என்னை அறிந்தால்
yennai arinthal … tamil film review
படம் தொடங்குவது துபாயில்… (ஏர்போட்டில்) இதைத்பற்றி கதைப்பாரவில் தருகிறேன். ரொம்ப நாளைக்ப்புறம் தல படத்தை பார்க்க ஆர்வத்துடன் சென்றிருந்தோம்…
ஆரம்பம் 15 நிமிடம் அறுவைதான்… பிளைட்டில் வாந்தியெடுக்கும் அனுஷ்கா …கதை பழைய கதைதான்.. ரௌடிபோல் நடித்து ரௌடிகளிடம் நட்பாகி, பின் அவர்களை போட்டுத்தள்ளும் போலீஸ் அதிகாரி வேடம் அஜித்துக்கு, பிளாஷ்பேக்கில் அவங்க அப்பா நாசரை ரவுடிகள் போட்டுத்தள்ள, மூன்றுமுகம் ரஜினியின் நடிப்பைப்பார்த்து போலிஸ் அதிகாரி ஆகிறார். எக்குதப்பாக ஆஷிஸ் வித்யார்த்தியிடம் விளையாட தான் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் (திரிஷா ) கன்று மற்றும் பசு ( அதாங்க திரிஷாவிற்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு பெண்குழந்தையுடன் விவாகரத்து செய்து இருப்பவர்) என கூடித்திரிகிறார் அஜித்… இடையில் திரிஷாவை போட்டுத்தள்ள, போலிஸ் வேலையை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு கன்றுடன் ஊர்சுற்ற கிளம்பிவிடுகிறார்.. திரும்பி வந்தவுடன், போலிஸ்நண்பரின் சிறுவயது மகளை காணாமல் போவதை கண்டுபிடிக்க கேட்டுக்கொள்ள, கன்றும் அனுமதி அளிக்க மீண்டும் பார்ம்க்கு வருகிறார் அஜித். அப்பொழுதுதான் இதயம் தேவைப்படுபவர்களுக்கு சப்ளை செய்யவென சிறுமிகளை கடத்தி கொல்லும் கும்பலை அடையாளம் காண்பதும், அதற்கு தலைவனாக தான் ஏற்கனவே ரௌடிகளிடம் பழகும் போது தோழனாக இருந்த அருண்விஜய் என்பதனை அறிகிறார். கூடுதலாக, துபாயில் இருந்து வரும் அனுஷ்காவை கடத்தவும் திட்டமிட்டிருப்பது தெரியவந்து, அனுஷ்காவை காப்பாற்றவே படத்தின் முதற்காட்சி துபாயில் இருந்து கூடவே பாதுகாப்பாக வருகிறார். ஆனால், இதைப்பற்றி எதுவும் தெரியாத அனுஷ்கா அஜித்தை (உலகிலேயே மிக அழகான ஆண் ?) என ஜொள்ளு விட்டு சுற்றிசுற்றி வருகிறார். அஜித்தின் கன்றையும் கடத்தி பிளாக்மெயில் செல்லும் வில்லன், தொடந்து வருவதற்கு ஜிபிஎஸ் கருவி என போலிஸ் பிரதானங்களுடன் பிற்பாகு மிக மிக விறுவிறுப்பாக சென்றாலும், முதற்பாதி எப்படா முடியும் என காத்திருக்கிறது விசிலடிச்சான் குஞ்சுகள் ( ரசிகர்கள்) பிறகு மனித உறுப்புகளுக்காக கடத்தும் கும்பலுக்கும் அஜித்துக்கும் சேஸ் நடக்க, முடிவில் எல்லாம் சுபம்..
கௌதம் மேனன் குறைஞ்ச செலவில் எடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும் சுமார் 10/15 காட்சிக்கான இடங்களே திரும்பிதிரும்பி வருகிறது. எவ்வளவோ கதைகள் இருக்க, தமிழ்சினிமாவை தூக்கி நிறுத்தும் புதுமுயற்சிகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்க, புகழ்பெற்ற இயக்குனர் தேர்தெடுத்திருப்பதோ பழைய பழிவாங்கும் கதை அதுவும் 10 தமிழ் சினிமாக்களின் கதையை மிக்ஸியில் போட்டு அரைத்து கொடுத்திருக்கிறார். இசையும் சுமார்தான்… படப்பிடிப்புகள் பெரும்பாலும் இரவில் வைத்திருக்கிறார்கள். ஒரே இருட்டுக் காட்சிகள்தான் அதிகம். எனினும், அஜித் இளமையாகவும், தெர்ந்தி, நரை முடி என இருவேடங்களிலும், சண்டை காட்சிகளிலும் சோபித்திருக்கிறார்.
என்னை அறிந்தால்… என்னை அறிந்தால் உலகத்தில் போராடாலாம்.. என பாடல்வரிதான் நினைவுக்கு வருகிறது படம் பார்த்தவுடன்.