சட்டுன்னு குனி…. திரைவிமர்சனம்

சட்டுன்னு குனி…. திரைவிமர்சனம்

சமீபத்தில் வெளியான சகுனிப் படத்தைப் பார்ப்பவர்களை சட்டுன்னு குனியவைக்கிறார்கள். (விளையாட்டுப்போல கதைவிடுபவர்கள்), தனது பூர்வீகமான காரைக்குடி வீட்டை இடித்துவிட்டு இரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை நிறுத்த அன்னாச்சி (கார்த்திக்) சென்னை வருகிறார். வந்த இடத்தில் பார்ப்பவர்கள் எல்லாம் (சந்தானம் உள்பட) நம்பிக்கை விதையை விதைப்பதற்குப் பதில், கருவேப்பிலையாக பயன்படுத்தியதை அனுபவபூர்வமாக அறிந்து அவர்களின் வழியிலேயே மகாபாரதக்கதையின் சகுனியின் குறுக்கு வழி பாய்ச்சல்களின் மூலம், டம்பி பீஸ்களையெல்லாம் உச்சத்திற்கு கொண்டுவந்து,

1. இட்லிகாரம்மாவை கவுன்சிலராக்கி, மேயராக்குவது
2. தெருவோர சாமியாரை, கார்ப்பரேட் சாமியராக்குவது
3. டம்மி கட்சி தலைவரை முதல்வராக்குவது
(கூடவே சுத்தும்/உதவும் சந்தானத்திற்கு எதுவும் செய்யாதது கொஞ்சம் இடிக்குது) முடிவில் முதலமைச்சரே வீட்டை இடிக்கும் திட்டத்திற்கு மூடுவிழாசெய்து உத்தரவு நகலை இரயில்வே ஸ்டேஷன் வந்து கார்த்திக் உடன் கொடுக்கிறார்.
விறுப்பான கதையை பிய்த்து..பிய்த்து சம்பவங்களை கமல், ரஜினி, ஸ்ரீதேவி என காலத்தால் மறக்கமுடியாத சினிமா ஸ்டார்களின் பெயரால் உருவாக்கி சுவாரசியத்தை கூட்டிய டைரக்டருக்கு ஒரு சொட்டு.

கதாநாயகி ஒயிட்டோ ஒயிட், கார்த்திக்குடன் வழிவதே அவருக்கு தரப்பட்ட முக்கியவேலை, மாமியார் ரோஜா ? வில்லிமாதிரி கர்ஜினை செய்கிறார். சந்தானம் இருக்கும் காட்சிகளையெல்லாம் நீக்கிவிட்டு இந்தப் படத்தைப் பார்த்தால் ரொம்ப டென்ஷனாகிவிடுவோம்… அவ்வளவிற்கு கார்த்திக்/சந்தானம் ஜோடி செட் ஆகிறார்கள். இசை பெரியஅளவில் மனதில் நிற்காவிட்டாலும், பரவாயில்லை இரகம் தான். ஒளிப்பதிவு நன்று,

நடைமுறையில் சாமியார்கள் உருவாதல், மூட்டை மூட்டையாக பணம் கறப்பது, அரசியல் வாதிகளின் மனதை தட்டி கேள்வி கேட்பது (அரசியலில் இருப்பது மக்களுக்கு நன்மை செய்யவா என்ற கேள்விக்கு இல்லை என்பதை உண்மையாக ஒத்துக்கொள்வதும் சின்னவயதில் போராட்ட குணம் இருந்ததை ஒப்புக்கொள்வதும் … அரசியல்கட்சித் தலைவரின் சுயத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது). பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் செல்போன் மூலம் எம்எம்எஸ் அனுப்பி அதை சிஎம் பார்க்க சொல்கிறார் என்று மீடியா மூலம் அம்பலபடுத்தி, அடுத்தநிலை தலைவர் விர்ன்னு முதல்வராவது செம கில்லாலடி..

சகுனி… நல்ல பொழுதுபோக்கு..

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

தமிழா..தமிழா.. நாளை உன்நாளே…

தமிழா..தமிழா.. நாளை உன்நாளே…

இந்த பாட்டைக் கேட்கும்போதே தமிழருக்கு மெய்சிலிரிக்கும் அது அந்தக் காலம், ஒரு பிரபல தமிழர் இந்திய ஜனாதிபதியாக உதவாத தமிழர்களும் இருப்பது இந்தக்காலம்.
(1) மேட்டுக்குடி மக்கள் மட்டுமே பயன்படுத்திவந்த வானூர்திகளின் பயணச்சீட்டுக்கள் மிகவும் மலிந்து குப்பனும் சுப்பனும் பயணம் செய்யும் அளவிற்கு இருந்தது ஒரு காலம், மீண்டும் மேட்டுக்குடி மக்கள் மட்டுமே கொழுத்த பணக்காரர்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ளும்படி அனைத்து விமானங்களும் விலையேற்றிவிட்டது.

(2) தமிழக தலைநகருக்கு அண்மையில் செல்ல நேர்ந்தது.. என்ன ஆச்சரியம்.. இரயிலில் கூட்டமில்லை (புறநகர்), பேருந்தில் கூட்டமில்லை அட தெருவில் கூட கூட்டமில்லை.. சாதாரணமாக ஒரு நகரத்தில் இருக்கும் அளவிற்கு மட்டுமே கூட்டம் இருக்கிறது. டிராபிக் மட்டும் பெரிய வாகனங்களால் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது. (ஏன்…ஏன்… பெட்ரோல் இல்லை.. பஸ் டிக்கட் விலைகூட.. இரயிலில் சென்றால் திண்பண்டங்களின் விலைகூட.. எனவே மக்கள் மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பயணங்கள் மேற்கொள்வதாகத் தெரியவருகிறது.)
(3) மழை பொய்த்துவிட்டது… இந்த வருடம் காவிரியில் மணல் கூட குறைந்துவிட்டது.. வெறும் களிமண் தான்.. செடிகொடிகள் தான்.. இருகரைத்தொட்டுத் தழுவும் தண்ணீர் ஆடிப்பெருக்கில் காணக்கிடைக்காதது .. கற்பனையில் மட்டுந்தான் இனிமேல்..

(4) சாதாரண டீக்கடை முதல் பெரிய பெரிய ஓட்டல்கள் பயன்படுத்தும் எரிபொருள் கமர்சியல் கேஸ் சிலிண்டர்கள் (சுமார் 1600 ரூபாய்) அதனால் அனைத்து பண்டங்களும் டண்டன்க்கா டணக்கா கணக்கா விலை விர்….
(5) 40 சதவீத கணிணிபயின்ற மாணவர்களுக்கு வேலையில்லையாம்… கல்லா கட்டும் 67 பொறியியல் கல்லூரிகள் சரியான பணியாளர்களைக் கொண்டும் உபகரணங்களைக் கொண்டும் நடத்தவில்லையாம்… இந்த வருடம் மார்க்க்கைத் துரத்த மாணவர்களும் பெற்றோரும் அலையாயுவது தொடரத்தான் செய்யுது..
(6) ரியல் எஸ்டேட்… எங்கே தான் நிலம் இருக்கோ.. காட்டுக்குள்ளே எல்லாம் வேலிபோட்டு கலர் பெயிண்ட் அடித்து சின்னத்திரை நட்சத்திரத்தைக் கொண்டு விளம்பரம் எடுத்து லோக்கல் முதல் முக்கிய சேனல்வரை கட்டி அடிக்கிறார்கள்.. வியாபாரம் எப்படியோ… ஆனால், நடுத்தரம் இனிமேல் இடமோ வீடோ கட்ட வாய்ப்பு குறைவுதான். வீட்டு வாடகையும் விர்… சாதாரண நடுத்தர 2 பெட்ரூம் குடித்தன வீடு சுமார் 8000 ஆயிரமாம்.
(7) டாஸ்மார்க் சரக்கெல்லாம் விர்… அதனால் குடிமக்கள் கோபத்தில் விர்..

விலைவாசி குறை என்ன செய்யலாம் …

1. முதலில் பெட்ரோல் / டீஸல் / கேஸ் ஆகியவற்றில் 25 சதவீதம் விலைகுறைக்கவும்
2. அனைத்து பொருட்களுக்கும் விலைக் கட்டுப்பாடு அவசியம் அரசே விலை நிர்ணயம் செய்யலாம் (அத்தியாவசிய பொருள்கள் அரிசி, பருப்பு, எண்ணெய்)
3. விலைநிலங்களை வீட்டுமணையாக்க தடைவிதிக்கலாம். மீறினால் அந்த நிலத்தை விற்றவரையும் வாங்கியவரையும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.
4. வாடகை கண்ட்ரோல் ஆக்ட்படி நடவடிக்கை எடுக்கலாம்.
5. பேருந்து கட்டணம் குறைக்காவிட்டாலும், எக்ஸ்பிரஸ் பஸ்களுக்குப் பதிலாக சாதரணகட்டண பேருந்துகளை விடலாம்.
6. அரசின் அநாவசிய செலவினங்களைக் குறைக்கலாம்.
7. அரசுத்துறைகளில் ஏற்கனவே இருக்கும் பணியிடங்களில் 20 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கலாம்.. (ஏனெனில் கணிணிமயப்படுத்தி நடவடிக்கைகளை விரைவுப்படுத்தலாம்)
8. மணல் கொள்ளையைத் தடுக்கலாம்…
9. குடும்ப கட்டுப்பாட்டுத்திட்டத்தினை மீண்டும் அமல்படுத்தலாம். ஒருகுடும்பம் ஒரு குழந்தை..
10. 4 சக்கர வாகனம் வாங்குவதைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

இது..அதிகப்பிரசங்கித்தனமா .. அறிவுஜீவித்தனமா
நீங்க சொல்லுங்க.. மாம்ஸ்…
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

ஸ்ருதி ஆறு… சே.சே. குருதி ஆறு..

ஸ்ருதி ஆறு… சே.சே. குருதி ஆறு..
Blood Donation

லேட்டஸ்ட் பிகர் ஸ்ருதி கோலிவுட்டை கலக்குவதால், குருதி ஆறுன்னு பேரு வச்சா அது ஸ்ருதி ஆறுன்னு டைப் ஆகிடுது. குருதி.. இந்த பூவுலகில், மிக முக்கியமான அத்தியாவசியமான உயிர் வாழும் பாலினங்கள் அனைத்துக்கும் குருதி.. அதாங்க இரத்தம்.. மிகமிக முக்கியம்.. இரத்தம் இல்லாதவர்கள், இரத்த ஓட்டம் இல்லாதவர்கள், இரத்த சோகை உள்ளவர்கள் வாழ்க்கையை ஓட்டுவதே சிரமம்தான்.

ஜீன் 14, இரத்ததான விழிப்புணர்வு நாள்.. இரத்தத்தில் பலவகையும், ஒவ்வொரு வகையினருக்கும் தனித்தனி குணநலன்கள் உள்ளதாக ஒருசிலர் தெரிவிக்கிறார்கள். சாதாரணமானவர்கள் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் இரத்தப் பரிசோதனை செய்து, அதில் றீமோகுளோபின் எவ்வளவு இருக்குன்னு மருத்துவர் பார்ப்பதையும் நாம் பார்க்கிறோம்.

அந்த காலத்தில், மெகா சண்டைகள் ராசாக்களுக்கிடையே நடைபெற்ற பொழுது, யுத்த பூமிகள் கால்வைக்க இயாலாத வகையில் இரத்தம் ஆறாக ஒடுமாம்… அதேபோல் காட்சியை நம்ம மேட்டூர் டேம் உள்ள முனியப்பன் கோவில் வளாகத்தில், ஆடி மாதம் திருவிழா நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகள், கோழிகள் பலியிடுவதால் இரத்தமே அந்த குறுகிய இடத்தில் கால் வைக்க இடமில்லாமலும், நேரம் ஆக ஆக அந்தக்குருதிகள் வாடை எடுக்க வைப்பதாகவும், அதைப்பார்க்க நேர்ந்த எனது உறவினர் ஒருவர் மயக்கமடைந்து விட்டார்.

சிறிது காலத்திற்கு முன் எனது தந்தை விபத்தில் சிக்கிய பொழுது, அரசு மருத்துவமனை டாக்டர் உடனே ஆப்பரேஷன் செய்யவேண்டும் என வற்புறுத்தியும், அதே நேரத்தில் எனது உறவினர் ஒருவர் டாக்டர் எதேச்சையாக அங்கே வந்து பரிசோதித்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியும், அந்த மருத்துவர் பெயர் பார்த்தசாரதி தற்சமயம் சென்னையில் வசிக்கிறார்… மிகவும் பொறுப்பாக எனது தந்தையை சோதித்து, உடனே இரத்தம் ஏற்ற வேண்டும் என்று கூறி ஒரு பெட்டில் என்னை படுக்க வைத்து உடனுக்குடன் இரத்தம் நோயாளிக்கு செல்லும்மாறு செய்து எனது தந்தையை மிக விரைவாக குணப்படுத்தினார்.

சமீபத்தில் எனது சித்தப்பா ஒருவருக்கு ஆப்பரேஷன் செய்ய வேண்டியிருந்ததால் இருவர் இரத்தம் தரவேண்டும் என தொலைபேசியில் செய்திவரப்பெற்று (எனது சித்தப்பாவின் பிளட் குரூப் வேற..) சென்றால், பரவாயில்லை உங்களுடைய பிளட் குரூப் என்னவாக இருந்தாலும் எனக்கூறி 350 எம்எல் இரத்தைதை எடுத்துக் கொண்டு ஒரு கூல்டிரிங்ஸ் கொடுத்து அனுப்பினார்கள். அநேகமாக 210 நாட்களுக்குள் ஒருவரது இரத்தத்தை பயன்படுத்த வேண்டுமாம் எனவே, பிளட் பேங்கில் வைத்திருக்கும் பிளட்டை முதலில் வந்ததை முதலில் பயன்படுத்துவது என செய்கிறார்கள். (இதில் நோ.. சென்டிமெண்ட் எனது இரத்தம் எனது உறவினருக்கே என்ற பேச்சுக்கே இடமில்லை )

இளம் பெண்கள், போதுமான ஆரோக்கியமானவர்கள் கூட (மாதவிலக்கினைப் பற்றி பிரச்சினை இல்லை) இரத்தத்தானம் செய்வதில் எந்தபிரச்சினையும் இல்லை என்று எளிதாக முன்வருகிறார்கள்…. நம்ம ஊரிலோ அடிக்கடி விபத்து ஏற்பட்டு ஏராளமானார் இரத்த இழப்பினாலேயே டிக்கட் வாங்கிவிடுகிறார்கள். அதனால், இரத்தம்( ஈவுஇறக்கம் ) உள்ளவர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும், இரத்த தானம் வழங்க முன்வரவேண்டும்.. திருச்சியில் ஒருவர் (கனகராஜ், பிட்டர், மாநகராட்சி) 400 முறைக்கும் மேல் இரத்த தானம் வழங்கியிருப்பதாக செய்தி. முகலாய அரசர்கள் நூர்ஜகான், உறாஜகான் போன்றவர்கள் கூட குறிப்பிட்ட கால இடைவெளியில் குருதி இழப்பு என்னும் சடங்கை செய்ததாகவும், அதனை செய்ய ஐரோப்பில் இருந்து வந்த நாடோடி வைத்தியர் செய்ததாகவும் பதிவுகள் உள்ளன.. அப்பொழுதுதான் தனது கெட்ட இரத்தம் போய் நல்ல இரத்தம் உருவாகும் என நம்பினார்களாம்.

வாழ்த்துக்கள்… இரத்தம் வழங்க..

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

மனம் கொத்திப்பறவை.. திரைவிமர்சனம்.

manam kotti paravai .. Tamil Film Review

முழுக்க முழுக்க இந்தபடம் நம்ப சிவகார்த்திகேயனையே நம்பி எடுத்திருக்கிறார்கள்… கதாநாயகி புதுமுகமாம், நமது பக்கத்து வீட்டு பொன்னு போலவே எந்தவிதமான ரிச்னெஸ் இல்லாமல் தேமேன்னு டைரக்டர் சொல்றத கேட்டுக்கிட்டு நடிக்கிறார்.. போதாத குறைக்கு ஏற்கனவே ரொம்ப கலாரா இருக்கிற பொன்னுமேல அந்தக்காலம் போல அரை இஞ்ச்க்கு பவுடர் அப்பி கொஞ்சம் நம்பளைய சோதிக்கிறார்கள்.

நாயகனும், நாயகியும் பால்ய சினேகிதர்கள் எதிர்எதிர் வீட்டு (கிராமத்தில்) ஒன்னுமன்னாய் வசிக்கிறார்கள்.. ரொம்ப நாளாக காதலித்தும் ஒருவருக்கொருவர் காதலை சொல்லாமலே வாழ்ந்து வருகிறார்கள்… ஒரு கட்டத்தில் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையை குடும்ப கௌரவம் கருதி திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்கிறார் நாயகி, நாயகனின் நட்பு வட்டம், அவர்கள் அறியாமலேயே இருவரையும் திருமணத்தன்று கடத்தி வேறொரு இடத்திற்கு (கேரளா ?) கொண்டு சென்று விடுகிறார்கள்.. பிறகு வேற வழியில்லாமல் அங்கேயே ஒரு வேலையை பார்த்துக் கொண்டு செட்டிலாகிவிடலாம் என்று நினைக்கும் பொழுது வில்லன் கோஷ்டி (பொன்னுடைய சொந்தங்கள் மற்றும் மணமாப்பிள்ளை) காமெடியான துரத்தல்களுடன் ஜோடியை கண்டுபிடித்து, சொந்த ஊருக்கு வந்து வலுக்கட்டாயமாக பிரித்தும் விடுகிறார்கள்… இரண்டு வருடங்க்ள் கழித்து சொந்த ஊருக்கு நாயகியின் நினைவாகவே வரும் நாயகனுக்காகவே காத்திருக்கிறார் நாயகி… மீண்டும் சொந்த பந்தங்கள் டென்ஷனாக…..முடிவு…. காதலுக்கு மரியாதை தான்…

துக்கடா காமெடி பீஸ்களையெல்லாம் ஒன்றாக இணைத்து ஒரு முழுநீள காமெடி + காதல் கதை மாவு அரைத்து மனம்கொத்திப் பறவையாக பறக்கவிட்டு இருக்கிறார்கள்… திரையரங்களில் அமர்ந்திருப்பவர்கள் அடிக்கடி அப்பாடா .. போதும் என்று அலுத்துக் கொள்கிறார்கள்.. சுமாரான பட்ஜெட்டில் படம் எடுத்திருப்பது அனைத்து விதங்களிலும் வெளிப்படுகிறது. சும்மா இருந்தா பார்த்து வைக்கலாம்..

சிவகார்த்திகேயனின் ஒரே மாதிரியான அசட்டுபிச்சு நடிப்பு கொஞ்சம் போரடிக்க வைக்கிறது. இருப்பினும், படம் தயாரிப்பு கொஞ்சமாய் ஊக்கமளிக்க பெட்டர் லக் நெக்ஸ்டைம்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz