ஏனுங்க இப்படி …. ஏன்….?

ஏனுங்க இப்படி …. ஏன்….?
Why the people like..this ?
ஒரு சிலரால் நாம் இந்த சமூகத்தில் படும் துன்பம் இருக்கிறதே… அப்பப்பா சொல்லி மாளாது…

அனுபவம் 1.
சமீபத்தில் பேங்க்ஆப் பரோடா, திருச்சி மெயின் கிளையில் பணம் செலுத்தும்போது அந்த கவுண்டரில் இருந்த கேஷியர், திருப்பி திருப்பி பணத்தை என்னுவதும், டெனாமினேஷன் போடலைன்னு கத்து கத்து கத்துறதும், என்ன குற்றம் கண்டுபிடித்து இவர்களை விரட்டலாம்ன்னு கண்ல விளக்கெண்ணை விட்டு பார்த்துக் கொண்டே இருக்கிறார்…
எனக்கு பின்னால் வந்த ஒருவரிடம் 100 ரூபாயெல்லாம் வாங்க முடியாது… போ என்னால், கவுண்ட் செய்ய முடியாதாம் ( 50000 மேல் பணம் செலுத்த வந்தவர் திகைத்து ஏங்க 500 ரூபாயா வாங்கி எண்ணி வைக்கீறிங்க 100 ரூபாயா வாங்க முடியாதா உங்க பெயர் என்ன? DGM வரைக்கும் புகார் சொல்வேன் என எகிற அப்புறந்தான் அவர் அடங்கினாரு. ஏங்க… இப்படி..
t1
அனுபவம் 2.
வழக்கமாக செயின் அணிந்து கொள்ளும் பழக்கமுண்டு.. பல தடவைகள் பேருந்தில் செல்லும்போது தூங்கிவிடுவேன், ஒரு சில நேரங்களில் கழுத்தில் ஏதோ ஊருகிறது போன்று தோன்றி முழித்து பார்த்தால், நம்ம மாட்டீர்கள்… சில நேரங்களில் கல்லூரி மாணவர்கள் செயின் அறுக்க முயற்சிப்பதும், சில நேரங்களில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களில் ஒரு சிலர் முயற்சிப்பதும் என இதுவரை 5 முறை முயற்சி நடந்திருக்கிறது.. நீங்க ஜாக்கிரதையா…
t2
அனுபவம் 3
திருச்சியில் மாவடிக்குளம்ன்னு ஒன்னு இருக்கு அதை தூர்
வார்கிறோம் வாங்கன்னு பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்தார்கள்… ஒரு சிலர் அதற்காக ஞாயிறு காலை 7 மணிக்கு சென்று (சுமார் 30/40 பேர்) செடி கொடிகளை அறுத்து ஆரம்பித்து வைத்தார்கள்… இடையே விஷயம் கசிந்து புதிய தலைமுறை போன்ற டிவிக்கள் இதை ஊதிவிட மீடியா வெளிச்சத்தை விரும்பும் பலரும் படையெடுக்க, கடைசியில் மாவட்ட நிர்வாகமே முன்வந்து இந்த பணியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. பார்ப்போம்.. பணிகள் எவ்வளவு முடிவடைகிறதுன்னு…
faccebook / I Love Trichy

அனுபவம் 4
முன்னெல்லாம் ஆடி வந்தால், காசே யாருகிட்டேயும் இருக்காது, ஆனா இப்போ ஆடி எப்போ வரும், தள்ளுபடி எப்போ வரும்ன்னு ஒரே கூட்டம் தான், சொன்னமாதிரி துணிக்கடையிலேயும், நகைக்கடையிலேயும் கூட்டம் அம்முகிறது. பார்க்கிங் செய்ய கொஞ்சம் இடம் கிடைக்கவே 1 மணிநேரத்திற்கு மேல் செலவிட வேண்டியது இருக்கிறது. ரோடெல்லாம் ஒரே டிராபிக் தான்…
t3
அனுபவம் 5
வீடு இருக்கும் தெருவில், ஒரு முன்னால் ஆட்சியிலிருந்த கட்சியை சேர்ந்தவர் கார்ப்பரேஷனை மிரட்டி, ஈபியை மிரட்டி காலியாக இருந்த மலைக்கோட்டைக்கு சொந்தமான பல கோடிமதிப்பிலான இடத்தை வேலிபோட்டு பிடித்து வைத்துகொள்வதுடன் டஜன் கணக்கில் மாடுகளை வளர்த்து தெருவில் மேய விட்டும், 2 வீலர் 4 வீலர்களை தெருவை அடைத்து நிறுத்திக்கொண்டும் அடாவடி செய்து வருகிறார். அரசுதுறை அலுவலர்களும் அராஜகத்தை கண்டுகொள்வதாகத் தெரியவில்லை…

அனுபவம் 6
இப்பொழுதெல்லாம், 4 வீலர்களை சாதரணமாக வாங்கி கொள்ளும் மக்கள் அதை நிறுத்த இடம் இல்லாமல் வீட்டு வாசல் அல்லது தெருவில் நிறுத்திவிட்டு போய்விடுகிறார்கள்… அதனால் முன்னமாதிரி பீரியாக டூவீலரில் கூட போக முடியலடா சாமி….

அனுபவம் 7
தெருவில் 2 வருடம் முன்னால் ஒரு பெரியமனிதர் வீடு கட்டினார், அவருக்காக பைப்லைன் கொடுக்க வேண்டி தெருவை வெட்டி ஒரே கல்லுமண்ணாக ஆக்கிவிட்டனர்.. இன்று வரை அதனை சரிபண்ணவில்லை.. பலமுறை புகார் அளித்தும், தெருவிளக்கு எரியாதது போலவே தெருவும் குண்டும் குழியுமாக இருக்கிறது… என்ன செய்ய நாம இருப்பது இந்தியாவில்…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

பனிமலருக்காக மரியாண்.. திரை விமர்சனம்.

பனிமலருக்காக மரியாண்.. திரை விமர்சனம்.
mariyaan .. Tamil Film Review
தமிழ் திரையுலகில் பலமுறை கடல், படகு, கடற்கரை, குப்பம் மற்றும் அங்கே வசிக்கும் மீனவர்கள் என பதிவுகள் செய்யப்பட்டிருந்தாலும், இந்த படத்தில் ஒரு வித்தியாசமாக அதாவது எளிமையான வாழ்க்கை வாழும் மீனவர்கள், அவர்களின் பணப்பிரச்சினை அதனால் ஏற்படும் வாழ்வை சிதைக்கும் பிரச்சினைகள் என (ஏற்கனவே வந்த கடலோரக்கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, ரோஜா, கடல் போன்றவைகளின் பாதிப்பு இருந்தாலும்), அதனிடைய காதலில் சிக்கித்தவிக்கும் இரண்டு உள்ளங்களின் பிரதிபலிப்பு என நன்றாகவே வந்திருக்கிறது.
t0
தனுஷ் .. ரியலி கிரேட் பாடி லாங்வேஜ், நட்பை வெளிப்படுத்துதல், உழைப்பை காட்டுதல், திறமையை வெளிப்படுத்தல், வெறுப்பை அளவோடு கையாளுதல், சூழ்நிலையை ஏற்று அதிலிருந்து விடுபடுதல் என நடிப்பை அளவோடு இயல்பாக வெளிப்படுத்தி செவாலியே சிவாஜி போன்று மற்றுமொறு நடிகர் நமக்கு கிடைத்துவிட்டார் எனத் தோன்றுகிறது. ஜோடியாக நடிக்கும் புதுமுகம் பார்வதி ( பனிமலர் ) நல்லத் தேர்வு, கேரளா பாணியில் உடையணிந்திருந்தாலும், கேமரா மாமா வேற அடிக்கடி டாப் ஆங்கிளில் கோணம் வைத்து படம் எடுத்திருப்பதால் முக பாவணையை பார்க்கவிடாமல் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை. காதல் வருவதும் அதனை வளர்த்தெடுப்பதும், தொடர்ந்து பிரிவு ஏற்படும் போது ஏங்குவதும், டெலிபதி மூலம் பேசுவதாக, முடிவில் எதிர்பாராத சந்திப்பும், அவசியமான உதட்டோடு ஒட்டும் முத்தம் என சிறப்பாக செய்திருக்கிறார்.
t1
கதை என்ன, கடல் ராசாவாக வலம் வரும் மரியானுக்கு அதே குப்பத்தில் சிறுவயதில் இருந்தே ஈர்ப்புடன் இருக்கும் பனிமலர் மீது ஆரம்பத்தில் காதல் எதுவும் இல்லை காலப்போக்கில் ஈர்ப்பு வருகிறது, எப்பொழுதோ பண உதவி செய்த காரணத்தால் வில்லன் பனிமலரை பொன்னு கேட்டுவர, நடுவில் புகுந்த தனுஷ் பணத்தை செட்டில் செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி 2 வருட ஒப்பந்தத்தில் சூடானுக்கு கிளம்புகிறார். அங்கே, பல கஷ்டத்திற்கிடையே காதலுடன் வாழ்ந்து, வீடு திரும்பும் சூழ்நிலையில் கொடூர தீவிரவாதிகளால் கடத்தப்பெற்று அலைகழிக்கப்பட்டு உயிரை கையில்பிடித்துக்கொண்டு அங்கிருந்து திரும்பி காதலியுடன் சேர்ந்தாரா என்பதே கதை.
t2
பாலைவனத்தில் அலைக்கழிக்கப்படும் தனுஷ், அவர் நண்பர், சிறிய வயது கொடூர தீவிரவாதிகள் என சித்தரிக்கப்படுவதும், உணவே இல்லாமல் 9 நாட்கள் தவிப்பதும், விருந்து வைப்பது போலவும் அதை உண்பது போலவும் உருவகமாக நடிப்பது நல்ல காட்சிகள். காதலில் உருகி, மனதாலேயே (டெலிபதி) பேசி தொடர்ந்து தனுஷ்யை உற்சாகப்படுத்துவதும், சூடானுக்கு கிளம்பி செல்லும்வரை படம் கொஞ்சம் இழுவையாகத் தெரிந்தாலும் இரண்டாம் பகுதி விறுவிறுப்பாக செல்கிறது. இசை ஏஆர்.ரகுமான், ஒரு சில பாடல்கள் மட்டுமே நன்று, பேக்கிரவுண்ட் இசை கூட பழைய தபேலே சத்தமே அதிகம் கேட்கிறது.
நல்லவொரு திரைப்படம்தான்…
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

சிங்கம்..2 (சீறிக்கிட்டே இருக்கும்) .. திரை விமர்சனம்

சிங்கம் ஒன்னு முடியும்போது வரும் காட்சிகளை மீண்டும் ஓடவிட்டு தொடங்குகிறது படம். இதில் புதிதாக 3 வில்லன்கள், சகாயம் (லோக்கல் ), பாய் ( லோக்கல் ), டேனி ( தென் ஆப்பிரிக்கா ). ஆயுதக்கடத்தலை கண்டுபிடிக்க அரசால் ரகசியமாக தூத்துக்குடிக்குவரும் சூர்யா (மேக்கப் கொஞ்சம் டிப்பர் சி1 க்கும் சி2க்கும் ) ஸ்மார்ட்டான என்சிசி மாஸ்டராக பள்ளியில் பணிபுரிந்து கொண்டே உளவு பார்த்து வருகிறார். பள்ளி மாணவியாக வரும் உறன்சிகாவின் பருவக்கோளாறால் வரும் காதலில் சிக்கி விடாமல் தனது பணிக்களுக்கும் அவரை பயன்படுத்திக்கொண்டு அதன் விளைவால் கடைசியில் கொல்லப்படுகிறார். இருப்பினும் படத்தில் அனுஷ்காவைவிட தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் உறன்சிகா…
t1
முன்னால் காதலி காவ்யா (அனுஷ்கா) பம்மி பம்மி நூல் விட்டாலும், பட்டம் கடைசியில் நிச்சயத்தார்த்தம் முடிந்து கல்யாணம் வரைக்கும் போய் கிளைமாக்ஸ்ஸில் அம்போ.
வில்லன்கள் மூவரில் சகாயம், ஒரே மாதிரி வசனம் பேசுவதும், பாய் எதற்கெடுத்தாலும் சீறுவதும், ரகுமான் அமைதியாக கார்ப்பரேட் ஆசாமியாக இருந்து டிரக்ஸ் கடத்துவதும் இவர்கள் அனைவரும் ஒரே நெட்வொர்க்காக பணிபுரிவதும், இடையே ஒரு ஜாதிக்கலவரம் ( பெண்ணை இவர்களே கடத்திக்கொண்டுபோய் வைத்துவிட்டு ) தூண்டிவிடுவதும், மொத்த போலிஸ் வில்லன்களுக்கு உதவி செய்வதைக் கண்டு மனம் வெம்பிய சூர்யா, உள்துறை அமைச்சர் விஜயகுமார் மூலமாக ஆப்பரேஷன் டி ( டேனியை கைதுசெய்தல் ) ஆரம்பிக்க ரணகளம் ஆரம்பிக்கிறது நமக்குத்தான். கேமரா சடார் சடார்ன்னு அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பி தூத்துக்குடி, சென்னை, கடல், கப்பல், படகு, கேரளா, டர்பன் ( தென்னாப்பிரிக்கா)ன்னு மின்னல் வேகத்தில் பறந்து பறந்து நம்மை கதிகலங்கவைத்து கப்பலில் செல்லும் டேனியை வானத்தில் பறந்து போய் ( ஆப்பரேஷன் டி கைவிடப்படுவதாகத் தெரிவித்தும்) கைது செய்தவுடன் தான் நமக்கு மூச்சே வருகிறது. ஆனாலும், ரொம்ப ரொம்ப ஸ்பீடாக பூக்களை காதில் வைத்து சுத்தோ சுத்தோன்னு சுத்தினா நாம என்னாதான் செய்கிறது. கொஞ்சமாக பூவில் இருந்து வாசனை வருவதால் நாம் தப்பித்தோம்.
t2
டெக்னிக்கலாக செல்போன், சிம், ஐஎம்ஆர்ஐ, டேப்லெட், ஜிபிஆர்எஸ்ன்னு நிறைய பயன்படுத்தியிருக்கிறார்கள். சிங்கம் 3 வேற வருவதற்கான முன்னேற்பாடுகளுடன் படம் முடிகிறது. மசாலா கொஞ்சமாகத் தடவி, காரம் ( வன்முறை ) அதிகமாக தெரிந்தாலும், நம்ம போலீஸ்காரங்கள்ல இன்னமும் இதுபோல ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறாங்கன்னு நம்ம வைக்குது படம். நன்றி, (இன்றைய பேப்பரில் ஊழலலில் முதல் இடம் காவல்துறைன்னு போட்டு செய்தி வந்திருக்கு) இந்நிலை மாறும்ன்னு அனைவரும் நினைப்போம்…
t3

—————————————————————————————————————————————-
You Can Try : Net Coins…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator

ஓடுங்க … ஓடுங்க இலவசமா காசு தராங்கலாம்…!

ஓடுங்க … ஓடுங்க இலவசமா காசு தராங்கலாம்…!
free coin rush..rush.. immediately

50000 பார்வையாளர்களுக்கு மேல்,
103 நாட்டில் இருந்து பார்வையிடல்
100 மேல் பதிவுகள்

இதெல்லாம் இந்தப்பதிவுக்குத்தான்…
நன்றி மக்கா….

t1

அண்டன் பாலசிங்கம் தெரியும், சமீப காலத்தில் அண்டன் பிரகாஷ் ஆனந்த விகடனில் தொடராய் ஐடி பற்றி 2 பக்கத்துக்கு வாரம் தவறாமல் ஜல்லியடிப்பவர் ( சுஜாதா மாதிரி எழுதிப் பார்த்தோம்லோ ) அவரது முக பக்கத்தில் ஒரு லிங்க் கொடுத்து அங்க வந்தீங்கண்ணா அவ்வளவுதான் அப்படின்னு சொல்லாமா நீங்க வாங்க, நாங்க தரோம்ன்னு இலவசமா காசு தரதைப் பத்தி சொல்லியிருக்காரு.. இதுக்கு முன்னாலேயே நெட் காயின் பற்றி கொஞ்சம் அவரே சொல்லிட்டதாலே இதுவும் நெட்காயின் தரதது பற்றிதான்னு புரிஞ்சது.
netcoin
சரி போய்த்தான் பார்ப்போம்ன்னு போனாக்கா… அங்க உன்னுடைய டிவிட்டர் அக்கவுண்டக் கொடு, பேஸ்புக் அக்கவுண்ட சொல்லு, அப்புறம் பிளாக் ஏதும் இருந்தா மரியாதையா சொல்லிடு அப்பாலே மூன்று நாளைக்கு ஒருதடவையாவது தவறாம வந்து என்னைப்பாரு அப்பத்தான் உனக்கு காயின் தருவேன்.. சொல்லாறங்க… அதுமட்டுமல்லாமல், பிளாக்லே என்னை பற்றி கண்டிப்பா எழுதனும் இல்லைனா…
அவ்ளோதான்னு சொல்றதாலே… இந்த பிளாக்… மேலும் விபரங்களுக்கு http://www.socialnetgateapp.com/ உங்க நேரத்தை ஒதுக்கி இந்தப்பக்கம் வந்ததற்கு வந்தனம் மக்களே…
t2
அடுத்தவாரம், சிங்கம் 2 பற்றியும் ரொம்ப நாளா இந்த நாட்டைப்பற்றியும் , கொஞ்சம் சொந்த அனுபவம் பற்றியும் எடுத்து விடலாம்ன்னு இருக்கேன்… தொடர்ந்து ஆதரவு தாங்க சரிதானே… சிவபார்க்கவி.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu