லஷ்மி வாசம் … உள்ளே / வெளியே

லஷ்மி வாசம் … உள்ளே / வெளியே
Lakshmi Kadatsham

லஷ்மி வாசம் … உள்ளே
அழகு, தைரியம், வேலைத் திறமை கொண்டவன், வேலை செய்து கொண்டிருப்பவன், கோபமில்லாதவன், தெய்வ பக்தி உள்ளவன், நன்றி மறவாதவன், ஐம்புலன்களையும் அடக்கியவன், எப்போதும் சாத்வீகக் குணம் கொண்டவன் இப்படிப்பட்டவர்களிடம் நான் நிலையாக வசிக்கிறேன்.

தர்மம் தெரிந்தவர்கள், தர்மத்தைக் கடைபிடிப்பவர்கள், பெரியோர்களைத் துணையாக்க கொண்டவர்கள், அடக்கம் உடையவர்கள், அடுத்தவர் மனைத அறிகின்றவர்கள், காலத்தைக் கொஞ்சம் கூட வீணாக்காதவர்கள், தானத்திலும், துய்மையிலும் ஊக்கம் உடையவர்கள், தத்துவ ஞானத்தை விரும்புகின்றவர்கள், பசுக்கள், பிரம்மத்தை அறிந்தவர்கள், பக்தி உள்ளவர்கள், வீடுகளையும், பாத்திரங்களையும் சுத்தமாக வைத்துக் கொண்டு, பசுக்களையும், தானியங்களையும் ஊக்கத்துடன் கவனிக்கும் பெண்கள் முதலியவர்களிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.

அடக்கத்தோடு பெரியோர்களுக்குப் பணிவிடை செய்வதில் ஊக்கம் உள்ளவன், துய்மையான மனம், பொறுமை, அடக்கம், சத்தியம், இயற்கையிலேயே நல்ல குணம், மனம், சொல், செயல் இம்மூன்றிலும் துய்மை உள்ளவன், தேவர்களையும், பிரம்மத்தை அறிந்தவர்களையும் பூஜிக்கும் பெண் முதலியவர்களிடம் நான் இருக்கிறேன். எப்போதும் உண்மை பேசுபவர்கள், பார்வைக்கு இனிமையானவர்கள், அழகும் குணமும் உள்ளவர்கள், கற்புள்ளவர்கள் மங்கலகரமான ஆசாரங்கள் உள்ளவர்கள், துய்மையான அலங்காரம் கொண்டவர்கள் இப்படிப்பட்ட பெண்களிடம் நான் இருக்கிறேன்.

வாகனங்கள், கன்னிப் பெண்கள், ஆபரணங்கள் யாகங்கள், மழை பொழியும் மேகங்கள், பூத்த தாமரைக் கொடிகள், யானைகள் மாட்டுக் கொட்டில்கள், அரசர்களின் சிம்மாசனங்கள், கரு நெய்தல், பூக்களும் தாமரைப் பூக்களும் உள்ள குளங்கள் முதலிய இடங்களில் நான் வசிக்கிறேன். கரையிலுள்ள மரங்கள் தண்ணீரில் தழைத்திருப்பதால் அழககாக விளங்குபவை மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்து கொண்டும் இருக்கும் வீடுகளில் நான் நிலையாக வசிப்பேன்.

லஷ்மி …. வெளியே

தொழில்களைச் செய்யாதவன், நாத்திகள், நன்றி கெட்டவன், ஒழுக்கம் கெட்டவன், கொடும் செயல்கள் உள்ளவன், அடக்கம் இல்லாதவன், பெரியோர்களிடம் பொறமைப்படுபவன் முதலியவர்களிடம் நான் இருக்க மாட்டேன். பராக்கிரமம், உடல் வலிமை, மன உற்சாகம், கௌரவம் முதலியவைகளில் குறைந்து போய், எல்லாவற்றுக்கும் துயரப்படுபவன் முதலியவர்களிடம் நான் இருக்க மாட்டேன்.

மேலும், மேலும் மனதால் யமனைக் கருதாதவர்கள், இயற்கையாகவே மனச்சோர்வு உள்ளவர்கள், அல்பத்தில் திருப்தி அடைபவர்கள் முதலியவர்களிடன் நான் ஒரு போதும் நிலைத்திருப்பதில்லை.

பொருட்களைக் காப்பாற்றாதவள், ஆராய்ந்து செய்யாதவள், எப்போதும் கணவனுக்கு விரோதமாகவே பேசுபவள், அடுத்தவன் வீட்டில் நோக்கம் உள்ளவன், நாண்மில்லாதவள், இப்படிப்பட்ட பெண்ணை விட்டு நான் விலகுகிறேன். ஆசை உள்ளவள், காரியத்தில் திறமை இல்லாதவள், கர்வம் கொண்டவள், சுத்தமில்லாதவள், கலகத்தில் ஊக்கம் உள்ளவள், துக்கத்திலேயே விருப்பமுள்ளவள், எப்போதும் படுத்திருப்பவள், இப்படிப்பட்ட பெண்ணிடம் நான் இருக்க மாட்டேன்.

.. பீஷ்மர் சொன்ன தத்துவங்கள், பிஎன். பரசுராமன்
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

ஒரு கல்.. ஒரு கண்ணாடி… திரைவிமர்சனம்

ஒரு கல்.. ஒரு கண்ணாடி… திரைவிமர்சனம்
oru kal oru kannadi tamil film review

கர்ணன் திரைப்படம் ரீலீஸ் ஆகி ஏகக்கூட்டம், அதற்கு அருகில் உள்ள தியேட்டரிலேயே ஒரு கல்.. ஒரு கண்ணாடி வெளியாகி ஒரளவிற்கு கூட்டத்தையும் வரவழைத்திருக்கிறார்கள்.
பார்த்தா ( சந்தானம்), உதயநிதி ( சரவணண் ) இருவரும் திக் பிரண்ட்ஸ், ஆனால் ஒருவருக்கு ஒருவர் அடிக்கடி டூ விட்டுக் கொள்வதும் மீண்டும் மீண்டும் ஒருவருக்கொருவர் இணைந்து ஜொள்விட்டு பிகர்களை மடக்கி கடலை போடுவதும் தான் இந்தப் படத்தின் றைலைட்…

உறன்சிகா சிக்குன்னு கதாநாயகி (மீரா) பாந்தமாக பொருந்துகிறார். அவங்க அப்பா ஒரு காவல்துறையில் ஒரு துனை ஆணையராம்.. உறன்சிகாவை டாவடிக்கும் பையன்களை வீட்டிற்கு வரவழைத்து இந்த விஷயத்தை சொல்லியே அவர் அம்மாவும் (நீயூஸ் ரீடர் உமா) பொன்னும் விரட்டி அடிப்பார்களாம். சரண்யா தான் உதயநிதியின் அம்மா… அவர் கணவர் 20 வருடமாக அவரிடம் பேசுவதில்லை காரணம்.. திருமணத்தின் போது சரண்யா டிகிரி முடிக்காமலே முடித்ததாக தெரிவித்து ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டது… அதற்காக காலையில் 6 மணிக்கு மகன் டீ போட்டுக் கொடுத்து அம்மாவை டிகிரி படிக்க வைப்பது கொஞ்சம் ஓவர்..

உதயநிதி அறிமுகமானலும், டான்ஸ் (நல்லவேளை ஒரு பைட் சீன்கூட வைக்கவில்லை) டாஸ்மார்க் சரக்கை முகர்ந்து பார்த்தே போதையாவது, உறன்சிகாவை முதல் முறை பார்த்தவுடன் பரவசமாகி பின்னாலேயே போய் அவரைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது சுவாரசியம். ஆனால் இவர் என்ன படித்திருக்கிறார் என்ன வேலை செய்கிறார்ன்னு ஒரு சின்ன மேட்டர் கூட படத்தில் இல்லை ( நெஜத்தைப் போல..)


படம் நல்ல காமெடியாக போகிறது… சிரிக்க மாட்டேன்டான்னு உம்மென்று அமர்திருப்பவர்கள் ஒரு சில காட்சிகளில் சிரித்து விடுகிறார்கள். ஆனால், அந்த மொக்கை கிளைமாக்ஸ் ரொம்ப போர்…. பாடல் காட்சிகளில் வித்தியாசமாக படம் எடுத்திருப்பது பார்வையாளர்களுக்கு விருந்து… இசையும் ஓகே ரகம்தான்… சந்தானத்தின் காதலியாக, ஒரு மொக்கை பிகரும், பேச்சும் கலீஜ் ரகம்…

படம் முழுக்க பலவிதமான சேட்டைகளை பிரயோகித்தும், உறன்சிகா உதயநிதியிடம் மடங்காமல் இருப்பது ( கிங் பிஷர் பிளைட்டில் வேற, சினேகாவுடன் சேட்டை உண்டு ), பல விதமான எதிர்பார்ப்புகளை உதயநிதியிடம் எதிர்பார்ப்பது, கடைசியில் அப்பா பார்த்த மாப்பிள்ளை ( உறன்சிகாவை கலாய்த்து மட்டமாக்கியவுடன்தான் ) உதயநிதி எவ்வளவோ தேவலாம்ன்னு உறன்சிகாவுக்கு தோனுது… இதுதான் உலக நடப்பு போல… பிகரை மடக்க அவளோட ஈகோவை காலி பன்னு இதுதான் இந்த படத்தின் மெசேஜ்.

படமும் மக்கள் மத்தியில் பரவலாக வரவேற்பை பெற்றிருப்பது அவர்களின் பேச்சில் தெரிகிறது.. ஒரு கல் எடுத்து கண்ணாடியை உடைக்கத் தேவையில்லை, முகம் பார்த்துக் கொண்டே திரும்பி வரலாம் போலே… உதயநிதி தொடர்ந்து நடித்து ஒரு ரவுண்டு வருவார் போலத்தான் தெரிகிறது. ஆனால், இதே போல் சாப்ட் கேரக்டர் மட்டுமே ஒத்துவரும், அதற்காக டைரக்டர் ராஜேஷ் போல மெனக்கெட வேண்டும்.

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

நேற்று ராத்திரி … அம்மா…

நேற்று ராத்திரி … அம்மா…

அப்பப்பா ஒரே வெயில் தாங்க முடியலைடா சாமி…. போதாத குறைக்கு இந்த மின்வெட்டு வேற ஓடற பேனையும், சூடான காற்றையும் அறையில் நிரப்புவதை சடார்ன்னு நிறுத்திடுது. நேற்றைக்கு மட்டும பலமுறை மின்வெட்டு, ஒரு கட்டத்தில் இன்வெர்ட்டர் கடுப்பாகி இன்வெர்ட்டர் மோட்டில் இருந்து நார்மல் மோடுக்கு மாறவே மாட்டேன் என்று அடம் பிடிக்க.. வேற வழியில்லாமல் பேட்டரியிலேயே ஒட்ட, ஒரு கட்டத்தில் 4 மணிசுமாருக்கு பேட்டரியும் அவ்வோளதான் மச்சி.. சரக்குன்னு ஊத்தி மூடிக்கொண்டது….

நமக்கு 4 மணிக்கே முழிப்பு வந்துட்டதால.. எங்கே தூங்கினோம், இன்வெர்ட்டர் படுத்திய பாட்டால் அரை மணிக்கு ஒருதரம் எழுந்து கரண்ட் மோடுக்கு மாறியதா என பார்த்தலியே தூக்கம் போச்சு, செல் போன்லே பேசமா இளையராஜா பாட்டை போட்டுக் கேட்டுக்கிட்டே பால்கனியிலே வந்து நின்னுக்கிட்டேன். நகரமே கும்மிருட்டு… ஒரு சில வீடுகளில் இன்வெர்ட்டர் போட்டிருந்தாலும், சும்மா லைட் எதுக்குன்னு அனைச்சு வச்சிருக்காங்க… நம்ம காவல் துறை சும்மா சொல்லக் கூடாது அந்த இருட்டிலும், ஒரு காவலர் பைக்கில் பொருத்திய சைலன்ஸ் அலற விட்டு தெரு தெருவாக (பணக்காரர் குடியிருக்கும் தெருக்கும் மட்டும்) சென்று வந்து கொண்டிருந்தார்.

நேற்று சாப்பிட்டு வந்தவுடனே இருந்து, சென்னையில் பூகம்பம் பல மாடிக்கட்டிடங்கள் காலின்னு ஒரே புரளி மயம்… அங்கே ஒருவரை போனில் பிடிச்சு கேட்டாக்காக அப்படித்தான் சொல்றாங்க நான் எதுவும் பார்க்கலைன்னாரு… எல்லாரும், டிவி பார்க்க அடிச்சு பிடிச்சு போனாக்கா, இரண்டாவது முறை பூகம்பம் வந்துட்டது, எஸ்எம்எஸ் 10 வது வந்திருக்கும் சென்னைக்கு சுநாமி 4.57க்கு வருதுன்னு… ஒரே களோபரம் தான் போங்க… எப்படியாவது இந்த ராத்திரி கரண்ட் கட் பன்றதா விட்டாத் தேவலை…

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

இந்தியாவின் மீது மேற்கத்தியர்களின் இரண்டாவது ஆக்கிரமிப்பு

இந்தியாவின் மீது மேற்கத்தியர்களின் இரண்டாவது
ஆக்கிரமிப்பு

male savanisiom or female savanisam

பெண்ணியவாதிகளால் இந்தியாவின் மீது மேற்கத்தியர்களின் இரண்டாவது ஆக்கிரமிப்பு சமீப காலமாக இந்தியாவில் பெண்ணுரிமை என்னும் பெயரில் இந்திய ஆண்களை ஒடுக்கும் அராஜகங்கள் சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பாவி ஆண்களும், குடும்பங்களும், கலாச்சாரங்களும் ஆண்களின் தொழில்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது.
அவைகளில் முக்கியமானவை,

1 ) வரதட்சினை தடுப்புச்சட்டம் :
பாதிக்கப்பட்ட பெண்களை விட பாதிக்கப்படாத பெண்கள் தரும் பொய் புகார்களால் நிலைகுலையும் குடும்பங்களும், முதியவர்களும், பணிகளில் கவனம் செலுத்தமுடியாத ஆண்களும் அதிகம்.
2 ) குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்.
பெண் என்னும் ஒரே போர்வையில் நல்லொழுக்க பெண்களையும், தரம் கெட்ட பெண்களையும் சமமாக வைப்பதால் தரம் கெட்ட, பலி, பாவங்களுக்கு அஞ்சாத பெண்களால் உண்டாகும் விளைவுகள் தனிமனித உயிருக்கும், கலாச்சாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இவைகள் போதாதென்று மனைவி விவாகரத்து கோரினால் கணவன் எதிர்த்தாலும் மனைவிக்கு உடனே விவாகரத்து வழங்கப்படுவதொடு கணவனின் சொத்தில் மனைவிக்கு சரி பாதி உரிமையுண்டு. அதே காரணத்திற்காக கணவன் விவாகரத்து கோரினால் மனைவி மறுத்தால் கணவனுக்கு விவாகரத்து மறுக்கப்படும். ஒருவேலை மனைவியின் ஒப்புதலுடன் கணவனுக்கு விவாகரத்து கிடைத்தாலும் மனைவியின் சொத்திலிருந்து கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்ற சமநீதி இல்லாத சட்டத்திற்கு கேபினெட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்தகைய சட்டங்களால் பெண்கள் திருமணங்களின் மூலம் பெருமளவு பொருள் ஈட்டும் எளிய வழி உருவாக்கப்பட்டுள்ளது., திருமணங்கள் என்பது பெண்களுக்கு மிகப்பெரிய சட்டபூர்வமான, லாபகரமான தொழிலாக மாற்றப்பட்டுள்ளது.

நாட்டில் உருவாக்கப்படும் சட்டங்கள் மக்களின் வளமான வாழ்விற்கு வழி செய்தால் வரவேற்கலாம். ஆனால் ஏற்கனவே பெண்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்ட சட்டங்களால் சாதித்திருப்பது என்ன ?
1 ) மேற்கத்தியர்கள் நம் குடும்ப அமைப்பை பார்த்து பொறாமைபட்ட காலங்கள் போய் நம் நாட்டில் விவாகரத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புற்றுநோயை போல பரவிவருகிறது.
2 ) குடும்பங்களில் வாழ்ந்த முதியவர்கள் இன்று தெருக்களிலும், காப்பகங்களிலும் வாழ்கிறார்கள்
3 ) பிள்ளைகள் பெரியவர்களின் அரவணைப்பிலும், வழிகாட்டுதளிலும் வளர்ந்து பண்பாளர்களாகவும், நாட்டு பற்று மிக்கவர்களாகவும் உருவான காலம் போய் இன்று முறையான வளர்ப்பில்லாமல், தடம் மாறி, சீரழியும் அவலங்கள் நடைபெறுகிறது.
4 ) நாட்டின் பொருளாதாரத்தை தாங்கும் இளையஞர்கள் இன்று தரம் தாழ்ந்த பெண்களின் பொய் வழக்குகளால் சிக்கி சிறை சாலைகளிலும், நீதிமன்ற வளாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிரார்கள்.
5 ) மேற்கத்திய மோகத்தால் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் நடக்கும் கலாச்சார சீரழிவுகள்.
6 ) பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் பெண்களும், ஆண்களும் காம போதையில் மிதந்து தங்கள் கல்வியை, பொறுப்புகளை, எதிர்காலத்தை தொலைக்கும் அக்கிரமங்கள் பரவலாக்கப்பட்டுள்ளது.
7 ) இரயிலில் மயக்க பிஸ்கட்டுகளை கொடுத்து திருடும் திருடர்களை போல நாட்டில் காம போதையை ஏற்படுத்தி, மயங்கி கிடக்கும் காதலர்களிடம் கொள்ளையடிக்கும் பன்னாட்டு வியாபார சக்திகளின் ஆதிக்கம் பெருகிவருகிறது.
8 ) மேற்கத்திய உடை மற்றும் அழகுசாதன பொருட்களின் அமோக விற்பனையால் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவு பொருளீட்டி வருகின்றன. சொந்த நாட்டில் தொழில் முனைவோரும், நாட்டு பாரம்பரியங்களும் உருத்தெரியாமல் அழிந்து வருகின்றன.

இத்தகைய சட்டங்களை இந்த மண்ணில் பிறந்த, தேச பற்று மிக்க உண்மையான இந்திய குடிமகனுக்கு ஆதரிக்கும் எண்ணம் இருக்காது.
ஆனால் இத்தகைய அநியாய சட்டங்கள் அரங்கேருவதற்க்கு யார் காரணம் ? அதனால் ஆதாயம் அடைபவர்கள் யார்? யார் ?
நிச்சயமாக வர்த்தக நோக்கம் கொண்ட திருடர்களான பன்னாட்டு நிறுவனங்களும் , ஊழல் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தான்.

• தற்போதைய இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில் 40 சதவீதத்திற்கும் மேர்பட்டவர்கள் மீது கிரிமினல் குற்றசாட்டுகள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையகம் தெரிவிக்கிறது.
• ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவில் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுவதர்க்காக இந்திய அமைச்சகங்களுக்கும், பெண்ணுரிமை வாத அமைப்புகளுக்கும் 2010-2011 ஆண்டிற்காக ரூபாய் 67,749.80 கோடி பண பட்டுவாட செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நமது நாட்டு மக்கள் ஊழல் பெருச்சாளிகளை தங்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ஊழல்வாதிகளுக்கு வியாபார உலகின் திருடர்கள் லஞ்சத்தை வாரி வழங்குகிறார்கள். இதன் மூலம் இந்த பன்னாட்டு வியாபாரிகள் நாட்டை தங்களின் மறைமுக கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறார்கள்.
ஏமாற்று பிரசாரங்களை செய்து எத்தகைய பொருட்களையும் விற்று தீர்க்கும் வல்லமை படைத்த வியாபார உலகம், பலகாலமாக ஆண்களை தங்கள் வியாபார இலக்காக கொண்டு விரும்பத்தகாத மணமுடைய சிகரேட், பீடி, மற்றும் மது வகைகளையே ஆண்மையின் அடையாளம் என்று விற்று வந்தது. ஆண்களை குறிவைத்து தயாரிக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புகளையும் விற்று ஒரு உச்சபட்ச நிலையை ( saturation ) அடைந்த நிலையில், ஆண்களை குறிவைத்து ஒரு சில பொருட்களையே வியாபாரம் செய்ய வாய்ப்புகள் உள்ள நிலையில், பெண் இனத்தை தங்கள் வியாபார இலக்காக கொண்டால் கணக்கிலடங்காத பொருட்களை சந்தை படுத்த வாய்ப்புகள் உள்ளதாக உணர்ந்தது. அறநெறிகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும் பெண்களால் தங்கள் வியாபாரம் வளர்ச்சி அடையாது என்பதை உணர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் சாதுரியமான செயல்பாடுகளால் பெண்களின் அறநெறி கட்டுப்பாடுகளுக்கு வேட்டு வைக்கும் வேலைகளை செய்ய திட்டமிட்டது. அதற்காக ஒவ்வொரு பொருளாதார நாடுகளிலும் ஊழல் பெருசாளிகலான அரசியல் வாதிகளை லஞ்ச லாவண்யங்கள் மூலம் அடக்கி நாட்டை தங்கள் மறைமுக கட்டுப்பட்டில் கொண்டு வந்தனர். இதன்பிறகு பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுவது மட்டுமல்ல தங்கள் வியாபாரத்திற்கு தடையாக பெண்களை கட்டுபடுத்தும் ஆண்களை ஒடுக்கும் பணிகளையும் ஒருசேர செய்துவந்தனர். அவர்கள் நவீன யுகத்தில் சொந்த மண்ணில் பிறந்த ஆண்களை தொலைவிலிருந்து ஒடுக்கும் ரிமொட்கான்ரோல்களாக செயல்படுகின்றனர்.
அமேரிக்கா, பிரிட்டன் போன்ற பொருளாதார நாடுகளை பதம் பார்த்து, அங்கு மனநல மருத்துவர்களுக்கு பற்றாகுறை ஏற்படுமளவுக்கு மனநல நோயாளிகளை உருவாக்கி சமூகத்தை சீரழித்த இந்த பன்னாட்டு வியாபார சக்திகளின் தற்போதைய இலக்கு தற்பொழுது பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நம் இந்திய நாடு.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டின் தாராளமயமாக்கல் கொள்கையின் முழு பலனையும் அடைய விரும்பும் வியாபார சக்திகள், இந்திய பெண் இனத்தை முழுமையாக பயன்படுத்த தலைப்பட்டுவிட்டன. பெண்களுக்கான சமூக கட்டுபாடுகளை நீக்கி, பெண்களின் உணர்வுகளையும் தூண்டிவிட்டு அதற்க்கு ஆண் இனத்தை அடி பணிந்து போகும் படியான அபாண்டமான சட்டங்களை பெண்ணுரிமை என்னும் பெயரால் அரங்கேற்றி வருகின்றனர். இதனை ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளின் துணையோடு, வியாபார சக்திகளின் சேவகனான நம் நாட்டு ஊழல் அரசியல்வாதிகள் அரங்கேற்றி வருகிரார்கள். கூலிக்கு மாரடிப்பவர்கலாக ஊடகங்கள் தன் பங்கை செய்கிறது.
அணைவரும் அறிந்த ஒரு புகழ் பெற்ற கதையை இங்கு காண்போம் .
ஒரு முட்டாள் மன்னனிடம் வியாபாரம் செய்ய நினைத்த துணி வியாபாரி “ தான் கொடுக்கப்போகும் ஆடை முட்டாள்களின் கண்களுக்கு தெரியாது புத்திசாலிகளின் கண்களுக்கு மட்டுமே தெரியும் “ என்று இல்லாத ஆடையை இருப்பதாக பொய் கூறி மன்னனிடம் ஒரு காலி பெட்டியை கொடுக்க, அதனை பெற்ற முட்டாள் மன்னன் தன்னை புத்திசாலி என்று மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள தான் அந்த ஆடையை உடுத்திகொண்டதாக நிர்வாணமாக உலாவருவதும், அதனை கண்ட மக்களும் தங்களை புத்திசாளிகலாக காட்டிக்கொள்ள மன்னன் அழகான ஆடை அணிந்திருப்பதாக ஒருவரை ஒருவர் ஏமாற்றிகொண்டிருக்கும் சம்பவங்களே நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
ஆதிகாலத்தில் சர்வசுதந்திரமாக சுற்றி திரிந்த ஆண் சமூகம் பெண் இனத்தை பலவீனமானவர்களாக கருதியதால் பெண்களையும், குடும்பத்தையும் காக்கும் பொறுப்புகளை தாங்களே ஏற்று இன்று வரை வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.. பொருளாதாரம் என்னும் பெயரில் அகில உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வியாபார உலகம், தனது வியாபாரத்தின் நுகர்வோராக பெண் இனத்தை பயன்படுத்த வசதியாக அவிழ்த்துவிடும் புழுகு மூட்டைகள் தான் “ ஆண் ஆதிக்கம்”, “பெண் அடிமை” என்னும் புளுகு மூட்டைகள். இந்த புளுகு மூட்டைகளை ஆதரிப்பவர்களே புத்திசாலிகள், புரட்சியாளர்கள் என்பன போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர்.
இன்று ஆண்கள் பெண்களை அடிமை படுத்தியிருப்பது உண்மையானால் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைக்கும் பெண்கள் ஆண்களிடமிருந்து முற்றிலும் விடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை சுதந்திரமாக தாங்களே தேடிக்கொள்ளட்டுமே. விவாகரத்திற்கு பிறகும் ஆண்களின் இரத்தத்தை ஏன் குடிக்கவேண்டும்.
18 ம் நூற்றாண்டில் தொடங்கி இந்தியாவை அடிமைபடுத்தி சுரண்டிவந்த மேர்கத்தியர்களிடமிருந்து விடுதலை அடைந்த நம்மை நமது ஊழல் அரசியல்வாதிகள் “பெண் அடிமை” என்னும் மாயை வார்த்தையை சொல்லி ஒட்டுமொத்த தேசத்தையும் மேற்கத்தியர்களின் அடிமை தேசமாக மாற்றிவருகிறார்கள்.
மக்களாட்சி நடக்கும் நமது தேசத்தின் மக்கள் இந்த எட்டப்ப பரம்பரையின் வாரிசுகளை ஒழிக்காவிட்டால் இதன் பின்விளைவுகளுக்கான அணைத்து பொறுப்புகளையும் இந்த தேசத்தின் மக்களே ஏற்றாகவேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும். இதுவே காலத்தின் கட்டயமாகும்.
– Thanks.. ganapathiarasu@gmail.com

(Reply to the previous post)

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

கணவண் / மனைவி … தமிழகத்திற்கே முதலிடம்….

கணவண் / மனைவி … தமிழகத்திற்கே முதலிடம்….
Husband and Wife in Tamil Nadu

தமிழகம்… இந்தியாவில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், அது பெருமமைப்படக்கூடிய விஷயமல்ல.. ஏனெனில் 8.2 சதவீதம் கணவன் மனைவியர் விவாகரத்துப் பெற்று முதலிடம், 4 சதவீதம் பெற்று டெல்லி கடைசி இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடங்களை கேரளா, ஆந்திரா, கர்நாடாக மாநிலங்கள் பெற்றுள்ளது.

விதவை/மனைவியை இழந்தவர்/விவாகரத்து பெற்றவர்/தனித்து வாழ்பவர்களின் ஆண்களின் தொகையில் 14.5 சதவீதம் தமிழகம், 14.2 சதவீதம் கர்நாகடமும் பெற்றுள்ளது. மேற்குவங்கத்தில் மேற்கண்ட புள்ளிவிபரங்களில் பெண்கள் 6 மடங்கு ஆண்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளனர்.

திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் 2010ல் நடத்தப்பட்ட எஸ்ஆர்எஸ் புள்ளிவிபரங்களின்படி 57.7 சதவீதமும், திருமணம் செய்துகொள்ளாதவர்களில் 35.9 சதவீதம் உள்ளனர் எனத் தெரிகிறது. இதிலும் திருமணமே செய்துகொள்ள விரும்பாதவர்களில் 45.4 சதவீதம் பெற்று காஷ்மீரும், 30.4 சதவீதம் பெற்று ஆந்திராவும் கடைசி இடத்தில் உள்ளது.

.. நன்றி. டைம்ஸ்ஆப்இந்தியா, 5.4.2012

சிவபார்க்கவி…
திருமணம் என்னும் இந்தியாவின் முக்கியமான சடங்கு மற்றும் குடும்ப அமைப்புகள் சிதைந்து தனித்தனியான சிந்தனை ஒவ்வொருவருக்கும் மேலோங்கி இருப்பதுபோல் இருக்கிறது. அதுவும், தமிழகத்தில் ஏன் இவ்வாறு புள்ளிவிபரங்களின்படி அதிகளவில் விவாகரத்தும், குடும்ப வாழ்க்கையில் நிம்மதியின்மையும் ஏற்படக் காரணம் என்ன?

மற்ற மாநிலத்திவர்களைக் காட்டிலும் ஸ்மார்ட் என்று பெயரெடுத்த புத்திசாலித்தனம் தான் இதுக்கு முக்கிய காரணமா?
பணம்/பகட்டு வாழ்க்கையே முக்கியம் என தமிழர்களின் வாழ்வு திசைதிரும்பிவிட்டதா? சுயநலம் மேலோங்கி, தான் என்னும் தற்குறி வாழ்க்கை வாழத் தொடங்கிவிட்டோமா?

சிந்திப்போம், ஏதாவது செய்ய முடியும்னா… என்ன செய்தால் நல்லது நாட்டுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்.. பீளீஸ்.

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz