ஆம்பளையும், பொம்பளையும் வாழ்வது எப்படி .. (1)

ஆம்பளையும், பொம்பளையும் வாழ்வது எப்படி .. (1)
Humans, How to Live Peaceful and Wealthy
எச்சரிக்கை.. சொந்த சரக்கு… பதிவு..
Do not cut and paste without this site address…

முதலில் வளம் என்றால், நமது பொருளாதார வளத்தையும் மற்றும் மனம் சார்ந்த அமைதி நிலையையும் குறிக்கும்.. இப்பூவுலகில் பிறந்த மானிடர் யாவரும் இந்த இரண்டு நிலையில் சரியில்லாமல் போய் விட்டால் அதோ கதி தான். அதற்குத்தான் இத்தனை போராட்டம் வாயிற்கும் வயிற்றுக்கும், இதில் மனம் சார்ந்தவைகள் பின்தங்கி விடுகிறது. ஒரு தனி மனிதர் தான் எத்தனிக்கும் அனைத்து செயல்களையும் சரியான பாதையில் தான் செல்கிறார் என எவ்வாறு அறிய முடியும், ஒரு சிறிய இடது அல்லது வலது புற திருப்பம்மே அவருடைய வாழ்க்கையை புரட்டிப் போடவும் வாய்ப்பாக அமைந்திடும் இல்லையா…

இளமைப்பருவம்.. இதுவே மனித வாழ்வில் மிக மிக முக்கியமானது… ஏனெனில் இந்த பருவத்தில் தான் நாம் எந்த விதமான கமிட்மெண்ட் இல்லாமல் அப்பா அம்மா தம்பி தங்கைகளுடன் மிகவும் சந்தோசமாக இருப்பதை பகிர்ந்து பொதுவாக சுயநலமில்லாமல் ஒருவர்மீது ஒருவர் அக்கறை செலுத்துவதாகவும் இருக்கும். மிகவும் மிகழ்ச்சியான காலக்கட்டம் என்று சொன்னால் பள்ளி, கல்லூரி,விளையாட்டு மற்றும் நமது கற்றுக்கொள்ளும் திறனை பயனுள்ள வகையில் பயன்படுத்தி பட்டைத் தீட்ட வேண்டும் தவறினால் மிச்சமுள்ள பருவங்கள் எல்லாம் தத்தளிக்க வேண்டிவரும்.

இங்கே இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் சுறுசுறுப்பாகவோ, எடுத்த பணியை முடிக்கும் அஞ்சா நெஞ்சராகவோ உருவாகி, எதைத்தேர்தெடுத்தாலும் தரத்திற்கும் முன்னுரிமையும், மலிவாகவும் எளிதாகவும் கிடைப்பதற்கு பின்னுரிமையும் கொடுத்து பழகுவதும், நமது மனதை மேற்கண்டவைகளை மட்டுமே செயல்படுத்த கட்டுக்கள் கொண்டுவரவும் வேண்டும்.. இல்லையென்றால் செய்வதெல்லாம் கோவிந்தா தான்…

மற்றுமொரு முக்கியமான மோகத்தூண்டுதலுக்கு ஆளாகி, காதலிக்கிறேன் என்ற மாயையில் விழுவதோ, மோகத்தைத் தணிக்க மேற்கொள்ளும் நடவடிக்கையினாலோ கண்டிப்பாக வாழ்க்கை ஏணி கொஞ்சம் சரிந்துவிட பெரும் வாய்ப்புள்ளது. கவனம் இங்கே ரொம்ப முக்கியம்.

இளமைப்பருவத்தின் முடிவிலோ நீங்கள் கண்டிப்பாக கல்விகற்றவராகவோ, வேலைத்திறன் மிக்கவராகவோ இருக்க வேண்டும் அதன் பயனாக தெரிந்தெடுக்கும் அல்லது தானகவோ அமையும் வேலைவாய்ப்புகளே உங்கள் அடுத்தடுத்த வாழ்க்கைப் படிகளை நிர்ணயிக்க போகிறது. ஆகவே, உட்கார்ந்து நன்றாக யோசித்து, ஆலோசனைகளைப் பலரிடமிருந்தும் பெற்றும், அனுபவசாலிகளை சந்தித்தும், ஒரு பணியின் பின்னால் முன்னேற்றம் எவ்வாறிருக்கும் என்பதனை நன்கு ஆராய்ந்து அதனில் இறங்குவது நலம்.. தற்சமய பலன்களுக்காக மட்டுமே எதையும் பாராமல் ஒரு பணியில் ஈடுபட்டு பல்லாண்டுகள் கழித்து சே.. தப்புசெய்து விட்டோமோ என்று என்னுவது இழுக்கு.


பழக்கவழக்கம்… ஆறில் வளையாதது, அறுபதில் வளையாது என பழமொழி உண்டு. எனவே, உலக வழகத்தில் அனைத்து கெட்டப்பழக்க வழக்கத்தையும் தவிர்த்து, நல்ல பழக்கத்தைப் மட்டுமே பழக முயற்சி எடுத்தால் உண்டு சிறப்பு பின்னால். உடல் நலம் பேனுவதும் இப்பருவமே.. அடித்தளம் நன்றாக இருந்தால் தான் கட்டும் கட்டிடம் ஸ்ட்ராங் இல்லையா.. எனவே, இந்தப்பருவத்தில் பல், கண், வாய், காது, வயிறு என ஐம்புலன்களையும், உடல் முறுக்கு இதெல்லாம் சரியான உணவு, உடற்பயிற்சி, மனவலிமைதரும் யோகா, நண்பர்கள் கூட்டு, குடும்ப ஒற்றுமை போன்றவைகளால் கிடைக்கப்பெறும், தனிப்பட்ட முயற்சியும் அவசியம்.. பொதுவாக இவையனைத்தையும் நாம் இழக்க முக்கிய காரணம் சோம்பேறித்தனம்… இதைஒழித்தால் மேற்கண்ட அனைத்தும் கைகூடும்.

கிட்டத்தட்ட இந்தப்பருவ முடிவில் வேலையில் செட்டிலாகி விட்டாலோ, குடும்பச்சூழ்நிலை அல்லது கட்டாயமாகவோ கல்யாணம் செய்துகொள்ள வேண்டி நிர்பந்தப்படுத்தப்படுவார்கள்…
(திருமணத்தைப்பற்றி ஒரு தனி பதிவு நிச்சயம்)

… இளமைப்பருவத்துக்காரர்களுக்காக .. மேலே
… அடுத்தபதிவில் மத்தியப்பருவம்..
… காத்திருங்கள்
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

அட்டகத்தி….யால் குத்தினால் இரத்தம் வருமா..?

அட்டகத்தி….யால் குத்தினால் இரத்தம் வருமா..?
ATTAKATHI – TAMIL FILM REVIEW

அப்பாடா, மீடியாக்களின் பலமான பூஸ்டருக்களுக்குப் பின்னால், பில்டப்களுக்கு மத்தியில் சமீபத்தில் வந்த பல புரட்சி கரமான படங்களைப் போல் இதுவும் ஒரு பதிவு என எண்ணம் நமது மனதில் உந்தித்தள்ள தியேட்டருக்கு விரைகிறோம்.

இந்தப்படத்தைப் பொருத்த வரையில், இயக்குநர் நன்றாக தனது பணியை செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது, மருந்துக்குகூட சிரிப்பை வரவழைக்காததாலும், மேற்கொண்டு சுவாரஸ்யமான சம்பங்களை தெரிவிக்காததாலும் படம் 6 மணி நேரமாக ஓடுவதுபோல் ஒரு பீலிங்.

இளம் கதாநாயகன் +2, நாயகி +2, டாவடிக்க, யாரையாவது காதலித்தே தீருவது என முடிவு செய்து கதாநாயகன் ஒவ்வொரு பெண்ணையாக பார்ப்பது, தொடர்ந்து செல்வது, என இருக்கிறார். முதல் பெண்ணை நீண்ட நாள்களாகத் தொடர்ந்து பஸ்ஸில் புட்போர்ட் சாகசங்களைத் செய்து கவர்கிறார். நெருங்கி பேசுகின்ற பொழுது அண்ணா என பெண் சொல்வதால் நொந்து, அடுத்த நிமிடமே சோகமாக இருக்க என்னவெல்லாம் செய்துவிட்டு, ஒரு செகண்டில் அடுத்த பெண்ணை அதுவும் இரண்டு பெண்களை ஓரே நேரத்தில் டாவடிக்கிறார். இதுவும், ரவுடிப் பசங்களால் முறியடிக்கப்படுவதால், விரக்தியாகி வீட்டுக்கு அருகிலேயே ஒரு பெண்ணை டாவடிக்க, அந்தப் பெண் லவ் லெட்டர் கொடுத்து உங்க அண்ணணிடம் கொடுக்க கூறுகிறார்.

ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் யாரையும் லவ் செய்ய மாட்டேன் என சபதம் செய்து, நண்பர்களையும் கட்டாயப் படுத்த, நண்பர்கள் எஸ்கேப் ஆக, இடையில் கோட் அடித்த பிளஸ்2 ரிசல்ட் வர, கல்லூரியில் ரவுடித்தனமாக சுற்றித்திரிந்து ரூட் தல என்னும் பெயரையும் பெறுகிறார், மூன்றாம்ஆண்டு படிக்கும் பொழுது முதலில் பார்த்த பெண்ணை முதலாண்டில் சேர்ந்து இவரை மீண்டும் காதலிக்க தூண்டி படுத்திஎடுக்கிறார். இவ்விஷயம் முற்றிப்போக, பெண்வீட்டில் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் நிச்சயம் செய்ய, நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணைத் தூக்கிப்போய் திருமணம் செய்ய முடிவுசெய்து செயலில் இறங்குகிறார். குறிப்பிட்ட நாளில் பெண் வராதால் வெறுத்துப்போய் இருக்கும் பொழுது தற்செயலாக அந்தப் பெண்ணைப் பார்க்க அவரோ வேறொரு நபருடன் முதல் நாளே ஓடிப்போய் கல்யாணம் செய்துவிட்டு வந்துவிடுகிறார்.

மீண்டும் நம்மாளு தேள்கொட்டியகதையாக ரோட்டில் போகும்பொழுது ஒரு பெண்ணை மோத, அவருடன் காதலாகிறது என முடிக்கிறார்கள். கடைசியில் சஸ்பென்ஸ் வேற..

இது ஒரு காதலில் சொதப்புவது எப்படி படத்தின் லோ கிளாஸ் வெர்சன்.. இடை இடையில் பாட்டு வேற போட்டு கொல்கிறார்கள்.. எனிவே… ஒரு லோகிளாஸ் கிராமத்து டைப் வீடு உறவுகளை நெருங்கி பதிவு செய்ததற்கும், அவர்களுடைய வாழ்க்கையை பதிவு செய்ததற்கும் வாழ்த்துக்கள் மற்றும் முயற்சிக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கத்தான் வேண்டும்….
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

தங்க மெடலே வாங்க வேண்டாம்…. ?

தங்க மெடலே வாங்க வேண்டாம்…. ?
No need of Gold Medal in Olympics for India….

ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் என்று கல்வி அதிகாரிகள் தொண்டை காயக் கத்துகிறார்கள். கத்தும் கத்தலுக்குத் தகுந்த ஆட்கள் வரவில்லை. காரணம் விளையாட்டில் ருசியில்லாதது ஒன்று. இன்னொரு முக்கிய காரணம் பரிட்சை எழுதுகிற பரிட்சை இல்லை, விளையாட்டிலே பரிட்சை, அவனை இவன் உயர்த்தி, இவனைவிட இன்னொரு இவன் மோசம். இப்படி தேர்வு செய்து வடிகட்டி உற்காசத்தைக் குலைக்கிறார்கள். விளையாடுவது தன் மகிழ்ச்சிக்கு, தன் உடல் வளர்ச்சிக்கு இதில் என்ன போட்டி வேண்டிக் கிடக்கிறது? நம்முடைய படிப்பு மாதிரிதான் இருக்கிறது விளையாட்டு. நம் குழந்தைகள் படிக்கிறது. உல்லாசத்திற்காக, அறிவுக்காக, தன் மகிழ்ச்சிக்காக இல்லை. நிறைய மார்க்குக்காக, வாத்தியாருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க அந்தத் தலைமை வாத்தியார் பள்ளிக்கூடத்திற்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க அந்தப் பள்ளிக்கூடமும், பள்ளிக்கூடங்களும், மாவட்ட, மாநிலக் கல்வி அதிகாரிகளுக்கு நல்ல பெயர் வாங்கி கடைசியில் அந்த அதிகாரிகள் கல்வி அமைச்சரிடம் ஷொட்டு வாங்க வேண்டும். இந்த சங்கிலி அறுபடாமல் இருக்க, தொய்யாமல் இருக்க, வாரப் பரிட்சை, மாசப் பரிட்சை, கால்பரிட்சை, அரைப்பரிட்சை என்று குழந்தைகளின் உயிரை வாங்குகிறார்கள். பரிட்சை செய்வதே நச்சுப் பழக்கம் என்று வாய் கிழிகிற கல்வி அதிகாரிகளும், நிபுணர்களும் பள்ளிக் கூடங்களை பரிட்சை முடிவைப் பார்த்துத்தான் எடை போடுகிறார்கள். விளையாட்டும் இந்தத் தேர்வுப் பேயின் பார்வையில் தான் வளர்ந்து வருகிறது.

இந்தியா இதில் தனித்து நின்றுவிடவில்லை, மேற்கு நாடுகளிலும் இந்தப் பரிட்சை பேய்கள் நடமாடாமல் இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று எவனோ எழுதி வைத்து விட்டு போனான். எல்லாரும் சமம் எல்லாரும் சகோதரர்கள் அப்படியானால் ஏன் விளையாட்டு படிப்பு தோற்றம் எல்லாவற்றிருக்கும் மார்க் போடுகிறார்கள் ?

அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனைவிட ஒஸ்த்தி என்று சொல்லிக் கொள்ளத்தான் விரும்புகிறான். இன்னொருவன் அவனை விடத் தாழ்த்தி, அடிமை செய்ய வேண்டும், ஏதாவது ஒரு விதத்தில், இல்லை, நான் உனக்குச் சமமல்ல என்று பல்லையாவது காட்ட வேண்டும். சர்வாதிகார அரசியலில் மட்டுமல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமும் உறுமிக் கொண்டுதான் இருக்கிறது. போட்டி வைக்கிறது. சுரண்டச் சொல்கிறது. குடும்பத்தினர் மீது அரசோச்சச் சொல்கிறது. அடுத்த வீட்டுக்காரனை, ஊரை, மாவட்டத்தை, மாநிலத்தை, நாட்டை ஆளச் சொல்கிறது. தவிர்க்க முடியாததுதான்.

டார்வினோ சொல்லிவிட்டான், முயற்சி பண்ணி விளையாட்டிலாவது இதைக் குறைத்துக்கொள்ளலாம், ஒலிம்பிக் விளையாட்டில் தங்க மெடல் வாங்காவிட்டால் நம் குடி முழுகிப் போய்விடாது. சந்தோஷத்திற்காக விளையாடுகிறோம் என்பதை அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டால் போதும், மனிதனின் இந்த அடிப்படைப் போட்டியைக் கண்டுதான், பைராகிகளும், ஆண்டிகளும், உறிப்பிகளும் உருவாகிறார்கள்.

.. அடுத்த வீடு ஐம்பது மைல்… தி. ஜானகிராமன்.

என்ன புரிந்ததா… நம்ம ஜானகிராமன் சாரே எப்படி சொல்லிட்டாரு, போனா போகுது தங்கம், அது அடுத்தவன் அங்கம்… லண்டன் 2012 ஒலிம்பிக்கில் பல்பு வாங்கும் நமது சகோதர வீரர்களுக்கு ஆறுதலாயிருப்போம்…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

மதுபானக்கடை .. திரைவிமர்சனம்

மதுபானக்கடை .. திரைவிமர்சனம்

பயப்படவேண்டாம், நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் யாரும் இதில் நடிக்கவில்லை. ஒரு டாஸ்மாக் மற்றும் அதனுடன் இணைந்த ஒரு நடுத்தர நகரத்தில் உள்ள பார் 24 மணிநேரம் முழுமையும் இயங்குவதின் முழுப்பதிவே இப்படம்.
இதில் சுவாரஸ்யமான விஷயங்கள் என்று எதுவும் இல்லை, டாஸ்மார்க் பாருக்கு செல்லும் பழக்கமுள்ள நபர்களுக்கு இத்திரைப்படம் ரொம்ப ரொம்ப போரடிக்கும், குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும், பெண்களுக்கும் இங்கே என்னதான் நடக்கிறது என பார்க்கலாம்.

• பார் என்பது மிகவும் அசுத்தமான, அடிக்கடி கீளின் செய்யப் படாத இடம்
• ரொம்ப சத்தமான இடம்
• கிட்டத்தட்ட 24×7 விடுமுறையிலும் கூட இயங்குமாறுதான் இந்த அமைப்பு செயல்படுகிறது.
• கள்ளத்தனமாக போலி சரக்குகளின் நடமாட்டமும் உண்டு என பதிவு செய்கிறார்கள்.
• காலையில் துப்புரவு பணியாளர்களில் இருந்து, டீசண்ட் ஆன படித்த இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பணமுதலைகள், பிச்சை எடுப்பவர்கள், ஏமாற்றிபிழைப்பவர்கள், அனுமார் மாதிரி வேஷம் கட்டுபவர்கள், திருநங்கைகள், தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு கூடும் இடம்தான் மதுபானக்கடை.
• ஒரு நாளைக்கு பகல் இரவு என்று பாராமல் 3 முறைக்கு மேல் குடிப்பவர்கள் பெரும் குடிகாரர்கள், இரண்டு அல்லது ஒரு முறை குடிப்பவர்கள் வாடிக்கையாளர்கள்
• மானரோஷம் என்பது எல்லாம் குடிப்பவர்களுக்கு கிடையாது.
• ஓரே நாளில் குறைந்தது 500 ரூபாய்க்கு குடிப்பவர்களும் இருக்கிறார்கள்.
• மீண்டும் இந்த இடத்திற்கு வரமாட்டேன் என சத்தியம் செய்து விட்டுப்போகும் குடிமகன் அடுத்த அரைமணியில் திரும்பி வருவதும், அடிவாங்கி அவமானப்பட்டு போகும் பணக்காரர் கூட இரவு திரும்பபவும் வருவதும் ? கொஞ்சம் ஷாக்கடிக்கும் (மற்றவர்களுக்கு)

• காலையில் கடைதிறந்தது முதல் குடித்துவிட்டு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் படித்த இளைஞர், திரும்ப திரும்ப யாரிடமாவது கூட்டு சேர்ந்து குடித்துக் கொண்டே இருக்கும் நடுவயதுக்காரர், வீட்டில் உள்ள பணத்தை தினமும் கொண்டுவந்து குடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ( ஒவ்வொருவரும் அவருடைய துடுக்குத்தனமான பேச்சைக் கேட்டு சரக்கு தரமாட்டேன் என விரட்டி அடித்தாலும், பிறர் மூலம் சரக்கு வாங்கி).
• கந்து வட்டி முதலாளி கந்து வட்டி வசூல் செய்து, அவரும் தண்ணியடிக்கிறார்.
• மாமூல் வாங்கும் காவலர்களை கடன்காரன் என்று விளிப்பதும், கொடுத்துவைத்தது மாறி அனைத்து நடைபாதை வியாபாரிகளிடமும் 50, 100 வாங்கிக் கொண்டு நடையைக் கட்டுகிறார் போலீஸ் அண்ணாச்சி.
• கடைக்குள் அவ்வப்பொழுது சிறிய சிறிய சண்டைகள் நிகழ்வதும்,
• வாந்தி எடுத்தால் 30 ரூபாய் அபராதம் என எழுதிப்போடுவதும், அங்கேயே ஒரு மூலையில் உச்சா போவதும், பிறர் எச்சி டம்பளரில் சரக்கை ஊற்றிக் குடிப்பதும், பிறரை நம்பவைத்து ஏமாற்றி சரக்கை அபகரித்து குடிப்பதும், பாட்டுப்பாடி பொழுதை ஒப்பேற்றுவதும் தினம்தினம் நடக்கும் சங்கதியாக பதிவாகிறது.
• அழுகிய காய்கறி மற்றும் கெட்டுப்பொன இறைச்சியை வாங்கிவரும் முதலாளியிடம், மாஸ்டர் கெட்டுப்போச்சி எனகூறுவதும் அதற்கு, முதலாளி குடிகார பயலுகளுக்கு இதுபோதும் எனக்கூறுவதும்… அடிரா சக்கை.
• 10 நிமிடம் முன்னதாக கடையை மூடும் ஊழியரை வசைபாடி கடையை திறக்க வைத்து, சரக்கிற்க்காக கெஞ்சுவதும், பில் ஏதும் இல்லாமல் ஐஸ்ட் பணத்தை வாங்கி ஒரு அட்டைப்பெட்டியில் போடுவதும், 77 சரக்கை ரவுண்ட் செய்து 80 ரூபாய்க்கு விற்பதும் பதிவாகியுள்ளது, டாஸ்மாக் ஊழியரின் தெனாவெட்டான பேச்சும், செயல்பாடுகளும் கொஞ்சம் கொசுறு.

கடையில் வேலை செய்யும் இளவட்ட நபர், செல்போனில் கடலை போட்டுக் கொண்டே இருப்பதும், அதுவும், முதலாளியின் மகளையே டாவடிப்பதும், அது தெரியாமல் முதலாளி (இவரும் ஒரு ரவுடிதான்) கண்டுக்காமல் இருப்பதும் (இன்பாச்சுவேஷன் முத்திப்போய் உதட்டுமுத்தம் வரை முன்னேறி, கடைசியில் ஊரைவிட்டே காதலர்கள் ஓடுகிறார்கள்).

படத்தில் ஒரேஒரே ஜோக்தான் போல, இளவயது நண்பர்கள் நண்பரின் பிறந்தநாளை கொண்டாட பாருக்கு வருவதும் அங்கே நாளை காந்திஜெயந்தியை முன்னிட்டு கடைவிடுமுறை என்ற போர்ட்டைப் பார்த்து, நல்லவேளை இன்றைக்கு பிறந்த, நாளைக்கு பிறந்திருந்தாஅங்க பாருன்னு ஒரு அப்பாவி சொல்லும் போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

திரையரங்கை நோட்டம் விட்டபொழுது, குடிகாரர்கள் யாரும் இந்தப் படத்தை பார்க்க வந்ததாகக் கானோம், இந்தப் படத்தின் மூலம் எந்தவிதமான மெசெஜ் எதுவும் சொல்லப் படவில்லை. மதுபழக்கத்தைத் திருந்த எந்தவிதமான டார்ச்சரும் கொடுக்கப்படவில்லை. எனினும் ஒரு இடத்தில், பிளாஸ்டிக்கை ஒழிக்காவிட்டால் இந்த மண்ணில் ஒரு புல்பூண்டு கூட முளைக்காது எனது கூறுவது தான் பஞ்ச்.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB