ஆதி பகவான்.. பார்ட் 2 உண்டா ?

ஆதி பகவான்.. பார்ட் 2 உண்டா ?
adhi bagawan film review
அடடா என்ன இது … போனவாரம் பார்த்த விஸ்வரூபத்தில் கடைசியில் வில்லன் தப்பி பார்ட் டூவில் சந்திக்கலாங்கிறார், இங்கே என்னடா என்றால், கத்தியால் குத்தி குத்தி கொலை செய்தும் இரண்டே நிமிடத்தில் வில்லன் காணாமல் போய்விடுகிறார்.. ஆதிபகவான் 2 பார்ட்க்காக இருக்கும்போல.
tx2
சரி சரி கதை என்ன.. இது கொஞ்சம் வித்தியாசமான கதைதான், நம்ம பகவான் தான் உறீரோ கம் வில்லன் ( ஜெயம் ரவி ) உதட்டில் லிப்ஸ்டிக் தடவிக்கொண்டு, கிட்டத்தட்ட 9 மாதிரியும் அதே நேரத்தில் பார்த்த பெண்களை நினைத்தமாதிரி பயன்படுத்திக்கொண்டும் கூடவே ராணின்னு ஒரு பெண்ணை நேசித்து பக்கத்திலேயே வைத்துக்கொண்டு பெரியபெரிய தாதா செய்ய வேண்டிய வேலையை தான் ஒருவரே செய்து மும்பையில் எண்கவுண்டரில் போட வேண்டிய நபராகிறார். காரணம், மும்பையை சேர்ந்த அரசியல் புள்ளி மத்தியமந்திரி ஆக, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் புள்ளியை போட்டுத்தள்ளுகிறார். மும்பை பார்ட்டி மத்தியமந்திரி ஆனவுடன் அவருடைய தம்பி இவருடைய காதலியை கைபற்ற நினைப்பதால், மந்திரி தம்பியை போட்டுத்தள்ள, மந்திரி போலீஸ்இடம் சொல்லி பகவானை என்கவுண்டரில் போட்டுத்தள்ள ஏற்பாடு செய்கிறார். இதற்கிடையே, போலீஸ் ஆபிஸருக்கும் பகவானுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு, பகவானைப் போலவே உறாங்காங்கில் இருக்கும் சாதா ரவுடி (இன்னொரு ஜெயம் ரவி) கூட்டிவர ராணி தலைமையில் உறாங்காங் சென்று, அதிலும் வெற்றிபெற்று ஆதி (உறாங்காங் ஜெயம்ரவி) லோக்கல் கேங்கிடம் இருந்து உயிரைக்காப்பாற்றி மும்பை கொண்டுவந்து போலீஸிடம் ஒப்படைக்கிறார்கள்.
tx1
இதற்கிடையே, ஐதரபாத்தை சேர்ந்த கிராணைட் பெரும்புள்ளிகளிடம் கொள்ளைஅடித்ததற்காக அந்தகும்பலும் பகவானை போட்டுத்தள்ள தேட, பணம் வாங்கிக்கொண்டு எண்கவுண்டர் செய்ய கொண்டுபோகும்வழியில் போலிஸ் ஆபிஸர் 3 மணிநேரம் மட்டும ஐதரபாத் பார்ட்டியிடம் ஆதியை ஒப்படைக்க, கடினமாக நையப்புடைத்தும், சினிமாத்தனமான வெறி ஏற்பட்டு கடைசி நேரத்தில் ஆதி தப்பியும், இதற்கு காரணமான பகவானையும் போட்டுத்தள்ள கோவாவிற்கு வருகிறார், (எப்படித்தெரியும்) இறுதிகட்ட போரில் ராணி மற்றும் பகவானை கஷ்டப்பட்டு போட்டுத்தள்ள… 2 நிமிடத்தில் பகவான் உடல் மட்டும் காணாமல் போக… நாம் கொஞ்சம் ஜெர்க் உஷ் அப்பாடான்னு வெளியே வருகிறோம்.
tx
ஜெயம்ரவிக்கு இது ஒரு சவாலான வேடம்தான் 9 போல நடிக்க தனித்திறமை வேனும்ல.. ராணியாம் ராணி தண்ணியடிக்குது, தம்மடிக்குது சண்டைபோடுது, கூட இருந்தே போட்டுத்தள்ளுது, டாக்டர் மாதிரி மார்பில் பாய்ந்த குண்டையெல்லாம் அனாவசியமாக எடுத்து வீசுது. ஓரு ரோக்கை தனது தங்கை விரும்பியதை நாசுக்காக கண்டித்தும், அவனை வரவழைத்து பேசிப்பார்த்தும், காசு கொடுத்து பார்த்தும் தங்கை திருந்தாத காரணத்தால் கண்எதிரே டமால்ன்னு உடனடியாக போட்டுத்தள்ளுவது.. திக்திக் நொடிகள்.

மற்றபடி, கேமராவைத்தூக்கிகொண்டு மும்பை, கோவா, உறாங்காங்ன்னு சுத்தே சுத்துன்னு சுத்திகாண்பிக்கிறாங்க.. அதுவும், ஒரு பழைய அரண்மணையை கொலைக்களமாக மாற்றி, கோவாவின் இடிந்த கோபுரங்களை வேறுவிதமான கோணத்தில் காண்பிக்கிறார்கள். இசை இருக்கிறது, ஆனாலும், ஏதோ மிஸ்ஸிங்… ஆங் மருந்துக்குகூட காமெடிபடத்தில் இல்லை. அமீரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

விஸ்வாமித்திர தூபம்… சே. சே. விஸ்வரூபம்

விஸ்வாமித்திர தூபம்… சே. சே. விஸ்வரூபம்
viswaroopam film review

என்னா கெட்டப்பு.. அப்பப்பா தமிழக மக்களையே தவிக்க வைத்த படம்.. 100 கோடி வசூலை எட்டிவிட்டதாக ரூமர் அடிபடுது. சாதாரணமாக வெளிவர வேண்டிய படங்களை எப்படித்தான் இப்படி மக்கள் அனைவரையும் கவரும் வண்ணம் கவன சிதறல்களை ஏற்படுத்தும் தடைகளை உருவாக்குகிறார்கள்.
படத்தைக் கொஞ்சம் கொத்துவோம்… வாங்க…
t0
சாதாரணமாகவே, கமலுக்கு சமூக அக்கறை மற்றும் சமூகத்தின் அவலம் அல்லது கலையம்சங்கள் ( சலங்கை ஒலி பார்த்தீங்களா.. அவ்வளவு ஈடுபாட்டுடன் நடித்திருப்பார் ), ஏற்கனவே பல தொடர் படங்களில் நகைச்சுவை அல்லது ரொமான்ஸ் அல்லது தீவிரவாதம் என 3 டிராக்குகளில் சமீப 15 வருடமாக படங்களை எடுத்துவருகிறார்.

இந்தமுறை கொஞ்சம் திக்குமுக்காடச் செய்துவிட்ட விஸ்வரூபம் உண்மையில் எந்தவிதமாகவும் பிறருக்கு இடைஞ்சல்கள் எழாத ஒன்றாகவே படுகிறது. உண்மையில் சொல்லப்போனால் ஒரு அருதபழைய ஜேம்ஸ்பாண்ட் டைப் படத்தை போலவே, ( ரொமான்ஸ் மிஸ்ஸிங் ) உருவாக்கியிருக்கிறார் கமல். அவர் எடுத்தாளும் கதை ? உண்மையில் இதைக்காட்டிலும் கூடுதலாகவே நடைபெற்று வருகிறது என மக்கள் தியேட்டரில் பேசிக்கொள்கிறார்கள்.
t1
ஒரு சிலருக்கு இந்தபடம் பிடிக்கவில்லையென்பது, பரவலாகத் தெரிகிறது இருப்பினும் கமல் என்னும் கலைஞனின் முயற்சி அதாவது உறாலிவுட் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிவந்துட்டதாகவேப் படுகிறது. படத்தில் இரண்டு கதாநாயகிகள்… இருப்பினும் அம்மாமியே பெரும்பாலும் கவர்கிறார். சேசிங் பரவாயில்லையென்றாலும், கமலுக்கு முஸ்லீம் வேடம் அவ்வளவாக பொருந்திவரவில்லையோ என தோன்றுகிறது. அவ்வளவு கொடுமையான தீவிரவாதக் கூட்டம், எளிதில் காஷ்மீரி என்று சொன்னவுடன் கமலை தங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொண்டு, தனது மனைவி வரை உறவை நீட்டிப்பதும் கொஞ்சம் உதார்தனமானது… கமல் என்னும் ஒருவரே முழுபடத்தையும் தாங்கிபிடிக்க வேண்டியுள்ளது. பாம் வெடிக்க விடாமல் இருக்க, செல்ஜாமராக மைக்கிரோவேவ் ஓவனை கவிழ்த்து வைப்பது, புறா மூலம் உலகை அழிக்க புறப்படுவது. ( படத்தின் முதல் காட்சியே ஒரு புறாதான்… அது ஏன்னு பார்க்கும்பொழுது தெரியாமல் முழிபிதுங்கியது.. ) ஒற்றைக் கண்னு வில்லன் ( நிறைய பார்த்தாச்சு இதிலேயுமா.. )
இசை, படப்பிடிப்பு, எடிட்டிங்ன்னு நல்லாவே வேலை செய்திருப்பது தெரிகிறது.
t2
விஸ்வரூபம் 2 வந்தாத்தான் தெரியும், இந்தப் படத்தைபற்றி முழுமையாக.. எனவே, அதுவரை இதற்கு ரேட்டிங்க கொடுக்க கூடாது அப்பு என மக்கள் கோரஸாக நேற்றிரவு கனவில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க… ஊரை விட்டுப் போகாந்திங்க கமல் சார்ன்னு கேட்டுக்கிட்டு…. வணங்கி விடைபெறுகிறோம். நன்றி.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

கீழ்த்திருப்பதி லட்டு திண்ண ஆசையா? (பகுதி 2)

கீழ்த்திருப்பதி லட்டு திண்ண ஆசையா? (பகுதி 2)
THIRUPATHI LADDU THINNA ASAIYA PART 2

கீழ்த்திருப்பதியில் இருந்து தனியார் பேருந்தில் ஏறி அலமேலு மங்காபுரம் போறதுக்கு கிட்டத்தட்ட 1 மணி நேரம் ஆகிவிட்டது அதனால், வரும்பொழுது ஆட்டோவில் 50 ரூபாதான்.. வந்துட்டோம் 15 நிமிடத்தில். வரும்வழியில் சின்னபொன்னு ஒரே அழுகை என்னாச்சு? நாங்க கேட்கல கேட்டது ஆட்டோ டிரைவர்.. அதாவது அலிபிரி பக்கத்தில் உள்ள z00 வுக்கு போகனுமாம்… டிரைவர் மெர்சலாகி 300 ரூபா கேட்டவர் ஓரேடியாக குறைத்து 160க்கு ஒத்துக்கொண்டு, அடுத்த அரைமணியில் குறுக்குவழியில் மிருககாட்சி சாலையில் இறக்கிவிட்டார்.
t1
அங்கே கூட்டம் இல்லை.. மிருககாட்சி சாலை நன்றாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டிருக்கு. வசதியிருந்தா 4 சக்கர வாகனத்திலேயே (ரூபாய் 250 கட்டணம்) அல்லது 25ரூபா கட்டி பேட்டரி வாகனத்திலோ சுற்றலாம். ஆனால் மிருகம்லாம் விரல்விட்டு என்னும் அளவிற்கே உள்ளது. ஆனால் நன்றாக பராமரிக்கிறார்கள் என்பது அது கொழுகொழுவென இருப்பதைப் பார்த்தாலே தெரிகிறது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஈமுவை ஏலம் விட தவிக்கிறது அரசு. அங்கே ஒரு சில ஈமுவை காட்சியாக வைத்திருக்கிறார்கள். வெள்ளை புலியும், 3 சிறுத்தைகளும் பார்த்தோம்.
காட்டிற்கு நடுவிலே ஸ்நாக்ஸ் கடை இருப்பதாலோ என்னவோ, சுமாரான குஸ்காகூட சரக்கு முழுவதும் காலியாகிவிடுகிறது. வத்தல்தொத்தல் 3 சிங்கங்களை கூண்டுவண்டியில் சுற்றிகாற்றி 25 ரூபா வாங்கிகொள்கிறார்கள். புலின்னு போட்ட இடத்தில் வெறும் புளியமரம் தான் இருக்கிறது. என அப்படிஇப்படின்னு கால்நடையாகவே சுற்றிவர 4 மணிநேரம் ஆகிவிட்டது. அப்புறம், ஊருக்கு எந்த பஸ்ஸில் ஏறுவது என தெரியவில்லை வர பஸ்ல எல்லாம் தெலுங்குல எழுதியிருக்கு.. ஒரு ஆட்டோகாரர் கொண்டுவந்து ரோட்டில் விட்டுவிட்டு ஓடியே போய்விட்டார்.
எல்லாருக்கும் விடுமுறை தினமாகையால், இளைஞர்கள் பட்டாளம் டூவீலரில் (டாஸ்மார்க் அங்கேயெல்லாம் தனியார்வசம், சரக்கை அடித்துவிட்டு?) தாறுமாறாக பறந்து கொண்டிருந்தார்கள். அப்புறம் வெறும் 8ரூபா ஒரு நபருக்கு வாங்கிக்கொண்டு (டிரைவர்) சேஷர் ஆட்டோவில் பஸ்ஸ்டாண்ட் வந்து சேர்ந்தோம். இடையில் அலிபிரியில் (நாங்க போன இடத்திற்கு மிக அருகில்) அந்த சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக அடுத்த நாள் வந்த பேப்பரில் படித்து தெரிந்து கொண்டோம்.
t2
சித்தூர் வந்து, வேலூர் வந்து, திருவண்ணாமலை வந்து, இடம்இல்லாமல் வந்த பேருந்தில் இடம்பிடித்து (படிக்கட்டில்) ஊர் வந்து சேர்ந்தோம். இரவில் வீட்டுட்க்கு வர ஆட்டோபிடித்து (பஸ்டிக்கட்டைவிட அதிகம்) வீடு அங்கே இருக்க, ஆட்டோ இங்கேயே என இறக்கிவிடப்பட்டோம். (10ரூபா குறைவாக கொடுக்குறோமாம்.)
நீங்க எப்படி சீக்கிரம் தரிசனம் செய்தீங்கன்னுதான் கேட்க வறிங்க… நாங்கதான் 50ரூபா கொடுத்து ஆன்/லைன் புக்கிங் செய்து விட்டு சென்றதால் 4 மணிநேரத்தில் தரிசனம் கிடைத்தது. ஆனால், காத்திருந்த நேரத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் ரூம்.1 ல் அடித்த டாய்லெட் நாற்றத்தை சகிக்க இயலாமல் நொந்து போனோம். இடையே, 13ரூ ப்ரூட்டி 20க்கும் வாங்கி சாப்பிடவேண்டியதாக போய்விட்டது.
கீழ்த்திருப்பதிலேயே வசதியான ரூம் கிடைத்தனால், தங்க பிரச்சினை இல்லாமல் போய்விட்டது. பஸ்ஸ்டாண்ட் எதிரில் உள்ள பாலாஜிபவனில் சாப்பாடு அருமை (இரவில் சாப்பிட்டது), காலையில் டிபனும் நன்றாக இருந்தது. விலையும் அவ்வளவு அதிகம் இல்லை. சுத்தமாகவும் சுகாதராமாகவும் இருந்தது. முதல்நாள் இரவில் மேல்திருப்பதி கோவிலின் பின்புறம் உள்ள கார்டனில் நடந்த தண்ணீர் ஷோவை அதிக நேரம் பார்க்க இயலவில்லை, மற்றும் அதிக கூட்டம் காரணமாக வெங்கிக்கே கடன் கொடுத்த வரகு சாமியை தரிசிக்க இயலவில்லை. கோவிலில் இரண்டு யாணைகள், அதில் ஒன்று இப்பவோ அப்பவோ டிக்கட் வாங்க ரெடி.. அதேசமயம், கீழ்த்திருப்பதியில் உள்ள ஆண்டாளுக்கு, 2 குட்டியானைகள் செம சூப்பர். நாங்க போனப்ப தேங்காய்க்கு பஞ்சமில்லை 40ரூபா கொடுத்தா, லக்கேஜ்களை இலவசமாக பாதுகாத்து அர்சனைக்கா 2 தேங்காய் ஒருபழம், ஊதுபத்தி, பூ கொடுக்கிறார்கள். சாதரணமாக ஒரு நாளைக்கு 1 லட்சத்திற்கு குறையாமல் பக்தர்கள் கூட்டம் அம்முகிறது.. சமாளிக்கனுமே அப்படினு தேவஸ்தானமும் சிறப்பாகத்தான் அனைத்தையும் செய்கிறார்கள். இருப்பினும் கூட்டத்தினரின் ஒத்துழைப்புகுறைவால் ஒருசில குறைகள் ஏற்படுகிறது என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் திருப்பதி டிரிப் செம பக்திரசத்துடன், நல்ல பொழுதுபோக்காகவும் மனமகிழ்ச்சி தந்தவையாகவும் அமைந்தது.
நீங்களும் போய் வாருங்களேன் ?…. கோவிந்தா.. கோவிந்தா..
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு