வேளாங்கண்ணி … ஒரு ஆன்மிக இன்பச்சுற்றுலா

வேளாங்கண்ணி … ஒரு ஆன்மிக இன்பச்சுற்றுலா VELANKANNI – SUMMAR TRIP

                     வெயில் அடித்து நொறுக்கி,  சில வருடமாக மே மாதம் செல்லும் சுற்றுலா தடைபெற்று போக, இந்த வருடம் கண்டிபாக சுற்றுலா செல்லாம் என முடிவெடுத்து, பழனிக்கு போய் மொட்டை போடாலாம் என்றும், பாண்டிக்கு போய் பாருக்கு போகலாம் என்றும், ஆளாளுக்கு ஒன்று கூற, கடைசி நிமிடத்தில் அன்னையை தரிசிக்க வேளாங்கண்ணிக்கு போகலாம் என தெரிவிக்க குடும்பத்தினர் வேற வழியில்லாமல் ஒத்துக் கொண்டார்கள்.                 காலையில் 5 மணிக்கு எழுந்து கிளம்பிவிடலாம் என முடிவாகி, நெட்டை துரத்தி துரத்தி பிடித்ததில் காலையில் அனைவரும் எழுந்ததே ஏழு மணி, பரவாயில்லை என அவசர அவசர மாக கிளம்பி, இடையில் வீட்டம்மா சுட்ட இட்லியை உள்ளே தள்ளி நால்வரும் நானோவில் உள்ளே, வண்டியை ஸ்டார்ட் செய்யுடா மவனே…( றி றி… எனக்கு வண்டி ஓட்டத்தெரியாதே….) என விசில் கொடுக்க மணி 9 ஆகிவிட்டது.                      IMG_20170505_111823 மத்தியஅரசின் தயவால் 4 வழிசாலையாக தஞ்சை வரை அடுத்த 40 நிமிடத்தில் பயணித்து எந்தவழியில் செல்வது எனத்திகைத்து மன்னார்குடிக்கே போகலாம் என அந்தவழியில் வண்டியை செலுத்தியாயிற்று..  மன்னார்குடியில் சித்தி வீடு இருக்கு இருந்தாலும் முன்அறிவிப்பு இல்லாமல் போகக்கூடாது என்ற தர்மத்த்தால் அங்கே ஒரு சிறிய கடையில் சர்பத் மட்டும் சாப்பிட்டு ( நன்றாக இருந்தது நன்னாரி சர்பத்) வண்டிக்கும் கொஞ்சம் ஓய்வு (நானோ இல்லையா)

                       IMG_20170505_111816அடுத்து, 11 மணிக்கு திருத்துறைப்பூண்டி ரஸ்தாவில் எங்கள் வண்டி பயணித்தது என்பதை விட ஊர்ந்தது என்பதே சரி, அப்பப்பா எத்தனை வளைவு, நெளிவு, சாலையில் பள்ளங்கள் இல்லாத இடம் குறைவு.. ஆனால், இவ்வளவு வறட்சியில் இரு பக்கத்திலும் பசுமையான நெல் வயல்கள்,, போர்வெல் தயவால்.. பார்க்க பரவசமாகத்தான் இருந்தது.. நான் சிறுவனாக இருந்தபோது திருச்சியில் இருமடங்கும் சாலை ஓரத்தில் சாதரணமாக பார்த்த காட்சி.. இப்பொழுதுதான் காணக்கிடைக்கிறது.

                        திருத்துறைப்பூண்டியில், எனது பழைய நண்பர் காதர் மொய்தீன் சிங்கப்பூர் பேன்சிகடை 30 வருடங்களுக்கு முன் வைத்திருந்தார்.  இப்பொழுதும் இருக்கிறாரா என எட்டிப்பார்த்தேன் கடை இருக்கிறது.  ஆனால் அவரைப்பற்றி எந்த விவரமும் இல்லை. கடையில் இருப்பவரோ ஏதோ யாசகம் கேட்க வந்துட்டார் என துரத்தாத குறையாக துரத்திவிட்டார்.             அடுத்து, 2 வழி கடற்கரை சாலை வேளாங்கண்ணி வரையிலும் செல்கிறது, வழியில் செலவிற்காக ஒரு கிராமத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க சும்மா 100 ரூபாயாக அழுக்கு நோட்டாக கொட்டித்தீர்த்தது.  வேளாங்கண்ணியில் நுழைந்தவுடன் நுழைவு சீட்டு தொல்லையெல்லாம் இப்போ இல்லை, ரோடெல்லாம் சும்மா சூப்பராக போட்டிருக்காக, ஆங்காங்கா நல்ல ஆர்ஓ குடிநீர், கட்டணமில்லா சுத்தமான கழிப்பறையெல்லாம் ஜோராக கட்டி உட்டுருக்காங்க.

                     ஒரு நாள் தங்க பிளான் செய்திருந்தால், ரூம் தேடினோம், சுமார் ஏசி போட்டாக்கா 2 ஆயிரம், ஏசி இல்லைன்னா 1 ஆயிரம் என காதில் விழுந்தது.  என்ன செய்ய, அடிக்கிற வெயிலுக்கு ஏசி ரூமே போடலாம் என பேரம் பேசி 1200க்கு சகாயமாதா (வீடு) கெஸ்ட் அவுஸ்ல இடம் பிடித்து கொஞ்சம் இளைப்பாறினோம்.   மாலை 4 மணிக்கு எழுந்து அன்ணையை தரிசிக்க சென்றோம்.   இளைஞனாக இருக்கும்பொழுது பலமுறை வேளாங்கண்ணிக்கு வருவது உண்டு.  இடையில் பலகாலம் வர வாய்யில்லை.    தற்பொழுது சர்ச்சில் காலை வைத்தவுடன் உண்மையில் உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது.. எனது மகள் எனது கையை பிடித்தவுடன்தான் அந்த பீலீங் மறைந்தது.

                   IMG_20170505_184023

                        அன்னையிடம் பலரும் மண்டியிட்டு தங்கள் குறைகளை வெளிப் படுத்துவதும்,  கேரளா மாநிலத்திலுந்தும், கோவா, கர்நாடாகா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளனமானவர்கள் குடும்பத்துடன் வருகிறார்கள்.  மனமுருகி வேண்டுவதும், சிறிய பொருள் அல்லது முக்கியம் எனக்கருதும் டாக்குமெண்ட் போன்றவற்றை அன்னையின் பாதத்தில் வைத்து திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள்.   எந்தவிதமான தள்ளுமுள்ளு, பணியாளர்கள் தொல்லை, எதும் இல்லை.  பணியாளர்களும் இன்முகத்துடன் பணிபுரிகிறார்கள்.   கலர் கலரான மெழுகுவர்த்திகள்பூமாலை 10 ரூபாயில் இருந்து 500 வரை விற்பனையாகிறது.   அவரவர் சக்திக்கேற்ப வாங்கி அன்னைக்காக வழிபாடு செய்கிறார்கள்.

IMG_20170505_183634

                     கிழக்கு பார்த்த அன்னையின் சர்ச்சில் ஒருமணிக்கு ஒருதரம் பூசை சுமார் 15 நிமிடம் மட்டும் நடைபெறுகிறது.  தமிழ், ஆங்கிலம், கொங்கன், மலையாளம் என மொழிகளில் ஒவ்வொருமுறையும் நடைபெறுகிறது.  பேராலாயத்தை சேர்ந்தவர்கள் ஒரு பிட் இடத்தைக்கூட விடாமல் பிளான் செய்து பூங்கா, பார்க்கிங், கடைகள், தங்குமிடம், காட்சியிடம் என சுத்தமாகவும், கூட்டம் கூடா விடாமல் அவ்வப்பொழுது வழிகளை மாற்றி அமைத்தும் விடுகிறார்கள். சர்ச்க்கு பின்னால் ஒரு பெரிய சர்ச் அதனில் விரிவான பூசை நடைபெறும் போல… பலர் அதில் கலந்து கொள்ள, நமக்கு ஆர்வமில்லாதால் கடற்கரையை நோக்கி நகர்ந்தோம்.

                                                                                                (தொடரும்,,, 1)

தனிஒருவன் … தி கிரேட் மூவி…

தனிஒருவன் … தி கிரேட் மூவி…
THANIORUVAN … THE GREAT MOVIE
ஆரம்பமே அசத்தல், கடத்தி செல்லும் இரு பெண்கள் கதற, ஒரு இளைஞர் அடித்து துவைத்து கண்டெய்னர் லாரியில் ஏற்றிவிட்டு 4 இளைஞர்களும், ஜெயம் ரவி (மித்ரன் படத்தில் பெயர்) இணைந்து செய்கிறார்கள்… அப்பாடா மறுபடியும் ஒரு கொள்ளைக்கூட்டமா என்று அயர்ச்சி கொள்ளும்பொழுது ஐவரும் 10 நிமிடம் சிசி கேமராவை ஜாம் செய்துவிட்டு உறாஸ்டலில் திருட்டுத்தனமாக ஏறிக்குத்து செட்டிலாகிறார்கள். அடுத்தநாள் தான் நமக்கு தெரியவருகிறது… கடத்திவரப்பெற்ற பெண்கள் இருவரும், ஒரிஜினல் கடத்தல்காரரின் மனைவியும், தம்பியும் இளைஞர்கள் கடத்திப்பட்ட 5 இளம் சிறார்கள் மீட்பது… டிவிஸ்ட்..
1
ஜெயம்ரவி, ஒரு ஐபிஎஸ் அதிகாரி மிசொரி ( என்னா அழகான இடம்… ) பயிற்சியின்போது, எதிர்பாராமல் ஜொள்ளுவிடும் நயன்தாரா (இவரும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி) இருவருக்கு இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனாலும் பயாலஜி ஒர்க் ஆகாமல் ஒட்டாமலே பாட்டுபாடிக்கொண்டு இருக்கிறார்கள்…எனினும் இனிமையான ஜோடியாகத்தான் தெரிகிறார்கள்.
2
மித்ரனின் ஒரே நோக்கம், கடுமையான குற்றங்களைப்புரியம் டாப் 3 யை தூக்குவதுதான், அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் செய்தித்தாள்களின் வரும் செய்திகளின் பிண்ணனி அதன் தொடர்ச்சி, பின்புலம் ஆகியவற்றை ஆராய்ந்து அறிந்துகொள்ளும் சிறப்புகுணம்…எதிர்பாராமல், கிரானட் கொள்ளைகாரர், மருத்துவகொள்ளைக்காரர், பெரிய ரவுடி மூவரைப்பற்றியும் அறிந்து கொள்ளும்பொழுதுதான் இம்மூவரையும் இயக்குபவர் ஒருவர் அர்விந்த்சாமி, பின்புலம் அரசியலில் அப்பாவை மந்திரியாக்கியதும் சின்னவயது அர்விந்த்சாமிதான் எனத்தெரிந்து அவரைப்பின்தொடர்கிறார். கேன்சர் மருத்துக்கான இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாகும்பொழுது எவ்வளவு முயன்றும், முடியாமல் போகவே, அர்விந்த்சாமி எதிரியான மித்ரனை உடம்பில் உள்ள ஸ்பையை வைத்து ஆப்ரேஷன் செய்துவிடுவதால் என்னசெய்தாலும், பேசினாலும் உடனுக்குடன் அர்விந்த்சாமிக்கு தெரியவரவே, அதனால், மித்ரனின் நண்பனை இழக்கவும், எந்தசெயலிலும் தோல்வியே மிஞ்சுகிறது. கடைசி 20 நிமிடங்களின் போதுதான் தன் உடலில் உள்ள ஸ்பையை அகற்றி அதை வைத்தே, அர்விந்த்சாமியை குழப்பி, இறுதியில் அர்விந்த்சாமியை என்கௌன்டர் திட்டத்தில் இருந்து காப்பாற்ற முயற்சிசெய்கிறார். ஆனால் என்ன நடந்தது, படத்தைப்பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.

மிகஅருமையான நடிப்பு ஜெயம்ரவி, நண்பர்கள், அர்விந்த்சாமி, தம்பிராமையா, நயன்தாரா.

இசையும், படப்பிடிப்பும், இயக்கமும் அருமை.

டோண்ட் மிஸ் இட்..
Tamil Blogs Traffic Ranking

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

ஆரஞ்சு மிட்டாய் …

ஆரஞ்சு மிட்டாய் … Orange Mittai … Tamil film Review

விஜய்சேதுபதியின் அடுத்த இறகு இந்த ஆரஞ்சுமிட்டாய், இந்தப் படத்தை கடைசியில் இருந்து பார்த்தாலும் நடுவில் இருந்து பார்த்தாலும் எதுவுமே புரியாது…முதலில் இருந்து பார்த்தாலும் ஒன்னும் புரியாது… தமிழ்சினிமாவின் இலக்கணத்தை உடைத்து படம் எடுக்க வேண்டும் என்ற இயக்குநரின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஒரே வரியில் புரிதல் வேண்டுமென்றால், ஒரு சுமாரான கிராமத்தின் பணக்காரர், உறவினரின் ஆதரவற்ற நிலையில் அடிக்கடி 108 சர்வீசை அழைத்து நெஞ்சுவலி என்று டவுனில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு டிரிப் அடிக்கிறார். அவ்வாறு ஒருமுறை டிரிப் அடிக்கும்பொழுது, 108 ஆம்புலன்ஸ் அட்டெண்டர் முதியவ்ர்பால் ஈர்க்கப்பட்டு மிக நெருக்கமாக நண்பராகிறார். உண்மையில் பெரியவருக்கு நெஞ்சுலி கடுமையானதா, இல்லையா என்பதே யாருக்கும் தெரியவில்லை.
images
என்ன ஊருசார் இது, வெறும் மேடும் பள்ளமும், பொட்டைக்காடும், பச்சைபசேல் என்ற பேச்சுக்கே இடமில்லை. யாரிந்த கேமராமேன், இவரைவிட மோசமாக படம் பிடிக்க இயலாது. அதுவும் இரவில் நடைபெறும் காட்சிகள் படுமோசம். இசையும் படுசுமார். ஆனால், விஜய்சேதுபதியில் நடிப்பு, உண்மையில் இவர் ஒரு ஜீனியஸ்தான் என்று எண்ணத்தோன்றுகிறது. அப்படியே ஒரு வயதான நோய்வாய்ப்பட்ட வசதியான ஆதரவற்ற முதியவரை உரித்தெடுத்திருக்கிறார்.
orange-Mittai_childhood-do-you-miss-this
மினிமம் பட்ஜெட் படம்தான் ஆனால், அதையும் பார்க்க நம்ம பட்ஜெட் எல்லாம் ஒன்றுதானே, மல்டிபிளக்ஸ் கலாசாரம் வந்தவுடன் திரைப்படம் பார்ப்பதே ஒரு ஆடம்பர கொண்டாட்டம் போல்தான் உள்ளது. முந்தைய படத்தில் ஆர்யாவை காப்பாற்ற அச்சுபிச்சுன்னு விஜய்சேதுபதி எடுக்கும் சிறுபிள்ளை நடவடிக்கைகள் போல் இல்லாமல், இந்தப்படத்தை நன்றாக உணர்ந்து செய்திருப்பது திருப்தி.

நாட்குறிப்புகள்.

0. இந்தப்பதிவு எனது 200வது வேர்ட்ஸ்பிரஸ். பதிவு
1. ஊர் உலகத்தைப்போல், நானும் எனது ஆழ்ந்த இரங்கலை பாரதரத்ணா அப்துல்கலாம் அவர்களுக்கு சமர்ப்பணம். பி.கு. அவர்படித்த அதே புனித வளனார் கல்லூரி, திருச்சியில் படித்தது மகிழ்ச்சி.
2, ஈரோடு, புத்தகத்திருவிழா நிறைவு தினத்தன்று செல்ல முடிந்தது. என்னா கூட்டம்.. அதிலும், ஆங்கிலப்புத்தகங்கள் விற்கும் ஸ்டாலில்
நாம் தேடும் புத்தகங்களை எடுக்க உதவும் சிறிய வகுப்பு படிக்கும் மாணவர்கள். வருங்கால இந்தியா உண்மையில் படித்த, அறிவாளிகள் நிறைந்து இருக்கும் எனத்தெரிகிறது.
3, திரு. உமேஷ், மதுரைக்காரர். இந்திய அளவில் 77வது ரேங்கில் ஐ.ஏ.எஸ். பாஸ்செய்திருக்கிறார்… அவருடைய பதிவினை படிக்க படிக்க உற்சாகம் பொங்குகிறது. அதிலும் இந்தியாவின் முக்கியமான பிரச்சினை … பணக்காரர், ஏழை வித்தியாசம்.. நமது, இந்தியப் பாரம்பரியத்தின் முக்கிய தூணான ச சகோதரத்துவம் குறைந்துவிட்டதைப்பற்றி வருத்தத்துடன் குறிபிட்டிருக்கிறார்..
4, இந்திய சுதந்திரநாள் வழக்கம்போல் ஆகஸ்ட் 15, எவ்வளவு தியாகம்… ஆனால், நாம் இப்போ அதை எப்படி பயன்படுத்துகிறோம்.
5. எங்கும் நீக்கமற நிறைந்திருந்திருக்கும் ஊழல் …

என்ன செய்ய, நானும் உங்களைமாதிரி ஒரு இந்தியப்பிரஜை….
Tamil Blogs Traffic Ranking

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

பாபநாசம் .. திரை விமர்சனம்…

பாபநாசம் .. திரை விமர்சனம்…
papanasam tamil film review

இளமை இதோ இதோன்னு பாடிய கமலுக்கு வயசாகிவிட்டது. அதுவும் இந்த பாபநாசம் படம் ஆரம்பம்மே கமலனின் மிகமிக குளோசப் காட்சியில் ஆரம்பித்து கடைசி காட்சியும் குளோசப் காட்சியில் முடிவடைகிறது. படம் ஆரம்பித்து முதல் 25 நிமிடங்களுக்கு இது எந்த மாதிரி படம்ன்னு நாம யோசனை பண்ணவே முடியாது… அந்தளவிற்கு ஒரு பெரிய கிராமத்தின் தினசரி நடைமுறைகளைப் இன்ஞ் இன்ஞ்சாக பதிவு செய்திருக்கிறார்கள்.
x1
கமல், கௌதமி ஒரு முன்னேறிவரும் நடுத்தர வர்க்கக் குடும்பம் இவர்களுக்கு டீன் ஏஜில் ஒரு மகளும், சிங்கிள் ஏஜில் ஒரு மகளும் அன்பும் பாசமும் சந்தோகமாக மலைக்கிராமத்தில் இயற்கை அழகுகொஞ்ச வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். இடையில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத சம்பவத்தால் இக்குடும்பம் அந்த மாவட்டத்தின் டிஐஜி ரேங்கில் உள்ள பெண் அதிகாரியின் கொடுமைக்கு ஆளாக நேர்கிறது. அந்த போலீஸ் அதிகாரவர்க்கத்தின் பிடியில் இருந்து தனது குடும்பத்தைக் காக்க, படிக்காத கமல், தனது பட்டறிவு ( உபயம்.. தினந்தோறும் 3 சினிமாக்கள் பார்ப்பது ) பயன்படுத்தி ஒவ்வொரு கோணத்திலேயும், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்கிறார். கடைசியில், வன்முறை மூலம் உண்மையை அறிய போலீஸ் முனையும்பொழுது, மாட்டிக்கொள்ளும் சூழ்நிலையிலும் தன் குடும்பத்தைக்காக்க என்ன செய்தார் என்பதே, இந்தப்படம், கடைசியில், அனைத்து வழிகளும் மூடப்பட்டு, போலீஸ் அதிகாரி தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டும், விடாமல் கமலைத்துரத்தி துரத்தி கேட்டாலும், உரிய பதில் கிடைக்காமல் அமெரிக்கா கிளம்பிவிடுகிறார்.
x2
கமல், கௌதமி உண்மையில் ஒரு நடுத்தர குடும்பத்தை அப்படியே திரையில் பிரதிபலிக்கிறார்கள். இரு பெண்குழந்தைகளும் தங்களின் பாத்திரம் அறிந்து அறுமையாக நடித்திருக்கிறார்கள். கமலின் நண்பர்கள் மற்றும் சாட்சிக்காக நண்பர்களாக்கபட்டோர்களும் த்தருபமாக நன்றாக நடித்திருப்பதால் பல டிஸ்யூம் டிஸ்யூம் படங்களுக்கு மத்தியில் ஒரு திரில்லர் கம் குடும்பப்படம் பார்த்த திருப்தி.. கேமரா, பாபநாசத்தையும், தென்காசியையும் ( உண்மையில் பாபநாசம் தானா அல்லது வேறு இடமோ தெரியவில்லை) பச்சை பசுமையாக கண்னுக்கு விருந்தாக்கியிருக்கிறார்கள். இசையும், காட்சிக்கேற்றவாறு அமைந்திருப்பதும், கேரள படத்தின் ரீமேக் என்ற குறையே தவிர, தமிழ் வசனங்கள் வெரிகுட் ரகம்தான்.
Tamil Blogs Traffic Ranking

ஐ திரை விமர்சனம்.

ஐ திரை விமர்சனம்.
I .. Tamil Film Review..

ஜெண்டில்மேன் சங்கரின் வரவால் தமிழ் சினிமா கொஞ்சம் நிமிர்ந்தது உண்மை, தொடர்ந்து அந்த மாதிரி வித்தியாசங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இந்த முறை ஐ … பட டைட்டிலே கொஞ்சம் என்னவாக இருக்கும்ன்னு பயங்கர பில்டப் கொடுத்தது. தொடர்ந்து பொங்கல் விடுமுறையில் முக்கிய தியேட்டர்களையும் ஆக்கிரமித்தாலும், ஒரளவிற்கு ரசிகர்பட்டாளங்கள் அனைவரும் மாய்ந்து மாய்ந்து பாத்துவிட்டார்கள்.. இருப்பினும் படம் சரியாக போகவில்லை போலிருக்கிறது.
லிங்கேசன்.. விக்ரம்.. சென்னையில் ஒரு சேரியில் வசிக்கும் சாதாரணமானவர், அவருடைய எண்ணமெல்லாம், பாடி பில்டிங் சேம்பியானாக வேண்டும் என்பதே, ஒரு டாக்டர் என்ன காரணத்திற்கோ விக்ரத்தை ஸ்பான்சர் செய்கிறார், பாடி பில்டிங் தாதா ஒருவர் இவர் போட்டியில் ( கதாநாயகன் இல்லையா ? ) கலந்து கொண்டால் எங்கே முதல் பரிசை வெல்ல முடியாதோ என்று எண்ணி வீராப்பு காண்பிக்கிறார்.
B
இப்படி இருக்க, விக்ரம் ஜொல்லுவிடும் மாடல் அழகி மற்றும் சினிமா கதாநாயகிக்கு பாடி கார்ட்டாக செல்ல வாய்ப்பு அமைகிறது. அங்கே, மாடலிங்செய்யும் கூட ஒர்க்பண்னும் ஆண் கதாநாயகியை செக்ஸ் சில்மிஷம் செய்ய, கதாநாயகி திட்டமிட்டு, விக்ரத்தை ஆண் ஒர்க்பண்னும் பகுதியை செய்ய வைக்க பிரயத்தனம் செய்து வெற்றியும் பெறுகிறார்… விக்ரமின் எதிரிகளில் ஆண் மாடலிங்கும், விக்ரமை தயார் படுத்தும் பொழுது மேக்கப் செய்யும் திருநங்கை விக்ரமின் மீது மையல் கொள்ள, விக்ரமோ கதாநாயகியை மொய்க்க, கதாநாயகியோ விக்ரமை வெறுக்க, படம் அப்படியே சீனாவில் நாம் பார்த்து ரசித்து ஆகவேண்டும் என வித்தியாசமான இடங்களை டிஜிட்டலில் சுருட்டிக் திகட்ட திகட்ட படைத்திருக்கிறார். ஆனால், திரும்ப திரும்ப சிகப்பு மலர்களின் பிண்ணனியே ரொம்ப நேரம் வருவது கொஞ்சம் எரிச்சலாகிறது.
A
விக்ரம் மாடலிங் செய்த பிராடக்ட் பிச்சுக்கிட்டுபோக, அந்த பிராடக்ட் போலி எனத்தெரியவற அதைப்பற்றி மீடியாவில் தெரிவிக்கும் விக்ரமிற்கு பிராடக்ட் முதலாளியும் எதிரியாகிறார். ஆக 5 வில்லன்கள் உருவாக, விக்ரமை காலிசெய்ய ஐ என்னும் வைரசை ஊசி மூலம் விக்ரமிற்கு செலுத்திவிட அதன் பயனாய் உருவம் மாறி கொழுக்கட்டை கணக்காக முகமும் உடலும் குறுகி விகாராமாகிறது.. இதற்கிடையில் அபரிதமான அன்பினால் கதாநாயகியும் விக்ரமை உண்மையாக காதலிக்க ஆரம்பிக்க, உடல் மாற்றமானபின்பு, கதாநாயகியை டாக்டர் குறுக்குவழியில் திருமணம் செய்யும் நாளில் மண்டபம் புகுந்து கடத்திவிடுகிறார். அதன்பின்பு, விக்ரமும் கதாநாயகியின் உதவியால் உடல்நலம் பெற்றும் நண்பனின் உதவியால் எதிரிகளை இதேபோல் விகாரமான உருவத்திற்கும் சிரமத்திற்கும் ஆளாகும் விதமாக பழிவாங்கி பழித்தீர்த்துக்கொள்கிறார். விக்ரமின் உழைப்பு, கதாநாயகியின் அழகு, காமெடியின் சிரத்தை, ரகுமானின் இசை என பலமுனைத்தாக்குதலில் ரசிகரை போட்டுத்தாக்குகிறார்கள்.படம் கொஞ்சம் இழுவைதான்… பிரம்மாண்டமும், பாடல்களும் அசத்தல்… பார்க்கலாம் ரகம்தான்… அடுத்து இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறோம் சங்கர் சார்.. வாழ்த்துக்கள்
Tamil Blogs Traffic Ranking
Thenkoodu
World Tamil Blog Aggregator

என் அப்பா எப்பொழுதும் எனது செல்லம்…

என் அப்பா எப்பொழுதும் எனது செல்லம்…
Dad is always great ….

இப்பதிவு வா. மணிகண்டன் அவர்கள் அறிவித்த உங்களைக் கவர்ந்தவரைப்பற்றிய பதிவுகளில்

மசால் தோசை 38 ரூபாய்

    புத்தக வெளியீட்டிற்கான பரிசிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதனை மகிழ்க்சியுடன் தெரிவிக்கிறேன்.
    http://www.facebook.com/vaa.manikandan
    http://www.nisaptham.com/
    பார்க்க…
    …………………………………………………………………………………………………………
    வழக்கமா எல்லாரும் அம்மாவிற்கே ஓட்டு போடூவார்கள்… அப்பாவின் மீது கரிசனம் இருந்தாலும், நெக்ஸ்ட் டூ மதர் என்ற ரீதியில் தான் கவனம் இருக்கும். என்னைப்பொருத்தவரையில் எனது முதல் கவனம் அனைத்தும் அப்பாவிற்கே சேரும்… ஏன்.. எப்படி? சிம்பிள்… அம்மாவிற்கு நேரமில்லை என்ற ரீதியில் எப்பொழுதும் கவனம் இல்லாமல் தனது பணியைப் பற்றியே சிந்தனை கொண்டு பிள்ளைகளை ஒதுக்கி பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓடிக்கொண்டே இருந்ததுதான். எத்தனையே மாலை நேரங்களில் பள்ளிவிட்டு வந்தும் வெறுமையான வீட்டை யாருமில்லாத வீட்டின் கதவைத்திறந்து தானே இருப்பதை கொட்டிக்கொள்ளும் பழக்கம், அடுத்த வீட்டில், அன்புடன் மாலைப்பொழுதில் அம்மாவின் கைவண்ணத்துடன் செய்துதரும் சிற்றுண்டிக்கு மணம் ஏங்குகையில், ஓரளவிற்கு மனதை அறிந்தவாறாக, அப்பா ஆபந்பாந்தவாறாக வந்து சேர்கிறார் கையில் அய்யர் கடை தோசை, சுவையான சாம்பார் சட்னியுடன்… அப்பப்பர் அந்த தருணங்கள் உண்மையில் தற்சமயம் 5 ஸ்டார் ஓட்டலில் கிடைக்கும் விருந்தைவிட மகிழ்ச்சியை அளித்தது.
    bbb
    சைக்கிள் விட தெரியாத காலத்தில் தைரியமூட்டி, கீழே விழுந்ததாலும் காயங்களுக்கு மருந்துப்போட்டு தெம்பாக சைக்கிளை ஓட்டச் சொல்லி, குரங்குபிடல் போட்டாவது தெருவை மட்டுமல்ல, கடைவீதிக்கும் போய்ட்டுவா ராசா என அனுப்பிவைப்பதில் அப்பாவிற்கு நிகர் அப்பாவே… கூடுமானவரை பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு வந்து விட்டு செல்ல முடியவில்லையென்றாலும், அக்கறையாக பள்ளியில்நடந்ததைப் பற்றி கேட்டறிந்து, வகுப்பு ஆசிரியரை கண்டிப்பாக ஒருமுறையாவது நேரில் சந்தித்து ( இப்பொழுது போல் பேரண்ட்ஸ் மீட்டிங் கட்டாயம் இல்லை அப்பொழுது ) பையனைப்பற்றியும், சேர்மானம் பற்றியும் விசாரித்து வைத்துக்கொள்வார். இருந்தாலும் நாமெல்லாம் மனிதர்கள்தானே, மனம் குரங்குபோல் இஷ்டத்திற்கு யோசித்து… அப்படி இப்படி பசங்களுடன் இணைந்து கட் அடித்துவிட்டு சினிமாவிற்கு செல்வதும், அஜால் குஜால் படங்களுக்கு எப்படியாவது சென்று விடுவ்தும், தெரு அண்ணாக்களுடன் இணைந்து பாட்டீல் துளிகளை முகர்ந்தும், அப்பாவிற்கு அரசல் புரசலாக தெரிந்தாலும், இதெல்லாம் ஆம்பளைகள் வாழ்வில் சகஜம் என்று தானே திருந்திவிடுவான் என நம்பிக்கையுடன் காத்திருந்ததும்… அப்பப்பா….
    aaa
    டூவீலர் ஓட்ட கற்றுக்கொடுத்து பெட்ரோலுடன் வண்டியையும் கொடுத்து, ஊர்சுற்றினாலும் வருத்தப்படாமலும்… விடலைக் காதல் நேரத்தில் கிடைத்த பெண்ணிடம் கடலை போட்டாலும், கண்டும் காணாமலும் இருந்தது அப்பப்பா…. வேலையை நாமே தேடிக்கொள்ள, தேவைப்பட்ட வைராக்கியம் நம்பிக்கையையும் விதைத்ததில் அப்பாவிற்கு வேறொரு டூப் தேவையில்லை. திருமண வயதில், ஓடி ஓடி கடைசியில் நமக்கே நமக்கே பிடித்த பெண்ணை மட்டுமே கட்டிவைத்ததும், பின்னால் பிரச்சினைகள் உருவானபோது வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என விடைத்தாலும், இருபக்கமும் சமரசம் பேசி ஒட்ட வைத்துக் கொண்டே இருந்தது.. குழந்தைகள் பிறந்ததும், அன்புடன், ஆசையுடன் எடுத்து சீராட்டியது… பேரக்குழந்தைக்கு மரணவிளிம்பில் ஏற்பட்ட சோகத்தை தாங்காமல் மருத்துமணை ஐசிக்கு வெளியே குலுங்கி குலுங்கி அழுததும்… இன்றும் இதுபோல் அளவிட முடியாத அன்புடன் ஆண்டவனின் அருளுடன் அப்பாவின் அன்பு தொடர்கிறது….
    … சிவபார்க்கவி
    Tamil Blogs Traffic Ranking
    Thenkoodu
    World Tamil Blog Aggregator

    கயல்.. திரை விமர்சனம்

    கயல்.. திரை விமர்சனம்.
    kayal .. tamil film review

    டிசம்பர் 26, ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவம், இந்த தலைமுறையினாரால் மறக்க இயலாத ஒரு சம்பவம், இந்தத்திரைப்படம் அந்த சம்பவத்தை மையமாக வைத்தே புனையப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஆரம்பகாட்சிகளில் ஏகமாய் இயற்கை காட்சிகளின் ஊடே பயணித்து, நம்மை ஒரு எதிர்பார்ப்பிற்கு கொண்டு சென்று, மறக்காமல் ஏமாற்றியும் விடுகிறார்கள்.. நாயகன், அவருடைய நண்பர் இருவரும் வழிபோக்கிகள், ஆறுமாதம் ஏதாவது பணிபுரிந்து தேவையான பொருளைச் சேர்த்துக் கொண்டு பிறகு ஆறுமாதம் இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களையும் சுற்றிபார்த்து மனதை நிறைக்கும் வாலிப வழிபோக்கிகள்.. வால்பாறையில் இயற்கையை பருகிய கையோட கோயம்புத்தூர் புகைவண்டிநிலையத்தில் காவலர் ஒருவரை கலாய்க்க, அதனால் தீவிரவாதிகள் என முத்திரைக்குத்தி அலைக்கழிக்க போகிறார்கள் என்று பார்த்தால். ஊகும்.. காவல் உயரதிகாரிக்கே பாடம் எடுத்து, ஏகப்பட்ட ( அதாங்க இந்த உலகில் பணம் முக்கியமல்ல… நாம் அனுபவித்த அனபவங்கள், பார்த்த இடங்கள் நினைவுகள், பசுமையான காலஓட்டம் ஆகியவையே முக்கியம் என 15 நிமிடமாக பாடம் சொல்லிக்கொடுத்து நமக்கே போதும் மக்கா,
    y0
    அடுத்து என்ன .. என்று கேட்கும் அளவிற்கு ) கலாய்ப்பிற்கு பின், விடுதலையாகி ஆரல்வாய்மொழி ஊரில் ( கன்னியாகுமரி போகும் வழியில்) கரும்புத்தோட்டத்தில் குளித்து, கரும்பை வெட்டி சாப்பிடும் பொழுது ஒரு இளைஞியும், மூன்று இளைஞர்களும் ஓடிவர, இவர்களைப்பார்த்த அரண்டுபோய் கொண்டுவந்த பையை போட்டுவிட்டுச் செல்ல, அந்த பையை அவர்களைத் துரத்திபிடித்து ஒப்படைத்துவிட்டு திரும்பும்பொழுது, இவர்களை ஒரு ரவுடி கும்பல் துரத்திபிடித்துக் கொண்டுபோய் ஒரு ஜமீன்வீட்டில் அடைத்து கொடுமைப்படுத்த, தூதாக வந்த அந்த வீட்டின் வேலைக்காரி (கயல்)யை பார்த்து கதாநாயகன் அனைவருக்கும் முன்னே காதலைச்சொல்ல, ஜாதிக்கு முக்கியம் தரும் அந்த கிராமத்தினரால் பெட்ரோல் ஊற்றி கொளுத்த இருக்கும் சூழ்நிலையில், காட்சிகள் மாறி கதாநாயகன் மற்றும் நண்பரை விடுதலை செய்ய, கன்னியாகுமரிக்கு செல்கிறார்கள். இடையே, கயல் கதாநாயகன் மேலே காதல் வயப்பட்டு, அந்த வீட்டை விட்டு வெளியேறி கதாநாயகனை சந்திக்க, கன்னியாகுமரி செல்ல, கதாநாயகன் கன்னியாகுமரியில் இருந்து காதலியை கைப்பிடிக்க ஆரல்வாய்மொழிக்க செல்ல, இடையில் நடக்கும் ஜாதிக்கலவரத்தில் இருவரும் ஒரே வாகனத்தில் பயணத்தில் சந்திக்க வாய்ப்பில்லாமல், ஆரல்வாய்மொழிக்கு சென்று காதலி கன்னியாகுமரிக்கு சென்றிருக்கிறார் என்றும் காதலிக்கிறார் என்றும் அறிந்து கன்னியாகுமரிக்கு திரும்பவும் வருகிறார்கள். டிசம்பர் 25, கிருஸ்துமஸ் விழா அன்று அருகருகே காதலனும், காதலியும் இருந்தும் சந்திக்க விடாமல் கூட்டம் அலைமோதி, அடுத்தநாள் காலை டிசம்பர் 26, காலை சுனாமி வருவதற்கு முன் கடல் உள்வாங்க, எதிர்பாராத விதமாக இருவரும் ச்ந்தித்து கொள்கிறார்கள். ஆனால், என்ன செய்ய, அடுத்த சில நிமிடங்களில் சுனாமி வந்து விடுகிறது… ( சுனாமி காட்சி அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது ) ஏகப்பட்ட இடிபாடுகளில் சிக்கி, அடிபட்டு ஒரீடத்தில் படுத்திருக்கும் கதாநாயகனை பிணம் என்று எடுத்துசெல்வதைப்பார்க்கும் கயல் கதற, கதறலைக்கேட்ட பிணம் அதாங்க நம்ம கதாநாயகன் முழித்துக்கொண்டு அடித்துபிடித்து ஓடிவந்து கட்டிபிடிக்கிறார்….
    y2
    இந்தப்படத்தைப்பொறுத்த மட்டில் கேமராதான் கதாநாயகன், அப்பா பாலைவனம் ஆகட்டும், பசுமையான சோலைகளாகட்டும், சாதாரண இடிந்த கட்டிடம் ஆகட்டூம், காய்ந்த கரும்புத்தோட்டமாகட்டும், குப்பைமேட்டைக்கூட மிக அழகாக படம்பிடிக்க முடியும் என நிரூபித்திக்கிறார்கள். சபாஷ்.. காவல்துறை மீது என்ன கோபமே தெரியவில்லை எதார்த்தமாக காண்பிக்கும் விதமாக, பயங்கரமாக கலாய்த்திருக்கிறார்கள்… ஆரம்ப காட்சியில் சிக்கிக்கொள்ளும் எல்ஐசி ஏஜெண்ட் மீது நமக்கே பரிதாபம் வந்துவிடுகிறது. லாரிடிரைவவர் வில்லனாக இருக்குமோ என்று கவலைப்பட்டும், அண்ணாவாக மாறிவிடும் தருணம் (அருமை !), போலீஸ் அதிகாரியின் கண்டிப்பு, இளம்பெண்களை சுற்றுலா அழைத்து வந்திருக்கும் குண்டு காமெடி ரொம்ப ஸ்டிரிக்ட் ஆக இருப்பதும், இளம்பெண்கள் பாதுகாப்பு தருவதும், உதவுவதும், தேவையில்லாமல் குடிகார லாட்ஜ் உதவியாளர், என பல கதாபாத்திரங்கள் வந்தும் படத்தை நகர்த்துகிறார்கள். ஆக, கயல் வருட இறுதியில் ஒரு அருமையான காதல் ரசம் சொட்ட சொட்ட மனங்குளிரும் படமே…
    Tamil Blogs Traffic Ranking
    Thenkoodu
    World Tamil Blog Aggregator

    பிசாசு .. திரைவிமர்சனம்.

    பிசாசு .. திரைவிமர்சனம்.
    pisasu .. tamil film review
    ஆரம்பமே ஒரு அழகான பெண் விபத்தில் சிக்கி தலையில் அடிப்ட்டவாறு தெருவில் கிடக்க, ஒரு இளைஞர் மற்றும் சிலர் சேர்ந்து எடுத்துக்கொண்டு மருத்துவமணை செல்கிறார்கள். மருத்துவமனையில் வாயிலேயே, பெண் இறந்துவிட இறக்கும்போது உதவிக்கு வந்த இளைஞனின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு இறந்து விடுகிறார். பிறகு சிறிது நாட்கள் கழித்து, அந்த இளைஞனி இருப்பிடம் ( சாதரணமாக வயலின் வாசிக்கும் கலைஞன், அவ்வளவு ரிச்சான அப்பார்ட்மெண்டில் தங்கியிருப்பது கொஞ்சம் இடிக்கிறது ) நோக்கி இறந்த பெண் ஆவியாக வந்து சில்மிஷம் செய்கிறது ( ஆனால், நல்லவிதமாக ), டெரராகும் இளைஞன் ( மூஞ்சியை கடைசிவரைக்கும் காண்பிக்காமல், தலைமுடியைப் போட்டு போர்த்திக்கொண்டு .. நமக்கே எரிச்சலாக வருகிறது ) இதற்கான காரணத்தை நண்பர்களுடன் ஆராயப்போக, பெண்ணின் உடலை எரிக்காமல் புதைக்கப்பட்டதும் விபத்திற்கு காரணமானவரை பழிவாங்கவே வந்திருக்கிறது என்று தெரிந்துகொள்கிறார்.
    a1
    பெண்ணின் பாசமான அப்பா, ஐஸ்பாக்டரி வைத்திருப்பதால், பெண்ணினின் ஆவியும் அங்கேயே குடியிருக்கிறது… அதற்கு அப்பாவும் ஒரு காரணமாகிறார்… கடைசியில் விபத்தை செய்தவரை கண்டுபிடித்தும், அப்பா கேட்டுக்கொள்வதற்கு இணங்கவும், பெண்ணின் ஆவி காருடன் எரிந்து சாம்பலாகிறது. பிசாசைக் கண்டுபிடிக்க வரும் கார்ப்பரேட் டீமை, பிராடு டீம் என்று நமக்கே தெரிகிறது, பிசாசு தன்பங்குக்கு கொஞ்சம் போட்டு அனுப்புகிறது. அதேபோல், பெண்ணடிமை செய்யும் ஒருவரையும் தலைகீழாக போட்டு உதைக்கிறது.
    a0
    வழக்கம்போல், அப்பார்ட்மெண்டில் திகில் காட்சிகளும், வயலின் மூலமே திகிலை உருவாக்க முயன்றிருக்கிறார் மிஷ்கின் டீம்.. இவருடைய முந்தைய படங்கள் நன்றாக இருந்தும் சரியாக போகவில்லை என்ற வருத்தத்தில் இருப்பார் போல, இந்த முறை பேயைவைத்து கும்பலை கூட்டுகிறார். கொஞ்சமாக ஜெயிக்கவும் செய்திருக்கிறார்.. காட்சிகள், கோணங்கள், குறைவான இடங்ககைளே திரும்பி திரும்பி வந்தாலும் அலுக்க வில்லை.. இறுதிகாட்சிவரை இயல்பாகவே பிசாசை காண்பித்திருந்தாலும், கொஞ்சமாக உருவமாக கடைசியில் காண்பிப்பது ஏற்றுக்கொள்ள இயலாது.. எனினும், பிசாசைத்தவிர, இதர கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பிசாசைப் பார்க்கலாம்…
    Tamil Blogs Traffic Ranking
    Thenkoodu
    World Tamil Blog Aggregator

    வேல்முருகன் போர்வெல்ஸ்

    வேல்முருகன் போர்வெல்ஸ்
    Velmurugan Borewells .. Tamil Film Review

    பொருத்து பார்த்து சும்மா இருந்த கஞ்சா கருப்பு தன் சொந்த காசைப் போட்டு கிட்டத்தட்ட உறீரோ கணக்காக இந்த வேல்முருகன் போல்வெல்ஸ் படத்தை நடித்து வெளியிட்டிருக்கிறார். தன் கூட சுமார் அரை டஜன் காமெடி நடிகர்களையும் சேர்த்துக் கொண்டு, பேருக்கு ஒரு உறீரோ, உறீரோயின் என விடலை காதலையும் இணைத்து தன் சொந்த ஊரான சிவகங்கை, காளையார்கோவில் போன்ற இடங்களிலும், கிட்டத்தட்ட ஒரு கிராமத்தில் முக்கா படத்தையும் இடை இடையே மசாலாவாக கவர்ச்சி, பாடல், சிரிப்பு என மண்ணின் மணம் கமிழ வெளியிடப்பட்டிருக்கிறது.
    a1
    சிவகங்கையை சுற்றி உள்ள வானம் பார்த்த பூமிகளில் சொற்ப காசிற்கு போர்வெல் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி நன்றாக பணம் பண்னுகிறார் கஞ்சா கருப்பு, இவருக்கு உதவியாக அரைடஜன் காமெடி நடிகர்களும் சேர்ந்து பயணிக்கிறார்கள். போர்வெல் ஆப்பரேட்டர் தான் உறீரோ, தற்செயலாக டிவி புராகிராம் பார்கையில் ஒரு பெண் நன்றாக பேசுவதைப்பார்த்து கண்டதும் காதாலாகிறது. சந்தர்ப்ப வசத்தால் அந்தபெண்னுக்கு உதவப்போக, அவருடைய ஊர் பெயர் தெரிய வருகிறது. ஓனர் கஞ்சா கருப்பு ஆந்திராவிற்கு போனசந்தர்ப்பத்தில், காதலியின் (ஒருதலை) ஊரில் போர்வெல் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தந்தால், காதலை வளர்க்கலாம் என எண்ணி காதலி ஊருக்கு சென்று போர்வெல் போட்டு தண்ணீர் வசதி செய்கிறார்கள். தண்ணீர் இல்லாத ஊரில் தண்ணீர் வசதியைக்கண்ட பெண்கள் தங்களுக்குள்ளே அடித்துக்கொள்ள, அது ஊரே சேர்ந்து நடத்தும் யுத்தம்போல் ஆகிவிட, இவர்கள் போர்வெல் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப, 5 பேருக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. பஞ்சாயத்து வைத்து 5 பேரின் காயம் ஆறும்வரை வண்டியையும், இவர்களையும் சிறைபிடிக்க வேறுவழியில்லாமல் ஊரில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஓணர் திரும்பிவந்ததும், செல்போனிலேயே டபாய்த்து காலம் கடத்துகிறார்கள். ஓணர் கண்டுபிடித்து இவர்களுடன் சேர்ந்து கொள்ள, மழைவந்து வெள்ளத்திலிருந்து ( தேவர்மகனில் வருமே அதுமாதிரி ) ஊர்காரர்களை காப்பாற்றி விடுவதால், காதலே கூடாது என தடைசெய்யப்பட்டிருக்கும் கிராமத்தில், ஊர்பெரிய மனிதர் முன்வந்து காதலை வாழவைப்பதே கதை.
    a2
    பாடல்கள் நன்றாக இருக்கிறது.. பிண்ணனி இசைதான் சமயத்தில் கொஞ்சம் இழுவை… மண்ணின் வாசத்தை அப்படியே பாரதிராஜாபோல் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் கஞ்சா கருப்பு டீம். பார்க்கலாம்..
    Tamil Blogs Traffic Ranking
    More than a Blog Aggregator
    Thiratti.com Tamil Blog Aggregator
    Thenkoodu