தீயா வேலை செய்யனும் குமாரு …. திரை விமர்சனம்

Theeya velai seyyanum kumaru .. tamil film review
தீயா வேலை செய்யனும் குமாரு …. திரை விமர்சனம்

காதலில் சொதப்புவது எப்படி படம் வந்தபொழுது தோன்றியது இனிமேல் கொஞ்சநாளைக்கு இந்த மாதிரி பார்முலா படங்களே தமிழ் சினிமாவில் கொடிகட்ட போகிறது. அதேபோல், யோசித்து தீயா வேலை செய்யனும் ( காதலியை உஷார் (எச்சரிக்கை அல்ல) படுத்த குமார் என்பவர் முயற்சித்து வெற்றி பெறுபதே முழுப்படம்.
x1
படம் முழுக்க சித்தார்த்/சந்தானம்
கூட்டணி காமெடி கலக்கல்தான். ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் அப்பாவி சித்தார்த் (குமார்), கம்பெனியில் டீ கப் உடைத்ததற்கே எல்லாருக்கும் டீரிட் கொடுக்கும் அப்பாவி, ஆனால், அவரது குடும்பமே காதலித்து கல்யாணம் செய்யும் பரம்பரை.. இவரையும் காதலிக்க துரத்துகிறது.. ஆனால், சிறுவயதில் ஏற்பட்ட சிறிய ஊடல் (பெண்களுடன்) பெண்களையே வெறுக்கிறார்.
x2
சிறிது காலத்தில், ஐடி கம்பெனிக்கு புதிதாக வேலைக்கு வரும் உறன்சிகா வை 100க்கும் மேற்பட்டவர்கள் கவுக்க டிரை செய்ய திடீர் என சித்தார்த் நாம கவுத்தா என்ன என்று முயற்சிக்கிறார். ஆனால், உறாண்ட்செம் பெலோ ஒருத்தர் பிராக்கட் போட்டு உறன்சிகாவுடன் சுத்த ஆரம்பிக்க, நண்பர்கள் உதவியுடன் சந்தானத்தின் உதவிக்கு செல்கிறார். சந்தானமோ காதலுக்கு பில் போட்டு கார்டு தேய்த்து பணம் பெற்றுக் கொண்டு விதவிதமான ஐடியாக்களை வழங்கி, உறாண்ட்செம் பெலோவை உறன்சிகா வெறுக்குமாறு செய்து கவனம் குமார் பக்கம் திரும்ப வைக்கிறார்.
x3
காலப்போக்கில், குமார் சந்தானத்தின் தங்கையைதான் உஷார் படுத்துகிறார் என தெரியவர, சந்தானம் காதலுக்கு எதிரியாகிறார்… இருப்பினும் குமாரின் நல்ல குணத்தால், அனைவராவலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார். கடைசியில் ஆஸ்திரேலியா செல்ல போகும் உறன்சிகா, குமார் அடிக்கும் ஸ்டண்ட் மூலம் சித்தார்த் உடன் செட்டிலாகிறார். படம் முழுக்க காமெடிதான், இசையும், லொக்கேஷன்களும் அருமையாக வந்துள்ளது. பொழுதுபோக்கிற்கு உதவும் தீ.வே.செ.கு டீமுக்கு வாழ்த்துக்கள்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

கலர்புல் தில்லு முல்லு … திரைவிமர்சனம்

கலர்புல் தில்லு முல்லு … திரைவிமர்சனம்
Dillu Mullu – Tamil Film Review
1981ல் வந்த தில்லுமுல்லு ஒரு ரஜினியின் எழுச்சிக்கு வித்திட்டது, 2013ல் சிவா என்னும் அகில உலக சூப்பர் ஸ்டாராம் சிவாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பை தந்துள்ளது. சப்பை மூஞ்சியை வைத்துக்கொண்டே, திரையில் கலக்க முடியும் என மீண்டும் நிறுபித்திருக்கிறார்.
x0
படம் ஆரம்பத்தில் இருந்தே பார்க்க வேண்டும், டைட்டிலே கலக்கிவிடுகிறார்கள். யுவன் சங்கர்ராஜா, விஸ்வநாதன் ராமமூர்த்தி பேக்கிரவுண்டில் தில்லுமுல்லு பாடல் வேறே, ஒரிஜினல் கதையை வைத்து அப்படியே ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து காட்சிக்கு காட்சி வித்தியாசமாக ஆனால் அதே படத்தை உல்டா செய்து மிகத்திறமையாக வெளியிடப்பட்டிருக்கிறது. டீமுக்கு கண்டிப்பாக திருஷ்டி சுற்றி போற்றே ஆகவேண்டும்.
x1
அடிக்கடி டிவியில் தில்லுமுல்லு, ஜானி படங்கள் எப்போ வந்தாலும் அதை முழுக்க ஒருமுறை பார்த்துவிடுவது வழக்கம்,
இந்த புதியபடத்தில் குறிப்பிட்டு சொல்லாமல் கோவை சரளா, புரேட்டா சூரி, சந்தானம், மனோ, பிரகாஷ் ராஜ் (தேங்காய் சீனிவாசனின் நடிப்பை மிஞ்சவில்லை என்பது ஒரு சிறிய வருத்தம்) என ஒரு பட்டாளமே போட்டி போட்டு நன்றாக நடித்திருக்கிறார்கள்.
x2
கதாநாயகி புதிது, சிவாவுடன் துபாயில் ஒரு டூயட் மற்றபடி மாடர்ன் கேர்ள் பாத்திரத்திரத்திற்கு மிகவும் பொருந்தி வருகிறார். பேங்க் மானேஜராக வருபவர் செய்யும் சேட்டை மிகவும் ரசிக்க தகுந்தது, குறிப்பிட்டு சொல்லனும்னா, 5 கோடி மதிப்புள்ள கேஸ் ஜெயித்துவிடும் என நம்பி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கார்களையும் அணிவகுத்து கோர்ட்டுக் வரவழைத்து, பின்னர் பஸ்ஸில் வீடு திரும்புவது செம அலப்பறை.
இசை, ஒளிப்பதிவு நன்றாக வந்திருக்கிறது. பழையபடத்தில றைலைட்டான கடைசியில் நான் முருகன் இல்லை, பிள்ளையார் என போட்டோவில் உள்ள கடவுள் பேசுவது தான் மிஸ்ஸிங்… கிளைமாக்ஸ் கலாட்டா பிரமாதம். அழகாக சிரித்துவிட்டு வரலாம்.. மிஸ் பண்ணக்கூடாத படம்…
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

குட்டிப்புலி …. திரைவிமர்சனம்

குட்டிப்புலி …. திரைவிமர்சனம்
KUTTIPULI TAMIL FILM REVIEW
சசிக்குமாரின் அடுத்த லோக்கல் டச்சிங்க இந்த குட்டிப்புலி, பேருதான் புலியே தவிர இவர் எப்போதும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தெருக்களில் ஒத்த சிங்கம் போலேவே அலைந்து திரிகிறார், வம்பிழுக்கிறார், சண்டைபோடுகிறார், போட்டுத்தள்ள முயற்சிக்கப்பட்டு தப்பிக்கிறார், கடைசியில் போட்டுத்தள்ள வில்லன் முயற்சிக்கும்போது எதிர்பாராத சொந்தங்களால் போட்டுத்தள்ளப்பட்டு இதுவும் ஒரு தாய் பாசம் படம்டான்னு முத்திரை குத்தப்படுகிறது.
t1
அனாவசியமாக லட்சுமி மேனனை பயன்படுத்தி, வேஸ்ட் செய்திருக்கிறதாகவே படுகிறது. பொன்னு சும்மா தெருக்களில் வந்துபோவதும், வில்லன்போல இருப்பவரை காதலிப்பதும் ஒரே மொக்கை. அம்மான்னா சும்மாவா, அம்மா கேரக்டரை முதலில் இருந்து கடைசிவரை செமையாக கொண்டு சென்றிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். (நடிப்பதற்கு வீட்டிலும் சார் சொல்லித்தருவாரோ)
t3
சசிக்குமாரின் ஒரே மாதிரியான நடிப்பு வர வர அலுப்புதட்டுகிறது.. சார் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களனையும் முந்தைய படம்போல நகைச்சுவையும் கலந்து கொடுத்தா நல்லாருக்குமோ… படத்தில் சொற்ப அளவிலே கதாபாத்திரங்கள் வந்துபோகிறது… ஊருக்கே உரித்தான சண்டை சச்சரவினை மையப்படுத்தி படம் முழுக்க கொண்டு செல்வது பார்வையாளர்களை கொஞ்சம் ஜெர்க் ஆக்குகிறது.
t2
மற்றபடி, இளையராஜாவின் இசையில் உருவான இரண்டுபாடல்களை உருவி, சரியான சந்தர்பத்தில் பயன்படுத்தியிருக்கிறார். படத்தின் பிளஸ் எல்லாம் வசனம் தான்.. அப்பப்பா பிரமாதம்.. சிறப்பான அடுத்தபடத்தில் சசிக்குமாரை எதிர்பார்க்கும் உங்கள் அன்பான வாழ்த்துக்களையும் குட்டிப்புலி டீமுக்கு தெரிவிக்கலாம்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

பாலியல் தொந்தரவு தவிர்க்க 4 டிப்ஸ் ..

பாலியல் தொந்தரவு தவிர்க்க 4 டிப்ஸ் ..
How to protected from Rapiest / Womenisors

(1) வீட்டில் தனியாக இருக்கும் போது யாராவது உங்களை தாக்கவோ, நகையை பறிக்கவோ வந்தால்… நேராக கிச்சனுக்குள் ஓடி விடுங்கள். கிச்சனில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கத்தி எல்லாம் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத்தான் தெரியும், அதை வைத்து அவனை எச்சரிக்கலாம். அதுவும் கைகளில் அகப்படவில்லையெனில், கைகளில் கிடைக்கும் பாத்திரத்தை எல்லாம் அவன் மீது தூக்கி வீசுங்கள். சத்தம் கேட்டு உதவிக்கு யாராவது வரலாம். தூக்கி வீசிக்கொண்டே கத்துங்கள். சத்தம்தான் இதுப்போன்ற ஆட்களின் முதல் எதிரி.
t1
(2) தனியாக நடந்து செல்லும்போது யாரோ உங்களை பின் தொடர்ந்து வருவது போல் இருந்தால்… வேகமாக நடந்தோ, ஓடியோ ஏதாவது ஒரு வீடு அல்லது கடையின் உள்ளே நுழைந்து விவரத்தை கூறுங்கள், கடை, வீடு, எதுவும் திறந்து இல்லையென்றால் ஏடிஎம் சென்டரில் நுழைந்து விடுங்கள். பெரும்பாலான ஏடிஎம்களில் வாட்ச்மேன்கள் இருப்பார்கள். மேராக்கள் இருக்கும் உள்ளே நுழைந்தால் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் உங்களுக்கு தொல்லை கொடுக்க மாட்டார்கள்.

(3) இரவு நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்லும் போதோ அல்லது அலுவலக லிப்டில் தனியாக செல்லும் போதோ லிப்டில் உங்களுடன் பயணிக்கும் நபரின் நடவடிக்கை சரியாக இல்லை என நீங்கள் நினைத்தால்.. லிப்டில் நுழைந்தவுட்ன் நீங்கள் செல்ல வேண்டிய தளத்துக்கான பட்டனை மட்டும் அழுத்தாமல் எல்லா பட்டன்களையும் அழுத்துங்கள். உதாரணத்துக்கு நீங்கள் 13வது தளத்தை அடைய வேண்டுமென்றால் 13வது தளத்துக்கான பட்டனை மட்டும் அழுத்தாமல் எல்லா பட்டன்களையும் அழுத்துங்கள். இதனால், லிப்ட் ஒவ்வொரு தளத்திலும் நின்று கதவை திறந்து திறந்து செல்லும், இதனால், லிப்டினுள் உள்ள நபரால் உங்களுக்கு ஆபத்து ஏற்படாது.
t2
(4) இரவு நேரத்தில் தனியாக ஆட்டோவிலோ, டாக்சியிலோ பயணித்தால்.. ஆட்டோவிலோ, டாக்கியிலோ ஏறுவதுக்கு முன் அதன் பதிவு என்னை ஒரு பேப்பரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், ஆட்டோவில் ஏறியதும் உங்கள் வீட்டினர் யாருக்காவது போன் செய்து, நான் இந்த எண் உள்ள ஆட்டோவில், டாக்சியில் பயணிக்கிறேன். இந்த இடத்தில் இருக்கிறேன் என்று டிரைவர் காதில் விழும்படி உரக்கச் சொல்லுங்கள். யாரும் எடுக்காவட்டாலும் சொல்வது போன்று நடியுங்கள், இப்படி செய்வதால், இவர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கவில்லையென்றால் நமக்குத்தான் ஆபத்து என்று டிரைவர்களுக்கு பயம் வரும்.
நன்றியுடன்.. பெண்கள் மலர், தினமலர்
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு