ஜோதிட டிப்ஸ் பாகம் .. 3

JOTHIDAM TIPS … PART 3 பரிகாரங்கள்

வடக்கு நோக்கி மண் தீபம் ஏற்றினால் கேஸ் ஜெயிக்கும்.

மாசி மாதம் 21 பாசிபருப்பு உருண்டை பண்ணி சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டு குழந்தை கையால் தானம் கொடுத்தால் பிள்ளைகள் நன்றாகப் படிப்பார்கள்.
t0
கிளிப்பச்சை பட்டுப்புடவை அம்பாளுக்கு கொடுத்தால் அலங்காரம் செய்து வழிபட்டால் கணவன்/மனைவி சண்டைகள் குறையும்.

சிவன்ராத்திரி அன்று வில்வஇலை கொண்டுபோய் சிவன் தலையில் போட வேண்டும் ( இதனால் அஷ்வமேதயாகம் செய்த புண்ணியம் கிடைக்கும் )

திருமணம் நடக்க, தாம்பாளத்தில் அரிசியை பரப்பி குத்துவிளக்கு ஏற்றி பூபோட்டு 9 முறை வணங்கினால் 48 நாட்கள் செய்ய வேண்டும்.
t1
பெண்கள் மல்லாக்கப்படுத்தால் மகாலட்சுமி போய்விடும்,

விழுந்து கும்பிடும் பொழுது மார்பு தரையில் பட்டால் பாவம் ஏற்படும்.

அடுப்பு பற்ற வைக்கும்பொழுது நல்ல நினைப்பு நிகழ வேண்டும்.

ஆண்குழந்தை பிறக்க, ஆடிப்பூரம் அன்று ( கணவன் மனைவி இருவரும்) விரதம் இருந்து 5 வகை சாதம் செய்து அம்பாளை வணங்கி நெய் விளக்கு ஏற்றி வழிபடவேண்டும்.

t2
கோவில் வழிபாடு
கும்பகோணம் நாச்சியார் கோவில் செல்லும் வழியில் 10வது கிலோமீட்டரில் திருவாஞ்சியம் என்னும் கோவில் குப்தகங்கை எனப்படுகிறது இங்கே சனி, எமதர்மன், ராகு/கேது ஒன்றாக அமைந்திருக்கிறார்கள், மேலும் யோக பைரவர், அம்பாள், மகாலஷ்மி, சரஸ்வதி என வரிசைக்கிரமமாக தரிசித்து குடும்பம் சகிதமாக ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினைகளை கும்பலாக தீர்த்துக் கொள்ளலாம்.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஜோதிட டிப்ஸ் பாகம் .. 2

ஜோதிட டிப்ஸ் பாகம் .. 2
JOTHIDAM TIPS … PART 2

• 5ல் சனி இருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை
• ராகு / புதன் சேர்ந்து இருந்தால் பணக்காராம்.
• லக்னத்தில் சூரியன் இருந்தால் முன்ஜென்ப பாவம் ஒட்டிக்கொண்டிருக்குமாம், உடனே சூரிய பரிகாரம் செய்துகொள்ளவும்.
• பைரவர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் கடன் தொல்லைகள் குறையும்.
t1

• லக்னத்தில் இருந்து 3ல் கேது இருந்தால் சகோதர ஒற்றுமை இருக்காது
• லக்னத்தில் இருந்து 5ல் ராகு அல்லது கேது இருந்தால் கடன் தொல்லை இருக்கும்
• 6ல் சனி இருந்தால் படிப்பு இல்லை
• திருமணத்தன்று குரு பலன் வேண்டும், இல்லையேல் டிஷ்யும் டிஷ்யும்தான்.
• சந்திரன் .. வியாழன் சேர்ந்து இருந்தால் கல்யாணம் சிறக்காது.
• லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் குடும்ப வாழ்க்கை இனிக்காது
• செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் கல்யாணத்தடை
• லக்னத்தில் குரு இருந்தால் கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும் இழந்து விடுவார்கள்.
• செவ்வாய் சூரியன் சேர்ந்து இருப்பவர்களுக்கு போலீஸ் தொல்லை இருக்கும்.
t2
• சந்திரனும் ராகும் சேர்ந்து இருந்தால் திருமணமான பெண் திரும்பி வந்துவிடும் அல்லது போலீஸ் கேஸ் ஆகிவிடும் ( சந்திரன் ராகு பரிகாரம் அவசியம் செய்யவேண்டும்)
• செவ்வாய் பரிகாரத்தலம் திருச்செந்தூர் (6ல் குரு இருந்தால்)
• 7ல் சனி இருந்தால் அவருக்கு 2வது தாரம் அமையும் ( தவிர்க்க திருநள்ளாரில் பரிகாரம் செய்யவும்)
• லக்னத்தில் இருந்து 5ல் ராகு இருப்பின் படிப்பில் பிரேக் ஏற்படும்
• 7ல் குரு இருந்தால் செய்யும் தொழில் நின்றுவிடும்
• 5ல் சூரியன் தொட்டதெல்லாம் நஷ்டம் ஆகும்
• 4ல் குரு இருந்தால் 30 வயதிற்குமேல் வேறு தொழில் செய்ய வேண்டிவரும், சகோதரர் தனியாக இருப்பார்.
• புதன் மற்றும் சனி சேர்ந்து இருந்தால் படிப்பு வராதுல்ல..
• சுக்கிரனுடன் சனி சேர்ந்து இருந்தால், குடும்பம் கெட்டுவிடும்.
• செவ்வாய் மற்றும் ராகு சேர்ந்து இருப்பின் உறார்ட் அட்டாக் வரும்.
t3

• 12ல் குருவுடன் சனி சேர்ந்து இருந்தால் திருமணத்திற்குபின் இடமாற்றம் பின் தொழில் மாற்றம் ஏற்படும்
• 5ல் சூரியனுடன் ராகு இருந்தால் வேறு ஊரில் தொழில் செய்யவும்.
• 11ல் குரு நன்றாகப் படித்து பெரிய தொழில் செய்வார்கள்
• 10ல் குரு இருப்பின் ஜீவனம் செய்வது கஷ்டம் (பரிகாரம் திருச்செந்தூர் )
• அஷ்டம் சனி 2 ½ வருடத்தில் திருமணம் நடைபெற்றால் தம்பதியர் பிரிந்து விடுவார்கள்.
• லக்னத்தில் இருந்து 2ல் மாந்தி அமைந்தால் குடும்பம் அமையாது.
• 2,7,8,12 ல் குரு இருந்தால் நிரந்தரமான தொழில் அமையாது
• 8ல் கேது இருந்தால் திருமணத்தடை ஏற்படும்
• 5ல் சுக்கிரன் இருந்தால் திருமணத்திற்குப் பிறகு தொழில் அமையும்.
• சந்திரனுடன் ராகு சேர்ந்து இருந்தால் திருமண வாழ்வு சிறக்காது.
• சுக்கிரன் வீட்டில் சந்திரன் இருந்தால் அவரை சுலபமாக ஏமாற்றி விடுவார்கள். ( காலசர்ப்ப தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் )
[ part 3 … continues.. ]

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

ஜோதிட டிப்ஸ்

SILA மாதங்களுக்கு முன் பொழுது போகாம ரிமோட்டை அழுத்தி சேனல்களை பாஸ் செய்யும் பொழுது ஒரு ஜோதிடர் கூறும் சிலவற்றை பார்க்க நேர்ந்தது. இதெல்லாம் உங்களுக்கும் சரிப்படுமா என டெஸ்ட் செய்து கொள்ளுங்க… பீஸ்லாம் தரவேணாம் ஏன்னா, இதுவே டிவியடிச்சான் காப்பிதான்… ஓகே…என்ஜாய்.
t1
• 16 / 25 / 7 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு தெய்வீகத்தன்மை அதிகமாக ஒளிந்திருக்குமாம், அவற்றை முறையாக வெளிக்கொணர்ந்தால் வாழ்வில் வெற்றியாம், மேலும் வைடூரிய மோதிரம் அணிந்து கொள்ளவேண்டும்.
• ஒருவர் ஜாதகத்தில் 4ல் சுக்கிரன் இருந்தால் யோகம்
• 2ல் குரு அல்லது 7ல் குரு இருப்பின் அவரால் எந்த தொழிலையும் முழுமையாக செய்ய இயலாது
• 4 கிரகங்கள் சேர்ந்து ஒரே கட்டத்தில் இருந்தால் சிக்கல்தான், ஆனால் பரிகாரம் செய்துவிட்டால் அவருக்கு விபரீத ராஜயோகம் அடிக்கும்.
t2
• 12ல் சுக்கிரன் இருந்தால் அவர்நிச்சயம் கோடீஸ்வரன்.
• 7 ½ பிடிக்கும்பொழுதும் அல்லது விடும்பொழுதும் திருநள்ளாருக்கு செல்லாம், இடையில் சென்றால் சிக்கல்தான்.
• 10ல் குரு இருந்தால் பதவித்தேடிவரும், இருப்பினும் குரு பரிகாரம் செய்யவேண்டும்.
• ஏகாதசி அன்று பட்டினி கிடக்கவும் (வெறும் தண்ணீர் மட்டும்தான் குடிக்கவும்), துவாதசி அன்று வயிறு முட்ட இயற்கை ஆகாரங்களை சாப்பிட்டுவந்தால் அனைத்து செல்வங்களுடன் புகழும் வரும்.
• ஆடி மாதம் ஒவ்வொரு (குறைந்தது 5) வெள்ளிக்கிழமையும், மாவிளக்கு சிறிய சிறிய விளக்குகளாக 9 தயார்செய்து முக்கோண வடிவில் சாமியிடம் மாலைவைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
• தீராத வியாதி உள்ளவர்கள் ஒத்தைபடை எண்ணிக்கையில் ஆல இழை எடுத்து பூஜை செய்து படுக்கையில் வைத்து அடுத்தநாள் எடுத்து ஆற்றில்விடவும்… (வியாதி போகுதே…)
• கண்ணாடி அல்லது பச்சைபட்டு வஸ்திரம் பெருமாள் பூமாதேவி, சீதாதேவி கோவிலில் அர்ச்சனை செய்து கண்ணாடி மூலம் சாமியை பார்த்து பீரோவில் வைத்தால் திருட்டுப்பயம் இருக்காது / செல்வம் பெருகும்.
• மஞ்சள் அரிசி அல்லது மல்லிகைப்பூ கொண்டு அர்ச்சனை செய்தால் வேண்டுதல் நிறைவேறும்
t3
• அடிக்கடி விபத்து ஏற்படுபவர்கள், அரிசி / கோதுமை / ராகி / கம்பு போன்ற தானியங்களை ஏழை எளியவர்களுக்கு மனம் நிறையும் வகையில் தானம் அளித்தால் விபத்தில் இருந்து தப்பிக்கலாம்.
• ஆயுள்பயம் உள்ளவர்கள் உப்பில்லாத தயிர்சாதம் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து மற்றவர்களுக்கு கொடுக்கவும்
• பிரச்சினை அதிகம் உள்ளவர்கள் கொடுமுடியில் உள்ள லஷ்மி நரசிம்மரைத் தரிசிக்கவும்.
[ part ..2 continues ]

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு