தனிஒருவன் … தி கிரேட் மூவி…

தனிஒருவன் … தி கிரேட் மூவி…
THANIORUVAN … THE GREAT MOVIE
ஆரம்பமே அசத்தல், கடத்தி செல்லும் இரு பெண்கள் கதற, ஒரு இளைஞர் அடித்து துவைத்து கண்டெய்னர் லாரியில் ஏற்றிவிட்டு 4 இளைஞர்களும், ஜெயம் ரவி (மித்ரன் படத்தில் பெயர்) இணைந்து செய்கிறார்கள்… அப்பாடா மறுபடியும் ஒரு கொள்ளைக்கூட்டமா என்று அயர்ச்சி கொள்ளும்பொழுது ஐவரும் 10 நிமிடம் சிசி கேமராவை ஜாம் செய்துவிட்டு உறாஸ்டலில் திருட்டுத்தனமாக ஏறிக்குத்து செட்டிலாகிறார்கள். அடுத்தநாள் தான் நமக்கு தெரியவருகிறது… கடத்திவரப்பெற்ற பெண்கள் இருவரும், ஒரிஜினல் கடத்தல்காரரின் மனைவியும், தம்பியும் இளைஞர்கள் கடத்திப்பட்ட 5 இளம் சிறார்கள் மீட்பது… டிவிஸ்ட்..
1
ஜெயம்ரவி, ஒரு ஐபிஎஸ் அதிகாரி மிசொரி ( என்னா அழகான இடம்… ) பயிற்சியின்போது, எதிர்பாராமல் ஜொள்ளுவிடும் நயன்தாரா (இவரும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி) இருவருக்கு இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனாலும் பயாலஜி ஒர்க் ஆகாமல் ஒட்டாமலே பாட்டுபாடிக்கொண்டு இருக்கிறார்கள்…எனினும் இனிமையான ஜோடியாகத்தான் தெரிகிறார்கள்.
2
மித்ரனின் ஒரே நோக்கம், கடுமையான குற்றங்களைப்புரியம் டாப் 3 யை தூக்குவதுதான், அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் செய்தித்தாள்களின் வரும் செய்திகளின் பிண்ணனி அதன் தொடர்ச்சி, பின்புலம் ஆகியவற்றை ஆராய்ந்து அறிந்துகொள்ளும் சிறப்புகுணம்…எதிர்பாராமல், கிரானட் கொள்ளைகாரர், மருத்துவகொள்ளைக்காரர், பெரிய ரவுடி மூவரைப்பற்றியும் அறிந்து கொள்ளும்பொழுதுதான் இம்மூவரையும் இயக்குபவர் ஒருவர் அர்விந்த்சாமி, பின்புலம் அரசியலில் அப்பாவை மந்திரியாக்கியதும் சின்னவயது அர்விந்த்சாமிதான் எனத்தெரிந்து அவரைப்பின்தொடர்கிறார். கேன்சர் மருத்துக்கான இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாகும்பொழுது எவ்வளவு முயன்றும், முடியாமல் போகவே, அர்விந்த்சாமி எதிரியான மித்ரனை உடம்பில் உள்ள ஸ்பையை வைத்து ஆப்ரேஷன் செய்துவிடுவதால் என்னசெய்தாலும், பேசினாலும் உடனுக்குடன் அர்விந்த்சாமிக்கு தெரியவரவே, அதனால், மித்ரனின் நண்பனை இழக்கவும், எந்தசெயலிலும் தோல்வியே மிஞ்சுகிறது. கடைசி 20 நிமிடங்களின் போதுதான் தன் உடலில் உள்ள ஸ்பையை அகற்றி அதை வைத்தே, அர்விந்த்சாமியை குழப்பி, இறுதியில் அர்விந்த்சாமியை என்கௌன்டர் திட்டத்தில் இருந்து காப்பாற்ற முயற்சிசெய்கிறார். ஆனால் என்ன நடந்தது, படத்தைப்பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.

மிகஅருமையான நடிப்பு ஜெயம்ரவி, நண்பர்கள், அர்விந்த்சாமி, தம்பிராமையா, நயன்தாரா.

இசையும், படப்பிடிப்பும், இயக்கமும் அருமை.

டோண்ட் மிஸ் இட்..
Tamil Blogs Traffic Ranking

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

ஏன் இந்தப் போராட்டம்..?

ஏன் இந்தப் போராட்டம்..?
Why this Protest ?
காலையில் எழுந்து விடுதியின் கீழ்த்ளம் வழியாக ரோட்டிற்கு சென்றதுதான், எங்கிருந்தோ பறநது வந்த காக்கை ஒன்று தலையில் கொத்திவிட்டு அருகில் இருந்த மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டது. அதற்கு துணையாக, பல காக்கைகளும் சேர்ந்து கொண்டு தொடர்ந்து தாக்க வந்து கொண்டே இருந்தது… அய்யோடா, இது என்ன மாயம் எதுக்காக நம்மை இப்படி டார்கெட் செய்யுது இந்தக்காக்கைகள் அப்படின்னு சிறுதுதொலைவில் உள்ள வழக்கமான டீக்கடையில் டீ அருந்திவிட்டு திரும்பினேன். நான் தங்கியிருக்கும் அறைகளின் நுழைவாயில் அருகே உள்ள
crow-attack_0
பால்கனியில் சிறிதுநேரம் நின்றுகொண்டு சாலையில் செல்லும் வாகனங்களையும், மனிதர்களையும் வேடிக்கை பார்ப்பது வழக்கம். அப்போதுதான் கவனித்தேன், அருகில் இருந்த மரத்தின் கிளைகள் பால்கனியைத் தொட்டுக்கொண்டிருப்பதும், உற்று நோக்குகையில் உள்ளே ஒரு கிளையில் காகம் கூடுகட்டி முட்டைபொரித்து குஞ்சும் பொரித்துள்ளது. நான் இரவு நேரங்களில் பொழுது போகாமல் பால்கனியில் சாய்து கொண்டு வேடிக்கை பார்ப்பது வழக்கம் அதுபோல் முதல்நாள் வேடிக்கைப் பார்த்ததை இந்த காக்கைக்கூட்டம் தனது காக்கைக் குஞ்சுகளுக்கு தீங்கு விளைவிக்க வந்திருக்கிறேனோ என்று அஞ்சிதான் மேலே கண்ட நடவடிக்கையில் காலையில் ஞாபகமாக என்னை (இருட்டில் பார்த்தது எப்படி ஞாபகம் இருக்கிறது பாருங்கள்) குறிவைத்து தாக்கியிருக்கிறது. வீட்டிற்கு போன்செய்து, இந்த விசயத்தை சொன்னால் உடனே, அய்யயோ, சனிஸ்வரனுக்கு உடனே விளக்கு போடுங்கள், திருநள்ளாருக்கு போய்டு வரனும் அப்படின்னு ஆரம்பித்துவிட்டார்கள்.
crow-attack_1
காக்கையே இப்படி போராடுகிறது…

செய்திப்பார்வை…
blogers1
0, இந்தியாவில் 2014ம் வருடம் தூய்மையான நகராம் என்று திருச்சிக்கு 2ம் பரிசாம்… இன்னமும் குப்பைகளினால் நிறைந்தும், ஆடு மாடுகள் சர்வ சாதாரணமாக தெருவில், ரோட்டில் சுற்றி வருவதும், தெருவிற்கு ஒருவர் அல்லது இருவர் ஆடு, மாடுகள் வளர்த்து தெரு முழுதும் சாணிகளால் நிறைத்துவிடுவது நடைபெற்றுதான் வருகிறது.

1, இலங்கையில் ஒருவழியாக ரணில் விக்கிரமசிங்கேயை செயிக்கவைத்து, ராஜபக்ஷேயை ஓரங்கட்டியாகிவிட்டது… இனிமேலாவது அங்கே அமைதி திரும்பி நல்ல வாழ்க்கை கிடைக்கட்டும்., எவ்வளவு இரத்தம் சிந்தியிருக்கிறான் ஈழத்தமிழன்…

2. தூய்மை இந்தியா திட்டத்தின் விளம்பரத்திற்காக 92 கோடி செலவானதை விமர்சிக்கிறார்கள். உண்மையில் அதுபோல் விளம்பரம் செய்துமே, தூய்மைப்பற்றி அக்கரையில்லாமல் தான் நடந்துகொள்கிறேர்ம்… இனிமேலாவது ஒவ்வொருவரும் தன்வரைக்கும், தன்குடும்பம், என குப்பைகளை சரியாக கையாண்டு நாட்டிற்கு உதவுவோமே..

3. வழக்கமா குரூட் ஆயில் விலை எறங்கினால், தங்கம் விலையும் எறங்கும். ஆனால், மறுபடியும் தங்கம் 20 ஆயிரத்திற்கு மேல் எகிறிவிட்டது…

4.வாட்ஸ்அப், அருவிபோல் செய்திகளையும் காணக்கிடைக்காத காட்சிகளையும் கொட்டித்தீர்க்கிறது… சமீபத்தில் பார்த்து மகிழ்ந்தது.. பாகுபலியில் வரும் அருவில் போல் இந்தியாவில் ஒரு இடத்தில் மிகப்பிரம்மாண்ட அருவிக் கொட்ட அதனை கடந்து செல்கிறது ஒரு நீண்ட புகைவண்டி…. சமீபத்தில் பார்த்து வெறுத்தது. பெங்களூருவில் இருந்து மைசூர் சென்ற ஒரு குடும்பம் கார்விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறது. அதனை இன்ஞவிடாமல் புகைப்படம் எடுத்து ( உதாரணம் ஒரு 9 வயது பாப்பாவின் தலை தனியாக கிடக்கிறது, உடலை மட்டும் உயிருடன் எஞ்சியவர் மடியில் வைத்து அழுகிறார்) வாட்ஸ்அப்பில் பரவவிட்டுள்ள புண்ணியவானை 1 மணிநேரமாகத் திட்டிக்கொண்டிருக்கிறேன். ( உடனே அனைத்து புகைப்படத்தையும் டெலிட் செய்துவிட்டு)

5.வீட்டு உபயோகத்திற்காக போர்வெல் தோண்ட அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெறவேண்டியது இல்லையாம்…. செய்தித்தாளில் படித்தது.
Tamil Blogs Traffic Ranking

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

ஆரஞ்சு மிட்டாய் …

ஆரஞ்சு மிட்டாய் … Orange Mittai … Tamil film Review

விஜய்சேதுபதியின் அடுத்த இறகு இந்த ஆரஞ்சுமிட்டாய், இந்தப் படத்தை கடைசியில் இருந்து பார்த்தாலும் நடுவில் இருந்து பார்த்தாலும் எதுவுமே புரியாது…முதலில் இருந்து பார்த்தாலும் ஒன்னும் புரியாது… தமிழ்சினிமாவின் இலக்கணத்தை உடைத்து படம் எடுக்க வேண்டும் என்ற இயக்குநரின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஒரே வரியில் புரிதல் வேண்டுமென்றால், ஒரு சுமாரான கிராமத்தின் பணக்காரர், உறவினரின் ஆதரவற்ற நிலையில் அடிக்கடி 108 சர்வீசை அழைத்து நெஞ்சுவலி என்று டவுனில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு டிரிப் அடிக்கிறார். அவ்வாறு ஒருமுறை டிரிப் அடிக்கும்பொழுது, 108 ஆம்புலன்ஸ் அட்டெண்டர் முதியவ்ர்பால் ஈர்க்கப்பட்டு மிக நெருக்கமாக நண்பராகிறார். உண்மையில் பெரியவருக்கு நெஞ்சுலி கடுமையானதா, இல்லையா என்பதே யாருக்கும் தெரியவில்லை.
images
என்ன ஊருசார் இது, வெறும் மேடும் பள்ளமும், பொட்டைக்காடும், பச்சைபசேல் என்ற பேச்சுக்கே இடமில்லை. யாரிந்த கேமராமேன், இவரைவிட மோசமாக படம் பிடிக்க இயலாது. அதுவும் இரவில் நடைபெறும் காட்சிகள் படுமோசம். இசையும் படுசுமார். ஆனால், விஜய்சேதுபதியில் நடிப்பு, உண்மையில் இவர் ஒரு ஜீனியஸ்தான் என்று எண்ணத்தோன்றுகிறது. அப்படியே ஒரு வயதான நோய்வாய்ப்பட்ட வசதியான ஆதரவற்ற முதியவரை உரித்தெடுத்திருக்கிறார்.
orange-Mittai_childhood-do-you-miss-this
மினிமம் பட்ஜெட் படம்தான் ஆனால், அதையும் பார்க்க நம்ம பட்ஜெட் எல்லாம் ஒன்றுதானே, மல்டிபிளக்ஸ் கலாசாரம் வந்தவுடன் திரைப்படம் பார்ப்பதே ஒரு ஆடம்பர கொண்டாட்டம் போல்தான் உள்ளது. முந்தைய படத்தில் ஆர்யாவை காப்பாற்ற அச்சுபிச்சுன்னு விஜய்சேதுபதி எடுக்கும் சிறுபிள்ளை நடவடிக்கைகள் போல் இல்லாமல், இந்தப்படத்தை நன்றாக உணர்ந்து செய்திருப்பது திருப்தி.

நாட்குறிப்புகள்.

0. இந்தப்பதிவு எனது 200வது வேர்ட்ஸ்பிரஸ். பதிவு
1. ஊர் உலகத்தைப்போல், நானும் எனது ஆழ்ந்த இரங்கலை பாரதரத்ணா அப்துல்கலாம் அவர்களுக்கு சமர்ப்பணம். பி.கு. அவர்படித்த அதே புனித வளனார் கல்லூரி, திருச்சியில் படித்தது மகிழ்ச்சி.
2, ஈரோடு, புத்தகத்திருவிழா நிறைவு தினத்தன்று செல்ல முடிந்தது. என்னா கூட்டம்.. அதிலும், ஆங்கிலப்புத்தகங்கள் விற்கும் ஸ்டாலில்
நாம் தேடும் புத்தகங்களை எடுக்க உதவும் சிறிய வகுப்பு படிக்கும் மாணவர்கள். வருங்கால இந்தியா உண்மையில் படித்த, அறிவாளிகள் நிறைந்து இருக்கும் எனத்தெரிகிறது.
3, திரு. உமேஷ், மதுரைக்காரர். இந்திய அளவில் 77வது ரேங்கில் ஐ.ஏ.எஸ். பாஸ்செய்திருக்கிறார்… அவருடைய பதிவினை படிக்க படிக்க உற்சாகம் பொங்குகிறது. அதிலும் இந்தியாவின் முக்கியமான பிரச்சினை … பணக்காரர், ஏழை வித்தியாசம்.. நமது, இந்தியப் பாரம்பரியத்தின் முக்கிய தூணான ச சகோதரத்துவம் குறைந்துவிட்டதைப்பற்றி வருத்தத்துடன் குறிபிட்டிருக்கிறார்..
4, இந்திய சுதந்திரநாள் வழக்கம்போல் ஆகஸ்ட் 15, எவ்வளவு தியாகம்… ஆனால், நாம் இப்போ அதை எப்படி பயன்படுத்துகிறோம்.
5. எங்கும் நீக்கமற நிறைந்திருந்திருக்கும் ஊழல் …

என்ன செய்ய, நானும் உங்களைமாதிரி ஒரு இந்தியப்பிரஜை….
Tamil Blogs Traffic Ranking

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

மாரியும் பாகுபலியும் … திரை விமர்சனம்

மாரியும் பாகுபலியும் … திரை விமர்சனம்
marri and BAGUPALI TAMIL FILM REVIEW..

அட்டகாசமான ஆரம்பம், ஆகாயம் வரைக்கும் நீண்டிருக்கும் மலை அருவியில் இருந்து கொட்டும் நீரில் துரத்திய படையினர், எதிரியிடம் சிக்காமல் மகாராணி தன்கையிலிருக்கும் பிஞ்சுக்குழந்தையை கையில் ஏந்தியவாறே இரவு முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருப்பதும், காட்டுவாசிகளிடம் குழந்தையை ஒப்படைத்து கை தண்ணீருக்குள் மறையும் காட்சியிலிருந்தே இந்த படம் நிச்சயமாக வழக்கமான ஒன்றல்ல என்பதை நிரூபிக்கிறது. வித்தியாசமான திரைப்படங்களை எடுத்து, ரசிகர்களை திருப்திபடுத்தும் ராஜமௌலி சாருக்கு ஒரு சல்யூட். பாகுபலி… 25 நாட்களாக பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த படத்தை பார்க்க வேண்டாம் (ஏனெனில் ராஜாராணி கதைகள் பிடிக்காததே காரணம்) என்று முடிவு செய்திருந்தேன். ஒரு சிறிய நகராத்தில் இந்த படத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலையில், இதை ஆரம்பத்திலேயே பார்க்கமாமல் காலம் தாழ்ந்து விட்டோமே என்று வருந்த வேண்டியிருந்தது.
2
கதை எனக்கு புரிந்த வரையில் மகிழ நாட்டின் அரசன் அவருடைய அண்ணன்(நாசர்), இருவருக்கும் ஆண்குழந்தை பிறக்கிறது. அண்ணன் கை ஊனம் என்பதால், தம்பி ஆட்சி செய்திருக்கிறார். அரசர் (தம்பி) எதிர்பாராமல் மரணமடைய, அவருடைய மனைவி (ரம்யாகிருஷ்ணன்) தர்மசிந்தனை மற்றும் சிறப்பாக அரசாட்சி செய்கிறார். சூழ்ச்சிகளை வேறறுத்து நல்லவிதமாக ஆட்சிசெய்கிறார். இரண்டு குழந்தைகளும் , இவர்களுக்கு பாதுகாப்பாக தளபதி கட்டப்பா ( சத்யராஜ்) வளர்ந்து விடும்பொழுது, கொடூரமாக எதிரி படையெடுக்க அதனை இரண்டு சகோதரர்களும் ஒற்றுமையாக முறியடிக்க, நாசர் மகனை (ராணா) தளபதியாகவும், ரம்யாகிருஷ்ணன் மகனை மன்னாகவும்(பிரபாஸ்) அறிவிக்க, இருவருக்குள்ளும் பொறாமை மற்றும் குரோதம் வளர்கிறது. பிரபாஸ் எதிர்பாரதவிதமாக கொல்லப்பட, மீண்டும் முதல் காட்சியை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.
1
காட்சிகள் ஒன்றுக்கொண்று முன்னும் பின்னுமாக இருந்தாலும் அருமையாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். பொங்கிவரும் அருவியின் மேலே ஏறே இளைய பிரபாஸ் முடிவு செய்து முயற்சி செய்து வெற்றி அடைவதும், தமண்ணா தீவிரவாதிகள் கூட்டத்தில் பொங்குவதும் இளைய பிரபாஸ் காதல் வலையில் விழுவதும் மிகவும் சுவாரசியம்… அப்பா, செம பிரமாண்டம், எவ்வளவு உயரம் முடியுமோ, அவ்வளவு உயரத்திற்கு சிலைகள் படத்தில் காண்பிக்கப்படுகிறது. போர் காட்சிகள் உண்மையில் இவ்வளவு த்ருபமாக இதுவரை அமைந்ததில்லை. பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இசையும், அவ்வப்பொழுது, பொங்கிப் பிரவாகும் தமிழ்ப்பாடல்களும் புரியலை என்றாலும் தாலாட்டுகிறது. அந்த கால அரசர்கள், தளபதிகள், ஒற்றர்கள், திருடர்கள், வீரர்கள், போர், இராஜபரம்பரை, துரோகிகளை பழிவாங்குதல் என பல்வேறு கிளைகளில் கதைக்களம் பிரிகிறது.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
4
பின்குறிப்பு. போனவாரம் மாரி திரைப்படம் பார்க்க சென்றிருந்தபொழுது, விழுந்த உரையாடல், ஒரு லாரி டிரைவர் படம் பார்க்க வந்திருந்தார். அவர் பாகுபலியை ஒரு சிறிய ஊரில் பார்த்தாராம். தற்சமயம் மாரி படத்தைப் பார்த்தற்கு மீண்டும் ஒருமுறை பாகுபலி பார்த்திருக்கலாம் என்று அருகிலிருந்தவர்களிட்ம் தெரிவித்தார். மாரி படத்தைப்பற்றி பலரும இணையத்தில் கழுவி ஊற்றி இருந்தாலும், வாட்ஸ்அப்பில் சிறுகுழந்தைகளை வைத்து 3 நிமிட படமாக உல்டா அடித்திருந்தாலும், அந்தபடத்தின் தீம் புறா பந்தயம்… ஆனால் அதை மட்டும் ( சேவல் சண்டையைப்போல ) டெவலப் செய்யாமல் விட்டதே படத்தின் தோல்விக்கு காரணம் என நினைக்கிறேன்.

பாபநாசம் .. திரை விமர்சனம்…

பாபநாசம் .. திரை விமர்சனம்…
papanasam tamil film review

இளமை இதோ இதோன்னு பாடிய கமலுக்கு வயசாகிவிட்டது. அதுவும் இந்த பாபநாசம் படம் ஆரம்பம்மே கமலனின் மிகமிக குளோசப் காட்சியில் ஆரம்பித்து கடைசி காட்சியும் குளோசப் காட்சியில் முடிவடைகிறது. படம் ஆரம்பித்து முதல் 25 நிமிடங்களுக்கு இது எந்த மாதிரி படம்ன்னு நாம யோசனை பண்ணவே முடியாது… அந்தளவிற்கு ஒரு பெரிய கிராமத்தின் தினசரி நடைமுறைகளைப் இன்ஞ் இன்ஞ்சாக பதிவு செய்திருக்கிறார்கள்.
x1
கமல், கௌதமி ஒரு முன்னேறிவரும் நடுத்தர வர்க்கக் குடும்பம் இவர்களுக்கு டீன் ஏஜில் ஒரு மகளும், சிங்கிள் ஏஜில் ஒரு மகளும் அன்பும் பாசமும் சந்தோகமாக மலைக்கிராமத்தில் இயற்கை அழகுகொஞ்ச வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். இடையில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத சம்பவத்தால் இக்குடும்பம் அந்த மாவட்டத்தின் டிஐஜி ரேங்கில் உள்ள பெண் அதிகாரியின் கொடுமைக்கு ஆளாக நேர்கிறது. அந்த போலீஸ் அதிகாரவர்க்கத்தின் பிடியில் இருந்து தனது குடும்பத்தைக் காக்க, படிக்காத கமல், தனது பட்டறிவு ( உபயம்.. தினந்தோறும் 3 சினிமாக்கள் பார்ப்பது ) பயன்படுத்தி ஒவ்வொரு கோணத்திலேயும், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்கிறார். கடைசியில், வன்முறை மூலம் உண்மையை அறிய போலீஸ் முனையும்பொழுது, மாட்டிக்கொள்ளும் சூழ்நிலையிலும் தன் குடும்பத்தைக்காக்க என்ன செய்தார் என்பதே, இந்தப்படம், கடைசியில், அனைத்து வழிகளும் மூடப்பட்டு, போலீஸ் அதிகாரி தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டும், விடாமல் கமலைத்துரத்தி துரத்தி கேட்டாலும், உரிய பதில் கிடைக்காமல் அமெரிக்கா கிளம்பிவிடுகிறார்.
x2
கமல், கௌதமி உண்மையில் ஒரு நடுத்தர குடும்பத்தை அப்படியே திரையில் பிரதிபலிக்கிறார்கள். இரு பெண்குழந்தைகளும் தங்களின் பாத்திரம் அறிந்து அறுமையாக நடித்திருக்கிறார்கள். கமலின் நண்பர்கள் மற்றும் சாட்சிக்காக நண்பர்களாக்கபட்டோர்களும் த்தருபமாக நன்றாக நடித்திருப்பதால் பல டிஸ்யூம் டிஸ்யூம் படங்களுக்கு மத்தியில் ஒரு திரில்லர் கம் குடும்பப்படம் பார்த்த திருப்தி.. கேமரா, பாபநாசத்தையும், தென்காசியையும் ( உண்மையில் பாபநாசம் தானா அல்லது வேறு இடமோ தெரியவில்லை) பச்சை பசுமையாக கண்னுக்கு விருந்தாக்கியிருக்கிறார்கள். இசையும், காட்சிக்கேற்றவாறு அமைந்திருப்பதும், கேரள படத்தின் ரீமேக் என்ற குறையே தவிர, தமிழ் வசனங்கள் வெரிகுட் ரகம்தான்.
Tamil Blogs Traffic Ranking

மணியான ரத்தினம்…ஓ காதல் கண்மணி … இளமைத்திருவிழா

மணியான ரத்தினம்…ஓ காதல் கண்மணி … இளமைத்திருவிழா
Oh kadhal kanmani Tamil Film review

அந்த வருடம் 1988, இப்பொழுதுள்ள பல இளைஞர்கள் (ஆண்/பெண்) அப்பொழுது பிறந்திருக்கவே மாட்டார்கள்.. அப்பொழுது தூர்தர்ஷன் மட்டும்தான், வெள்ளிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஒளியும் ஒலியும் திரைப்பாடல்கள் ஒளிபரப்புவார்கள்.. அந்த தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை முதல் பாடலே, அந்திமழை சாயும் … என்னும் நாயகன் பட பாடல், மழையில் நனைந்து கொண்டு கமலும், சரண்யாவும் குதுகலமாக கொண்டாடும் பாடலை பார்த்த எங்களுக்கு ஏற்பட்ட பரவசத்திற்கு அளவே இல்லை. இப்பொழுது நினைத்தாலும் அந்த பரவச நிலை ஏற்படுகிறது. பல பல சறுக்கல்களுக்கு பின்னால், இளமையை மீண்டும் கொப்பளிக்க வைக்கும் அலைபாயுதே டிரண்ட் செட்டிற்கு பிறகு இப்பொழுதுதான் நமக்கு ஓ காதல் கண்மணியை மணிரத்தினம் கொடுத்திருக்கிறார்.
t1
தி கிரேட் மணி…. ஒவ்வொரு காட்சியும் இயல்பாக லாஜிக் உதறல் இல்லாமல், இயற்கையாக, பல வண்ணங்களாக, வசனங்கள் நறுக்குத் தெறித்தால் போல் ( படத்தின் கான்செப்ட் தப்பாக பலருக்கு புரிந்துகொண்டு இணையத்தில் கிழிகிழியெனக்கிழிக்கிறார்கள்.) உண்மையில், மும்மையை இவ்வளவு மென்மையாக, இளமையாக, அனைவரும் இடமாக ( நமக்கு தெரிந்ததெல்லாம் மும்பை என்றால் வெடிகுண்டு, தாதா சண்டை சச்ரவு, குடிசைவாசிகள் பிரச்சினைகள் ) கிளாசிக்கலாக படம்பிடித்து காண்பிக்கிறார். படத்தைபார்க்கும் இளைஞர்கள் கூட்டம் ஆரவாரம் எழுப்பி வரவேற்ப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.
மும்மை 2.0 கேம் தயாரிக்கும் கதாநாயகன், பாரீஸ் சென்று கட்டிடக்கலை பயில விரும்பும் இளம்பெண் தற்செயலாக இருவரும் சந்திக்க ஒரு ஈர்ப்பு தொடர்ந்து, நாயகி செல்லும் இடமெல்லாம், நாயகனும் செல்ல, இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகி சந்தர்ப்பம் கிடைத்த காரணத்தால் படுக்கைவரை எந்தஒரு மனப்பயம் இல்லாமலும் தொடர்கிறது. நாளைடைவில், கதாநாயகனும், கதாநாயகியும் ஒன்றாக சேர்ந்தே வாழ விருப்பப்பட்டு அப்படியே வாழ்ந்து வருகிறார்கள். இருவரும், தங்களது இலக்கை நோக்கி பிரிய நேரும் சந்தர்ப்பம் அமையும் பொழுது, கதாநாயகனும் கதாநாயகியும் தாங்கள் விரும்பாத கல்யாணத்தைப் பண்ணிக்கொள்கிறார்கள். இடையில் பிரகாஷ்ராஜ், பவானி என்னும் அவரது ஓல்ட் மனைவி, கதாநாயகனின் அண்ணன் அண்ணி, கதாநாயகனின் அம்மா ( அப்பப்பா அப்படியே பெரியபணக்காரர்களின் பாடி லாங்வேஜ் ) என ஒருசில காரக்டர்களும் நம்மை பரவசப்படுத்துகிறார்கள்.
t2
காந்தி ஆசிரமம், குஜராத், அகமதாபாத், மும்பை என சிறப்பான படப்பிடிப்பு… நடிப்பு ஆகா.. நாயகனும் நாயகியும் போட்டிபோட்டுக்கொண்டு இயல்பாகவே இளமையை கேமிரா முன்னால் வெளிப்படுத்துகிறார்கள். இசை சூப்பர்.. காட்சிக்கு காட்சி பிண்ணனி இசை தூள் பரத்துகிறது. இளைஞர்கள் தவறவிடாத படம்… கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்க்கவும்… படத்தின் கான்செப்ட்டை மனதில் கொள்ளாமல்… படத்தின் போக்கை ரசிக்கவும் கற்றுக்கொள்ளவும்….

அன்புடன்
சிவபார்க்கி
பின்குறிப்பு .. சிறிது காலம் உடல்நலக்குறைவால் இந்த பகுதியை புதுப்பிக்க இயலவில்லை… தெடர்ந்த உங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி.
Tamil Blogs Traffic Ranking

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்
yennai arinthal … tamil film review

படம் தொடங்குவது துபாயில்… (ஏர்போட்டில்) இதைத்பற்றி கதைப்பாரவில் தருகிறேன். ரொம்ப நாளைக்ப்புறம் தல படத்தை பார்க்க ஆர்வத்துடன் சென்றிருந்தோம்…
aa2
ஆரம்பம் 15 நிமிடம் அறுவைதான்… பிளைட்டில் வாந்தியெடுக்கும் அனுஷ்கா …கதை பழைய கதைதான்.. ரௌடிபோல் நடித்து ரௌடிகளிடம் நட்பாகி, பின் அவர்களை போட்டுத்தள்ளும் போலீஸ் அதிகாரி வேடம் அஜித்துக்கு, பிளாஷ்பேக்கில் அவங்க அப்பா நாசரை ரவுடிகள் போட்டுத்தள்ள, மூன்றுமுகம் ரஜினியின் நடிப்பைப்பார்த்து போலிஸ் அதிகாரி ஆகிறார். எக்குதப்பாக ஆஷிஸ் வித்யார்த்தியிடம் விளையாட தான் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் (திரிஷா ) கன்று மற்றும் பசு ( அதாங்க திரிஷாவிற்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு பெண்குழந்தையுடன் விவாகரத்து செய்து இருப்பவர்) என கூடித்திரிகிறார் அஜித்… இடையில் திரிஷாவை போட்டுத்தள்ள, போலிஸ் வேலையை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு கன்றுடன் ஊர்சுற்ற கிளம்பிவிடுகிறார்.. திரும்பி வந்தவுடன், போலிஸ்நண்பரின் சிறுவயது மகளை காணாமல் போவதை கண்டுபிடிக்க கேட்டுக்கொள்ள, கன்றும் அனுமதி அளிக்க மீண்டும் பார்ம்க்கு வருகிறார் அஜித். அப்பொழுதுதான் இதயம் தேவைப்படுபவர்களுக்கு சப்ளை செய்யவென சிறுமிகளை கடத்தி கொல்லும் கும்பலை அடையாளம் காண்பதும், அதற்கு தலைவனாக தான் ஏற்கனவே ரௌடிகளிடம் பழகும் போது தோழனாக இருந்த அருண்விஜய் என்பதனை அறிகிறார். கூடுதலாக, துபாயில் இருந்து வரும் அனுஷ்காவை கடத்தவும் திட்டமிட்டிருப்பது தெரியவந்து, அனுஷ்காவை காப்பாற்றவே படத்தின் முதற்காட்சி துபாயில் இருந்து கூடவே பாதுகாப்பாக வருகிறார். ஆனால், இதைப்பற்றி எதுவும் தெரியாத அனுஷ்கா அஜித்தை (உலகிலேயே மிக அழகான ஆண் ?) என ஜொள்ளு விட்டு சுற்றிசுற்றி வருகிறார். அஜித்தின் கன்றையும் கடத்தி பிளாக்மெயில் செல்லும் வில்லன், தொடந்து வருவதற்கு ஜிபிஎஸ் கருவி என போலிஸ் பிரதானங்களுடன் பிற்பாகு மிக மிக விறுவிறுப்பாக சென்றாலும், முதற்பாதி எப்படா முடியும் என காத்திருக்கிறது விசிலடிச்சான் குஞ்சுகள் ( ரசிகர்கள்) பிறகு மனித உறுப்புகளுக்காக கடத்தும் கும்பலுக்கும் அஜித்துக்கும் சேஸ் நடக்க, முடிவில் எல்லாம் சுபம்..
aa3
கௌதம் மேனன் குறைஞ்ச செலவில் எடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும் சுமார் 10/15 காட்சிக்கான இடங்களே திரும்பிதிரும்பி வருகிறது. எவ்வளவோ கதைகள் இருக்க, தமிழ்சினிமாவை தூக்கி நிறுத்தும் புதுமுயற்சிகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்க, புகழ்பெற்ற இயக்குனர் தேர்தெடுத்திருப்பதோ பழைய பழிவாங்கும் கதை அதுவும் 10 தமிழ் சினிமாக்களின் கதையை மிக்ஸியில் போட்டு அரைத்து கொடுத்திருக்கிறார். இசையும் சுமார்தான்… படப்பிடிப்புகள் பெரும்பாலும் இரவில் வைத்திருக்கிறார்கள். ஒரே இருட்டுக் காட்சிகள்தான் அதிகம். எனினும், அஜித் இளமையாகவும், தெர்ந்தி, நரை முடி என இருவேடங்களிலும், சண்டை காட்சிகளிலும் சோபித்திருக்கிறார்.
என்னை அறிந்தால்… என்னை அறிந்தால் உலகத்தில் போராடாலாம்.. என பாடல்வரிதான் நினைவுக்கு வருகிறது படம் பார்த்தவுடன்.
Tamil Blogs Traffic Ranking
Thenkoodu

ஐ திரை விமர்சனம்.

ஐ திரை விமர்சனம்.
I .. Tamil Film Review..

ஜெண்டில்மேன் சங்கரின் வரவால் தமிழ் சினிமா கொஞ்சம் நிமிர்ந்தது உண்மை, தொடர்ந்து அந்த மாதிரி வித்தியாசங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இந்த முறை ஐ … பட டைட்டிலே கொஞ்சம் என்னவாக இருக்கும்ன்னு பயங்கர பில்டப் கொடுத்தது. தொடர்ந்து பொங்கல் விடுமுறையில் முக்கிய தியேட்டர்களையும் ஆக்கிரமித்தாலும், ஒரளவிற்கு ரசிகர்பட்டாளங்கள் அனைவரும் மாய்ந்து மாய்ந்து பாத்துவிட்டார்கள்.. இருப்பினும் படம் சரியாக போகவில்லை போலிருக்கிறது.
லிங்கேசன்.. விக்ரம்.. சென்னையில் ஒரு சேரியில் வசிக்கும் சாதாரணமானவர், அவருடைய எண்ணமெல்லாம், பாடி பில்டிங் சேம்பியானாக வேண்டும் என்பதே, ஒரு டாக்டர் என்ன காரணத்திற்கோ விக்ரத்தை ஸ்பான்சர் செய்கிறார், பாடி பில்டிங் தாதா ஒருவர் இவர் போட்டியில் ( கதாநாயகன் இல்லையா ? ) கலந்து கொண்டால் எங்கே முதல் பரிசை வெல்ல முடியாதோ என்று எண்ணி வீராப்பு காண்பிக்கிறார்.
B
இப்படி இருக்க, விக்ரம் ஜொல்லுவிடும் மாடல் அழகி மற்றும் சினிமா கதாநாயகிக்கு பாடி கார்ட்டாக செல்ல வாய்ப்பு அமைகிறது. அங்கே, மாடலிங்செய்யும் கூட ஒர்க்பண்னும் ஆண் கதாநாயகியை செக்ஸ் சில்மிஷம் செய்ய, கதாநாயகி திட்டமிட்டு, விக்ரத்தை ஆண் ஒர்க்பண்னும் பகுதியை செய்ய வைக்க பிரயத்தனம் செய்து வெற்றியும் பெறுகிறார்… விக்ரமின் எதிரிகளில் ஆண் மாடலிங்கும், விக்ரமை தயார் படுத்தும் பொழுது மேக்கப் செய்யும் திருநங்கை விக்ரமின் மீது மையல் கொள்ள, விக்ரமோ கதாநாயகியை மொய்க்க, கதாநாயகியோ விக்ரமை வெறுக்க, படம் அப்படியே சீனாவில் நாம் பார்த்து ரசித்து ஆகவேண்டும் என வித்தியாசமான இடங்களை டிஜிட்டலில் சுருட்டிக் திகட்ட திகட்ட படைத்திருக்கிறார். ஆனால், திரும்ப திரும்ப சிகப்பு மலர்களின் பிண்ணனியே ரொம்ப நேரம் வருவது கொஞ்சம் எரிச்சலாகிறது.
A
விக்ரம் மாடலிங் செய்த பிராடக்ட் பிச்சுக்கிட்டுபோக, அந்த பிராடக்ட் போலி எனத்தெரியவற அதைப்பற்றி மீடியாவில் தெரிவிக்கும் விக்ரமிற்கு பிராடக்ட் முதலாளியும் எதிரியாகிறார். ஆக 5 வில்லன்கள் உருவாக, விக்ரமை காலிசெய்ய ஐ என்னும் வைரசை ஊசி மூலம் விக்ரமிற்கு செலுத்திவிட அதன் பயனாய் உருவம் மாறி கொழுக்கட்டை கணக்காக முகமும் உடலும் குறுகி விகாராமாகிறது.. இதற்கிடையில் அபரிதமான அன்பினால் கதாநாயகியும் விக்ரமை உண்மையாக காதலிக்க ஆரம்பிக்க, உடல் மாற்றமானபின்பு, கதாநாயகியை டாக்டர் குறுக்குவழியில் திருமணம் செய்யும் நாளில் மண்டபம் புகுந்து கடத்திவிடுகிறார். அதன்பின்பு, விக்ரமும் கதாநாயகியின் உதவியால் உடல்நலம் பெற்றும் நண்பனின் உதவியால் எதிரிகளை இதேபோல் விகாரமான உருவத்திற்கும் சிரமத்திற்கும் ஆளாகும் விதமாக பழிவாங்கி பழித்தீர்த்துக்கொள்கிறார். விக்ரமின் உழைப்பு, கதாநாயகியின் அழகு, காமெடியின் சிரத்தை, ரகுமானின் இசை என பலமுனைத்தாக்குதலில் ரசிகரை போட்டுத்தாக்குகிறார்கள்.படம் கொஞ்சம் இழுவைதான்… பிரம்மாண்டமும், பாடல்களும் அசத்தல்… பார்க்கலாம் ரகம்தான்… அடுத்து இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறோம் சங்கர் சார்.. வாழ்த்துக்கள்
Tamil Blogs Traffic Ranking
Thenkoodu
World Tamil Blog Aggregator

டார்லிங் … திரை விமர்சனம்

டார்லிங் … திரை விமர்சனம்
Darling Tamil Film Review
பொங்கல் லீவில் ஏதாவது ஒரு படத்தையாவது பார்த்தாகனும் என்னும் எழுதப்படாத விதிகளில் ஒன்றை நிறைவேற்ற குடும்ப சகிதமாக டார்லிங்க்கு ( அப்பத்தான் பேய் பயம் குழந்தைகளுக்கு போக்கனும்ட்டு, ஆனால் உண்மையில் இந்தப்படத்தால் குழந்தைகள் கற்றுக்கொண்டது என்ன என்பதை கடைசி வரிகளில் சொல்கிறேன் ).
போய் சேர்ந்தோம். இசை அமைப்பாளர் ஜி.வி கதாநாயகனாகவும், வடக்கத்தி கதாநாயகி இறக்குமதி செய்யப்பட்டு பேயாகவும், கதாநாயகியாகவும் டூயல் நடிப்பில் கலக்க, கதை இதுதான்..
c1
கதைக்காக ரொம்ப சிரமப்படவில்லை, நாம் காலம்காலமாக பார்த்து வந்த தமிழ்சினிமாவில் இருந்தே சுடப்பட்டுள்ளது. அதாவது, கற்பழிக்கப்ப்ட்ட பெண்ணின் அண்ணனோ, காதலனோ, யாரோ ஒருவர் வில்லன்களை பழிவாங்குவதுதான்… இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு பதிலாக பேய் அந்த வேலையைச் செய்கிறது.
ஒரு இளம் ஜோடி ( காதலர்கள் ? ) ஈஸ்ட்கோஸ்ட் ரோட்டில் உள்ள கடற்கரை பங்களாவிற்கு செல்லும்பொழுது 5 பொறுக்கிகளால் காதலனின் முன்னால் கதறகதற கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.. சிறிது காலம் கழித்து, ஜிவி, அவரது நண்பர் ( சிரிப்பு நடிகர், பர்மான்மென்ஸ் பிரமாதம் ), அவரது ஒருதலை காதலி என மூவரும் தற்கொலை செய்துகொள்வதற்காக அந்த பங்களாவிற்கு வருகிறார்கள் இதற்கிடையில் கருணாஸ் இந்தக்கூட்டத்தில் இணைந்துகொள்கிறார். வாட்ச்மேன் எச்சரித்தும், வேலைக்காரன் பயமுறுத்தும் செயலில் ஈடுபட்டும், கங்கம்மா கணக்காக ஒரு பெண் சுடுகாட்டில் இவர்களின் வருகையை முறியடிக்க பூஜை செய்தும், இந்த நால்வர் அணி ஜாலியாக பங்களாவில் தங்குகிறார்கள்.. தற்கொலை செய்துகொள்ள நாட்களை தள்ளிப்போட்டுக்கொண்டே செல்கிறார்கள்… இடையில் ஒருதலையாக காதலித்த காதலியின் ஏக்கத்திற்கு பழியான ஜிவி(கதாநாயகன்) இரவு 12.00 மணிக்கு காதலிக்கு முத்தம் கொடுக்க அறைக்கு போகும்பொழுது பேய் காதலியின் உடலுக்குள் புகுந்து கொண்டு ஜிவியை துவைத்து எடுக்கிறது. இப்படியாக படம் முழுவதும், பேயுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஏற்கனவே காதலித்தவர்களை திட்டமிட்டு வரவழைத்து பேய் கையாலயே கொல்லவைத்து, கதாநாயகியின் உடலிலிருந்து பேயை விரட்டிவிட்டு, நம்மையும் தியேட்டரைவிட்டு விரட்டுகிறார்கள்…
c2
படம் முழுக்க பேய் இருக்கிறதோ இல்லையோ, நல்லா சிரிப்பு வருது… பேய்க்கு வித்தியாசமான கெட்டப்பல்லாம் கிடையாது சும்மா பவுடர் அடித்து மின்னல் போல் கோடு போட்டாலே போதும்ன்னு முடிச்சுட்டாங்க, கதாநாயகி நல்லா வாட்டசாட்டமாக இருப்பதே பேய் கெட்டப்புக்கு ஒரு பிளஸ்.. கருணாஸ், பல சீன்களில் எரிச்சல் மூட்டினாலும், ஜீவியின் நண்பர் எப்பொழுதும் கிச்சுகிச்சு மூட்ட தவறவில்லை…
நல்ல எண்டர்டெய்ண்மெண்ட்…. குழந்தைகள் பேயைப்பற்றி அறிந்து கொண்டதைவிட விடலைக்காதலைப்பற்றி விலாவாரியாக அறிந்து கொள்ள இந்தப்படம் ரொம் உதவியது.
Tamil Blogs Traffic Ranking
Thenkoodu
World Tamil Blog Aggregator