டிசம்பர் 21ல் உலகம் அழியுமா.. அழியாதா?
Really the day on 21st December 2012, The World is end ?
ஊடகங்களின் தலையாய பிரச்சினைகளில் தற்சமயம் முன்னிலையில் இருப்பது இந்த டாபிக்தான்.. (12.12.12ல் ரஜினி பிறந்தநாள்தான் முடிஞ்சாச்சே அப்பா சாமி அலப்பறை தாங்க முடியல, எந்தசானலை துறந்தாலும் ரஜினிபாட்டுதான், எப்எம்லாம் ஒரே ரஜினிபாட்டுதான்.. வார, நாளிதழ்கள்லாம் ஒரே ரஜினிமயமாம் தான்… சே…ன்னு பப்ளிக் என்னுமளவிற்கு ஆகிவிட்டது) நம்ம பங்குங்கு நாமும் கொஞ்சம் அடித்து துவைப்போம்.
• 3113 வருடங்களே உள்ள மாயன் காலண்டர் 21.12.2012ல் முடிவிற்கு வருவதால், பலரும் இந்த கருத்தை வழியுறுத்துகிறார்கள். மாயன் என்பவர் மயன் என்பதாகவும், இந்துக்கள் அவரை கடவுளாக வணங்குகிறார்கள் எனவும் ஒரு பதிவில் பார்த்தேன். திரு. கணபதி ஸ்தபதி என்பவர் இந்த மயன் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்கிறார்கள்.
• பைபிள் கூட இந்த வருடமுடிவில் உலகம் அழியும் எனத் தெரிவித்திருப்பதாக, திரு. உமாசங்கர், ஐஏஎஸ் கூறியதாக செய்திகள் கூறுகிறது.
• மதுரை ஆதினமும் அடித்து சொல்றார் உலகம் அழிந்துவிடுமாம்.
• ஆனால், நாஸா வெளியிட்டுள்ள செய்தியில் இதெல்லாம் கட்டுக்கதை, யாரும் நம்பவேண்டாம் என்கிற ரேஞ்சில் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
• அதெல்லாம் சரி.. அழியுமா.. அழியாதா… விஞ்ஞான ரீதியில் இந்த உலகம் அழிய என்னவெல்லாம் காரணமாகலாம்..
1. பூமி தனது இயக்கத்தை தாறுமாறாக மாற்றாலாம் அதன் விளைவாக அனைத்தும் தலைகீழாக மாறலாம்.
2. சூரியன் தனது வெப்பக்கதிர்களின் வீச்சை அதிகரிக்கலாம்.
அதனால் பூமியின் வெப்பம் அதீதமாக உயர்ந்து, பொருட்கள் அனைத்தும், நாமும் தான் வெப்பம் தாங்காமல் எரிந்து போகலாம்.
3. வெளியில் உள்ள கிரகங்கள், விண்மீண்கள் போன்றவைகள் பூமியில் வந்து மோதலாம்.
4. புவிஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்பட்டு பல விஷயங்கள் ஏற்படலாம்.
5. காற்றுமண்டலத்தில் உள்ள வளிமங்களை வளர்சிதை மாற்றம் / கெமிக்கல் ரியாக்ஷன் மூலம் மாற்றம் அடைந்து அதன்விளைவாக ஆக்ஸிசன் போன்ற இன்றியமைதா வாயுக்கள் காலியாகலாம்.
6. கடல் நீர் திடீரென வற்றிப்போதல், அல்லது பொங்கி எழுதல்
7. பூமிஅதிர்ச்சி ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படலாம்.
8. மனிதமனங்களில் ஒருவித ஒட்டுமொத்த அகோரம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
9. மேற்கண்ட பல விஷயங்களோ அல்லது ஒரு விஷயமோ ஏற்பட்டு, அதன்விளைவாக மனிதர்களின் இரத்தஓட்ட மண்டலம் சிதையும் படியாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு ஒட்டுமொத்த மனிதஇனமும் மடியலாம்.
1980களில் ஸ்கைலாப் என்னும் சாட்டிலைட் விழுந்து ஒரு ஊரே காலியாகிவிடும் என மீடியாக்கள் (அப்போ பிரிண்ட் மற்றும் ரேடியோ மீடியா மட்டுமே பிரபலம்) அலற, மக்கள் கூட்டம் கூட்டமாக பயந்து போய் வீட்டில் உள்ள ஆடு, கோழிகளை அடித்து சாப்பிட்டு விட்டு, உறாயாக சினிமா பார்த்துவிட்டு, சிவனே என்று கடவுளை வேண்டிக்கொண்டே உறவினர்களுடன் ஒரே இடத்தில் கூடியிருந்ததாக கேள்வி… பின்பு ஸ்கைலாப் கடலில் விழுந்து, அந்த செய்தி ரேடியோ மூலமாக சொன்னபிறகுதான் பலருக்கு மூச்சே வந்ததாம்.
2012ல் அப்படியெல்லாம் நடக்காது என நம்புவோம்.. வழக்கம் போல் இந்த உலகம் நீடூழி வாழ வாழ்த்துவோம்.