தலைவா .. திரை விமர்சனம்

தலைவா .. திரை விமர்சனம்
Thailava .. Tamil Film Review.

விஜயனின் கால்சீட்டை 4 வருடங்களுக்கு முன்னரே வாங்கி வைத்திருந்தாராம் தயாரிப்பாளர். அதனால் தான், அப்போதைய டிரண்ட் சுறா, வேலாயுதம் போன்று இந்த தலைவா அமைந்துவிடுகிறது. பட ஆர்ம்பக் காட்கிகளிலேயே தெரிந்து விடுகிறது இந்தப் படம் ஏற்கனவே நாம் பார்த்து முடித்த பல படங்களில் இருந்து பிய்த்து போட்ட பரோட்டா…
t1
ஆஸ்திரேலியாவில் விஜயும், சந்தானமும் கூட சுரேஷ்/அமலாபால் என லூட்டி அடிப்பது மட்டுமே கொஞ்சம் சுவாரசியமாகவும், பிறகு அதுவும் சுரேஷ் மற்றும் அமலாபால் இருவரும் இண்டலிஜென்ஸ் ஆப் போலீஸ் என தெரிய வர… நமது ஆர்வம் புஸ்வானமிவிடுகிறது. தாதா கதைகளைப் போலவே கையில் எந்த ஆயுதம் இல்லாமலும், தனது காரில் ஒரு சிறிய சிராய்ப்பு கூட இல்லாமலும் கிட்டத்தட்ட பாதிப்படங்களுக்கு தலைவா, தலைவான்னு பில்டப் செய்தே கொண்டு செல்கிறார்கள். இக்கட்டனா நிலைமையில் உயிரைக் காப்பாற்றும் ஒரு இரண்டாம் கட்ட கதாநாயகி…இதிலேயும் உண்டு. மற்றபடி, தலைவா என பெயர் வைத்திருந்ததை விட தலைவின்னு பெயர் வைத்து இருந்தால் எந்த தடையும் எழுந்திருக்காதோ… கண்டிப்பா இந்தப் படத்தைப் பார்த்து யாரும், விஜயை தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். (எம்.ஜி.ஆர் போலேவே பில்டப் கொடுத்து ஈசியா தலைவராயிடலாம், தமிழ்நாட்டை ஆட்டையை போடலாலும் நிறையே பேர் கிளம்பிட்டாங்கப்பா…)
t2
எல்லா ரகளை படங்களையும் போல, இந்தப்படத்திலும் பெரிசின் இரண்டாவது கையே எல்லாரையும் போட்டுத்தள்ள, கடைசியில் விஜய் மட்டும் தப்பி, கண்டுபிடிச்சு இரண்டாவது கையைப் போட்டுத்தள்ள அப்புறம் எல்லாரும் ஒடுங்க வெளியேன்னு படம் முடியுது. ஓரிஜினல் நாயகன் படம் ஏற்படுத்திய தாக்கம் இதில் மிஸ்ஸிங்… இருப்பினும் விஜயின் இளந்தாரி விசிலடிச்சான் குஞ்சுகள் விட்டுக்கொடுக்கமால் பால் ஊற்றி அபிசேகம் செய்யவும், புதுக்கோட்டையில் விஜயின் கட்அவுட்க்கு கீழே கிடா வெட்டி சூடம் காண்பிக்கிறதும். 2013ல் தமிழகம் இன்னமும் பின்னோக்கித்தான் போய்ட்டிருக்கோன்னு கொஞ்சம் டவுட் சாமி…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

நிலம், வீடு கட்டும் யோகம் தரும் வழிபாடு….

நிலம், வீடு கட்டும் யோகம் தரும் வழிபாடு….
House build is a constraint ?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை அதில் தவிர்க்க முடியாதது குறைந்தபட்சம் ஒரு வீடு/பிளாட், ஆனால் நடைமுறையில் அதுவும் இன்னாளில் பலருக்கு தனிபிளாட் வீடு வாங்கும் யோகம் அமைவதில்லை. அதற்காக சோர்ந்து விடாமல் சேலத்தை சேர்ந்த திரு. மகாஸ்ரீராஜன், கூறுவதைக் கேட்போம்.
X2
அனைவரும் வீடுகட்ட ஆசைப்படுவார்கள், இவர்களில் ஒருசிலர் வீடு கட்டி குடிபுகுவார்கள், சிலர் நேலான் கிடைக்காமல் அவதிப்படுவார்கள், சிலர் வீடு கட்ட முடியாமல் ஊதாரித்தனமாக இருப்பார்கள். இதனால், கணவன், மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் குடும்பமே இரண்டாகும் சூழ்நிலைகூட உருவாகி இருக்கிறது. இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஒரு சிலகோவில்களுக்கு சென்று வந்தால் இந்த பிரச்சினை தீரும் என்பது ஐதீகம். எனவே, இதுபோல் வீட்டுமனை வாங்க முடியாமல், வீடு கட்ட முடியாமல்சிக்கி தவிக்கும் பொதுமக்கள் லட்சுமி சமேத பூவராகவர் சுவாமியை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும். கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம்,மைசூர் நஞ்சண்கோடு பகுதியில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலும், அங்குள்ள லட்சுமி சமேத பூவ ராகவா சாமியையும், வழிபட்டால் 6 மாதத்தில் வீட்டுமனை இல்லாதவர்கள், வீட்டு மனை வாங்குவார்கள், வீடு கட்ட முடியாதவர்கள், வீடுகட்டுவார்கள். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு சென்றால் நல்லது.
X1
அந்த கோவிலில் நம்மிடம் 2 செங்கல் கொடுப்பார்கள், ஒரு செங்கல்லை அங்கேயே வைத்துவிட வேண்டும், மற்றொரு செங்கல்லை நாம் வீட்டிற்கு கொண்டு வந்து தினமும் ஓம் ஆலங்கே அங்குசிவாயா என்ற சுலோகத்தை 108 முறை சொல்ல வேண்டும். மேலும், வீட்டில் முருகன் ராஜதர்பாரில் கையில் தண்டாயுதத்துடன் உள்ள போட்டோவை வைத்தால் நிச்சயம நாம் வீடு கட்டுவோம். பின்னர் அந்த செங்கலை மீண்டும் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலேயே கொண்டு போய் வைத்துவிடவேண்டும். அப்பாடா… இவ்வளவுதான், கிளம்புங்க செங்கல் வாங்க.. வீடு கட்ட (கட்ட முடியாத துன்பப்படுபவர்கள் மட்டும்)
(Thanks … Malaimalar 23/7/2013)

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

மழைன்னா சும்மாவா….

மழைன்னா சும்மாவா….
Rain Rain come again…
அப்பாடா, தலைவா வரவில்லையானும், தமிழ்நாட்டுக்கு சென்றவாரம் வந்துட்டார் மிஸ்டர் மழை அண் கோ, வான்மேகம் கருத்து, வான்மழை ஒருவழியாக தமிழ்நாட்டையும் எட்டிப்பார்த்து விட்டது, திடுதிப்புன்னு காய்ந்து கிடந்த மேட்டூர் டேம் 121 அடிக்கு உயர்ந்து உபரி நீர்களை வெளியேற்றும் வகையில் அமைந்தது. சில மாதங்களுக்கு முன்னால் பலரும், பல இடங்களிலும், நந்தி சிலைகளை தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதில் மூழ்கடித்தும், பெரிய பெரிய அண்டாக்களில் நீர் நிரப்பி மந்திரம் ஓதுவோர் அதில் உட்கார்ந்து கொண்டும் மழை வேண்டி பிராத்தனையில் ஈடுபட்டு வந்தனர், அதைப் பார்க்கும் பொழுதெல்லாம், இதுவெல்லாம் எங்கே பலிக்க போகிறது என்றே தோன்றியது. ஆனால், அதையெல்லாம் தோற்கடிக்கும் விதமாக மழை இப்பொழுது பெய்து தண்ணீர் பிரச்சினையை தற்காலிகமாக நிறுத்திவிட்டது. மழையைப் பார்த்தவுடன் அனைத்து மக்களும் மகிழ்ச்சியடைந்ததும், காவேரி கரையில் ஈரோடு, திருச்சி, தஞ்சாவுர் வரையிலும் லக்கி பிரைஸ் அடித்தது போல் ஆடி 18 விழாவை சிறப்பாக கொண்டாடியதும், ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் குளிக்க போய் தண்ணீரில் மூழ்கி பரலோகம் போனதும் உண்டு.
x3
( அங்கே ஒரே கூட்டம், யாரோ இருவர் தண்ணீரில் மூழ்கிஇறந்துவிட்டனராம் என மக்கள் பதறிஅடித்து ஓடிக்கொண்டிருந்தனர். அம்மாமண்டபம், புதிதாக திருமணம் முடித்த தம்பதியர் தங்கள் எதிர்கால கனவுகளை பற்றி சந்தோஷமாகவும், விரிவாகவும் காவேரி கரையில் அமர்ந்து மாலைநேரத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அரைமணி கழித்து அந்த ஆண் குளிக்க ஆசை என தண்ணீரில் இறங்குகிறார், தசைப்பிடிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்குவதைக்கண்ட பெண் காப்பாற்ற தானும் இறங்குகிறார்.) (நன்றி சுஜாதா எழுதிய ஒரு கதை, சுருக்கமாக )
x2
எதிர்காலத்தில் மீண்டும் இதுபோல் பிரச்சினைகள் எழாமல் இருக்க மழைபெய்யும் பொழுது அந்த நீரை நாம்வீணாக்கமால் சேமிக்க மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை கட்டாயம் அனைத்து வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்கள் என கூறைகள் தோறும் அமைத்தோமானால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. அதேபோல, நீர்நிலைகள், ஏரிகள், குட்டைகள் போன்றவைற்றை சுத்தப்டுத்தி, பெரும்பாலும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்துள்ளது வைத்தால் ஒரளவு நீர்ப்பிடிப்பு ஏற்படுத்தி நிலத்தை தண்ணீர் பிடிப்பு பகுதிகளாக வைத்திருக்கலாம்.
x1
இதனை அனைத்தையும் அரசாங்கமும், அதன் இயந்திரங்களுமே செய்ய வேண்டும் என எதிர்பார்க்காமல் ஆங்காங்க ஒரு சிறு குழுக்கள் நாமாகவே முன்வந்து ஏற்படுத்தி செயலில் இறங்கலாம். அண்மையில், திருச்சியில் உள்ள மாவடிக்குளம் என்னும் குளத்தை 145 ஏக்கர் நிலத்தை தனியார் அமைப்புகள் கூட்டாக தூய்மைப்படுத்த கிளம்ப வேறுவழியில்லாமல் அரசும் விழித்துக்கொண்டு அதனை முழுமையாக முடித்துவைக்க 45 ஏக்கர் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றியும், பலதுறைகளால் முடிக்கப்பட வேண்டிய வேலைகளை செய்தும் அப்பணியை சிறப்பாக செய்துமுடிக்கப்பட உள்ளது.
இதேபோல, பல திட்டங்களும் மக்களின் பங்களிப்பு இருந்தால், நிச்சயம் வெற்றிபெரும். அரசும் தன்பங்குக்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலும், விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.
அதே போல், மழை நீர் வரவழைக்க, அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் ஆர்வம் காண்பிக்கப்பட வேண்டும்.

இப்படிக்கு,
மக்கள் நலனை விரும்பும்
பொழுது போகாத பொம்மு
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

பெண்களுக்கா…இவ்வளவு கேள்வி?

பெண்களுக்கா…இவ்வளவு கேள்வி?
Girls are worst in habits..

இணையத்தை மேயும் பொழுது http://www.ampalam.com/2013/08 கீழ்க்கண்ட பிளாக்கில் பல கேள்விகளைக் கேட்டு பெண்களே இதற்கு பொறுப்பு என்ற ரீதியில் எழுதப்பட்ட கட்டுரைக்கான பதில்கள் கீழ்க்கண்டவாறு… அங்கே கேட்கப்பட்டுள்ள கேள்விகளையும் கீழே உள்ளது. நன்றி. அம்பலம் .. ( ஒரு பதிவு எழுத வாய்ப்பளித்தற்காக )
t0
அறைக்கு கும்பலாக செல்வது
பெண்கள் அறைக்கு, பெண்கள் கும்பலாக சென்று அப்படி என்ன தான் செய்கிறார்கள்? இந்த கேள்வி பல ஆண்களின் மனதில் ஓடுவதோடு மட்டுமல்லாமல், திடீரென்று இப்படி எழுந்து போய் பெண்கள் அறைக்குள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கும் அளவிற்கு செல்வோம். நம்மை போல் பலபேர், பெண்களின் இந்த ரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்தாலும், இன்று வரை அந்த மர்ம முடிச்சு கழற்றப்படாமலே இருக்கின்றன.
பதில். 1) கும்பலாக ரெஸ்ட் ரூம் செல்வது ஒரு பாதுகாப்புக்காக, இயற்கையில் பெண்கள் எங்கு சென்றாலும் பயம்.. இருக்கிறது.. குறிப்பாக ரெஸ்ட் ரூம் போன்ற தனியான இடங்களில்… மேலும் ரகசியமாக பேசுவதற்காகவும்
இங்கே கொஞ்சம் பவுடர்; அங்கே கொஞ்சம் லிப்ஸ்டிக்
பல பெண்கள் ஒரு சின்ன அழகு சாதன கடையையே தங்கள் பைகளில் வைத்திருப்பார்கள். ஒரு பார்டிக்கு செல்லும் போது, வீட்டிலேயே நல்ல மேக்-கப் போட்டு விட்டு தான் பெண்கள் கிளம்புவார்கள். ஒரு 15 நிமிடம் காரில் பயணம் மேற்கொண்ட பிறகு, பார்ட்டி நடக்கும் வளாகத்திற்குள் நுழையும் முன் அங்கே இங்கே என்று மறுபடியும் தங்கள் முகத்தினை சரிசெய்து கொள்வார்கள். இந்த தருணம் தான் ஆண்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். வீட்டில் தான் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மேக்-கப் போட்டு கொண்டார்களே, பின் ஏன் மறுபடியும் இதை செய்கிறார்கள் என்ற விடை தெரியாத கேள்வியை எழுப்பும்.
பதில். 2) மேக்கப் கலைந்து விட்டதாகவே மனதில் நினைத்துக் கொண்டே இருப்பதால்
சிரிப்பது
எல்லா பெண்களும் கெக்கபுக்கவென சிரிப்பது வழக்கமே. சொல்லப்போனால் அதை அவர்கள் விரும்பவே செய்வார்கள். படபடப்பு, அதீத மகிழ்ச்சி, ரகசியத்தை மறைக்கும் தோரணை இப்படி பல வகையான நேரத்தில், அதற்கேற்ப சிரிப்பார்கள். இதை ஒரு பழக்கமாக்கியதால் அவர்கள் சிரிப்பது வழக்கமாகி இருக்கலாம். ஆனால் காரணம் இல்லாமல் சிரிக்க மாட்டார்கள். இருப்பினும், அந்த காரணம் தான் என்றுமே ஒரு ஆணுக்கு புரிவதில்லை.
பதில். 3) சிரிப்பு, உங்களுக்கே தெரியும் சரியான இடத்தில் சரியான ஆள்களுக்கு முன்னால் தவறாகத் சிரித்துவிட்டால்அவ்வளவுதான் அதுக்காகத்தான் இப்படி
t1
நான் குண்டாக இருக்கிறேனா?
உண்மையை சொன்னால், இப்படி கேட்பதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கின்றனர் பெண்கள். தங்கள் உடல் எடை மீதும், அழகின் மீதும், அதிக கவனம் இருப்பது வாஸ்தவம் தான். ஆனால் தங்களின் ஆழ் மனது கூறிக் கொண்டே இருப்பதால், இக்கேள்வியை ஒரு ஆணிடம் பல முறை கேட்க முற்படுவர். ஆகவே அடுத்த முறை உங்களிடம் இந்த கேள்வியை கேட்கும் போது, அது அவர்களிடம் நன்கு பதியும் படியான பதிலை கூறுங்கள்.
பதில். 4) உண்மையில் குண்டாக ஆகிவிடுவதால், சும்மா மனதளவில் கொஞ்சம் தேற்றிக்கொள்ளவே அடிக்கடி இந்தக்கேள்வி

பேஸ் பேக்
முகத்திற்கு பொலிவு மற்றும் மினுமினுப்பை அதிகரித்து, ஈரப்பசையுள்ள சருமத்தை பெற பெண்கள் பேஸ் பேக் பயன்படுத்துவது ஆண்களுக்கு தெரியும். ஆனால் உண்மையிலேயே தங்கள் மனைவி இதனை பயன்படுத்துவதால் பெறப் போகும் மாற்றத்தை ஒரு ஆண் கூட உணர்வதில்லை. சொல்லப்போனால், தங்கள் சருமத்தை பேஸ் பேக் தான் முழுமையாக மேம்படுத்தியது என்று 100% நம்பும் எந்த ஒரு பெண்ணும் கிடையாது.
பதில். 5) இதுவும் மனம் சம்மந்தமானதே

5 ஆடைகளை அணிந்து பார்த்து விட்டு, புதுசு வாங்க முடிவு செய்வது
அனைத்து பெண்களும் இதனை கண்டிப்பாக செய்வார்கள். ஒரு பார்ட்டிக்கு செல்லும் முன்பு, தங்கள் அலமாரியில் இருந்து அனைத்து ஆடைகளையும் போட்டு பார்த்து விட்டு, எதுவும் சரியில்லை என்று கூறி விட்டு, உடனடியாக புதிய ஆடை வாங்க முடிவு செய்வார்கள். இரண்டு செட் ஆடைகளை வைத்து, வாரம் முழுவதும் சமாளிக்கும் ஆண்களுக்கு, இந்த விஷயம் ஆச்சரியமாக தான் இருக்கும்.
பதில் 6) திருப்தி இல்லாத குணம்

பர்ஸ்
பொதுவாக பெண்களின் பர்சில் ஒரு சாவி கொத்து மற்றும் ஒரு லிப்ஸ்டிக் வைக்கும் அளவிற்கு தான் இடம் இருக்கும். இதர பொருட்களான சீப்பு, மொபைல் போன், டிஷ்யூ பேப்பர்கள், பவுடர் போன்றவைகள் எல்லாம் அவர்களின் கார் டேஷ்போர்டு அல்லது தங்கள் கணவனின் பேண்ட் பையில் தான் வைப்பார்கள். இப்படி ஒரு சிறிய கைப்பை எந்த வகையிலும் பயன் அளிக்காத போது, அதனை ஏன் சுமக்க வேண்டும்?
பதில். 7) பர்ஸ் .. பழக்கம்

பெரிய ஹேன்ட் பேக்
கண்டிப்பாக வெளியில் செல்லும் போது, பெண்கள் ஹேன்ட் பேக் வைத்திருக்க வேண்டும். ஆனால் தாஜ் மகாலையே வைக்கும் அளவிற்கு அவ்வளவு பெரிய பையை எதற்காக எடுத்துச் செல்ல எண்டும்?
பதில். 8) பெரிய உறாண்ட்பேக் .. அதிக பொருள்களை உள்ளடக்க ஆனால், எதையும் உள்ளே வைக்காமல் காலியாகவே பெரும்பாலும் இருக்கும்
பாதம்/நகங்களுக்கு லோஷன்
முகம், தலைமுடி, உடல் போன்றவைகளுக்கு க்ரீம் பயன்படுத்துவது என்பது ஒரு ரகம். ஆனால் பாதம், கால் விரல்கள், நகங்கள் என ஒவ்வொரு அங்கங்களுக்கும் தனித் தனியாக க்ரீம் வாங்கும் பழக்கம் பெண்களிடம் ஏன் இருக்கிறது என்பது ஆண்களுக்கு புரிவதில்லை. நகமும் விரல்களும் உடம்பில் உள்ள பகுதிகள் தான். பின் எதற்காக தனித்தனி க்ரீம் தேவை என்பது தான் ஆண்களின் விடை தெரியாத கேள்வியாகும்.
பதில். 9) இதெல்லாம் பெண்களோட குணாதியங்கள்.. ஆண்கள் எப்படி எங்கே சென்றாலும் டீக்கடையை தேடுகீறீர்களோ அதுபோல

ரிப்பன்கள்
ரிப்பன்கள் என்றால் பொதுவாக பெண்களுக்கு பிரியமான ஒன்று. தங்கள் தலை முடியில் கட்டவோ, பேப்பர்களை ஒன்றாக கட்டவோ, பரிசு பொருளின் மேல் கட்டவோ அல்லது ஒரு தொப்பியை அலங்கரிக்கவோ அதை பயன்படுத்துகின்றனர். அதனால் ஒவ்வொரு பெண்ணும் ரிப்பன்களை வைத்திருப்பார்கள். அது இல்லாமல் அவர்களால் இருக்க முடிவதில்லை. இது பிறப்பினால் வந்ததா அல்லது பழக்கத்தினால் ஏற்பட்டதா?
பதில். 10) சிறுவயதில் முதல் முதலில் ரிப்பன்களே தங்கள் கூந்தல் அழகை சரிசெய்ய பயன்படுத்துவதால் அதற்கென தனி மரியாதைதான்.. ரிப்பன் இல்லாமல் முடியை கட்டுப்படுத்த முடியாது.. அப்புறம் சொர்னாக்கா மாதிரி தோற்றம் தான்… அதுக்காகவே…

சுத்தப்படுத்துதலும் சீரமைப்பதும்
பல பெண்களுக்கு தங்கள் பொருட்களை சுத்தப்படுத்தி, அதை சீரமைப்பது என்பது ஒரு பொழுது போக்காக உள்ளது. ஆனால் அதோடு நின்றால் பரவாயில்லை. சுத்தமான கண்ணாடி மேலும் சுத்தமாகும் வரை, குஷன்களெல்லாம் நல்ல பார்வையுடன் வைக்கப்படும் வரை; இப்படி நுணுக்கமாக சீரமைக்கும் வரை அவர்கள் ஓயப் போவதில்லை.
பதில். சுத்தம் செய்வது ஒருமாதிரியான மனபிராந்திதான்.. கேள்வி 4க்கான பதில் போல, சுத்தத்தைப்பற்றி கண்டுகொள்ளாத பல பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் ஒவ்வொரு பெண்களிடம் ஒரு மாதிரியான வாசனை இருக்கிறது.. அது அவர்களின் பழக்கவழக்கம், இருப்பிடம், பயன்படுத்தும் வாசனைதிரவியங்களைப் பொருத்துள்ளது

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

சொன்னா புரியாது … திரைவிமர்சனம்.

சொன்னா புரியாது … திரைவிமர்சனம்.
sonna puriyathu … tamil film review

சிவா… சிவா.. ன்னு படத்தில் சுமார் 300 தடவையாவது சொல்லப்படுது, வாங்க இப்போவந்த காமெடி சீரிஸ் சொன்னா புரியாதைப் பற்றி பேசுவோம். செம யூத் சிவா (?-) சேட் பார்ட்டியில் நண்பன் தமிழ்பாட்டை பாடி செம டோஸ் வாங்க, அதே தமிழ்பாட்டை இந்தியில் சும்மா உல்டாலக்கடி அடிக்க, சேட் ஜோடியை சேர்ந்த ஒரு பொண்ணே மயங்கி சிவா பக்கட்டு வந்துடுச்சுன்னா பார்த்துங்க அவ்வளவு காமெடி…
t1
சிவாக்கு கல்யாணம் பண்ணீக்கிற பிடிக்காது, அவங்க அம்மா மீரா வற்புறுத்தலால், வேண்டா வெறுப்பாக பொன்னு பார்க்க போய், மற்றவர்களால் நிச்சியிக்கப்படுகிறது.. பொன்னு ரொம்ப கட்டுபெட்டியாக இருப்பதாலும், கல்யாணத்தை நிறுத்த பிளான் செய்கிறார்.. கிராமத்தில் நடக்கும் நண்பனின் திருமணத்தில் வைத்து பிரச்சினை தீர முடிவு செய்கிறார். பேஸ்புக்கில் பார்த்தத ஒரு வீடியோ அட்வான்ஸ் ஆக பிரச்சினை தீர்த்துவைக்க, போலியாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாணத்தை நிறுத்த வந்த ஆட்களால் ஒரே காமெடி (அதிலேயும் அந்த பஞ்சாயத்து ரொம்ப அருமை… இங்கே சொல்ல வில்லை நீங்களே பார்த்து சிரிங்க) இடையில் கால்கட்டு.காம் ஓனர் மனோ பிரச்சினை பண்ண, மாப்பிள்ளையும் பொண்னும் ஒவ்வொருவரைப் பற்றியும் அவங்க வீட்டில் பீலா உட, அதுவே பிரச்சினை பெரிதாகி பெரியவர்களால் திருமணம் நின்றுவிடுகிறது.
t2
ஒரு சந்தர்பத்தில் தமிழ்.டிவி நிகழ்ச்சிக்காக 50 லட்சம் பரிசை வெல்ல நின்றுவிட்ட திருமணப் பெண்ணை வலுக்கட்டாயமாக ஜோடி சேரும் சிவா, போட்டியில் வென்றுவிடுகிறார்… இருப்பினும் அவருடைய சிறுவயதில் இருந்தே கனவான கார் வாங்குவதைப்பற்றி ஏங்குவதை தப்பாக பெண்ணிடம் போட்டுக் கொடுக்க, அப்பென்னும் நம்பி இவரைப்பார்த்து உருகுகிறார். பழைய படங்கள் போல, பொண்ணை தூக்க ஏற்பாடு செய்ய, மாற்று கல்யாண ஏற்பாடு, மாப்பிள்ளையை தூக்குவது, காமெடி வில்லன் என்ட்ரி என ஒரே கலாட்டா காமெடியாகி ஒருவழியாக எண்ட் கார்டு விழுகிறது.
t3
சிறப்பான அம்சங்கள்

1. படம் முழுக்க யூத் டிரண்ட்தான், தற்கால இளசுகள் தங்கள் திருமணம் மற்றும் தங்கள் இணையை எவ்வாறு தேர்தெடுக்கிறார்கள் என்பதை அலசி ஆய்திருக்கிறது. இளசுகள் ஒருமுறை இந்தப்படத்தை பார்த்து வைத்துக் கொள்வது நல்லது.
2. சிவாவும், அவருடைய நண்பர்களும் சேர்ந்து ஆங்கிலப்படங்கள் மற்றும் டிஸ்கவரி சேனலுக்கு டப்பிங் செய்யும் புரெபெஸனலாக இருக்கிறார்கள். அவர்கள சாம்பிலுக்காக காண்பிக்கும் பிட் அருமை…
3. சிவாவின் பாட்டி, டேப்லெட்டில் ஆங்கிரி பேர்ட் விளையாடிக் கொண்டே இருப்பது,
4. சிவாவின் வீடு இருக்கும் தெரு, ஒரே மாதிரியான தனி வீடுகள், இன்னர் டெக்கரேஷன் என மெனக்கெட்டு விஷீவல் செய்திருக்கிறார்கள்
5. கிரியேட்டிவ் ஒர்க் செய்யறவங்க கண்டிப்பா லிக்கர் சாப்பிடனுங்கறது கொஞ்சம் ஓவர்.
6. சிவாவின் தன்னம்பிக்கை….
7. சிவாவின் வில்லிங் பவர்… ஒரு கார் வாங்க 20 வருடமாக முயற்சித்து கனவை வளர்ப்பதும், திடீரென கனவில் வயதாகியும் கார் வாங்க முடியாதை எண்ணி திடுக்கிடுவதும் நல்ல பாசிட்டிவ் திங்கிங்
8. காமெரா, இசை, வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல்,
9. டிஆர்ரின் சோக கீதத்தை இடத்திற்கு தகுந்தவாறு ( இளையராஜாவின் பாட்டையும் தான்) பயன்படுத்தியிருப்பது
10. கரண்ட் டிரண்ட் (டிவி ஷோ, மூலிகை ரெஸ்டாரெண்ட்) என இயக்குனர் ரொம்பவே யோசித்து யோசித்து படத்தை கொடுத்திருக்கிறார்.
11. பையனுக்கு ஆண்மை இல்லை என்பதும், பெண்ணிற்கு மூன்று முறை அபார்ஷன் ஆகிவிட்டது என்பதும் கொங்சம் இல்லை ரொம்பவே ஓவர்.
12. விளம்பரங்கள் ஓல்டு மாடலாக இருப்பதால் மக்களை படம் பார்க்க தூண்டவில்லையெனத் தெரிகிறது.

இதுவும் சிறந்த பொழுதுபோக்கு காமெடி யூத் ஸ்பெஷல் படம்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu