கிராபிக்ஸ் கலக்கலா ? அம்புலி மாமா கதை ? ..ஈ நான்

கிராபிக்ஸ் கலக்கலா ? அம்புலி மாமா கதை ? ..ஈ நான்

மகாதீரா வழங்கியவர்களால் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழுக்கும் இறக்குமதி ஆகியிருக்கும் சமீபத்திய திரைப்படம் நான் ஈ… கொஞ்சம் லேட்டாகத்தான் இந்தப்படத்தைப் பார்க்க இயன்றது. படம் ஆரம்பத்திலேயே ஒரு குழந்தைக்கு அப்பா கதைசொல்லும்படியாக அமைந்திருப்பதால் இதனை லாஜிக் மீறல் என்று பாராமல் திரைக்கதையை நேர்த்தியாக அமைத்திருப்பதையும், கிராபிக்ஸ் நேர்த்தியையும் பாராட்டியே தீரவேண்டும்.

காதலும் மோதலுமே இந்தப்படத்தின் முக்கிய ஜீவன்.. ஆரம்பத்தில் எதிர்வீட்டுப் பையனை ( புத்திசாலி… கரண்ட்கட் ஆனாலும் கூட காதலிக்காக, டிஷ் ஆண்டெனாவில் ஜிகினா பேப்பரைப் பொருத்தி, டார்ச் லைட்மூலம் காதலியின் பிளாட்டில் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சும் ஐடியா சூப்பர்..) லுக் விடும் கதாநாயகி, ( தான் நடத்தும் சாரிட்டி நிறுவனத்திற்கு நிதி கேட்க செல்லும் தொழில் அதிபர் கம் கடத்தல் கொலைக்கார பாஸ், கதாநாயகியின் அழகில் மயங்கி 15 லட்சத்திற்கு செக் கொடுத்து, அடிக்கடி கதாநாயகியின் தொடர்பு இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்.) ஒரு சமயம், கதாநாயகி தன்னை சட்டை செய்யவில்லை அதற்கு மாறாக எதிர்வீட்டு பையனை காதலிக்கிறார் என்று தெரிந்து எதிர்வீட்டு பையனை தூக்கி கொல்லும் சமயம், கதாநாயகி தனது காதலை தெரிவிக்க தொடர்பு கொள்ளுகிறார்.. இதனால், உயிர் இழந்த கதாநாயனின் ஆவி ? ஒரு ஈயின் முட்டையில் புகுந்து கொள்கிறது.. கதாநாயகி, நாயகன் ஆகியோர் நல்ல தெரிவு.. வில்லனும் சிறப்பாக தனது பங்கை செய்திருக்கிறார். அதிலும், நயமாக பேசி தனது பிஸினஸ் பார்ட்னரை பேனா முனையால் குத்தி கொலை செய்வது நல்ல திருப்பம்..

படிப்படியாக தான் ஒரு ஈயாக உருமாறி வந்திருப்பதை, கதாநாயகிக்கும், வில்லனுக்கு ஏகப்பட்ட குடைச்சல்களைக் கொடுத்தும், கடைசியில் தன்னுயிரை மாய்த்தாவது வில்லனை முழுவதும் அழிப்பதே கதை.. இடையில் ஒரு சில காட்சிகளில் சந்தானம் காமெடி விஜயம்… ஈ டான்ஸ் ஆடுவது, கூடையில் வெடிமருந்தைத் தூக்கி செல்வது போன்றவைகள் கொஞ்சம் ஓவர்தான் இருந்தாலும் லாஜிக் என்பதை மறந்து அம்புலிமாமா கதை கேட்பது போல் நான் ஈயையும் பார்க்கலாம். இசை சுமாராக இருந்தாலும், ஒளிப்பதிவு மற்றும் பிற அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது.

கொசுறு.. இந்த இயக்குநரே… மகாபாரதத்தை திரைப்படமாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் புதிய கோணத்தில் எடுக்க இருப்பதாகவும், இவருடைய மனைவியே இவரின் வித்தியாசமான கதைக்களனை தெரிந்தெடுக்க உதவி செய்வதாகவும் தெரிவிக்கிறார்.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

அரைகுறை ஆடையுடன்…

அரைகுறை ஆடையுடன்….

மகாத்தான வெற்றி, சுதந்திரக் காற்றை அனுபவிக்க கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக பலமுறைகளில் போராடியும், அந்த ஜீவன் வந்தார், போராடினார், வென்றார்… இன்றைய சுதந்திர இந்தியாவின் போக்கு பலருக்கு வெறுப்பைத்தந்தாலும், சுதந்திர காற்றை அனுபவிக்க அந்த நபரின் பங்கு 100 சதவீதம் பயன்பட்டிருக்கிறது… அரைகுறை ஆடையுடன் வலம் வந்த நமது அண்ணல் காந்தியடிகளை நினைவில் நின்றவைகள் இந்த பதிவு.

• 20 முறை அண்ணல் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்கள் அதில் 5 முறை மட்டும் திருப்பூர்க்கு வந்திருக்கிறார். திருப்பூர் ஸ்பெஷல்… காந்திக்கு

• எனக்கு வந்த குறுஞ்செய்தியின்படி 1932ல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பார்வையாளராக கலந்து கொண்டும், அதனை ஒரு பத்திரிக்கைக்கு ரிப்போர்ட்டாக தயாரித்து தந்ததாகவும் தகவல்… உண்மையா..?.

• காந்தியை சுட்ப்பட்டப் பொழுது எடுத்த புகைப்படங்களையும் காந்தி கீழே விழுந்து கிடப்பதையும், கோட்சே கையில் துப்பாக்கியையும் இந்த அரிதான புகைப்படத்தைப் பார்த்து அறியலாம்.

• பாரதியார் ஒருமுறை காந்தியிடம் கடற்கரை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரியபொழுது அந்த நாட்களில் வேறொரு கூட்டத்திற்கு செல்லவேண்டும், தேதியை மாற்றி வைத்தால் நான் அந்தக்கூட்டத்திற்கு வருகிறேன் என காந்தி கூறவும், அதெல்லாம் முடியாது, நீங்க உங்களை அழைத்த கூட்டத்திற்கு அந்த நாளில் போங்க, நாங்க எங்க கூட்டத்தைத் குறிப்பிட்ட நாளிலேயே நடத்திக் கொள்கிறோம் என வீராய்ப்பாக கூறவும், இந்த மனிதரைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என காந்தி கூறியதாகவும் தகவல்.

• காந்தியின் போராட்ட முறைகள் வித்தியாசமானதாம். சபர்மதி ஆசிரமத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்தால், இங்கே கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு தொண்டரும் உண்ணாவிரதம் இருப்பாராம்… ( அப்பொழுது இப்பொழுது உள்ளது போன்று தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லை … போன் இல்லை, தொலைக்காட்சி இல்லை ) வெறும் பேப்பர் மற்றும் ரேடியோ செய்திகள் மட்டுமே. அவ்வாறே, அவருடைய போராட்டங்கள் உலக அரங்கில் பேசப்படுமாறு, சூழ்நிலைகளை அமைத்துக் கொண்டார்.

• காந்தியடிகளின் சத்தியசோதனை வாழ்க்கை வரலாறும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், அட்டன்பரோ இயக்கிய காந்தி ஆங்கிலப்படமும் மிகப்பிரமாதமான பதிவுகள்…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

அ.. இல்லை ட……… பாகம்.. 3

அ.. இல்லை ட……… பாகம்.. 3

பார்த்து ரசித்தது.
பியர் கிரில்ஸ் என்னும் முன்னாள் ரானுவத்தாரும், 21வது வயதில் பாராசூட்டில் இருந்து குதிக்கும்பொழுது கால்முறிவு ஏற்பட்டும் 18 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றும், எழுந்து வந்து வைராக்கியமாக சாதிக்க வேண்டும் என்னும் வெறியில், அவருடைய கேமரா குழுவும் சேர்ந்து மனிதர்கள் சாதாரணமாக யாரும் காலடி வைக்காத இடங்களாகத் தேர்தெடுத்து மேன் வெர்சஸ் வைல்ட் அல்லது அவர் மட்டும் 5 நாட்கள் தனியாக தங்கும் காட்சிகள் இடம் பெறும் நிகழ்ச்சிகள் உலகின் பல பகுதிகளை காடுகளை, மலைகளை, பாலைவனங்களை, ஆறுகளை, கடல்களை, விலங்குகளை, உணவுகளை என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் வித்தியாசமான நிகழ்ச்சி தினந்தோறும் டிஸ்கவரி சானலில் ஏதேனும் ஒரு நேரத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கிறது. ( சுவாரஸ்யமாகவும் இருக்கிறது )

மங்கையர்கரசி என்னும் மேடைப்பேச்சாளர் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறார்.. மிக நன்றாக கதைகளும், சம்பவங்களையும் கோர்வையாகயும், சுவாரசியம் குறையாமலும், சபையினரை தனது மந்திரக் குரலாலும், உடல் மொழியாலும் கவனம் சிதறாமல் பேச்சினைத் துவக்கி முடிக்கிறார். சென்ற வாரம் லோக்கல் சானல் ஒன்றில் லயன்ஸ் கிளப் ஒன்றில் உரையாற்றிதை பார்க்க நேர்ந்தது.. ( நன்றாகவும் இருந்தது ). பல சானல்களின் காலை நேரத்தில் பக்திமாலை போன்ற நிகழ்ச்சிகளில் இவறைப் பார்க்கலாம்.

மைக்கிரோ ஓவன் … இதை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும், கண்ணாடி டம்பளரில் தண்ணீரை கொதிக்க வைப்பது. முட்டையை ஓட்டுடன் உள்ளே வைப்பது.. திராட்சைப் பழத்தை ஓவன் உள்ளே வைத்து இயக்கிப் பார்த்தால் தெரியும் டமார் ஓசையும், ஓவன் தீப்பிடித்து எரிவதையும், ஒரு நிகழ்ச்சியில் செய்து காண்பித்தார்கள்.

கிரிஸ்டல் கிளியர் ஐஸ் க்யூப்களை செய்ய வேண்டுமானால் தண்ணீரை 2 முறை கொதிக்க வைத்து குளிரவைத்து பீரிஸரில் வைக்க வேண்டுமாம். இதனால் இதனில் உள்ள ஆக்ஸிஜன் குறைந்து கிரிஸ்டல் கிளியர் ஐஸ் க்யூப்கள் உருவாகுமாம்.

படித்து பார்த்தது.

இந்தவாரம் தினந்தந்தியின் ஞாயிறு மலரின் இந்திராணி என்னும் பெண்ணின் கட்டுரையில் காமசூத்ரா தவறாக எழுதப்பட்டுள்ளது என்ற வாதம் முன்வைத்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ( முடிந்தால் தினந்தந்தியின் இணையப்பக்கங்களைத் தேடிப்படித்துக் கொள்ளவும் )

இலங்கையில் தமிழ் படிப்பவர்களுக்கு ட எழுத்தே முதல் எழுத்தாம்… (எளிமை கருதி) கேள்விப்பட்டேன். உண்மையில், அ என்பது அகரம் எழுத்துகளின் முதன்மையாகவும், தொன்மையாகவும் உள்ளது, இது எழுதும் பொழுது சிறிது சிரமமாக இருப்பினும் ஒரு முழுவட்டம், அரைவட்டம், நேர்க் கோடு, படுக்கைகோடு, வளைவுக் கோடு என எழுத்து வடிவத்தின் அனைத்தையும் ஒரே எழுத்தில் அதுவும் எழுத பழக ஆரம்பிக்கும் பொழுதே கற்றுக் கொள்வதால் தமிழர்கள் விரைவில் சிந்தனை செய்யும் பழக்கம் உள்ளதாக கருதுகிறேன். உலகளவில் தமிழர்கள் இந்தியாவில் தமிழகத்தையும் சேர்த்து 7 கோடியும், உலகின் பிற பகுதிகளில் 1 ½ கோடி மக்களும் இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. (பார்க்க படம்..)

கேட்டு ரசித்தது..

காலை நேரத்தில் எப்எம் ரேடியோக்கள் போட்டி போட்டுக் கொண்டு, சுப்ரபாதத்தையும், கந்தர்சஷ்டி கவசத்தையும் ஒலிபரப்பி (தினமும் 5 மற்றும் 6 மணி) ஆன்மிக வாதிகளுக்கும், பொது மக்களுக்கும் உற்சாக மூட்டுவதாக இருக்கிறது.

நண்பர் ஒருவர் எப்பொழுது தொலைபேசினாலும், வாழ்க வளமுடன் என்று கூறியே பேச்சை ஆரம்பிக்கிறார், கேட்கவும் நல்லாத்தான் இருக்கு..

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

இப்படிக்கூடவா நடக்கும்…. பாகம்..2

இப்படிக்கூடவா நடக்கும்…. பாகம்..2
பார்வையில் பட்டது..

• இந்த வாரம் விலைவாசி உயர்வைப்பற்றி விஜய் டிவியின் நீயா நானாவில் மிடில் கிளாஸ், அப்பர் மிடில்கிளாஸ், அப்பர் கிளாஸ், பொருளாதார நிபுணர்கள், ஆடிட்டர்கள், வல்லுனர்கள் என ஒரு கூட்டமே இருந்தது… மிடில்கிளாசை பொருத்தவரையில் ஒரே அழுகாச்சியாகவும், அப்பர் மிடில் கிளாஸ் எது விலைகுறைவோ அதை வாங்கி பயன்படுத்தவும், சேமிப்பைக்குறைக்கவும் யோசனை கொடுக்கப்பட்டது. ஆனால், அப்பர் கிளாஸ் மற்றும் அரசின் கொழுத்த சம்பளம் பெறும் பொருளாதார நிபுணர்களோ சரியான பதில்களை அளிக்க இயலாமலும், விலைவாசியினால் தாங்கள் எள்ளவும் பாதிக்கப் படவில்லை என்று தோன்றும் அளவிற்கு நடந்து கொண்டார்கள்.

ஆனால், பொருளாதார ரீதியாக அப்பர் மிடில்கிளாஸ் மக்களும் பாதிப்படைவார்கள் என ஒருவர் சாபம் இட்டார், மற்றொருவரோ, ஆயில் விலை குறைந்திருந்திருந்த நேரம் சீனா நாட்டினரோ வாங்கி சேமித்துவிட்டனர், ஆனால் இந்தியாவில்..? சேமிக்க போதுமான ஏற்பாடுகள் இல்லையாம். தங்கம் வாங்கி சேமிப்பது சரியான பொருளாதார ரீதியிலான நடவடிக்கை இல்லையாம் வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

• பில்லா..2 ரிலீஸ்.. அஜித் ரசிகர் மன்றங்களைக் கலைத்தும் கூட அவர்களின் வால்கள் (தல) பீர் அபிசேகம் முதல் பால் அபிசேகம் வரை கட்அவுட்க்கு தமிழகம் முழுவதும் ஊற்றி மகிழ்ந்தார்கள். படம் கொஞ்சம் டர்தான் போலிருக்கு, அதாவது பில்லாவின் இளமைக்காலம் மற்றும் டாண்ஆக மாறிய கதையாம்… சொல்லிக்கிறாங்க, என்ன இருந்தாலும், நம்ம சூப்பர் ஸ்டார் மற்றும் அந்தக்கால நயன்தாரா ஸ்ரீபிரியா (மார்பு பிளவுகள் வெளிப்பட ஒரு போஸ் உண்டு) உடன் வெத்தலையை போட்டேன்டின்னு ஒரு பாட்டுக்கு ஆடுவாங்களே ஒரு ஆட்டம், அதுக்கு ஈடாகுமா…

• மிஸ்டர் பீன் .. அப்பப்பா என்னமா கலக்குறாரு நிக் சானல் மற்றும் போகோவில் இயற்கையான உடல் மொழியிலேயே சிரிக்க வைக்கிறார். இதை எங்கே கற்றிருப்பார் ?

படித்து பார்த்தது….

• லண்டனில் 80 வயது தாத்தா தனது 2 ஏக்கர் வீட்டுத் தோட்டத்தில் தனக்ககாகவே ஒரு குட்டி ரயிலை உருவாக்கி, தண்டவாளத்தைப் போட்டு தினந்தோறும் ஒரு ரவுண்டு போய் வருவாராம்… சிறுவயது முதலே, ரயிலில் பயணம் செய்தல் மிகவும் பிடிக்குமாம், வயதானபின் எங்கும் செல்ல இயலாமல் சுமார் 20 லட்சம் செலவில் தனக்காகவே ஒரு ரயில் பாதையை உருவாக்கிக் கொண்டாராம்.

• கல்கத்தாவில் படுக்கையில் சிறுநீர் கழித்தற்காக விடுதி வார்டனால் சிறுநீர் குடிக்க சொல்லி தண்டனை அழித்ததை மீடியா பிரபலபடுத்த வார்டனுக்கு கிடைத்தது சஸ்பென்ட் ஆர்டர்.

• ஈஷா காட்டுப்பூவில் ஒரு சிறிய பிட்.. ஒருமுறை காட்டுவாசிகளின் தலைவன் விமானத்தில் வேறொங்கோ அழைத்து செல்லப்பட்டான். அப்போது பணிப்பெண் குடிக்க என்ன வேண்டும் என கேட்க, பாட்டில் முழுவதும் மதுவை எடுத்து ஓரே மூச்சில் குடித்து முடித்துவிட்டான்.. பிறகு, பணிப்பெண் மேலும் சாப்பிட என்ன வேண்டும் எனக் கேட்க, காட்டுவாசி உடனே, கூட வந்திருக்கும் பயனிகள் பெயரையெல்லாம் சொல்லுங்க, நானே எனக்கு பிடித்த பயனியை தேர்ந்தெடுத்து சாப்பிட்டுக்கிறேன்னு சொன்னான்னாம்….. ம்ம்

கேட்டு மகிழ்ந்தது…

• போனி எம்… 60ஸ்,70ஸ்,80ஸ்,90ஸ்,00ஸ் என பல ஆல்பங்கள் நெட்டில் கேட்டு மகிழக் கிடைக்கிறது…

• எங்கவீட்டு பாப்பாவிற்கோ ஐயாம் பார்பி கேர்ள் பாடலே ரொம்ப பிடித்து, திரும்பதிரும்ப பிளே செய்து டான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறாள்.

• ஆனந்தவிகடனின் (044..66808034) சென்ற வார பிரமுகர் சகாயம், ஐ,ஏ,எஸ் அவர்களின் உரையை கேட்க நேர்ந்தது, வழக்கம்போல் அவரின் லஞ்சம் வாங்காதே…என்ற ஆதங்கத்தை, லட்சிய வேட்கையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

எதைப்பார்த்து, என்ன படித்து எப்படிக்கேட்டு… ஒன்று

எதைப்பார்த்து, என்ன படித்து எப்படிக்கேட்டு… ஒன்று

ரொம்ப நாளாகவே நினைத்து கொண்டிருந்தது… பார்த்தது, படித்தது, கேட்டது என நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம், இப்போதுதான் சந்தர்ப்பம் அமைந்தது.

பார்த்து.. பார்த்து..

இந்தவாரம் கலைஞர் டிவியின் நாளைய இயக்குநரின் மூன்று 15 நிமிட குறும்படங்களைத் தவறவிட்டது ரொம்ம வருத்தமாக இருந்தது… புதியவர்கள் என்னமாய் கலக்குகிறார்கள்.

யூடியூப்..ல் இல்லாத சங்கதிகளே இல்லை போலிருக்கே, புட்பால் மேட்சில் ஒரு ரெப்ரி பார்வையாளர்களால் அடித்து கொல்வதையும், பல வீரர்கள் போட்டியின் போதே இறந்து போன கிளிப்பிங்ஸ்களையும் பார்த்து நெஞ்சு பதைபதைத்தது.

டிஸ்கவரி சானலில்.. நான் உயிரோடு இருந்திருப்பேனா? நிகழ்ச்சியும் அருமை… இந்தவாரம் ஒருவர் காட்டில் மாட்டிக்கொண்டு 30 நாட்களாக நடந்தே காட்டைவிட்டு வெளியேறுவது (மலேரியா காய்ச்சலுடன்) துணைக்குவந்த நாயைக்கூட கொண்று சாப்பிட்டு விட்டு உயிரோடு இருந்தவர் என அருமையான படப்பிடிப்பு.

ஆதித்யா சேனல் இமாம் அன்னாச்சியின் கொக்கிபிடி காமெடிக் கேள்விகளால் இரவு 9 மணியில் இருந்து 10 வரை அன்றைய கவலைகளை மறந்து சிரிக்க முடிகிறது, ஞாயிறு அன்று மதியம் 1 லிருந்து 2 வரை சிரிக்க வைக்கிறார்.

படித்து.. படித்து..

செய்தித்தாள்கள் தான், 1880ம் வருடத்திற்குப் பிறகு 2012 மே மாதம் மிக அதிகமான வெயில் பதிவாகியிருப்பதாக அறிந்து உண்மைதான் என புரிந்தது.

1300 பேர் தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளால் கடந்த வருடம் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தென்மேற்கு பருவமழை பெய்த்துவிடுமோ இந்த வருடம் அச்சம் நிகழ்கிறது.

கேட்டு.. கேட்டு..

எங்கே போனாலும், விலைவாசி ஏற்றத்தைப்பற்றி மக்கள் பேசிக்கொள்வதைக் காணமுடிகிறது. இசைநிகழ்ச்சிகள் எல்லாம் குறைந்து, திரைப்பாடல்களை மட்டும் பென்டிரைவ் மூலம் கார், லாரி, பேருந்துகளில் ஒலிக்க விடுகிறார்கள்…

ஒரு சில நகரங்களில் மட்டும் சூரியன் எப்எம், உறலோ எப்எம், ரெயின்போ எப்எம் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கு, அதிலும் தனியார் எப்எம்கள் போட்டிபோட்டுக்கொண்டு பாடல்களை அள்ளி அள்ளிக் கொடுத்து தமிழர்களை செவிகுளிர்விக்கிறார்கள்.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

இதாங்க பிடிங்க முதல் இடம் தமிழகத்துக்கு.. இரண்டாம் வருடமாக…..

இதாங்க பிடிங்க முதல் இடம் தமிழகத்துக்கு.. இரண்டாம் வருடமாக….. FIRST PRIZE WINNER OF ROAD ACCIDENTS

தங்கத் தமிழகம் எதில் முன்னேறியதோ இல்லையோ, சாலை விபத்துக்கள் ஏற்படுவதில், அதனால் பலியானோர் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக உள்ளது. தேசிய குற்ற பதிவேடுகள் ஆவணத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி கடந்த ஆண்டு 65873 விபத்தினை தமிழகம் சந்தித்திருக்கிறது. தேசிய அளவில் 15 சதவீதமாகும். (2011)

2010ல் அதிகவிபத்தின் எண்ணிக்கையாக 64996ம், 11 சதவீதம் தேசிய அளவிலும் பெற்று முன்னிலை வகிக்கிறது. இதே, மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியாவிலேயே அதிக அளவில் வாகனம் பயன்படுத்துபவர்களாக இருந்தாலும் குறைந்தளவே விபத்தினை சந்திருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. தென் இந்தியாவின் நான்கு முக்கிய மாநிலங்களும் சேர்ந்து 42.5 சதவீத விபத்தினை உருவாக்குகிறது.

2007ல் விபத்தினை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கொள்கைகள் காற்றோடு போய்விட்டதாகவும், பெரும்பாலான விபத்துக்களுக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதே காரணம் எனத் தெரிகிறது. அதிகளவில் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலும் விபத்து ஏற்படுவதாகவும் அறிவிக்கிறது.

இருசக்கர வாகனங்கள் … 25 சதவீதம்
லாரி/கனரக வாகனங்கள் .. 20 சதவீதம்
நடைபாதையில் செல்பவர்கள் .. 6 சதவீதம்

என குறிப்பிடத்தக்கவை. இந்தியாவில் சென்னை மாநகரமே 9845 விபத்தினை சந்தித்ததாகவும், 1399 பேர் இறந்துவிட்டதாகவும், அதற்கடுத்து கோயம்புத்தூர்(1131), திருச்சி(781) மற்றும் மதுரை(685) முன்னனியில் இருப்பதாகவும் தெரிகிறது (நன்றி. இந்தியன் எக்ஸ்பிரஸ் 03.07.12 )

என்ன செய்தால் விபத்திலிருந்து தப்பலாம்.. சிவபார்க்கவி
1. வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது.
2. இருசக்கர வாகனங்களை தவிர்க்கவும்
3. இரவு 6 லிருந்து 9 வரை எங்கேயும் நகரக்கூடாது
4. நடைபாதைகளில் நடந்து செல்லக்கூடாது
5. வெளியில் செல்லும்பொழுது விபத்தில் சிக்கினாலும்
பாதிக்காத வகையில் இரும்பிலான கவசங்களை அணிந்து கொள்ளலாம்.
6. தூரத்தில் வாகனங்கள் வரும்பொழுதே பாதுகாப்பான தொலைவிற்கு ஒடிவிடலாம்.
7. சிகப்பு / ஒளிரும் வண்ணத்தில் உடைகள் அணிந்து வெளியில் செல்லும் பொழுது எதிர் வாகனங்கள் உஷாராக இருக்க வாய்ப்பு.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

அழிக்க வேண்டியது ஆங்கிலம்.. தழைக்க வேண்டியது தமிழ்

அழிக்க வேண்டியது ஆங்கிலம்.. தழைக்க வேண்டியது தமிழ்

தமிழார்வம் மிக்க பலரும், தங்கள் பேச்சுக்களிடையே தமிழை உயர்த்தியும், ஆங்கில மோகத்தினால் தமிழை அழிய விட்டு விடக்கூடாது என தடாலடியாக பேட்டி தட்டிவிடுகிறார்கள். அதில் சமீபத்தில் தமிழகத்தின் முக்கிய நகரத்தில் நடைபெற்ற இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் கிளை சார்பில் நடைபெற்ற பட்டய கணக்காளர்கள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், நமது மதுரைப் புகழ் ( பீடாதிபதி நித்தியானந்தைப் பற்றி குறிப்பிடவில்லை… ), திரைப்படங்களில் அவ்வப்பொழுது தலைகாட்டுவதும், பட்டிமன்றங்களில் சாலமன் பாப்பையாவின் வாரிசாக உருவான அண்ணல் கு. ஞானசம்பந்தன் அவர்களின் சிரிப்பும் சிந்தனையும் என்கிற தலைப்பில் பேசிய பேச்சுக்களைப் பார்க்கலாம்,

பொதுவாக பட்டிமன்ற பேச்சாளர்களின் பேச்சை நேரில் கேட்பது குறைந்து கொண்டு வருகிறது. நாங்கள் மேடையில் பேசினால் அரங்கத்தில் இருப்பவர்கள் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டு இருப்பார்கள். ஆனாலும், நாங்கள் நகைச்சுவையாக பேசி அவர்களைது கவனத்தை எங்கள் பக்கம் இழுத்து விடுவோம். நான் ஒரு திருமண விழாவில் பேசுவதற்காக சென்றிருந்தேன் அந்த விழாவுக்கு வந்திருந்த 3 ஆயிரம் பேரும் ஆளுக்கொரு பக்கம் பேசிக்கொண்டு இருந்தததால் நான் பேசியதை யாரும் கேட்கவில்லை. அப்போது தான் நினைத்தேன், திருமண மண்டபத்தில் பேசுவது தற்கொலைக்கு சமமானது என்று.

பட்டய கணக்காளர்களின் தொழில் எண்களுடன் சம்பந்தப்பட்டது. எண் முதலில் வந்ததா, எழுத்து முதலில் வந்ததா? என்றால் எண் தான் முதலில் வந்தது என்பதை திருவள்ளுவர் தனது எண்னும் எழுத்தும்… என்று தொடங்கும் குறளில் விளக்கமாக கூறி இருக்கிறார். நமது கணித முறையானது அபாரமானது. ஆனால் இன்றைய மாணவர்களிடம் ஐந்தும் ஐந்தும் எத்தனை என்று கேட்டால் கால்குலேட்டரை தேடுகிறார்கள்.

அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் தங்களது குழந்தைகள் அங்குள்ள சூழ்நிலையில் வளர்ந்தாலும் தாய் மொழியை மறந்து விடக்கூடாது என்பதற்காக அங்குள்ள பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ் பாடம் நடத்துகிறார்கள். ஆனால் இங்குள்ள பெண்கள் ஆங்கில மோகத்தினால், அம்மா என்று அன்பாக அழைக்கும் குழந்தையை மம்மி என சொல் என்று கூற வற்புறுத்துகிறார்கள். இப்போது, மம்மி என்ற ஆங்கில வார்த்தை மாம் என்றும் டாடி என்ற வார்த்தை டாட் என்றும் சுருங்கி போய்விட்டது.

பாரதியார் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, சமஸ்கிருதம் உள்பட 11 மொழிகளில் பேசும் திறமை பெற்றிருந்தாலும் நான் அறிந்த மொழிகளிலேயே தமிழைப் போல் இனிமையானது இல்லை என்றார். மாணவர்கள் எத்தனை மொழிகளை படித்தாலும், நமது தாய்மொழியான தமிழை படிக்காமல் விட்டுவிடக்கூடாது. எனவே, பெற்றோர்களும் ஆங்கில மோகத்தினால் தமிழை அழிய விட்டு விடாமல் பாதுகாக்க வேண்டும். (நன்றி. தினந்தந்தி 02/07/2012)
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB