மாற்றான்… ஆடு வித்தா 4 காசு… ஆட்டுவித்தா 10 காசு…

மாற்றான்… ஆடு வித்தா 4 காசு… ஆட்டுவித்தா 10 காசு…
mattran… konjam tamil ularals…

ரொம்ப நாளாக பதிவே போடல… ஏன்னா, டொக்கு போட்டது போக, விடுமுறை விட்டது போக… மீதி நேரத்தில் வேலையை பார்க்கவே சரியாக இருந்தது. இந்த தலைப்பை பற்றி இந்தப்பதிவின் கடைசியில் பார்க்க..

• முதல் 2 புயல்கள் நம்ம நாட்டுக்கு இப்ப வந்திருக்கு அதனால என்ன பாதிப்புன்னு 2 நாள் கழித்துத்தான் தெரியும்… சாக்கிரதையாக இருந்துக்கோங்க..

• ஆர்ச் வளைவுகள் கட்டுறாங்க அம்மா.. அதே நேரத்தில் அந்த வளைவுகளை நல்ல ஆர்க்கிடெக் மூலம் சிறப்பாக புதிய வடிவில் புதிய பொருட்களை வைத்து உருவாக்கினால் காலத்திற்கும் அது உலகில் பெயர் சொல்லும் இல்லையா.. ஆமா, இதை எப்படி அம்மாவிடம் சொல்வது.?

• தீபாவளி வந்துடுச்சு வழக்கம்போல.. காசு உள்ளவன் செலவழிக்க பறக்கிறான்.. காசு இல்லாதவன் கடன் கொடுக்க யார் கிடைப்பான்னு அலையறான்.

• டைம்பாஸ் ..ன்னு ஒரு 66 பக்க குட்டி குமுதம் டப் கணக்காக அந்தக்கால சுவாரசியமான குமுதம் போல் வந்திருக்கு.. பார்த்தேளே.. நன்னதான் இருக்கு.

• டெங்கு தமிழகம் எங்கும் பட்டையக் கிளப்பிக்கிட்டு இருக்கு.

• ரெயில் டிக்கட் விலை ஏறுதாம்… மீண்டும் பஸ்ஸேதானா?

• படித்ததில் பிடித்தது. தமிழ்மகன் என்பவர் எழுதிய ஒரு கதை… (குட்டியாக உங்களுக்கு) தமிழ்நாட்டில் உள்ள ஒருவருக்கு இரவு போன் வருகிறது.. அதில் பிரான்ஸ் நாட்டில் வாக்கப்பட்டுப் போன ஒரு அப்பாவிப்பென் கணவரின் குடி மற்றும் அடித்துஉதைத்தலால் மனம்வெம்பி பேசி கவுன்சிலிங் பெறுகிறார். மனைவியும் லோசாக குடித்திருக்கிறாராம்.. கவுன்சிலிங் தந்த நபர் பொறுமையாக அவரை சமாதானப்படுத்தி பிடிக்கலேனே வெளியேறிவிட தெரிவிக்கிறார்.. கொங்சநேரம் கழித்து போன் வருகிறது. எடுத்து பேசும் பொழுது அந்தநபர் சொல்கிறார் நீங்க சொன்ன அறிவுரைப்படியே 14 வது மாடியில் இருந்து குடித்துவிட்டு படுத்துக்கிடந்த கணவரைத் ஜன்னல் வழியாக வெளியேற்றிவிட்டேன்.. என்று…

• மாற்றான்… அப்பப்பா ஒரேநேரத்தில் இதே போல இரண்டு படங்கள் மற்றொன்று சாருலதா… இரண்டு வித்தியாசமான சூர்யாவை இணைத்திருப்பார்கள் என்று போனால் அப்படியெல்லாம் இல்லை.. சோம்பலான சூர்யா, ஜாலியான சூர்யா என இரண்டு ஒட்டி பிறந்த குழந்தைகள்.. அவர்களுக்குள்ளேயே ஈகோ… எனர்ஜியான் என்ற பால் பவுடரில் கலக்கப்பட்ட பின்விளைவுகள் ஏற்படும் ஊக்கமருந்து… அந்த ஊக்கமருந்து கண்டுபிடிக்க காரணம்.. விஞ்ஞானிகள்.. பாதிப்புகள் என சமீபத்தில் வந்த ஒலிம்பிக் போட்டியை பார்த்துக்கொண்டே கதை அமைத்திருக்கிறார்கள்.

• கேவிஆனந்த்.. மெனக்கெட்டு படம் எடுத்திருக்கிறார்.. படம் ரஷ்யா, இந்தியாவில் ராஜஸ்தான் தமிழ்நாடு என சுற்றிசுற்றி வருகிறது… சூர்யாவிடம் இருந்த துறுதுறுப்பு எங்கே போனது… ரொம்ப போராக இருக்கிறது… கதாநாயகி சும்மா சோப்பு டப்பா மாதிரி வந்து போகிறார்.. பாட்டுக் கூட ஒன்னு நல்லாருக்கு படம் ரொம்ப நீளமாக… போய்க்கிட்டே இருப்பதுதான் ஒரே குறை..

தலைப்பைப்பற்றி… சாதரணமாக ஆடு வளர்த்து வித்தால் அதன் விலை ஒருவருக்கு குறைவாகத்தான் இருக்கும்.. அதே நேரத்தில் ஆட்டுவித்தால் (அதிகாரத்தால்) பிறரை இம்சித்து பணம் பெற்றால் காசு கூடத்தான் இருக்கும். ( அய்யோ… கொல்றீங்களே…ன்னு சொல்வது கேட்குது…)

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

கிழட்டு முகமூடி …. திரை விமர்சனம்

கிழட்டு முகமூடி …. திரை விமர்சனம்
mukamoodi .. Tamil Film Review..

அருமையான கான்செப்ட் மிக நன்றாக வந்திருக்க வேண்டிய படத்தை போட்டு, பழைய மாவைவிட்டு கிண்டி கிண்டி மிக மோசமாக உருவாக்கியிருக்கிறார்கள். ஜீவா ஒரு விளையாட்டு வாலிபன், மற்றவர்கள் மாதிரி 9 டூ 5 அலுவலகம் சென்று விட்டு, 7 மணி சீரியல் பார்த்து வழக்கமான வாழ்க்கை வாழ விரும்பாதவன், எதையாவது சாதிக்க விரும்புகிறான். அவனது நண்பர்கள் குழாம் குங்குபூ கற்றுத்தரும் ஒரு மாஸ்டரிடம் ஒருசில வித்தைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். படத்தில் சைனா படம்போல் குங்பூவை எதிர்பார்த்தீர்களானால் நீங்கள் பனால், சும்மா டான்ஸ் பிராக்டிஸ் பன்னுவது போல் ஒரு சில பைட் மூவ்மெண்ட்களை மட்டும் பிராக்டிஸ் செய்து குங்பூ பைட்டர் போல் பில்டப் செய்யப்பட்டிருக்கிறது.

இடையில் பழைய தமிழ் படமான சத்திரியனைக் காப்பியடித்து வில்லன் / கதாநாயகன் பிளாஷ்பேக்.. ( அப்பா சாமி ரொம்ப அறுவைடா…). நகரில் நடக்கும் தொடர் கொள்ளை அதுவும் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை மற்றும் கொள்ளை நடக்கிறது. அதை செய்வது டிராகன் குங்பூ டிரையினிங் வைத்திருக்கும் நால்வர் அதிலும் நரேன் தான் முக்கிய வில்லன். (இவர் போலிஸ் புல்லுறுவி) இடையில் நடக்கும் ஒரு சில விஷயங்களால், நாசர் மருத்துவமனையில் அட்மிட், கதாநாயகியின் சில்மிஷம்… எல்லாம் ஏற்கனவே பல தமிழ்ப்படங்களில் வந்த காட்சிகளையே திரும்ப திரும்ப எடுத்திருக்கிறார்கள்.

நண்பனின் சாவு மற்றும் சாதிக்க வேண்டும் என வெறி கொண்டு, இரண்டு தாத்தாக்களால் விஷேச முகமூடி மற்றும் உடையை அணிந்து கொண்டு வில்லன்களை பிடித்து துவம்சம் செய்வதே முகமூடி…
அப்பாடா பெரும்பாலான காட்சிகள் இராத்திரியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது… அதனால் பல காட்சிகளில் என்ன நடக்கிறது என்பது கூட சரியாக புலானாக மாட்டேன்கிறது. இசையும் சுமார்தான்… கதாநாயகி மட்டும் பலப்பலன்னு மின்னுகிறார் (நடிப்பில் அல்ல) ஜீவா உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். இந்த மாதிரி சில்லரை அயிட்டங்களைத் தவிருங்களேன்.

கிழட்டு முகமூடியால் சிறப்பாக எண்டர்டய்ன் பண்ணவோ, சண்டைகளால் சிலிர்ப்பூட்டவோ, செம திரில்லராகவோ, சஸ்பென்ஸ் கில்லராகவோ, நட்பை பெருமைப்படுத்தும் படமாகவோ எதுவாகவும் ரகம் பிரிக்கஇயலாது… பெட்டர்லக் அடுத்துமுறை…
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

கோவில் வழிபாடு … நன்மை பயக்குமா? நேர விரயமா?

கோவில் வழிபாடு … நன்மை பயக்குமா? நேர விரயமா?
kovil / Temple visit is really good or not? what is behind the Temple’s Visit.
தற்காலத்தில், கோவிலுக்கு செல்லுவது பொதுவாக ஒரு சுற்றுப்பயணம் மற்றும் சந்தோஷமாக செல்லும் இடமாகவும், இஷ்டப்பட்டால் போகலாம், இல்லையானல் போக வேண்டாம் என இருவேறு கருத்திற்கு உட்பட்டு செல்கிறார்கள் பெரும்பாலும். கொஞ்ச காலம் வரைக்கும் (சுமார் 20/30 வருடங்களுக்கு முன்பு வரை கூட கோவில் செல்வது மிகவும் கட்டாயம் போலவும், சாமி, பூதம் போன்றவைகள் நம்முடைய இருப்பதாகவும் அவர்களுக்கு கட்டுப்பட்டே இந்த பூமியில் அனைத்தும் நடப்பதாகவும் கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

உண்மையில், அறிவியல் வளர வளர, ஒவ்வொன்றின் பின்னால் இருக்கும் உண்மை புலப்பட்டு, தற்காலத்தில் கட்டாயம் என்பதெல்லாம் இல்லாமல், முடிந்தால் போ, இல்லைன்னா போ என்று ஆகிவிட்டது. பொதுவாக மதத்தின் பெயரால் ஒரு சிறிய குரூப்பை உருவாக்கவும், அதன் மூலம் நன்மையோ / தீமையோ செயல்படுத்த பலரின் ஆக்கபூர்வமான செயல்களை பயன்படுத்திக் கொள்வதே கண்கூடு.

இன்னமும், பிராக்டிகலாக பல கோவில்கள் நமது நம்பிக்கை விதையை ஆளமாக விதைப்பதற்கும், அதனை குறிக்கோள்களை வெற்றிக்கொள்ள ஒரு முன்னிலை தேவை மற்றும் நமது சிந்தனையை ஒருமுகப்படுத்தி வெற்றியை நோக்கி அடிஎடுத்து வைக்கவே பயன்படுத்துகிறோம்.

நமது முன்னோர்களால் பல்வேறு சோதனைகள் மற்றும் நேரடியான அனுபவங்களால் ஆன்மீகத்தை வளர்த்தையும், ஆகம விதிமுறைகளை உருவாக்கி சக்திதரும் கோவில்களை உருவாக்கி வைத்திருந்தார்கள். பொதுவாக, ஒவ்வொரு கோவில்களிலும், இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்திஆகியவை மிகவும் சிறப்பாக இயக்குமாறு அதன் முக்கியமான கருவறையும், அதன் சுற்றுப்புறங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.
இதில் இச்சா சக்தி, நமது கோரிக்கை / எண்ணம் ஆகியவைகளை உருவாக்க நமது சிந்தனைகளை ஒருமுகப் படுத்தவும், கிரியா சக்தி அதனை சிறப்பாக செயல்படுத்த தேவையான சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுக்கவும், ஞானசக்தி அதற்கு மேல் ஆசிகளையும், மேற்கண்ட இரண்டு செயல்களும் சிறப்பாக செய்துமுடிக்க தேவையான அமைப்பையும் வழங்கவும் செயல்படுத்தும்…

இதில் நாம் கவனிக்க தக்க அம்சம் என்னவெனில், நமது கோரிக்கைகள் கண்டிப்பாக ஞாயமாகவும், நமது சக்தி மற்றும் செயல்திறனுக்கு உட்பட்டும் ( டாலன்ரன்ஸ் 25 சதவீதம் இருக்கலாம் அதாவது கூடவோ / குறையவோ ) இருக்கும் பட்சத்தில், அது கண்டிப்பாக வெற்றியடைந்து விடுகிறது.

இதில் ஒரு சில முரண்பாடுகளை காணலாம், அதிக உழைப்பைக் கொடுத்தும் / நேர்மையாக செயல்பட்டும் பொருள் சம்பாதிக்கவோ அல்லது வாழ்க்கையில் வெற்றிப்பாதையில் செல்வவோ இயலாமல் பலர் தவிக்கலாம், அதற்கு என்ன காரணம், தனது உடல் உழைப்பையும், நேர்மை நினைப்பையும் அவர்களால் செயல்படுத்த முடிந்ததே தவிர காலம் மற்றும் இடத்தினைப்பொறுத்து தேவைப்படும் கால வர்த்தக மாற்றங்களைச் சந்தித்து பொருளாதாரமுன்னேற்றத்தை மனதில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக தாம் எடுத்த தொழில் அல்லது செய்கைகளை மட்டுமே கடைப்பிடித்தாக இருக்கும்.

ஆகவே, ஒருவருடைய காலசூழ்நிலைகள் சரியாக அமைவதற்கும், அவருடைய சிந்தனைகள் பொருளாதார ஏற்றத்தை சந்திக்க வேண்டும் என்ற இச்சா சக்தியைப் பொருத்த வெற்றி அமையும், இல்லையா? அதற்கு முக்கிய கருவியாக கோவிலுக்கு செல்வது அமைகிறது…

குறிப்பு.. இது எல்லாம் நம்ம சொந்த கருத்தாக்கும்.. பின்னோட்டங்களில் இதுகுறித்து நார்நாராக கிழிக்கலாம்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

சுந்தரபாண்டியனார்.. பராக் பராக்…

சுந்தரபாண்டியனார்.. பராக் பராக்…
SUNDARAPANDIYAN … TAMIL FILM REVIEW

இந்தப்படத்தின் நாயகனாக .சசிக்குமார்… மறுபடியும் மதுரையை ஒட்டியுள்ள உசிலம்பட்டியை கதைக்களனாகவும், ஜாதி வெறியில் செய்யப்படும் கௌரவ கொலையை முக்கிய நிகழ்வாகவும் எடுத்து மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.

1. விடலைப்பையனாகவும், செல்ல ரவுயாகவும், நட்பிற்கு உயிர் கொடுப்பவராகவும், குடும்பத்தின் தூணாகவும் வலம் வருகிறார் நாயகன். எப்பொழுதும் நண்பர்களுடன் சுற்றித்திரிபவராகவும் விளையாட்டுப்புத்தியாகவும் அதே நேரத்தில் புத்திசாலியாகவும் பில்டப் செய்யப்படுகிறது.

2. படம் முழுக்க உசிலம்பட்டியில் இருந்து மற்றொரு அருகிலுள்ள சிறிய ஊருக்குச் செல்லும் பேருந்தும், அதில் பயணம் செய்து கல்லூரி பள்ளிகளுக்கு செல்லுபவர்களே கதைநகர்த்திகள்..

3. படம் பிடித்த நேர்த்தி மற்றும் லொகேஷன்கள் மிகவும் அருமை கிட்டத்தட்ட மற்ற படங்களில் பார்த்திருக்க முடியாத நமக்கருகேயுள்ள இடங்களில் படம்பிடித்திருப்பது நன்று.

4. திரைக்கதையும் சிறப்பாக கைகொடுக்கிறது, விடலைப் பையன்களில் காதலால் ஏற்படும் நட்பு மோதல், கடைசியில் கதாநாயகனுக்கு எதிராகத் திரும்பி அவரையே போட்டுத் தள்ள போக, மீண்டும் கொதித்தெளுந்து சினிமா பாணியில் எதிரிகளைத் தாக்கி வெற்றிக்கொள்வதே சுந்தரபாண்டியன்.

5. கதாநாயகி சூப்பர், இளவயது மற்றும் சுட்டித்தனம் மிகுந்து பல பிரச்சினைகளை எளிதாக கையாளும் மெச்சூரிட்டித்தனம் தெரிகிறது.

6. கேமராவில் சுடப்பட்ட காட்சிகள் கண்னுக்கு ரொம்ப குளிர்ச்சி … கதைப்படி மதுரையாக இருந்தாலும், படம்பிடித்தது எல்லாம் பொள்ளாச்சி, உடுமலைப்போட்டை போன்று தோன்றுகிறது. அப்படியா?

7. அந்தப்பக்கம் எல்லாம் நாம் வழக்கமான செயல்களை செய்வது (தினமும் குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது போல்) ஜாதி அடிப்படையிலான எதிர் விஷயம் தலைக்கு கிர்என ஏறி கொலையை கூட சாதாரணமாக செய்யும் அளவிற்கு சூழ்நிலை இந்த 2012ல் கூட நிலவுவது வருத்தமான விஷயம் தான்.

8. மொத்தத்தில் இளமையின் துள்ளலில் வெளிவந்துள்ள சமீபத்திய சூப்பர் டூப்பர் உறிட்…

இருப்பினும், அவருடைய ஏற்கனவே வந்த நாடோடிகள் படத்தையை உல்டா பண்ணியிருப்பாரோன்னு சந்தேகம் வருகிறது. மேலும், அவருடைய மேனரிசம் இளமையாக இருந்தாலும், வயதான தோற்றம் கொஞ்சம் இடிக்கத்தான் செய்கிறது. எனினும், வட்டார பழக்கவழங்கங்களை குளோபலாக கொண்டு செல்வதற்காக அவருடைய முயற்சிக்கும் வெற்றிக்கும் நமது பாராட்டுக்கள் எப்பொழுதும் உண்டு.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

தத்தளிக்கும் தமிழகம்…. எதிர்காலம் என்னாவாகும்?

தத்தளிக்கும் தமிழகம்…. எதிர்காலம் என்னாவாகும்?
tamil nadu facing problems… what next ?
மற்ற மாநிலங்கள் அமைதியாக இருக்க, தமிழகம் மட்டுமே பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு அன்றாடம் வாழ்வே பிரச்சினைக்குரியதாக மாறிவிட்டது.
1. மின்வெட்டு
அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. குறிப்பாக தொழிற்நிலையங்கள் நிரம்பிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு, தினந்தோறும் 600 ரூபாய் சம்பாதித்த தொழிலாளர்கள் சுமார் 150 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க இயலுகிறதாம். அதிலும், தறிஓட்டுபவர்களின் நிலைமை மிக மோசம். ரேஷன் அரிசியை சாப்பிட்டு காலம் தள்ளுபவர்களே அதிகம். தொழில் இல்லை.. தூக்கம் இல்லை.. கொசுக்கடியால் காய்ச்ச்ல் உண்டு.. மழை இல்லாததால் விவசாயம் பொய்த்துவிடும் நிலைமை. காவிரி நீர் போதுமானதாக இல்லை. ஆற்றில் உறாயாக படுத்துறங்க போதுமான மணல் கூட இல்லை அனைத்தையும் அள்ளிவிட்டு களிமண் தான் பல்லிளிக்கிறது.

2. தட்பவெப்பம்.
முன்எப்பொழுதும் இல்லாதவகையில், இப்பொழுது வெயில்
104 டிகிரியை தொடுகிறது.. திடீர் என்று சூறாவளி காற்று அடிக்கிறது. மழையும் பெய்கிறது. ஓரு நிரந்தரமான போக்கு
இல்லை.
3. பொருளாதாரம்
தமிழகம் எதிர்பாராத பொருளாதார தள்ளாட்டம் வசதியானவர்கள் வசதியாகவும், ஏழைகள் மிகவும் ஏழையாகவும் போகக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அனைத்து மட்டங்களிலும் ஊழல் மற்றும் விலைவாசி ஏற்றத்தால் அனைத்து தரப்பினரும் தங்கள் பங்குக்கு விலைஏற்றத்தை செய்து விட்டுள்ளனர். ரியல் எஸ்டேட் தாறுமாறான விலையேற்றத்தினால், மனித நடமாட்டம் அற்ற தண்ணீர் இல்லாத காடுகூட வெறும் பாறைகளும், முட்செடிகளுமாக பயனற்று இருந்த இடங்களைக் கூட பிளாட்களாக போட்டு விளம்பரப்படுத்தி விற்று விடுகிறார்கள்.
4. பொழுதுபோக்கு ஏமாற்றம்
தற்பொழுது தமிழகம் பொழுதுபோக்கில் கூட பெரும்
ஏமாற்றத்தினையும், வெற்றிடத்தையும் சந்தித்து வருகிறது. பவர் ஸ்டார் போன்றவர்களையும் கைது செய்து விட்டதால், ஈமு கோழியினால் ஏமாந்தவர்களைப் பார்த்து மற்றவர்களும், ஏமாறதவர்களைப் பார்த்து ஏமாந்தவர்களும் மாறி மாறி வஞ்சினம் கொண்டு பார்க்கிறார்கள்.
5. மனச்சிதைவு.
பெண்களின் பெரும்பாலான பொழுதுபோக்காக சீரியல்களே
இடம்பிடித்து இதுகாறும் இல்லாத வன்முறையையும், குடும்பங்களை சிதைக்கும் தகாத சண்டைகளும், உறவுமுறைகளை கெடுக்கும் வசனங்களும் தாறுமாறாக வீட்டுக்குள்ளே வந்து, அதைப்பார்க்கும் பெண்களின் மனதில் விஷ விதையை விதைக்கிறது. இப்படியே போனால், எதிர்காலத்தில் நல்ல சந்ததியினர் உருவாவது கேள்விக்குறியாகிவிடும்.

6. மீடியா
முன்எப்பொழுதும் இல்லாத வகையில் தற்பொழுது 100
கணக்கான சானல்களின் படையெடுப்பாலும், பிரிண்ட் மீடியாக்களின் டமால் டூமில் தலைப்புக்களாலும், தமிழகம் திடீர் என்று செய்தி அதிர்ச்சி அலைகளை சந்திக்கிறது. ஒரு சிறிய ஊரில் ஒரு வீட்டு ஓடு உடைந்தது கூட 24 மணிநேரமும் தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் கட்டாயம் பார்த்து அறிந்து கொள்ளவேண்டிய செய்தியாக வலம் வருகிறது.
7. சுதந்திரம்
இதுதாண்டா சுதந்திரம்ன்னு ஒவ்வொருவரும்
விதிமீறல்களையும், சட்டங்களை மதிக்காமலும், சாலைகள் தோறும் நடந்துகொள்வதால், (மது வேற… தண்ணீர் மாதிரி கிடைக்காத இடமே இல்லை) ஏகப்பட்ட விபத்துக்கள், குப்பைகளை சாலைகளிலேயே போடுதல், ஆடு மாடு வளர்த்தல்
பிறருக்கு இடைஞ்சல் செய்யும் வகையில் ஆக்கிரமித்தல், வாகனங்களை ரோட்டில் நிறுத்துதல், சாக்கடைகளில் குப்பை போடுதல், ரோட்டிலேயே ஒன்.டூ பாத்ரூம் செல்தல். பேருந்தில் இருந்து துப்புதல், கூட்டத்தில் புகுந்து சில்மிஷம்.. புதிதாக செயின் அறுத்தல் என எங்கேயும் எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கிறது.

என்ன செய்யலாம் ?
1. அனைத்து மட்டங்களிலும் ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கை
2. சட்டத்திட்டங்களை கடுமையாக்குதல்
3. தனிப்பட்ட ஒழுங்கீனங்களை தண்டிக்க வகைசெய்தல்
4. மீடியாவின் சுதந்திரமான போக்கினால் எழும் விளைவுகளுக்கு பொறுப்பாக்கி பலகோடிகளை அபராதம் விதித்தல்.
5. சீரியல்களின் அராஜக போக்கினை எதிர்த்து வழக்குத் தொடுத்தல்..
நல்லாயிருக்குள்ளே… இருப்பினும் பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுக்கெல்லாம் மிக முக்கிய காரணமாக மக்கள் தொகை… இதைக்கட்டுப்படுத்த இந்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளாவிடில், எதிர்காலத்தில் இந்தியா தத்தளிக்கும் நாடாக மாறிவிடும் அபாயமுண்டு.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB