வந்துடுச்சு அடுத்த சேர்க்கை….

வந்துடுச்சு அடுத்த சேர்க்கை….
Admission.. is ready
ஒவ்வொரு வருடம் போனால், அந்தந்த வீட்டில் உள்ள வாண்டுகள், சிறுசுகள் தாங்கள் அகாடமி எனப்படும் பள்ளிக்கூட, கல்லூரி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படுதலும், வசதியில்லாதவர்கள் கல்விக்கட்டணங்களை செலுத்துவதற்கு படும்பாடு, எந்த கோர்ஸ் எடுப்பது, எந்தக் கல்லூரியில் இடம் பிடிப்பது என அந்தசின்னஞ்சிறுசுகளின் வாழ்க்கை பொருளாதாரம் மற்றும் தெரிந்தெடுக்கும் படிப்பைப் பொறுத்தும் அமைகிறது.

இதற்கென பெற்றோர்கள் பீரிமியர் இன்ஸ்டியூட் எனப்படும் மிக முக்கியமான கல்விநிறுவனங்களில் இடம் பிடிக்க தவம் செய்வதும், இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவையாக, தங்களின் குழந்தைகளின் விருப்பம் மற்றும் எந்தத்துறையில் ஆர்வம் ஆகியவற்றைப் பற்றி எந்தவிதமான கேள்வியும் கேட்டுப் பெறாமல் தாங்களாகவே இதைப்படி நல்லாருக்கும் என்ற ரீதியில்
பெற்றோர்களின் விருப்பத்தை குழந்தைகளிடம் திணித்து இதை படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தி சேர்த்து விடுகிறார்கள்.

தற்காலத்தில், பணம் என்பது மிக முக்கியமானது மற்றும் பத்தும் செய்கிறது, எனவே ஒவ்வொருவரும் விரைவில் பணம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடவே விரும்புகிறார்கள். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையின் விருப்பு வெறுப்பை வெறும் பணம் சம்பாதிக்க வேண்டி கைவிட்டுவிடுகிறார்கள்.

இந்த அகாடமி ரேஸில் முன்னிலையில் இருப்பது, பிள்ளைகளை டாக்டராக்கிவிடுவது என ஒவ்வொருவரும் நினைப்பது. இதில் மிகவிரைவில் பணம் சம்பாதிக்க முடியும் என நினைக்கிறார்கள். மேலும், அதற்கடுத்தபடியில் இருக்கும் பொறியாளர்கள், மென்பொறியாளர்கள் இவற்றில் ஒரு சில பெற்றோர் கொஞ்சம் கூட பிள்ளைகளின் விரும்பம் இல்லாமல் படிக்க நிர்பந்தப்படுத்தப்படுவதால் விளைவுகள் பலவாறு உருவாகிறது.
Tamil Blogs Traffic Ranking
நடைமுறையில் குழந்தைகளின் விருப்பு வெறுப்பு அறிந்து தேவையான படிப்புகளை தெரிந்தெடுத்து படிக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதே சிறந்த வழிமுறையாகும். அப்பொழுது தான், அவர்களை சிறந்த பொறுப்பான, வாழ்க்கையின் பிடிப்பை உணர்ந்து நடந்து கொள்ளும் குடிமகனாக உருவாக்கப்படுவார்கள்.
ஏனெனில், பணம் தான் அனைத்துவிதமான பாவங்களைச் செய்யத் தூண்டும் தூண்டுகோல். இதை மறந்துவிடக்கூடாது.

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

submit_url = “”

கலகலப்பு @ மசாலா கபே .. Tamil Film Review

கலகலப்பு @ மசாலா கபே .. Tamil Film Review
மற்றுமொரு போலீஸ்சே திருடும் கதை.. சிரிக்க சிரிக்க படமெடுக்க வேண்டும் என்று சுந்தர் சி. ஆசைக்கேற்ப கும்பகோணத்தை கதைக்களனாக மாற்றி, இரண்டு இளம் கதாநாயகிகளான அஞ்சலி, ஓவியாவை ஆடைஅவிழ்த்து அரைகுறை அந்தக்கால சில்க், அனுராதா டைப்பில் மார்பு பிளவுகள் போதும் போதும் என தெரியும் அளவிற்கு கவர்ச்சிப் படையலுடன் வெளிவந்திருக்கிறது கலகலப்பு.

புதுமையாம், ஒரே பாட்டில் இரண்டு ஜோடிகள் பாடிக்கொண்டு டான்ஸ் ஆடுவது…

படத்தில் ஒரு பழைமையான ஓட்டல், விலைமாதர்கள், மாமாக்கள், போலீஸ் டம்மிகள், பலசாலி ஆனா இல்லை என்று வடிவேலு ஆரம்பித்த பயில்வான் காட்சிகளை மறுபடியும் சந்தானம் தனது வெர்சனில் நடித்திருக்கிறார். நாய் முக்கியமான பாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

பழையபட பாணியில் கிளைமாக்ஸ் இருப்பினும் தியேட்டரில் பெரும்பாலோனர் சிரித்து விடுகிறார்கள்.. படத்தில் குறிப்பிடும்படியாக கும்பகோணத்தை சுற்றி படம் எடுத்த விதம், காமெடிகள் பழையது என்றாலும் புதியதாக தோன்றுகிறது. தேர்தலில் ஜெயிக்க இலவசமாக பால் வழங்க ஒரு வேட்பாளர் தயார் என்றால், அவரை தோற்கடிக்க இலவசமாக டாஸ்மார்க் சரக்கை வழங்க மற்றுமொரு கோஷ்டி தயாராகவும், இந்த ஐடியா காரணமாக ஜெயித்தும் விடுவார்கள் போலிருக்கிறது. ஆணியே புடுங்க வேணாம்ன்னு வசனம்வேற…. விமல், சந்தானம், இளவரசன் நடிப்பு தேவலாம்.. ஆனா இன்னொருத்தர் பன்றாரு பாருங்க ஓரே மாதிரி நடிப்பு (அதாங்க நம்ம தமிழ்ப்பட உறீரோ) அதைத்தான் தாங்க முடியலை…

ஒரு பழைய கால ஓட்டல், அதை சோதனை செய்யும் சானிடரி இன்ஸ்பெக்ட்ர் அஞ்சலி, ஓட்டல் சொந்தக்காரர் ஓவியா, பழைய டப்பா ஸ்கூட்டர் அதை வைத்து அஞ்சலி மேல் மோத காதல் ஆரம்பம்.. பின்னர் கல்யாண சண்டை.. வைரங்கள் சென்னையில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்டு, பல பேர் கையில் மாறி மாறி கடைசியில் அது போக வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்து விடுகிறது இது தான் கதையின் ஓன்லைன். மொக்கைப்படம்ன்னு சொல்ல முடியாது…. பார்க்கலாம் ரகம்தான்.
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

வழக்கு எண். 18/9 .. எனது பார்வையில்

வழக்கு எண். 18/9 .. எனது பார்வையில்
valakku enn 18/9

பாலாஜி சக்திவேல், ஒரு தரமான இயக்குநராக பரிணமித்து அனைவராலேயும் விரும்பி பார்க்கப்பட்ட காதல், அங்காடித்தெரு மற்றும் தற்சமயம் வழக்கு எண். 18/9. நாம் தெருவில் சாதாரணமாக கிராஸ் செய்து போகும் போது பிளாட்பாரத்தில் விற்பனையாகும் உணவு கடைகளை ஒருவித சங்கோதத்துடன் கடந்து செல்கிறோம். ஆனால், இந்த படத்தைப் பார்த்த பிறகுதான், அந்த பிளாட்பார இட்லிக்கடையிலும் ஒரு கணத்த கதைக்களம் மற்றும் சோகம் இழையோடும் கதாபாத்திரங்கள் கிடைக்கிறார்கள். (சரி சரி சீக்கிரமாக விமர்சனத்தை சொல்லு…..)

1. ஒவ்வொரு காட்சியையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் ஏனெனில் நீங்கள் பார்த்த காட்சியின் மறுபக்கம் ஒரு காட்சி அடுத்தடுத்து காத்திருக்கிறது. உதாரணமாக, ஒருசமயம் காட்சி நடந்து கொண்டிருக்கும்பொழுது, ஒரு ஆம்புலன்ஸ் கடந்து செல்வது, ரோட்டில் கார் செல்லும்பொழுது ஒரு காலி பாட்டில் கிடப்பது, காரைத் தள்ள சொல்லி முக்கிய கதாபாத்திரத்தை ஒருவர் கேட்டுக் கொள்வது… போன்று தொடர் காட்சிகளாக அமைத்திருக்கும் பாங்கு சூப்பர்….

2. இளவயது விடலைபசங்க மற்றும் பெண்களை கதாநாயகன், கதாநாயகியாக பொருத்தமாக காண்பிப்பது, நல்ல தேர்வு
அதிலும் அந்த கணவு கானும் விடலைகள் குடும்பம் நடத்துவது அப்பப்பா அருமையான விஷீவல்…

3.இளவயதில் படிக்கும் பசங்களை குடும்பத்தின் வறுமை சூழலால் கொஞ்சம் பணத்திற்காக வருடக்கணக்காக உழைக்க, வடநாட்டிற்கு அழைத்துத் செல்லும் ஏஜெண்ட் மற்றும் உழைப்பை உறிஞ்சும் முதலாளி, கூட பணிபுரியும் நண்பர்கள் என நெஞ்சை பிழியும் உண்மைகள்.. நம்ம வீட்டு வாண்டுகள் எவ்வளவோ கொடுத்து வைத்துள்ளார்கள் போல…

4. ரோட்டில் மயங்கிவிழுந்த பையனை சுற்றிநின்று வேடிக்கை பார்த்தும், ரோசி என்னும் விலைமாதைத்தவிர யாருக்கும் இறக்கம் இல்லாமல் கடந்து செல்வதும், சாப்பிட ஏதாவது கொடுங்க என்று யாரிடம் கேட்டும் தங்கள் டிபன்பாக்ஸ்களை இறுக்கமாக பிடித்துகொண்டு அனைவரும் நடையைகட்டுவது உறுத்தல்கள்.

5. அழுக்குத் தண்ணியை பாதாளசாக்கடையில் ஊற்றாமல் தெருவில் ஊற்ற சொல்லி முதலாளி சொல்வதும், பின்னர் பிரச்சினையாகி உடனே மீண்டும் பாதாளசாக்கடையை பயன்படுத்த சொல்வதும் எதார்த்தம்..

6.கிராமத்தில் கூத்துக்கட்டும், நபர் வேலை வாய்ப்பில்லாமல், நகரத்திற்கு வந்தும், நட்புக்காக உதவுவதும், முதலாளி திட்டியதும் ரோசமாக வேலையை உதறுவதும்… மக்களின் எதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் எதார்த்த சினிமா…

7.பணம் இருந்தால் கொலைகூட செய்யலாம், அதன்பின் எந்தபிரச்சினையும் எழாமல் பார்த்துக்கொள்ள அரசாங்க அதிகாரிகள் (பணம் வாங்கிக்கொண்டு) இருக்கிறார்கள் என்பதையும், எதர்த்தமான கோர்ட் சீன்களையும் இந்தப்படம் பதிவு செய்திருக்கிறது. அதிலும், அமைச்சரின் தெரிந்தவர் என்று தெரிந்தும் கட்டிங்போட பலமான ஏற்பாடுகளை படிப்படியாக செய்யும் இன்ஸ்பெக்டர்.. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் நடக்கிறதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

8. பகட்டு வாழ்க்கை வாழ்பவர்களின் பணத்தேவை இல்லாதால் பிறர் அனைவரையும் அவர்களின் பகடைகளாக உருட்டி விளையாடும் பணக்கார பசங்கள்.. அவர்களின் கோர விளையாட்டால் கருகும் இளம் பெண்கள்… இதுவே, கதையின் கோர்…

9. பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு அதனால் ஒரு அப்பாவி பாதிக்கப்படுவதும், நீதி தேவைதையின் கண்கள் கட்டப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டது என்று என்னும் நேரத்தில் எதற்காக பணம் பெற்றுக்கொண்டு தவறு இழைக்கப்பட்டதோ அந்த நபரே தவறின் வலியை அனுபவிக்கும்மாறு முடிவை அமைத்திருப்பது நல்ல திருப்பம்.

10. செல்லுலாய்டின் முக்கிய பதிவுகளின் வரிசையில் இந்தப் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்…. ஏனெனில் 60 சதவீத மக்கள் படும் அவதியின் ஒரு சிறிய பதிவு இது.

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

அவ்வைப் பாட்டியிடம் சுட்டது…..

அவ்வைப் பாட்டியிடம் சுட்டது…..
Avvaiyar PonMozhigal

தமிழுலகத்தைப் பொருத்தவரையில் அவ்வைப்பாட்டியை தெரியாத தமிழர்கள் இருக்க இயலாது… முருகக் கடவுளுக்கும் அவருக்கும் நடைபெற்ற சுட்ட பழம் சுடாத பழம் மறக்க இயலாத இலக்கியத் தன்மையை நகைச்சுவையுடன் தந்திருப்பார். ஆத்திச்சுடி போன்றவை நமது வாழ்க்கைக்கு உதவும் பலவிதமான கருத்துக்களை தந்திருப்பார். அதியமான் அரசர் தனக்கு கிடைத்த அரியவகை நெல்லிக்கனியைக் கூட அவ்வையிடம் வழங்கியது அவருடைய புகழுக்கு கட்டியம் கூறுபவை.

.. நன்றி.. காலைக்கதிர் ஆன்மிக இணைப்பு

இளமைக் கோலம் இருந்தால், இவ்வுலக வாழ்க்கை வாழத் தோனும் என்று இளமையிலேயே வரத்தைப்பெற்று முதுமையை வரவழைத்த அவ்வைப்பாட்டியின் பங்கு தமிழுக்கு அளபரிய செயலாகும். சமீபத்தில் ஒரு வாரஇதழில் வரப்பெற்ற மானுட வாழ்க்கையின் செம்மைப்படுத்த தேவையான அறிவுரைகளை இந்த பக்கத்தில் சுட்டதை அப்படியே தருகிறேன். தற்போதுள்ள மானுட வாழ்க்கைக்கு அவருடைய அறிவுரைகள் நெற்றியில் அடித்தாற்போல் புரியும்படியாக அமைந்துள்ளது சிறப்பு. நீங்களும் பயன்பெற்று பிறருக்கு இதை அனுப்பி உதவலாமே…


More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

ads

கர்ணன்..2,3,4….எப்போது ?

கர்ணன்..2,3,4….எப்போது ?
Karnan .. Film Review

சமீபத்தில் ரீ/ரீலிஸ் செய்யப்பட்ட கர்ணண் படத்தைப் பற்றி நெட்டில் அக்குவேறு ஆணிவேறாக விமர்சனம் செய்யப்பட்டது.. நம்மோட பங்குங்கு கொஞ்சம் பார்ப்போம்.

1. புதிய படம் போல பழைய படத்தினை தரமாக தயார் செய்த டீமிற்கு முதலில் ஒரு சொட்டு….
2. கம்பீரமான கர்ணண் பாத்திரத்தில் அப்படியே ஒன்றி விட்டார் நமது செவாலியே சிவாஜி…
3. அவரை மிஞ்சும் அளவிற்கு நடிக்க முயன்றுள்ளார் கிருஷ்ணராக நடித்த என்.டி.ஆர்.

4. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது… என்ற பாடலை ரசிக்கவில்லையானல் உங்களிடம் ஏதோ கோளாறிருக்கிறது என்று அர்த்தம்.
5. யுத்தக் காட்சிகள் சுமார் மற்றும் சொதப்பல்கள்..
6. சுபாங்கினியாக கர்ணணின் காதலி மற்றும் மனைவி நல்ல ஈடு இணையான நடிப்பு
7. கர்ணணின் சிறிய மகன் போர்களத்தில் துணிந்து சண்டையிட்டு உயிரை விடுவது, ஈழத்து சண்டையில் பிரபாகரன் மற்றும் அவரது மகன்களின் இழப்பு ஞாபக்த்தில் வருகிறது.
8. கர்ணணின் கொடை உள்ளம்..

9. மகாபாரத்தின் ஒரு பகுதியான கர்ணன் கதையை மட்டும் படமாக்கியுள்ளதால், மீதியுள்ள கேள்விகளுக்கான விடைகள் எதுவும் இந்தப்படத்தில் இல்லை.. கர்ணண் 2, 3 என யாரும் முயற்சிக்கவில்லையா…
1. கர்ணண் மரண்த்திற்கு பின் துரியோதனன் என்ன ஆனான்?
2. குருசேத்திரப் போரில் வெற்றிபெற்ற பாண்டவர்கள் ஆட்சி செய்தார்களா, குந்திதேவியின் ஆசை நிறைவேறியதா?
3. துரபதியின் கதி என்ன ஆனது.?
4. கண்ணன் அதற்கப்புற்ம் எந்த விதமான செயல்பாடுகளை செய்தார்?
5. சகுனியை யாரவது கொன்றார்களா?
6. கர்ணனின் மரணத்திற்குப் பின் அவரது மனைவி என்ன ஆனார்?
7. மகாபாரத்கதையின் முடிவு என்ன…
போன்று கேள்விக்கனைகள் அசைபோட்டது,, யாரவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz