல்லாவிட்டாலும், அந்த பாட்டு உறிட் அடிச்சதனால ஒரு சில இளம் பெண்கள் கூட 3 படத்தைப் பார்க்க வந்திருந்தனர். ஆரம்பத்திலேயே அதிர்ச்சியடைய வைக்கும் தனுஷ் இறந்து நடுவீட்டில் அனைவரும் சோகமாக அமர்ந்திருப்பதும், படிப்படியாக அவர் +2 படிப்பதில் இருந்து சுருதியை காதலிப்பதும், பின் 5 வருடங்கள் கழித்து இரு வீட்டார் எதிர்க்கவில்லையானலும் உடன்பாடில்லாமல், ஒரு பப்பில் வைத்து பழங்கால முறைப்படி தாலிகட்டி பொண்டாட்டியாக ஆக்கிக் கொள்கிறார்.

இருவரும் மிக மிக இளமை துள்ளல் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. ஐஸ்வர்யா..வின் உழைப்பு வீண்போகவில்லை.. மாப்பிள்ளை அதாங்க தனுஷ் சும்மா புகுந்து விளையாடிக்கிறார் கமல் பெண்ணிடம்… றைடெக் பேமிலி தனுஷ், மிடில்கிளாஸ் பேமிலி சுருதி இருப்பினும், வாழ்க்கை மிகவும் றைடெக் அபார்மெண்ட், நண்பர் சிவகார்த்திகேயன் மற்றும் செந்தில் (கேரக்ட்ர் பெயர்), இளமையில் சேர்ந்து ஆட்டம் போடுவதும், பின்னர் கடைசிவரை செந்தில் தனுஷ் (ராம்) கூடவேயே அவருடைய வீட்டில் ஒவ்வொருநிமிடமும் தனுஷ்க்கு பாதுகாப்பாக.. சுருதியே ஒருமுறை செந்திலை திட்டியும், நண்பருக்காக உயிரையும் கொடுப்பான் நண்பன் என்பதனை இந்தப் படத்தின் றைலைட்டாகக் கூறலாம்.

மேலும், காதல் மற்றும் கணவன் மனைவியிடையே ரொம்ப அன்யோன்யம், உதாரணமாக கணவன் முகத்தில் இரத்தத்தைப் பார்த்தவுடன் மனைவி மயக்கமாதல் போன்றவைகளால் அவர்கள் படும் வேதனைகளும் முடிவும்தான் படத்தின் முக்கிய அம்சம்.

மற்றபடி, இசை, கேமிரா மற்றும் அனைத்துக் கலைஞர்கலையும் மேக்ஸிமம் வேலை வாங்கியிருப்பது தெரிகிறது. பிரபு மற்றும் பானுபிரியா ஜோடி ஒரு சில காட்சிகளிலேயே வந்திருந்தாலும், நன்றாக பொருந்தியிருக்கிறார்கள். பணக்கார குடும்பமாக இருந்தாலும் ஒரு காட்சியில் பானுப்பிரியா 100ரூபாய் நைட்டியை அணிந்து கொண்டு மோசமாக காட்சியளிக்கிறார்.

ரகுவரன் மனைவிதான் சுருதியின் அம்மா (மேக்கப் ரொம்ப மோசம், அமெரிக்கா போகப்போறவர்மாதிரியே தெரியவில்லை), 15 வருடங்களாக அமெரிக்கா போக விசாவிற்கு அலைந்து கிடைந்தவுடன், சுருதி மட்டும் அமெரிக்கா செல்ல விரும்பாமல், (காதல் தான் காரணம்… தனுஷ்விடம் நான் அமெரிக்கா போறேன் சொல்ற அன்னைக்கு இரவுதான்… பீச்சில் அந்த கொலைவெறி குத்துப் பாட்டு நன்றாக படம் பிடித்திருக்கிறார்கள் ). இடையே பேய் படத்திற்கு வந்துட்டமோ என்ற பீலிங்கும் எழுந்தாலும், தற்கொலைக்குத் தூண்டும் மனநோயை அழகாக படம் எடுத்திருக்கும் விதம் பாரட்டத்தக்கது.

தனுஷ் அடுத்தக் கட்ட நடிப்பிற்கு சென்றுவிட்டார்… சிவாஜி அளவிற்கு பேசப்படலாம். நண்பராக நடித்த செந்தில் மற்றும் சுருதியின் நடிப்பும் படத்தில் குறிப்பிடத்தக்கது. (குறிப்பாக ரொமான்ஸ் ). தனுஷ்க்கு அதிர்ஷ்டம்தான் ஒரு பக்கம் ரஜினியின் பெண்ணை திருமணம் செய்து கொண்டும், திரைப்படத்தில் கமலின் பெண்ணை திருமணம் செய்தும் ஒருவழிபன்னுகிறார், மச்சம்தான்.

3++
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

ஈஷா

ஈஷா
ISHA
வாழ்க்கையை புதிய கோணங்களில் சிந்திக்கவும், உணரச் செய்யவும் செய்கிறது. நினைவாற்றல், மனம் குவிப்புத்திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை சில வாரப் பயிற்சிகளிலேயே நூறு சதவீதம் வரை அதிகரிக்க முடியும்.

நாட்பட்ட நோய்களான ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டு வலிகள், தலைவலி, சைனஸ், முதுகுவலி, இருதயக் கோளாறு உடற்பருமன் மற்றும் தீராத நோய்களும் குணமடையவும், வராமல் தடுக்கவும் இயலும்.

மிகவும் தொன்மையான ஷாம்பவி மஉறாமுத்ரா பயிற்சி வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய அளவில் சக்தி வாய்ந்ததாகும்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழங்கங்களில் எவ்விதமாற்றமும் செய்யத் தேவையில்லை. எந்த மதமானாலும், எந்த இனமானாலும், பிரிவானாலும் இந்த யோகப் பயிற்சிக்குத் தடையாக இல்லை.

இப்பயிற்சி அனைவருக்கும் முற்றிலும் பரிசோதித்து அனுபவ பூர்வமாக அறியக்கூடிய விஞ்ஞானமாகும். தினமும் 3 மணி நேரம் வீதம் 7 நாட்கள் என விஞ்ஞானமுறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

……………………………………..

ஈஷாவைப்பற்றி எனது பார்வை….

1. பலரும் ஈஷாவில் இணைந்ததினால் பலன்கள் பலவற்றை (குறிப்பாக இவ்வுலக பகட்டு மற்றும் காசேதான் உலகமடா என்ற கான்செப்ட்டில் இருந்து விலகி) அன்பாக இருக்கிறார்கள்.

2. ஈஷாவின் கோர் ஐடியா… எப்பொழுதும் எங்கேயும் விழிப்புணர்வுடன் இருங்கள், (கடவுள் பார்த்துப்பார் என கண்மூடித்தனமாக இருக்காதீர்கள்)

3.இவ்வுலகில் நல்ல சக்தியும் உண்டு, தீய சக்தியும் உண்டு..

4. 200 சதவீதம் டிஸிப்பிளின்….

5. விஞ்ஞான பூர்வமான நடவடிக்கைகள், பார்வைகள்…

6. மிகவும் பிராக்டிகலாக அவருடைய செய்திகள், செயல்கள், மற்றும் பிரச்சாரங்கள் (எடுத்துக்காட்டுக்கள், காட்டுப்பூ என்னும் மாத இதழ் வாயிலாக)

7. றைடெக்ஆக, ஆங்காங்கே மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என முயற்சி செய்கிறார்…

ஈஷாவில்..

1. ஈஷா தொண்டர்கள் அனைவரும் தன்னார்வமாகவே பங்கேற்கிறார்கள்…வரவேற்கலாம் ஆனால், கண்மூடித்தனமான பக்தியை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

2. கொஞ்சம் காஸ்ட்லியான கான்செப்ட்ஸ்..

3. கொஞ்சம் மெஸ்மெரிஸம் இருக்கிறது…

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

அண்ணனும், தம்பியும்….

அண்ணனும், தம்பியும்….

ஒரு மெகா சிட்டியிலே, அண்ணனும், தம்பியும் வசிக்க நேர்ந்தது, அவர்களின் வசதிக்கேற்ப ஒரு வீடு வாங்கத் திட்டம் போட்டதில், 80வது மாடியில் உள்ள ஒரு வீடு வசிக்க கிடைத்தது. அதிலேயே, இருவருக்கும் கருத்து வேற்றுமை வந்துவிட்டது, ஒருவர் 80வது மாடியில் வாங்காதே என்றும், மற்றொருவர் இதுதான் கிடைக்கிறது என்றும் வாதம் செய்து ஒருவழியாக 80வது மாடியில் குடியேறினர். மற்றுமொரு நாளில் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு கை நிறைய பைகளுடன் வீட்டிற்கு செல்ல வந்தவுடன் தான் தெரிகிறது… கரண்ட் இல்லை.. (தமிழ்நாடாக இருக்குமோ?) என்ன செய்வது, முக்கி முனகி 20வது மாடிவரைக்கும் படியேறி வந்தார்கள்.

டயர்டாகிப் போனாதால், 20மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்களின் பைகளை விட்டுவிட்டு மேலும் 20 மாடிகள் படியேறினர்.. என்னால் முடியாது என்றும், ஏன் இந்தமாதிரி உயரத்தில் வீடு வாங்கினாய் என்றும் ஏக ரகளை செய்து கொண்டே… கெஞ்சி கூத்தாடி 60 மாடி வரை சென்றனர். அதில் ஒருவர் இனிமேல் என்னால் முடியாது என்று கூறி உட்கார்ந்தே விட்டார்.. மற்றொருவர் வேண்டி விரும்பி கேட்க அங்கிருந்து சிரமப்பட்டு 80மாடிக்கு வந்தனர்.. வரும்போதே, நேராக உடைகள் மாற்றாமல், படுக்கையறை சென்று படுத்துவிடுவேன் என ஒருவர் கூறிக்கொண்டே வந்தார்.

80 மாடிக்கு சென்றவுடன் தான், தெரிகிறது.. தங்களது வீட்டின் சாவி 20வது மாடியில் உள்ள பைகளில் அடைபட்டுக் கிடப்பது… உடனே இருவருக்கும் குத்துயிரும் குலையிருமான சண்டைவந்து இரத்தக் களரியானதாக தெரிகிறது…

இந்தக் சம்பவத்தை நமது வாழ்க்கையின் அளவீடாகவும் எடுத்துக் கொள்ளலாம், நாம் 20 வயதில் உயரவேண்டிய இடத்திற்கான முயற்சியை மேற்கொள்ளாவிடில் நமது அடுத்தத்த 40,60 மற்றும் 80 வயதுகளில் மிகமிக சிரமப்படவேண்டியதாகவும், ஒரு கட்டத்தில் நாம் திரும்பி போகவும் முடியாமல் மேலே செல்லவும் இயலாமல், ஒருவழிப்பாதையாக வாழ்க்கை மாறிவிடும்…

நன்றி.. டிவி அசோகன், பொதிகை டிவியில்
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

படித்ததில் பிடித்தது… மழைக்காட்டுத்தீவு

படித்ததில் பிடித்தது… மழைக்காட்டுத்தீவு
RAIN FOREST

அதிக மழையும், சூடான தட்பவெப்பமும் உயரமான மரங்களும் கொண்ட பூமத்தியரேகைப் பகுதியில் காணப்படும் காட்டுப் பகுதியே மழைக்காடுகளாகும். மழைக்காடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கப்பகுதிகளில் பரவியுள்ளது. மழைக்காடு பல்லுயிரியித்தில் மிகச் சிறந்தது இப்பூமியின் பரப்பளவில் இரண்டு பங்குங்கும் குறைவாகவே இருந்தாலும் இவ்வுலகின் ஐம்பதுக்கும் மேற்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் வசிக்காத உயிரினங்கள் பலவற்றை இம்மழைக்காடுகளில் காணலாம்.

பூமத்திய ரேகைக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் அதிக சூரிய ஒளியைப் பெற்று தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினால் இவ்வொளியைச் சக்தியாக மாற்றுகின்றன தாவரங்களில் சேமிக்கப்ட்ட அபரிமிதமான இச்சக்தியே மழைக்காட்டிலுள்ள விலங்குகளுக்கும் உணவாக அமைகிறது. அதிக உணவு இருப்பதால் அதிக விலங்குகளும் மழைக்காடுகளில் வாழ்கின்றன. இப்புவியின் உயிர்ச்சூழ்நிலைக்கு மழைக்காடுகளின் சேவை மிகவும் அத்திதயாவசியமானது. ஏனெனில் மழைக்காடுகள் பலவிதமான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாகறிது. உலகின் தட்பவெப்பநிலையை நிலைநிறுத்திகிறது. வெள்ளம், வறட்சி மற்றும் மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. பலவித மூலிகைகள் மற்றும் உணவிற்கு மூலாதாரமாக இருக்கிறது.

இப்புவிக்கும், மனித குலத்திற்கும் தேவையான இப்படிப்பட்ட மழைக்காடுகள் உலகில் எல்லா பகுதிகளிலும் சகட்டுமேனிக்கு அழிக்கப்பட்டன. தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகினற்ன. இந்தியாவில் இவ்விதமான மழைக்காடுகள் அடர்ந்து இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும்தான்.

மழைக்காடுகள் மிகுந்திருந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தேயிலை, காப்பி போன்ற ஓரினப் பயிர்த் தோட்டங்களுக்காகவும், நீர்மின் திட்டங்களுக்குகாகவும், வெட்டுமரத் தொழிலுக்காகவும் கடந்த சில நூற்றாண்டுகளாக வெகுவாக திருத்தப்பட்டன. இதனால் மழைக்காடுகள் பல இடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தொடர்பற்று துண்டுதுண்டாகிப்போனது.

இப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள ஆணைமலைப்பகுதியிலுள்ள வால்பாறை. இங்கு கண்னுக்கெட்டும் தூரம் வரை பச்சைப்பசேலென தேயிலைத் தோட்டங்களைக் காணலாம், காப்பி, தேயிலை, ஏலம், யூக்கலிப்டஸ் போன்ற ஓரினத்தாவரத் தோட்டங்களின் நடுவே இவை பயிரிடத் தகுதியில்லாத இடங்களில் இன்னும் திருத்தி அமைக்கப்படாத மழைக்காடுகள் சிறியதும் பெரியதுமாக ஆங்காங்கே தீவுகளைப் போல காட்சியளிக்கும். இவையே மழைக்காட்டுத்தீவுகள், துண்டுச்சோலை என்றும் அழைக்கின்றனர்.

இத்துண்டுச் சோலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் வால்பாறையைச் சுற்றிலும் ஆணைமலை புலிகள் காப்பகம், பரம்பிகுளம், புலிகள் காப்பகம், வாழச்சால் வனப்பகுதி, எரவிகுளம் தேசியப் பூங்க, சின்னார் சரனாலயம் போன்ற தொடர்ந்த பரந்து விரிந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் சுற்றிலும் வனத்தைக் கொண்ட வால்பாறை பகுதியிலும் பலவிதமான அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளையும், தாவரங்களையும் பார்க்க முடியும். இந்த உயிரினங்களுக்கெல்லாம் புகலிடமாக இத்துண்டுச் சோலைகள் உள்ளன.

ஒரு மழைக்காட்டு மர விதை முளைத்து, துளிர்விட்டு, நாற்றாகி மரமாக உயர்ந்து வளர்வதற்குள் பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது. வறட்சியிலிருந்தும், நாம் காட்டுக்குள் கொண்டு செல்லும், ஆடு, மாடுகளிடமிருந்தும், அங்கு வாழும் தாவர உண்ணிகளிடமிருந்தும், சூரிய ஒளிக்காக, நீருக்காக அதனைச் சுற்றியுள்ள தாவரங்களிடமிருந்தும், களைச்செடிகளிடமிருந்தும் எல்லாவற்றிற்கும் மேலாக மரவெட்டியின் கோடாலியிடமிருந்தும் தப்பிக்க வேண்டும். ஒரு மரம், நடப்பட்டத்திலிருந்து 15 மீட்டர் வரை வளர்வதற்கு சுமாராக 12 ஆண்டுகள் பிடிக்கிறது,

நன்றி.. ஜெகநாதன், காட்டுயிர் விஞ்ஞானி, திணமணி 11.3.2012
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

சப்பை மேட்டரு….ஒரு சிலருக்கு .. (பார்ட் இரண்டு)

சப்பை மேட்டரு….ஒரு சிலருக்கு .. (பார்ட் இரண்டு)
kannadasan songs for life reference

அந்தகாலத்தில் கண்ணதாசனால் இயற்றப்பட்ட பாடல்களின் ஒரு சில வரிகள்… இப்பொழுதும் ஒரு சிலருக்கு பொருத்தமாக இருப்பது கண்கூடு..

13. ஜெனரல் சக்ரவர்த்தி

ஐயா ஒரு வகை மைனரடி .. இவர்
ஆத்திரப் படுவதில் மேஜரடி
கையும் காலும் துடிக்குதடி .. இவருக்கு
கல்யாணம் ஆகலை தெரியுதடி
காதலைத் தேடிப் போறாரோ .. இல்லை
கப்பலைப் பிடிக்கப் போறாரோ
பாவம் மனசு பதறுதடி
பக்குவமாக வழி விடடி.


14. சூரியகாந்தி

பரமசிவன் கழுத்திலிருந்து
பாம்பு கேட்டது.. கருடா சௌக்கியமா? யாரும்
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே.. கருடன் சொன்னது
அதில்.. அர்த்தம் உள்ளது.
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.

15. நான் நானேதான்

கண்ணொன்று கானும் வாய் ஒன்று பேசும்
இரட்டை வேடமடா
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் .. என்பது
மனிதனின் பாடமடா
பெண் வெறி கொண்டவன் எவனாலும்
தாயே தாரமடா.. இந்த
பேதைகளை நாம் நினைப்பது கூட
நெஞ்சுக்குப் பாரமடா.

16. பணம்

எங்கே தேடுவேன்.. பணத்தை
எங்கே தேடுவேன்.
பூமிக்குள் புகுந்த புதையலானோயோ
பொன்னகையாய் பெண் மேல்
தொங்குகிறாயோ
சாமிகளடிதனில்
சரண் புகுந்ததாயோ
சந்தியாசி கோலத்தோடு
உலவுகின்றாயோ..
எங்கே தேடுவேன்.. பணத்தை
எங்கே தேடுவேன்.

17. மக்கள் குரல்

வட்டமிடும் ஆள் மீது
சந்தேகம் தோன்றிவிட்டால்
திட்டமிட்டு தீர்ப்பதும் உண்டு .. அது
யாருன்னு பாக்குறீங்க நீங்க .. ஐயா
நீங்க ஒன்னும் அப்படி இல்லீங்க..

18. புன்னகை

காமத்தில் கண்கள் கெட்டால்
ஞானியின் பெயரும் முட்டாள்
மோகத்தில் பிறரைத் தொட்டால்
உன் தாயே நேர்மை கெட்டாள்
ஆணையிட்டேன் நெருங்காதே
அன்னையினம் பொறுக்காதே
ஆத்திரத்தில் துடிக்காதே
சாத்திரத்தை மறக்காதே
எரிமலையைத் தீண்டாதே.

19. விஸ்வரூபம்

என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
ஏரைப்புடிச்சே .. இந்த ஊரைப் பிடிப்பேன்
எடுத்தரை எல்லாம் நடத்தி முடிப்பேன்
கையோடு கள்ளமில்லே.. இந்த
வாயோடு பொய்யுமில்லே
தைரியமிருக்கு சத்தியத்தைக் காப்பேன்
தாயாரின் பாடமய்யா.. இது தாயாரின் பாடமய்யா.

20. 47 நாட்கள்

தொட்டாக்கச் சுட்டுப்புடுவேன்
இந்தியப் பொன்னுங்க
சொன்னாலும் வார்த்தை ஒன்னு
தமிழில் சொல்வேங்க
சூடான வார்த்தை எங்கள் தமிழில் தானுங்க.

21. என்ன முதலாளி சௌக்கியமா?

பாலுண்டு தேனுண்டு பன்னீரில் நீராடி
காரேறு திருமேனி சௌக்கியமா
பொன்னென்ன மண்ணென்ன
செல்வங்கள் என்னென்ன
எல்லாமும் இப்போது சௌக்கியமா?

22. துர்கா தேவி

நான் ஆயிரம் கண் காளி
உனை ஆட்டி வைக்கும் நீலி .. என்
பேரு சொல்லி யாரு வந்தா
காத்து நிற்கும் தோழி.

23. கஸ்தூரி திலகம்

ஆட்டம் முடிஞ்சுதா ராஜா
அறிவு வந்ததா ராஜா
கோட்டை சரிஞ்சுதா ராஜா
கூட்டம் கலைஞ்சுதா ராஜா
என்ன ராஜா சங்கதி என்ன
இப்ப நினைச்சு என்னத்தைப் பண்ண?

.. நன்றி.. கண்ணானகண்மனி, அனுராதா ரமணன்
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

சப்பை மேட்டரு….ஒரு சிலருக்கு .. (பார்ட் ஒன்று)

சப்பை மேட்டரு….ஒரு சிலருக்கு .. (பார்ட் ஒன்று)
kannadasan songs for life reference

அந்தகாலத்தில் கண்ணதாசனால் இயற்றப்பட்ட பாடல்களின் ஒரு சில வரிகள்… இப்பொழுதும் ஒரு சிலருக்கு பொருத்தமாக இருப்பது கண்கூடு..

1. தங்கதுரை திரைப்படத்தில் இருந்து

திருநீறு பூசிக் கொண்டு
சிவன் பேரைச் சொல்லிக் கொண்டு
மது உண்டு மங்கை கொண்டு
வாழ்கின்ற மனிதர் உண்டு
அவர் மேலே பக்தி கொள்ளும்
அடியார்கள் மிகவும் உண்டு
ஆடென்றும் மந்தையென்றும்
அவரைத்தான் சொல்வதுண்டு.

2. உறவு சொல்ல ஒருவன்

கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
பணத்தில் ஆசை பதவியில் ஆசை
பருவ நாளில் காதலில் ஆசை
நூறு கிடைத்தால் ஆயிரம் கேட்கும்
ஆயிரம் கிடைத்தால் அதைவிடக் கேட்கும்
ஆசை எங்கே முடிந்தது கண்ணே
ஆண்டவன் கூட ஆசையின் பின்னே

3. வாணி ராணி

எவனெவன் மனதில்
என்னென்ன இருக்கும்
எவனுக்கடா தெரியும்
இன்றைய மனிதன்
நாளைய திருடன்
அவனுக்குத்தான் புரியும்.

4. மக்கள் குரல்

குவியுங்க காசு பணம் கோடி .. அது
கோடி வரை சேர்ந்து விட்டால்
கோயிலுக்குள்ளே இருக்கும்
ஈஸ்வரனும் உங்களுக்கு ஜோடி

5. என் மகன்

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்
கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே
வாழ்கின்றான்..
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே
காண்கின்றான்.

6. சூரிய காந்தி

பூஜைக்காகப் போறவா போல்
ஆப்பளை போவான் .. அங்கே
பூஜை தேடி பொம்மனாட்டி நேரத்தில் வருவா
சாமியக் கண்டாளா .. அவ
பூஜையைக் கண்டாளா .. வந்த
மூர்த்தியக் கண்டாளா .. பையன்
மூஞ்சியக் கண்டாளா…

7. என் மகன்

அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவருக்கும் மரியாதை கண்டேன்
அதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன்.

8. எங்க ஊர் ராஜா

யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க .. என்
காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க
நெஞ்சமிருக்கு துணிவாக
நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக
நீ யார் நான் யார் போடா போ..

9. அரங்கேற்றம்

சத்திர சோத்துக்குக் காத்திருப்பார்
இவர் காத்திருப்பார் .. பிறர்
சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார்..
மாப்பிள்ளை படித்தது வேதமடி வேதமடி .. அவர்
மனதில் இருப்பது பூதமடி
உதட்டில் புன்னகை வேஷமடி .. நான்
உள்ளதைச் சொன்னால் ரோஷமடி.

10. கறுப்புப் பணம்

கையிலே பணமிருந்தால்
கழுதை கூட அரசனடி
கை தட்ட ஆளிருந்தால்
காக்கை கூட அழகனடி
பொய்யிலே நீந்தி வந்தால்
புளுகனெல்லாம் தலைவனடி
பூசாரி வேலை செய்யுட்ம
ஆசாமி சூரனடி.

11. தங்கத்துரை

ஊரான் சோறு உலவுது பாரு
ஊருக்குள் சாமிக்கு என்ன பேரு
ஆளா இவரு அதிசயம் பாரு
யாரையும் சரி பண்ணப் பார்ப்பாரு
எங்கேயும் வருவாரு ஏதாச்சும் பெறுவாரு
முடிச்சையும் போட்டு பிரிச்சும் வைப்பாரு
அறிவுக்கும் இவருக்கும் தகறாறு.
.. 1 part remains

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

சினிமாவை காப்பாத்துங்க…

சினிமாவை காப்பாத்துங்க…
Save Tamil Films from Loss
தமிழ் திரை உலகம், முன்எப்பொழுதும் இல்லாத வகையில் பல வகையான திரைக்களங்களைக் கண்டு கொள்கிறது. சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் என்று ஜாம்பவான்களின் கைகளில் இருந்த உறீரோ சிப்பை எளிதாக நேற்று வந்த புதுப்புதுப் நடிகர்கள் (பெரும்பாலும் பையன்கள்), நடிகைகள் (பெரும்பாலும் இளம்பெண்கள்) , மற்றும் பல்வேறு துறைகளில் எவர்வேண்டுமானாலும் ஜொலிக்கலாம் என்று உருவாகிவிட்டது. ஆனால், வெற்றி வாய்ப்பும் முதலீட்டுக்கு ஏற்ற ரிட்டன்கள் கிடைக்கிறதா என்றால் அதுதான் இல்லை. ஒருகாலத்தில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை குறைவு ஆனால், அது பெறும் (டப்பா படங்கள் கூட) வசூல் வேட்டையில் கணிசமாக ஜெயித்துவிடும். அதனால் அந்தப் படங்களை எடுத்தவர்கள் பலன் அடைந்தனர்.

ஆனால், இப்போ எவ்வளவு பட்ஜெட் படங்கள் ஒரு வாரத்திற்கு 2 அல்லது 3 திரைப்படங்கள் கூட ஒரு சில திரையர்ங்குகளில் வெளியிடப்படுகிறது. ஆனால், தியேட்டருக்கு சென்று பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை மிக்க்மிக்க் குறைவு… ஏன்?
வீடியோ பைரசி, இண்டர்நெட் டவுன்லோடு, மொபைல் டவுன்லோடுதான் காரணம்.

இதைத்தவிர்க்க என்ன செய்யலாம்?
1) படங்களைத் தியேட்டரில் வெளியிடுவதை விட ஒரு தடவை மட்டும் பயன்படுத்திய பின் பிறகு பயன்படுத்த முடியாத, காப்பி செய்ய முடியாத வகையில் டிகிரிப்ட் செய்யப்பட்ட வகையில் சிடி வகையில் மிக குறைவான விலையில் சுமார் 25 ரூபாய் பல ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்து, வெளியிடலாம்.
2) பே சானல் போன்று பே டவுன்லோடு அல்லாமல் நெட் வியூ என்னும் முறையை பின்பற்றலாம்.
3) பே சானலில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு ஒளிப்பரப்பலாம்.
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

அரவாண் .. தமிழ்திரைப்பட விமர்சனம்.

அரவாண் .. தமிழ்திரைப்பட விமர்சனம்.
aravan .. tamil film review

திரையரங்கில் நுழைந்தவுடன் டமால் என்று ஒரு சத்தம், என்ன என்று பார்த்தால் படம் ஆரம்ப காட்சியில் இசை டீடிஎஸ் ஒலியில் ஒலித்தது. வசந்தபாலனின் 3வது படைப்பு, துணிந்து இந்த சப்ஜெக்டை தொட்டிருக்கிறார். 18ம் நூற்றாண்டின் ஆரம்பக்காலத்தில் ஏழ்மையான மலைக்காட்டில் வசிக்கும் சிற்றூர்களில் நடக்கும் கதையாகும். அந்தக்காலத்தில் மக்கள் எவ்வாறு (முரட்டுத்தனமான, உடைகள் இன்றி, எந்தவிதமான வசதிகள் இன்றி, சமூகத்தில் இறைவழிபாடு மட்டும் குறைவின்றி, ஆனால், ஒற்றுமையுடன், ஊரில் உள்ள அனைவரையும் அனைவருக்கும் தெரிந்து அன்புடன் வாழ்ந்து வருகிறார்கள். கதைப்படி காண்பிக்கப்படும் சிற்றூரைச் சேர்ந்தவர்கள் அருகிலுள்ள வசதியான கிராமங்களில் உள்ள பணக்காரர்களிடம் உள்ள பொன்..பொருள்களை களவாடி அதை குறைந்த விலைக்கு விற்று அதில் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அனைவரும் உண்கிறார்கள்.

தமிழர்களின் வீரவிளையாட்டான, மாடுபிடி போட்டி, ஓட்டப் பந்தயம், பொங்கல் விழா போன்றவை ஆங்காங்கே சிறப்பிக்கிறது. ஆதி (இவர்தான் அரவாண்), மகாபாரதத்தில் பலி கொடுக்க அரவாண் பயன்படுத்தியது போல, ஆதியை பலி கொடுக்கும் சூழ்நிலை உருவாகிறது. பலிகொடுக்க வேண்டிய நாளில் ஆதி சூழ்ச்சியை அறிய முயற்சிசெய்கிறார், முயற்சி தோற்று பலிகொடுக்க வேண்டிய இடத்திற்கு வரஇயலாமல் தலைமறைவாகிறார். இவருக்கு பதிலாக அவர் நண்பர் பலியாகிறார்.

ஒரு சிறிய சஸ்பென்ஸ் கதையுடன் பின்னி பிணைந்து பெடல்எடுக்கிறது. படமாக்கிய விதம் மிக அருமை. கதாநாயகி அளவுடன் ஆதியுடன் கொஞ்சிகுலாவுகிறார். ராசா கதாபாத்திரமும், சின்ன ராணியும் குறைவான காட்சிகளே படத்தில் வந்தாலும் மிக முக்கியமான ஆட்களாக ஆகிவிடுகிறார்கள். காடு, மலை, சிறு கிராமம், சந்தை என ஆர்ட் டைரக்டர் கடுமையாக உழைத்திருப்பது நன்கு தெரிகிறது.

படம் கொஞ்சம்போல் நீண்டுகொண்டே போகிறது.. இருப்பினும் ஒவ்வொரு பிரேமும் தவிர்க்க இயலாத ஒன்று என்பது நமக்கே புரிகிறது. பதினெட்டாம் நூற்றண்டின் மனித வாழ்க்கையை நமக்கு கண்முன்பாக காண்பித்த இயக்குநருக்கும் மற்ற பிற உழைப்பாளிகளுக்கும் தமிழர்கள் நன்றியை அவசியம் தெரிவிக்கலாம். இருப்பினும், சு.வெங்கடேஷனின் காவல் கோட்டம் நாவலின் ஒருபகுதியை டெவலப் செய்து இருந்தாலும், தமிழர்களை களவாடிகளாக இல்லாமல் சிறந்த உழைப்பாளிகளாகக் காண்பித்து இருக்கலாம். (உண்மையும் அது தானே.)
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

இதப்படிக்கலைன்னா.. உங்க உயிர்,உடல் சீக்கிரம் உங்களை விட்டு போயிடும்…..

இதப்படிக்கலைன்னா.. உங்க உயிர்,உடல் சீக்கிரம் உங்களை விட்டு போயிடும்…..
HEALTH IS WEALTH… NEW METHOD FOR NON SLEEPING
GOOD FOOD HABITS FOR OUR HEALTHS
NEW METHOD OF EASY TO MAINTAIN SOUL AND BODY

நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது, ரத்தநாளங்கள் மூலம் செல்களுக்குத் தேவையான பொருள்கள் சென்று சேர்கின்றன. அதுபோல கழிவுகளும் ரத்தநாளங்கள் மூலமாகவே கழிவு உறுப்புகளுக்குச் சென்று வெளியேறுகின்றன. உடலில் உள்ள எந்த செல்லுக்கு நோய் வந்தாலும், அதற்க முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன.

ரத்தத்தில் உள்ள பொருட்கள் கெட்டுப்போவது ஒரு காரணம், ரத்தத்தில் இருக்க வேண்டிய பொருள்டகள் இல்லாமற் போவது இன்னொரு காரணம். நமது உடலுக்குத் தேவையான அளவுக்கு ரத்தம் இல்லாமல் போவது மூன்றாவது காரணம். நமது உடலில் உள்ள செல்கள் குறிப்பிட்ட ஒழுங்குமுறையுடன் செயல்படுகினற்ன. அப்படிச் செயற்படாமல் போவது நான்காவது காரணம். நோய் வாய்ப்பட்டவுடன் அல்லது நோயுற்றதாக நினைத்தவுடன் நம் மனம் பாதிக்கப்படுவது ஐந்தாவது காரணம்.
இந்தக் காரணங்களில் முதலில் சொன்ன மூன்று காரணங்களையும் நாம் சரி செய்துவிட்டால் மீதம் உள்ள இரண்டு காரணங்களும் தானகவே சரியாகிவிடும். அப்படியானால் இதயம் பாதிப்படைந்தால், சிறுநீரகம் பாதிப்படைந்தால், கண்கள் பாதிப்படைந்தால், பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய, செல்களுக்குத் தேவையான சத்துக்களைத் தரும் ரத்தத்தைச் சரி செய்ய வேண்டும்.

அதாவது ரத்தத்தில் உள்ள பொருள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய எல்லாப் பொருட்களும் உரிய அளவில் இருக்க வ்ணடும். உடலுக்குத் தேவையான அளவு ரத்தம் இருக்க வேண்டும். தனியாக இதயத்துக்கு என்றும், சிறுநீரகத்துக்கு என்றும் சிகிச்சை தேவையில்லை. இதுதான் செவி வழிதொடு சிகிச்சையின் அடிப்படை.
அப்படியானால் ரத்தத்துக்குத் தேவையான சத்துக்களை எப்படி அளிப்பது?
நாம் உண்னும் உணவில் இருந்தே ரத்தத்துக்குத் தேவையான சத்துப் பொருட்கள் கிடைக்க முடியும், அப்படியானால் எதை உண்னுவது? எப்படி உண்னுவது?
முதலில் பசி வந்தபின்புதான் சாப்பிட வேண்டும், உடலில் உள்ள செல்களுக்குச் சத்துக்கள் தேவை என்னும்போது தான் நமக்குப் பசி எடுக்கிறது. எனவே பசிக்காமல் சாப்பிடக் கூடாது. அடுத்து சாப்பிடும் உணவு நல்லபடியாகச் செரித்து அதிலுள்ள சத்துக்கள் உடலில் சேர வேண்டும்.
வாயைத்திறந்து, திறந்து அவசர அவசரமாக உணவை விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாயைத்திறந்து மூடுவதன் காரணமாக உணவுடன் காற்றும் வயிற்றுக்குள் செல்கிறது.
உணவை வாயில் போட்டவுடன், உதட்டை மூடிக்கொண்டு உணவு கூழ் போல் ஆகும்வரை மென்று, உணவின் சுவையை நாக்கு உணருமாறு செய்து அதற்குப் பின்பு விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாக்கில் ஊறும் உமிழ்நீருடன் உணவு கலந்து வயிற்றுக்குள் செல்கிறது. உமிழ்நீர் உணவை நன்கு செரிக்கச் செய்கிறது. எனவே, அவசரமாகச் சாப்பிடக் கூடாது.
இரண்டாவதாக, சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போது, சாப்பிட்ட பின்பும் நிறையத் தண்ணீர் குடிப்போம். நல்ல பசி உள்ள வேளையில் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. நாம் தண்ணீர் குடிக்கும்போது, ஜீரண நீர்கள் நீர்த்துப் போகின்றன. இதனால் செரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. அதாவது நாம் உண்னும் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் முழுமையாகச் சேர்வதில்லை.
மூன்றாவதாக, குளித்தவுடனேயே சாப்பிடக் கூடாது. நீங்கள் வெந்நீரிலோ, தண்ணீரிலோ குளிக்கும்போது நமது உடலின் வெப்பநிலை மாறுபடுகிறது. அப்படி மாறும் வெள்ளநிலையை உடலின் வெப்பநிலைக்கு அதாவது 37 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குக் கொண்டு வர நமது உடலில் உள்ள செல்கள் முழுக்க முயற்சி செய்கின்றன. குளித்து முடித்தவுடன் உடலில் ஏற்பட்ட வெப்பநிலை மாறுதலை சரி செய்வதற்காக உடலின் செல்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கும் போது நாம் சாப்பிட்டால் உணவு ஜீரணமாவதில் பிரச்சினை ஏற்படும். அதேபோன்று சாப்பிட்டதும் குளிக்கக்கூடாது.
தண்ணீர் குடிப்பதிலும் நமக்குச் சரியான திவில்லாமல் இருக்கிறோம். எவ்வளவு தண்ணீர் குடிப்பது? உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால் தாகம் எடுக்கும், தாகம் எடுத்தவுடன் தேவைப்படும் அளவுகுத் தண்ணீர் குடித்தால் போதுமானது.
தேவையான அளவுக்குத் தூங்க வேண்டும். தேவையான அளவு தூக்கம் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். கடுமையான உடல் உழைப்பாளிக்கு அதிகத் தூக்கம் தேவைப்படும். ஏசி அறையில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து மூளை உழைப்புச் செய்பவருக்கு அதிகத் தூக்கம் தேவைப்படாது. எனவே தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரைகளை விழுஙகுவதில் அர்த்தமில்லை. தூக்கம் வரவில்லை என்றால் கண்ணை மூடிக்கொண்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தூக்கம் வரும்பொது தூங்கிக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தூங்கினால்தான் செல்கள் உடலில் நன்கு செயல்பட முடியும். செல்லுக்கு அறிவு உண்டு. தேவையான சத்துப் பொருட்கள் உரிய அளவில் இருந்தால் கெட்டுப்போன செல்கள் தம்மைத் தாமே சரி செய்து கொள்ளும்.

எவற்றைச் சாப்பிடுவது? உணவு வகைகளில் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் சுவையுள்ள பழங்கள், வெள்ளரி போன்ற காய்கள் போன்றவற்றுக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். அதற்கடுத்து முளைவிட்ட தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமைத்த சைவ உணவுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அசைவ உணவு வகைகளுக்கு அதற்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். டீ, காப்பி, மது போன்றவற்றைச் சாப்பிடக்கூடாது.
எவற்றை மட்டும் சாப்பிட்டு நாம் மூன்று நாட்களுக்கு மேல் உயிரோடு இருக்க முடியுமோ, அவையெல்லாம் உணவு எவற்றை மட்டும் சாப்பிட்டு மூன்று நாட்களுக்கும் மேல் உயிரோடு இருக்க முடியாதோ, அவையெல்லாம் உணவு அல்ல. மது போன்றவை உணவு அல்ல.
உடல் உழைப்பு உள்ளவர்களைத் தவிர, பிறர் உடல் பயிற்சி, நடைப் பயிற்சி, யோகாசனம் போன்றவற்றைச் செய்து வந்தால் நோயின்றி வாழலாம். வந்த நோயையும் சரிபடுத்திவிடலாம். இதுதான் எளிய மருத்துவமுறை.

ஆனால், வெளிப்புறத்திலிருந்து உடலுக்குத் தாக்குதல் ஏற்பட்டால், உதாரணமாக கீழே விழுந்து கால் எலும்பு முறிந்தால் அதை இந்த மருத்துவமுறையின் மூலம் சரி செய்ய முடியாது. அதற்கு மாவுக்கட்டோ, அறுவைச் சிகிச்சையோ செய்துதான் சரிசெய்ய முடியும்.

… நன்றியுடன், திரு. பாஸ்கர், திணமணி 10.3.2012
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

மகளிர் மட்டும்… அடிமைப்பட்ட இனமா?..

மகளிர் மட்டும்… அடிமைப்பட்ட இனமா?..
makalir thinam, Womens Day on March 8

ஒரு வழியாக பிங்க் டே (அதாங்க மார்ச் 8, காலையில் எழுந்தவுடன் எனது மகள் மகளிர் டேக்கான கிப்ட் கேட்டாள், நீ மகளிர் இல்லை சிறுமி என்று கூறி சமாளித்தேன்) கடந்து போய் விட்டது. மீடியாக்களில் இந்த தினம் செய்தி தீனி போடும் விஷயமாகிவிட்டது.

1. பெண்கள் இல்லாத உலகம், வெறுமை
2. தாய்க்குப்பின் தாரம்
3. நூலைப்போல சேலை, தாயைப் போலப் பிள்ளை
4. அவரை விதைத்து சுரையா முளைக்கும்
5. தாயில்லாமல் நானில்லை
6. தாரத்திற்கு மிஞ்சியதுதான் தானம்.
7. தாய்க்கு பிள்ளை தப்பால் பிறந்திருக்கு
8. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும்
9. காட்டுல புலி வீட்டுல எலி
10. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
11. அழகு ஆபத்து
12. அழகைவிட அறிவே சிறந்தது
13. சீறும் புலியை நம்பு, அழும் பெண்ணை நம்பாதே
14. பெண்களே இந்த நாட்டின் கண்கள்
இப்படி பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

பொதுவாக பெண்கள்தான் குடத்தில் இட்ட குத்துவிளக்கு போல் ஒரு குடும்பத்தின் வெற்றி மற்றும் தோல்விக்கு காரணமாகவும் அமைகிறார் என்பது எனது பொதுவான கருத்து. உடல்ரீதியாக பல வலிகளை பொறுத்து, பிறரைச் சார்ந்து எவ்வளவு உயர்வான இடத்தில் இருந்தாலும் கூட, அவரது கணவரையோ, மகனையோ சார்ந்து இருக்கும்படியானலும் கூட தனது தனித்துவத்தை தற்காலத்தில் பலரும் உயர்வாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது ஒரு நல்ல முன்னேற்றம்.
இரண்டாவது முக்கியமான மாற்றம் சமூகத்தில் நிகழ்ந்தது, பாலியல் ரீதியான எதிர்பார்ப்புகள், எதிரிணக் கவர்ச்சி ஆகியவை பெரும்பகுதி குறைந்து, பொருளாதார ரீதியான ஒட்டுதல்களே பெரும்பாலும் நிகழ்வது மகளிரைப் பொறுத்தவரை ஒரளவிற்கு வெற்றியே.
பெண்மையை போற்றுவதும் சாலச்சிறந்தது. நம்ம அண்ணாச்சி சித்தூர் முருகேசன் ஜோதிடம் 360 டிகிரி புக்குல கூட பெண்கள் இல்லைன்னா… http://anupavajothidam.blogspot.com/ ஒன்னுமில்லைன்னுதான் எழுதியிருக்காரு.. அதே நேரம், ஒரு சில பெண்களின் மனம் குண நலண்கள் குறிப்பாக பெரிய குடும்பங்களில் அந்த அமைப்பையும் சிதைத்து பலகாலம் கட்டிக்காத்த பெயர்கள் கூட அழிந்துபோய்விடக்கூடியதாக இருக்கிறது. டாஸ்மார்க்கில் தண்ணியடிப்பவர்களில் கணிசமான எண்ணிக்கை உயர்வுக்கு கூட பெண்கள் ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருப்பதாக தெரியவருகிறது.
மனம் ரீதியாக பெண்களின் குணநலன்கள் சூழ்நிலையின்பால் வளர்த்தெடுக்கப்படுகிறது, (அவர்களுக்கு பெரும்பாலும் அனுபவஅறிவு குறைவாகவே இருக்கிறது கண்கூடு). பெண்களால் நன்மையடைய கூடுமானவரை பெண்களை நல்லவிதமான அனுகுமுறையை கடைப்பிடிக்கலாம், (தவறிழைக்கும் பெண்களை தவிர்க்கவோ உதாசீனப்படுத்தவோ செய்யலாம்)
எதுவாயினும், பெண்மையைப் போற்றுவோம். வாழ்க மகளிர் தினம்… மகிழ்ச்சியே அமைதியான உலகிற்கு வழி, அதற்கு உதவும் மகளிர்க்கு வாழ்த்துக்கள்.

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu