ஏன் இந்தப் போராட்டம்..?

ஏன் இந்தப் போராட்டம்..?
Why this Protest ?
காலையில் எழுந்து விடுதியின் கீழ்த்ளம் வழியாக ரோட்டிற்கு சென்றதுதான், எங்கிருந்தோ பறநது வந்த காக்கை ஒன்று தலையில் கொத்திவிட்டு அருகில் இருந்த மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டது. அதற்கு துணையாக, பல காக்கைகளும் சேர்ந்து கொண்டு தொடர்ந்து தாக்க வந்து கொண்டே இருந்தது… அய்யோடா, இது என்ன மாயம் எதுக்காக நம்மை இப்படி டார்கெட் செய்யுது இந்தக்காக்கைகள் அப்படின்னு சிறுதுதொலைவில் உள்ள வழக்கமான டீக்கடையில் டீ அருந்திவிட்டு திரும்பினேன். நான் தங்கியிருக்கும் அறைகளின் நுழைவாயில் அருகே உள்ள
crow-attack_0
பால்கனியில் சிறிதுநேரம் நின்றுகொண்டு சாலையில் செல்லும் வாகனங்களையும், மனிதர்களையும் வேடிக்கை பார்ப்பது வழக்கம். அப்போதுதான் கவனித்தேன், அருகில் இருந்த மரத்தின் கிளைகள் பால்கனியைத் தொட்டுக்கொண்டிருப்பதும், உற்று நோக்குகையில் உள்ளே ஒரு கிளையில் காகம் கூடுகட்டி முட்டைபொரித்து குஞ்சும் பொரித்துள்ளது. நான் இரவு நேரங்களில் பொழுது போகாமல் பால்கனியில் சாய்து கொண்டு வேடிக்கை பார்ப்பது வழக்கம் அதுபோல் முதல்நாள் வேடிக்கைப் பார்த்ததை இந்த காக்கைக்கூட்டம் தனது காக்கைக் குஞ்சுகளுக்கு தீங்கு விளைவிக்க வந்திருக்கிறேனோ என்று அஞ்சிதான் மேலே கண்ட நடவடிக்கையில் காலையில் ஞாபகமாக என்னை (இருட்டில் பார்த்தது எப்படி ஞாபகம் இருக்கிறது பாருங்கள்) குறிவைத்து தாக்கியிருக்கிறது. வீட்டிற்கு போன்செய்து, இந்த விசயத்தை சொன்னால் உடனே, அய்யயோ, சனிஸ்வரனுக்கு உடனே விளக்கு போடுங்கள், திருநள்ளாருக்கு போய்டு வரனும் அப்படின்னு ஆரம்பித்துவிட்டார்கள்.
crow-attack_1
காக்கையே இப்படி போராடுகிறது…

செய்திப்பார்வை…
blogers1
0, இந்தியாவில் 2014ம் வருடம் தூய்மையான நகராம் என்று திருச்சிக்கு 2ம் பரிசாம்… இன்னமும் குப்பைகளினால் நிறைந்தும், ஆடு மாடுகள் சர்வ சாதாரணமாக தெருவில், ரோட்டில் சுற்றி வருவதும், தெருவிற்கு ஒருவர் அல்லது இருவர் ஆடு, மாடுகள் வளர்த்து தெரு முழுதும் சாணிகளால் நிறைத்துவிடுவது நடைபெற்றுதான் வருகிறது.

1, இலங்கையில் ஒருவழியாக ரணில் விக்கிரமசிங்கேயை செயிக்கவைத்து, ராஜபக்ஷேயை ஓரங்கட்டியாகிவிட்டது… இனிமேலாவது அங்கே அமைதி திரும்பி நல்ல வாழ்க்கை கிடைக்கட்டும்., எவ்வளவு இரத்தம் சிந்தியிருக்கிறான் ஈழத்தமிழன்…

2. தூய்மை இந்தியா திட்டத்தின் விளம்பரத்திற்காக 92 கோடி செலவானதை விமர்சிக்கிறார்கள். உண்மையில் அதுபோல் விளம்பரம் செய்துமே, தூய்மைப்பற்றி அக்கரையில்லாமல் தான் நடந்துகொள்கிறேர்ம்… இனிமேலாவது ஒவ்வொருவரும் தன்வரைக்கும், தன்குடும்பம், என குப்பைகளை சரியாக கையாண்டு நாட்டிற்கு உதவுவோமே..

3. வழக்கமா குரூட் ஆயில் விலை எறங்கினால், தங்கம் விலையும் எறங்கும். ஆனால், மறுபடியும் தங்கம் 20 ஆயிரத்திற்கு மேல் எகிறிவிட்டது…

4.வாட்ஸ்அப், அருவிபோல் செய்திகளையும் காணக்கிடைக்காத காட்சிகளையும் கொட்டித்தீர்க்கிறது… சமீபத்தில் பார்த்து மகிழ்ந்தது.. பாகுபலியில் வரும் அருவில் போல் இந்தியாவில் ஒரு இடத்தில் மிகப்பிரம்மாண்ட அருவிக் கொட்ட அதனை கடந்து செல்கிறது ஒரு நீண்ட புகைவண்டி…. சமீபத்தில் பார்த்து வெறுத்தது. பெங்களூருவில் இருந்து மைசூர் சென்ற ஒரு குடும்பம் கார்விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறது. அதனை இன்ஞவிடாமல் புகைப்படம் எடுத்து ( உதாரணம் ஒரு 9 வயது பாப்பாவின் தலை தனியாக கிடக்கிறது, உடலை மட்டும் உயிருடன் எஞ்சியவர் மடியில் வைத்து அழுகிறார்) வாட்ஸ்அப்பில் பரவவிட்டுள்ள புண்ணியவானை 1 மணிநேரமாகத் திட்டிக்கொண்டிருக்கிறேன். ( உடனே அனைத்து புகைப்படத்தையும் டெலிட் செய்துவிட்டு)

5.வீட்டு உபயோகத்திற்காக போர்வெல் தோண்ட அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெறவேண்டியது இல்லையாம்…. செய்தித்தாளில் படித்தது.
Tamil Blogs Traffic Ranking

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

ஆரஞ்சு மிட்டாய் …

ஆரஞ்சு மிட்டாய் … Orange Mittai … Tamil film Review

விஜய்சேதுபதியின் அடுத்த இறகு இந்த ஆரஞ்சுமிட்டாய், இந்தப் படத்தை கடைசியில் இருந்து பார்த்தாலும் நடுவில் இருந்து பார்த்தாலும் எதுவுமே புரியாது…முதலில் இருந்து பார்த்தாலும் ஒன்னும் புரியாது… தமிழ்சினிமாவின் இலக்கணத்தை உடைத்து படம் எடுக்க வேண்டும் என்ற இயக்குநரின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஒரே வரியில் புரிதல் வேண்டுமென்றால், ஒரு சுமாரான கிராமத்தின் பணக்காரர், உறவினரின் ஆதரவற்ற நிலையில் அடிக்கடி 108 சர்வீசை அழைத்து நெஞ்சுவலி என்று டவுனில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு டிரிப் அடிக்கிறார். அவ்வாறு ஒருமுறை டிரிப் அடிக்கும்பொழுது, 108 ஆம்புலன்ஸ் அட்டெண்டர் முதியவ்ர்பால் ஈர்க்கப்பட்டு மிக நெருக்கமாக நண்பராகிறார். உண்மையில் பெரியவருக்கு நெஞ்சுலி கடுமையானதா, இல்லையா என்பதே யாருக்கும் தெரியவில்லை.
images
என்ன ஊருசார் இது, வெறும் மேடும் பள்ளமும், பொட்டைக்காடும், பச்சைபசேல் என்ற பேச்சுக்கே இடமில்லை. யாரிந்த கேமராமேன், இவரைவிட மோசமாக படம் பிடிக்க இயலாது. அதுவும் இரவில் நடைபெறும் காட்சிகள் படுமோசம். இசையும் படுசுமார். ஆனால், விஜய்சேதுபதியில் நடிப்பு, உண்மையில் இவர் ஒரு ஜீனியஸ்தான் என்று எண்ணத்தோன்றுகிறது. அப்படியே ஒரு வயதான நோய்வாய்ப்பட்ட வசதியான ஆதரவற்ற முதியவரை உரித்தெடுத்திருக்கிறார்.
orange-Mittai_childhood-do-you-miss-this
மினிமம் பட்ஜெட் படம்தான் ஆனால், அதையும் பார்க்க நம்ம பட்ஜெட் எல்லாம் ஒன்றுதானே, மல்டிபிளக்ஸ் கலாசாரம் வந்தவுடன் திரைப்படம் பார்ப்பதே ஒரு ஆடம்பர கொண்டாட்டம் போல்தான் உள்ளது. முந்தைய படத்தில் ஆர்யாவை காப்பாற்ற அச்சுபிச்சுன்னு விஜய்சேதுபதி எடுக்கும் சிறுபிள்ளை நடவடிக்கைகள் போல் இல்லாமல், இந்தப்படத்தை நன்றாக உணர்ந்து செய்திருப்பது திருப்தி.

நாட்குறிப்புகள்.

0. இந்தப்பதிவு எனது 200வது வேர்ட்ஸ்பிரஸ். பதிவு
1. ஊர் உலகத்தைப்போல், நானும் எனது ஆழ்ந்த இரங்கலை பாரதரத்ணா அப்துல்கலாம் அவர்களுக்கு சமர்ப்பணம். பி.கு. அவர்படித்த அதே புனித வளனார் கல்லூரி, திருச்சியில் படித்தது மகிழ்ச்சி.
2, ஈரோடு, புத்தகத்திருவிழா நிறைவு தினத்தன்று செல்ல முடிந்தது. என்னா கூட்டம்.. அதிலும், ஆங்கிலப்புத்தகங்கள் விற்கும் ஸ்டாலில்
நாம் தேடும் புத்தகங்களை எடுக்க உதவும் சிறிய வகுப்பு படிக்கும் மாணவர்கள். வருங்கால இந்தியா உண்மையில் படித்த, அறிவாளிகள் நிறைந்து இருக்கும் எனத்தெரிகிறது.
3, திரு. உமேஷ், மதுரைக்காரர். இந்திய அளவில் 77வது ரேங்கில் ஐ.ஏ.எஸ். பாஸ்செய்திருக்கிறார்… அவருடைய பதிவினை படிக்க படிக்க உற்சாகம் பொங்குகிறது. அதிலும் இந்தியாவின் முக்கியமான பிரச்சினை … பணக்காரர், ஏழை வித்தியாசம்.. நமது, இந்தியப் பாரம்பரியத்தின் முக்கிய தூணான ச சகோதரத்துவம் குறைந்துவிட்டதைப்பற்றி வருத்தத்துடன் குறிபிட்டிருக்கிறார்..
4, இந்திய சுதந்திரநாள் வழக்கம்போல் ஆகஸ்ட் 15, எவ்வளவு தியாகம்… ஆனால், நாம் இப்போ அதை எப்படி பயன்படுத்துகிறோம்.
5. எங்கும் நீக்கமற நிறைந்திருந்திருக்கும் ஊழல் …

என்ன செய்ய, நானும் உங்களைமாதிரி ஒரு இந்தியப்பிரஜை….
Tamil Blogs Traffic Ranking

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

மாரியும் பாகுபலியும் … திரை விமர்சனம்

மாரியும் பாகுபலியும் … திரை விமர்சனம்
marri and BAGUPALI TAMIL FILM REVIEW..

அட்டகாசமான ஆரம்பம், ஆகாயம் வரைக்கும் நீண்டிருக்கும் மலை அருவியில் இருந்து கொட்டும் நீரில் துரத்திய படையினர், எதிரியிடம் சிக்காமல் மகாராணி தன்கையிலிருக்கும் பிஞ்சுக்குழந்தையை கையில் ஏந்தியவாறே இரவு முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருப்பதும், காட்டுவாசிகளிடம் குழந்தையை ஒப்படைத்து கை தண்ணீருக்குள் மறையும் காட்சியிலிருந்தே இந்த படம் நிச்சயமாக வழக்கமான ஒன்றல்ல என்பதை நிரூபிக்கிறது. வித்தியாசமான திரைப்படங்களை எடுத்து, ரசிகர்களை திருப்திபடுத்தும் ராஜமௌலி சாருக்கு ஒரு சல்யூட். பாகுபலி… 25 நாட்களாக பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த படத்தை பார்க்க வேண்டாம் (ஏனெனில் ராஜாராணி கதைகள் பிடிக்காததே காரணம்) என்று முடிவு செய்திருந்தேன். ஒரு சிறிய நகராத்தில் இந்த படத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலையில், இதை ஆரம்பத்திலேயே பார்க்கமாமல் காலம் தாழ்ந்து விட்டோமே என்று வருந்த வேண்டியிருந்தது.
2
கதை எனக்கு புரிந்த வரையில் மகிழ நாட்டின் அரசன் அவருடைய அண்ணன்(நாசர்), இருவருக்கும் ஆண்குழந்தை பிறக்கிறது. அண்ணன் கை ஊனம் என்பதால், தம்பி ஆட்சி செய்திருக்கிறார். அரசர் (தம்பி) எதிர்பாராமல் மரணமடைய, அவருடைய மனைவி (ரம்யாகிருஷ்ணன்) தர்மசிந்தனை மற்றும் சிறப்பாக அரசாட்சி செய்கிறார். சூழ்ச்சிகளை வேறறுத்து நல்லவிதமாக ஆட்சிசெய்கிறார். இரண்டு குழந்தைகளும் , இவர்களுக்கு பாதுகாப்பாக தளபதி கட்டப்பா ( சத்யராஜ்) வளர்ந்து விடும்பொழுது, கொடூரமாக எதிரி படையெடுக்க அதனை இரண்டு சகோதரர்களும் ஒற்றுமையாக முறியடிக்க, நாசர் மகனை (ராணா) தளபதியாகவும், ரம்யாகிருஷ்ணன் மகனை மன்னாகவும்(பிரபாஸ்) அறிவிக்க, இருவருக்குள்ளும் பொறாமை மற்றும் குரோதம் வளர்கிறது. பிரபாஸ் எதிர்பாரதவிதமாக கொல்லப்பட, மீண்டும் முதல் காட்சியை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.
1
காட்சிகள் ஒன்றுக்கொண்று முன்னும் பின்னுமாக இருந்தாலும் அருமையாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். பொங்கிவரும் அருவியின் மேலே ஏறே இளைய பிரபாஸ் முடிவு செய்து முயற்சி செய்து வெற்றி அடைவதும், தமண்ணா தீவிரவாதிகள் கூட்டத்தில் பொங்குவதும் இளைய பிரபாஸ் காதல் வலையில் விழுவதும் மிகவும் சுவாரசியம்… அப்பா, செம பிரமாண்டம், எவ்வளவு உயரம் முடியுமோ, அவ்வளவு உயரத்திற்கு சிலைகள் படத்தில் காண்பிக்கப்படுகிறது. போர் காட்சிகள் உண்மையில் இவ்வளவு த்ருபமாக இதுவரை அமைந்ததில்லை. பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இசையும், அவ்வப்பொழுது, பொங்கிப் பிரவாகும் தமிழ்ப்பாடல்களும் புரியலை என்றாலும் தாலாட்டுகிறது. அந்த கால அரசர்கள், தளபதிகள், ஒற்றர்கள், திருடர்கள், வீரர்கள், போர், இராஜபரம்பரை, துரோகிகளை பழிவாங்குதல் என பல்வேறு கிளைகளில் கதைக்களம் பிரிகிறது.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
4
பின்குறிப்பு. போனவாரம் மாரி திரைப்படம் பார்க்க சென்றிருந்தபொழுது, விழுந்த உரையாடல், ஒரு லாரி டிரைவர் படம் பார்க்க வந்திருந்தார். அவர் பாகுபலியை ஒரு சிறிய ஊரில் பார்த்தாராம். தற்சமயம் மாரி படத்தைப் பார்த்தற்கு மீண்டும் ஒருமுறை பாகுபலி பார்த்திருக்கலாம் என்று அருகிலிருந்தவர்களிட்ம் தெரிவித்தார். மாரி படத்தைப்பற்றி பலரும இணையத்தில் கழுவி ஊற்றி இருந்தாலும், வாட்ஸ்அப்பில் சிறுகுழந்தைகளை வைத்து 3 நிமிட படமாக உல்டா அடித்திருந்தாலும், அந்தபடத்தின் தீம் புறா பந்தயம்… ஆனால் அதை மட்டும் ( சேவல் சண்டையைப்போல ) டெவலப் செய்யாமல் விட்டதே படத்தின் தோல்விக்கு காரணம் என நினைக்கிறேன்.