ஜோதிட டிப்ஸ் பாகம் .. 2
JOTHIDAM TIPS … PART 2
• 5ல் சனி இருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை
• ராகு / புதன் சேர்ந்து இருந்தால் பணக்காராம்.
• லக்னத்தில் சூரியன் இருந்தால் முன்ஜென்ப பாவம் ஒட்டிக்கொண்டிருக்குமாம், உடனே சூரிய பரிகாரம் செய்துகொள்ளவும்.
• பைரவர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் கடன் தொல்லைகள் குறையும்.
• லக்னத்தில் இருந்து 3ல் கேது இருந்தால் சகோதர ஒற்றுமை இருக்காது
• லக்னத்தில் இருந்து 5ல் ராகு அல்லது கேது இருந்தால் கடன் தொல்லை இருக்கும்
• 6ல் சனி இருந்தால் படிப்பு இல்லை
• திருமணத்தன்று குரு பலன் வேண்டும், இல்லையேல் டிஷ்யும் டிஷ்யும்தான்.
• சந்திரன் .. வியாழன் சேர்ந்து இருந்தால் கல்யாணம் சிறக்காது.
• லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் குடும்ப வாழ்க்கை இனிக்காது
• செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் கல்யாணத்தடை
• லக்னத்தில் குரு இருந்தால் கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும் இழந்து விடுவார்கள்.
• செவ்வாய் சூரியன் சேர்ந்து இருப்பவர்களுக்கு போலீஸ் தொல்லை இருக்கும்.
• சந்திரனும் ராகும் சேர்ந்து இருந்தால் திருமணமான பெண் திரும்பி வந்துவிடும் அல்லது போலீஸ் கேஸ் ஆகிவிடும் ( சந்திரன் ராகு பரிகாரம் அவசியம் செய்யவேண்டும்)
• செவ்வாய் பரிகாரத்தலம் திருச்செந்தூர் (6ல் குரு இருந்தால்)
• 7ல் சனி இருந்தால் அவருக்கு 2வது தாரம் அமையும் ( தவிர்க்க திருநள்ளாரில் பரிகாரம் செய்யவும்)
• லக்னத்தில் இருந்து 5ல் ராகு இருப்பின் படிப்பில் பிரேக் ஏற்படும்
• 7ல் குரு இருந்தால் செய்யும் தொழில் நின்றுவிடும்
• 5ல் சூரியன் தொட்டதெல்லாம் நஷ்டம் ஆகும்
• 4ல் குரு இருந்தால் 30 வயதிற்குமேல் வேறு தொழில் செய்ய வேண்டிவரும், சகோதரர் தனியாக இருப்பார்.
• புதன் மற்றும் சனி சேர்ந்து இருந்தால் படிப்பு வராதுல்ல..
• சுக்கிரனுடன் சனி சேர்ந்து இருந்தால், குடும்பம் கெட்டுவிடும்.
• செவ்வாய் மற்றும் ராகு சேர்ந்து இருப்பின் உறார்ட் அட்டாக் வரும்.
• 12ல் குருவுடன் சனி சேர்ந்து இருந்தால் திருமணத்திற்குபின் இடமாற்றம் பின் தொழில் மாற்றம் ஏற்படும்
• 5ல் சூரியனுடன் ராகு இருந்தால் வேறு ஊரில் தொழில் செய்யவும்.
• 11ல் குரு நன்றாகப் படித்து பெரிய தொழில் செய்வார்கள்
• 10ல் குரு இருப்பின் ஜீவனம் செய்வது கஷ்டம் (பரிகாரம் திருச்செந்தூர் )
• அஷ்டம் சனி 2 ½ வருடத்தில் திருமணம் நடைபெற்றால் தம்பதியர் பிரிந்து விடுவார்கள்.
• லக்னத்தில் இருந்து 2ல் மாந்தி அமைந்தால் குடும்பம் அமையாது.
• 2,7,8,12 ல் குரு இருந்தால் நிரந்தரமான தொழில் அமையாது
• 8ல் கேது இருந்தால் திருமணத்தடை ஏற்படும்
• 5ல் சுக்கிரன் இருந்தால் திருமணத்திற்குப் பிறகு தொழில் அமையும்.
• சந்திரனுடன் ராகு சேர்ந்து இருந்தால் திருமண வாழ்வு சிறக்காது.
• சுக்கிரன் வீட்டில் சந்திரன் இருந்தால் அவரை சுலபமாக ஏமாற்றி விடுவார்கள். ( காலசர்ப்ப தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் )
[ part 3 … continues.. ]
ELLUTHUKAL SARIYAGA PRINT AGA VILLAI
try other browser…
//5ல் சனி இருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை//
எனது சித்தப்பாவுக்கு ஐந்தில் சனி. அவருக்கு ஆண் குழந்தை இருக்கிறது. அப்படியானால்….
//பைரவர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் கடன் தொல்லைகள் குறையும்.//
உண்மை. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வழிபட வேண்டும்.
// லக்னத்தில் இருந்து 5ல் ராகு அல்லது கேது இருந்தால் கடன் தொல்லை இருக்கும்//
என் சித்தப்பாவுக்கு ஐந்தில் கேது. ஒரு காலத்தில் கஷ்டப்பட்டார். இப்போது எப்படியோ கோடீஸ்வரராக இருக்கிறாரே, அது எப்படி?
// திருமணத்தன்று குரு பலன் வேண்டும், இல்லையேல் டிஷ்யும் டிஷ்யும்தான்.//
100% உண்மை
// சந்திரன் .. வியாழன் சேர்ந்து இருந்தால் கல்யாணம் சிறக்காது.//
சித்தப்பாவின் மகன் ஜாதகத்தில் இரண்டும் இணைந்துள்ளது. காதல் மணம். செழிப்பாகவே உள்ளனர்.
//செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் கல்யாணத்தடை//
இதுல கொஞ்சம் விஷயம் இருக்குது. ஒத்துக்கறேன்.
//சுக்கிரனுடன் சனி சேர்ந்து இருந்தால், குடும்பம் கெட்டுவிடும்.//
என் ஜாதகத்தில் இப்படித் தான் உள்ளது. கூடவே செவ்வாயும். என்னத்தச் சொல்ல 😦
ஆக, இந்த டிப்ஸ்களைப் பார்க்கும் போது…..
அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை 🙂
welcome
எனக்கு சூரிய லக்னத்தில் நீசம். ஏழில் சனி. இதற்கு எப்படி சூரிய பரிகாரம் செய்வது? நான் தற்போது வெளி நாட்டில் வசிக்கிறேன்.
எனக்கு சூரியன் லக்னத்தில் நீசம். ஏழில் சனி. இதற்கு எப்படி சூரிய பரிகாரம் செய்வது? நான் தற்போது வெளி நாட்டில் வசிக்கிறேன்.
இனிய நண்பருக்கு, தங்கள் கோரிக்கையை பரிசீலித்தோம் இருப்பினும், 99435 22270 திரு. ரெங்கபிரசாத்,
அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
நன்றி
சிவபார்க்கவி
ஐயா, நான் இந்திய நேரம் புதன் கிழமை (மார்ச் 28) இரவு 8:30 மணிக்கு தொடர்பு கொண்டேன். ஆனால் தொடர்பு கொள்ள இயலவில்லை. வேறு ஏதேனும் தொலைபேசி எண்கள் இருந்தால் தரவும்.
மன்னிக்கவும் வியாழன் இரவு.
சூரியன் வணங்கி வழிபட்ட, சென்னை செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு கோயிலில் அருளும் புஷ்பபரதேவரரை தரிசித்தால் சூரியகிரக தோஷங்கள் நீங்கும்..
ராமநாதபுரம், தேவிபட்டணத்தில் ராமரால் நவபாஷாணாத்தால் செய்யப்பட்டு கடல் நடுவே அருளும் நவக்கிரகங்கள் சகல விதமான தோஷங்களையும் தொலைகின்றன
saniyum ragu sernu fifth house la iruntha eana palan lagnam virchiham pathula guru ahrula sukiran nalula chandren elula surean bhuthan eana palan theriviyungal
Please refer a good astrologist…
thanks
sivaparkavi
வணக்கம். எனது மகளின் ஐதகத்தில் லக்கனத்தில் ராகு 7 லவ் கேது இருக்கிறது அதனால் திருமண. பொருத்தம் பார்க்கும் போது அதே போல் அமைய வேண்டுமா தெளிவு படுத்தவும்
அண்ணா, நான் முழுநேர ஜோதிடர் அல்ல, தயவு செய்து சிறந்த ஜோதிடரை அனுகவும்.