அஞ்சான்…திரைக்கதைவசனம் … திரைவிமர்சனம்.

அஞ்சான்…திரைக்கதைவசனம் … திரைவிமர்சனம்.
anjan, kadai thiraikadai vasanam direction … Tamil Film Review..
1. அஞ்சான்…
இந்தப்படத்தைப்பற்றி சொல்வதென்றால், தாதா ராஜீ ( சூர்யா ), தாதா சந்துரு ( துப்பாக்கியில் வந்த வில்லன்) இருவரும் நண்பர்கள்.. ஒருவருக்குகொருவர் உயிர் நண்பர்கள்.. மும்பையில் இஷ்டத்திற்கு தாதாவேலை செய்துகொண்டிருப்பவர்கள்… இடைஇடையே போலீஸ் கமிஷனரின் பொன்னு ஓடி போய்விட, ஒரு சந்தர்ப்பத்தில் இவர்கள் தான் கடத்திவிட்டார்கள் என கமிஷனர் முறைக்க, இதில் ராஜீ… கொஞ்சம் கொஞ்சமாக இளித்துக்கொண்டே இருக்கும் சமந்தாவை காதலிக்க ஆரம்பிக்க, ஒருசமயம் கோவாவிற்கு ராஜீ.. சமந்தா பாடிக்கொண்டே சென்றுவிட இடையில் கூட இருக்கும் குட்டித்தாதாக்களால் சந்துரு கொல்லப்பட, திரும்பிவரும் ராஜீவை போட்டுதள்ளி ஆற்றில் வீச… படம் ஆரம்பத்தில் இருந்து ராஜீ வோட தம்பி என்று சூர்யா எண்ட்ரி ஆகி… தாதா கூட்டத்தில் சந்துருவை போட்டுத்தள்ள என்ன காரணம், யார் போட்டார்கள் என படிப்படியாக கண்டுபிடித்து அவர்களைப்போட்டுத்தள்ளுவதுதான் அஞ்ஞான்… மற்றபடி சொல்லும்படி எதுவும் இல்லை…70களின் இந்திப்படத்தைப் பார்த்ததைப் போல் இருந்தது.
x1
2. கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் …

இந்த தலைமுறை இயக்குநர்களின் வரிசையான உறிட்களைப் பார்த்து, 90களின் புதியபாதை அமைத்த ஆர். பார்த்திபன் புலியைப் பார்த்து பூணை சூடு போட்டுக் கொண்ட படம்.. எதிர்பார்த்த அளவிற்கு எந்தவிதமான அதிகபட்ச நகைச்சுவையோ புதுமையோ இல்லை. முதல் காட்சியில் விசால் வெள்ளத்தில் சிக்சியிருப்பது, டாப்ஸி குண்டுமழையில் சிக்கிக்கொள்வது, விஜய்சேதுபதி நடுத்தரக்குடும்பத்தின் காட்சி கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.. சீன்சொல்ல அருதபழைய காலத்து சினிமாவிலிருந்து தற்போது வரை சினிமாவில் இருக்கும் தம்பிராமையா, இந்தகாலத்து 3 பசங்க 1 பொன்னு, இளைய இயக்குநரின் மனைவி (ஐடி கம்பெனி சம்பளம்) அதனால் கதை டிஸ்கஷன் என்று படம் முழுக்க பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்பொழுது நடக்கும் சம்பவங்களே படம்… முடிவில் கதைக் கிடைக்காமல், தன் வாழ்வில் நடந்த சம்பவங்களே கதையாக்கி யூடிவி பைனான்ஸிடரிடம் சொல்கிறார்கள்.. பைனான்ஸியரின் முடிவு என்ன… என்பது யாருக்கும் தெரியாது… ? கடைசி 3 அல்லது 4 ரீல்களில் ஆர்யா, அமலாபால் காட்சிகளாக வந்து செல்வது கொஞ்சம் ஆறுதல்… மற்றபடி… புதிய ஒயின் பழைய குடுவையில் என்பதே சரி….
x2
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

9ல் குரு இருந்தால்….

9ல் குரு இருந்தால்….
Guru at 9 position in astrology

மற்றுமொரு இனியதருணத்தில், பொழுது போகாதா பொம்மாக இல்லாமல், இடியட் பாக்ஸை திருக, அருவிபோல் கொட்டினார் ஒரு ஜோதிட சிகாமணி அதில் இருந்து குறிப்பெடுக்கப்பட்டவைகளை உங்களின் பார்வைக்கு,

• ஜாதகத்தில் 9ல் குரு இருப்பின் அந்த ஜாதகருக்கு ஆசிரியர் பணி அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செல்வது, நல்ல குழந்தைகள், அமைச்சர் போன்ற பதவிகள் என அம்சமாக அமையுமாம்.

• எந்தவொரு ஜாதகருக்கும் 1 லக்கினாதிபதி, 5 பூர்வபுண்ணியஸ்தானம் 9 பாக்கியஸ்தானம் என மூன்றும் கெட்டுப்போயிருந்தால் (?) அந்த
ஜாதகத்தை எக்காரணம் கொண்டும் கணிக்க கூடாதாம்.
b1
• இராசிக்கல் அணியும் பொழுது 9ல் உள்ள ராசிக்கு தகுந்தவாறு அணிந்தால் பலன்கள் சிறக்குமாம்

• 9ல் சூரியன் இருப்பின் 11லிருந்து 18 வயதுக்குள் தகப்பனாருக்கு பாதிக்குமாம்.

• 9ல் குரு இருப்பின் அவரால் உள்ளூரில் ஜெயிக்க இயலாது

•9ல் குருவுடன் சந்திரன் இணைந்திருப்பின் அந்த ஜாதகரை ஊரைவிட்டு ஓட வைக்குமாம்.

•9ல் செவ்வாய் இருப்பின் தந்தைக்கு ஆகாது, சகோதரருடன் ஒற்றுமை இருக்காது

• 9ல் புதன் இருப்பின் அவர் ஆச்சாரம் மிக்கவராகவும், இசை மற்றும் புகழ் பெற்றவராகவும், தந்தைக்கு நீண்ட ஆயுள் வாய்த்து, நற்குணம் பெற்று அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்றவராம்.
a1
•9ல் சுக்கிரன் இருந்தாலும் புதனைப்போலவே பலன்தருவார்

• 9ல் சனி இருந்தால் சமய நம்பிக்கை, துறவறம் பூனுதல், வறுமை, குழந்தைபாக்கியமின்மை, கொடூர குணம் போன்றவை இருக்கலாம்.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

ஜோதிடத்தில் ராகு …தனித்தன்மைகள்

ஜோதிடத்தில் ராகு …தனித்தன்மைகள்
JOTHIDAM RAGHU .. Characterstics..
ராகு கேது என இரண்டு சாயா கிரகங்கள் தனிநபரின் ஒழுக்கம் / நல்லொழுக்கம் சார்நத்வையாக உள்ளது. இப்பதிவில் ராகுவின் தனித்தன்மைகளை பார்ப்போம்.
a
1) சட்டப்படி நடப்பவை அல்ல,
2) மாந்தீரிகம்,
3) வட்டி வாங்குதல்/அடகு வைத்தல்/அடகு பிடித்தல்
4) எதிலும் புகழ்ச்சியை தேடுதல், தற்புகழ்ச்சி
5) சுவாசக் கோளாறு
6) எல்லாவிதமான அலர்ஜி,
7)பூர்வீகச் சொத்துக்களை இழத்தல்
8) அதிக போக உணர்வு மற்றும் முறைதவறிய காமம்
9) ஓரின உணர்வு
10) உரிமைகளை விட்டுவிடுதல்
11) மது/மாது கேளிக்கைகள்
12) சிறைவாசம், கெட்டபெயர்
13) விஷம் தீண்டுதல் / வதந்தி பொய்
14) சூதாட்டாங்களில் ஆர்வம்
b
ராகுவின் பார்வையில் உள்ளவர்கள் ரேடியோ, எலக்ட்ராணிக்ஸ் வேலைகள், கர்ப்பம் கலைக்கும் வேலை, களவு, விஞ்ஞானி, பொழுது போக்கு அம்ச கலைஞர்கள் நபர்களாக இருப்பார்களாம், மேலும், அதிக லாபம் அல்லது அதிக நஷ்டம் இரண்டில் ஒன்று ஒவ்வொருக்கும் கிடைக்கும். ஆறுதலாக, துலாம், ரிஷபம், மகரம், கும்பம் ராசிகளைச் சேர்ந்தவர்களை ராகு பாதிக்காது என்பது தெரியவந்திருக்கிறது… நன்றி.. ஜீகே
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu